நகை கடன் தள்ளுபடி அரசாணை

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
963 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடன் ரத்து, மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி மற்றும் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஏற்கனவே திமுக அரசு தனது முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வரும் நிலையில், அதிமுகவின் இந்த புதிய வாக்குறுதிகள் வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ​அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசும் தனது தேர்தல் வியூகங்களைத் தொடங்கிவிட்டது. கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் குறித்த முழு விவரங்களையும் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலைப் போலவே, இப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தமிழக அரசியலில் மீண்டும் 'கடன் தள்ளுபடி' விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. #நகை கடன் தள்ளுபடி அரசாணை #📢பிப்ரவரி 9 முக்கிய தகவல் 🫠
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
641 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
வாக்குறுதியாக அளித்தது... கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி அத்துடன் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, 2021 வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த 2,117 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது... இதனால், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில், 10.56 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன... அதுமட்டுமல்ல, இதன் மூலம் கடன் சுமையால் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நிதி சுதந்திரம் கிடைத்து, புதிய தொழில்களை தொடங்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அரசு அப்போது கூறியது.. மகிழ்ச்சியில் மகளிர் குழுக்கள் அரசின் இந்த தள்ளுபடியில், கடனை செலுத்த முடியாத பெண்கள் குழுக்கள் மீதமுள்ள கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்... இதனால் பெண்கள் குழுக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய உற்பத்தி, வணிக முயற்சிகளில் இறங்கும் அளவுக்கு, அரசின் அந்த அறிவிப்பு தெம்பை தந்திருந்தது.. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில் சேர்ந்த 10.56 லட்சம் பெண்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த தள்ளுபடியாகிய நிதியை, அரசு 2021-22 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 600 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு வழங்கியது. மீதமுள்ள தொகையை மொத்தமாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு விடுவித்தது. இதற்குப் பொறுப்பாக வட்டி வசதி கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு அசத்தல் இதையடுத்து, கூட்டுறவு துறை, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கு தொடர்பான 194 கோடி ரூபாய் வட்டியை அரசிடம் வழங்குமாறு வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலுக்கு பிறகு, அந்த நிதியை அரசு இந்த மாதம் 20ம் தேதி விடுவித்துள்ளது. இதன் மூலம், மகளிர் குழுக்கள் மீண்டும் கடன் சுமையில்லாமல் தங்கள் சொந்த தொழில்கள் மற்றும் சமூக முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு பெற்றுள்ளன #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #நகை கடன் தள்ளுபடி அரசாணை #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
710 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட மகளிர் குழுக்களின் கடன் ரூ.2,117 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 1.01 லட்சம் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 10.56 லட்சம் பெண்கள் பெரும் கடன் சுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடன் தள்ளுபடி தொகையை அரசு மூன்று தவணைகளாகக் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி வந்த நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட அசல் தொகைக்கான வட்டித் தொகையான 194 கோடி ரூபாயை விடுவிக்குமாறு கூட்டுறவுத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று, தமிழக அரசு அந்த வட்டித் தொகையையும் தற்போது விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலையைச் சீரமைப்பதோடு, மகளிர் குழுக்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சிறு தொழில்களைத் தொடங்கவும் இந்தக் கடன் தள்ளுபடி ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. கடன் நெருக்கடியில் தவித்த பல குடும்பங்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளதோடு, பெண்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய வணிக முயற்சிகளில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, தமிழகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #நகை கடன் தள்ளுபடி அரசாணை #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
673 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
அவசர தேவைகளுக்கு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு விரைவில் நிதி கிடைக்கின்றன.. சாதாரண கடன்களுடன் ஒப்பிட்டால், நகை அடமான கடனின் வட்டி விகிதம் குறைவுதான்.. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது!! நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயம் நாட்டில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு, குறிப்பாக கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற செலவுகளுக்காக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது வழக்கம் ஆகி உள்ளது. கூட்டுறவு வங்கி - நகைக்கடன் இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த வகை நகைக்கடனுக்கு விதிமுறைகள் குறைவாகவும், வட்டி விகிதம் குறைவாகவும் இருப்பது. வங்கிகள் வட்டி விகிதம் மாற்றப்பட்டாலும், மொத்தத்தில் விவசாயிகளுக்கான வட்டி சுமை குறைவாகவே இருக்கும். மாநில மற்றும் மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு அடமானம் பெயரில் நகைக்கடன் வழங்கி வருகின்றன. நகைக்கடன் தள்ளுபடி கடந்த 2025-ம் ஆண்டு, தங்கத்தின் விலை உயர்ந்ததால், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இதனால் புதிய தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருக்கும், ஆனால் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி நகைக்கடன் மதிப்பை 60 முதல் 65 சதவீதமாக குறைத்துள்ளன. அவசர தேவைக்காக, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக பொதுநகையை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, வட்டி சற்று அதிகம், கடன் அளவும் வரம்பு விதிக்கப்படுகிறது. இதனிடையே, ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவது, விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.. அந்தவகையில் விரைவில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. நகை கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பு மாநில அரசுகள் நகைக்கடனை விரைவில் தள்ளுபடி செய்துவிடும் என்ற அபரிமிதமான நம்பிக்கையிலும் அடகு வைக்கிறார்கள்.. இந்த முறை தேர்தலில் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. இதனால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம்.. அதுமட்டுமல்ல, நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். போதாக்குறைக்கு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. தமிழக அரசு சர்ப்ரைஸ்? எனவே நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பும் விரைவில் வரக்கூடும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனராம்.. அதற்கேற்றபடி, நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 2026 தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.. ஆனால், கடந்த 2021 தேர்தலில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா? #நகை கடன் தள்ளுபடி அரசாணை