அர்த்தமுள்ள இந்து மதம்💐

ரவிசங்கர் ராஜா, ஆரணி
563 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
AI indicator
*இன்று*(30-5-26) *அறிவை வளர்க்கும்* *வைகாசி பெளர்ணமி* (புத்த பூர்ணிமா) *பரிகாரம்* ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது வரும். பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிர்விடும் நாளாகும். விருச்சிக ராசியில் சந்திரன் நீச்சம் அடையும் போது வைகாசி பௌர்ணமி ஏற்படும். இந்நாளில் அம்பாள் வழிபாடு மிக மிக விசேஷமானது மே2026 மாதம் வரும் வைகாசி மாதப் பௌர்ணமி, மே 30, 2026 அன்று வருகிறது. வைகாசி மாதம் 2026 பௌர்ணமி திதி நேரம்: மே 30, 2026 சனிக்கிழமை நண்பகல் 12:25 pm முதல் மே, 31, 2025 ஞாயிறு பிற்பகல் 2.48 pm வரை இருக்கிறது. ஆயிரம்தான் கற்றாலும், பெற்றாலும் இறைவனால் தரப்படுகிற அறிவு தான் நிரந்தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இதனால் அறிவை பெறுவதற்கு நாம் பலவகையில் முயற்சித்தாலும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர்க்க கூடாது. அறிவு வளர்ச்சிக்கான பிரார்த்தனையை கடவுளிடம் வைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம் வைகாசி மாத பெளர்ணமி தினமாகும். காரணம் வைகாசி பெளர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருகிறது. விசாக நட்சத்திரம் இறைவனாகிய முருகனின் அவதார நட்சத்திரமாகும். அதனால் தான் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. முருகப்பெருமான் அறிவுக்கடல் ஞானமலை உயிர்கள் பெற்று இருக்கும் அறிவு அனைத்தும் முருகனிடமிருந்தே வருகிறது. இந்நாளில்தான் சரவணப்பொய்கையில் முருகப்பெருமான் அவதரித்தார் என்று புராணம் கூறுகிறது. அன்று முருகப்பெருமானை வழிபடுவதால் நம்மை அறியாமல் மூன்று தெய்வங்களின் அருளினைப் பெறும் பாக்கியத்தைப் பெறலாம். அதாவது முருகன், குரு, சூரியனை வழிபட்ட பலன்கள் கிட்டும் என்று கூறப்படுகிறது. வைகாசி மாதம் சூரியன், ரிஷப ராசியில் இருக்கிறார். அங்கிருந்து ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியைப் பார்க்கிறார் என்கின்றன ஜோதிட நூல்கள். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு. அதிதேவதை முருகப் பெருமான் ஆவார். இந்த முறையில் நாம் வைகாசி மாத பெளர்ணமியன்று முருகனை வழிபடும்போது குருவையும் சூரியனையும் சேர்த்து வணங்குகிறோம். குருவின் திருவருள் கிட்டினால் ஞானம் கிட்டும், சூரியனின் அருள்பார்வையால் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். இவைகளுக்கெல்லாம் காரணமான முருகப்பெருமானை வழிபடுவதால், நாம் வேண்டுவது கிட்டுவதுடன் வளமான வாழ்க்கை அமையும். எனவே வைகாசி பெளர்ணமி அன்று முருகனை வழிபட்டால்,வழிபட சகல சௌபாக்கியங்களும் கிட்டுவதுடன், முருகன் ஞானத்தை வாரி வழங்குவான் என்பது திண்ணம். இந்துக்களுக்கு மட்டும் வைகாசி பெளர்ணமி சிறந்தது அல்ல. புத்த மதத்தினருக்கும், அந்த நாள் மிக புனிதமான திருநாளாகும். அன்று தான் புத்தபெருமான் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். எனவே வைகாசி பெளர்ணமி புத்த பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா "புத்தர்' என்றால் "ஞானத்தெளிவு பெற்றவர்' என்று பொருள். அவர் ஞானம் பெற்ற போதிமரம் பரந்து விரிந்து ஒரு பெரிய குடைபோல் இன்றும் "கயா' என்னும் தலத்தில் காணப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் ஒரு மேடை கட்டப்பட்டிருக்கிறது. அங்கே, இரு பெரிய பாதச்சுவடுகள் உள்ளதைக் காணலாம். அங்கு வருபவர்கள் அந்தப் பாதங்களைத் தொட்டு வணங்கி, ஞானமும் வாழ்வில் புத்தொளியும் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வழக்கம். அசோக சக்ரவர்த்தி முதன்முதலில் இங்கு புத்தருக்குக் கட்டிய கோயிலே "மகாபோதி கோயில்' என்று போற்றப்படுகிறது. இந்தக் கோயிலில் அமர்ந்த நிலையில் புத்தர் அமைதியே உருவாகக் காட்சி தருகிறார். புத்தர் அவதரித்ததும் அவர் ஞானம் பெற்றதும், தனது எண்பதாவது வயதில் "குசி' என்னும் நகரில் மகாநிர்வாணம் (முக்தி) எய்திய நாளும் ஒரு "வைகாசி பௌர்ணமி' என்று வரலாறு கூறுகிறது. அதனால்தான் வைகாசி பௌர்ணமியை "புத்த பூர்ணிமா' என்று பௌத்தர்கள் கொண்டாடுகிறார்கள். வைகாசி விசாக நட்சத்திர பௌர்ணமியன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும், திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும். கந்தனின் நாமங்கள் முக்தி அளிப்பவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை' என்கிறார் சிவன். "சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர். ச- லட்சுமி கடாட்சம். ர- சரஸ்வதி கடாட்சம். வ (ஹ)- போகம், மோட்சம். ண- சத்ரு ஜெயம். ப- மிருத்யு ஜெயம். வ- நோயற்ற வாழ்வு. எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்தும், இந்த வைகாசி பெளர்ணமி தினத்தில் சிவமைந்தனான முருகனை, வணங்கியும், புனித நீர்நிலைகளில் நீராடி தயிர் சாதம், பானகம், நீர் மோர் முதலியவற்றை தானமாக கொடுக்க வேண்டும். படிக்க விருப்பமிருந்தும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பிற்கு பணம் கட்டலாம். குறைந்தபட்சம் நோட்டு புத்தகமாவது வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால் வைகாசி பெளர்ணமி அறிவை வாரி வணங்கும் முழு நிலா பொழுதாக திகழும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம் #வைகாசி விசாகம் ஓம் முருகா போற்றி #வைகாசி மாதம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐