மந்திரம்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
799 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
AI indicator
*வெற்றி தரும்* *விநாயகர் வழிபாடு*!*எந்த பிரச்சினைகளுக்கு* *எந்த விநாயகரை* *வழிபடவேண்டும்*? மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன். மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும். குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன். குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன். புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும். வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன். வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும். கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன். கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன். வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும். விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன். விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும். சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன். சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும். பசுமாட்டு சாண பிள்ளையார் வழிபாட்டு பலன். பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் (பசுமாட்டு சாண பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும். சந்தன பிள்ளையார் வழிபாட்டு பலன். சந்தனத்தில் பிள்ளையார் (சந்தன பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். வாழைப்பழ பிள்ளையார் வழிபாட்டு பலன். வாழைப்பழத்தில் பிள்ளையார் (வாழைப்பழ பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் குடும்பம் விருத்தியாகும். வெண்ணை பிள்ளையார் வழிபாட்டு பலன். வெண்ணையில் பிள்ளையார் (வெண்ணை பிள்ளையார் ) பிடித்து வழிபாடு செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும் பலவித‌ மரங்களின் கீழே அமர்ந்திருக்கும் பிள்ளையாரை (விநாயகர்) வழிபடும் முறைகளும் அதனால் கிடைக்கப் பெறும் பிள்ளையார் வழிபாட்டு பலன்களும். வன்னிமரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது விசேசம். அவிட்டம் நட்சத்திரத்து அன்று இவரை நெல் பொரியால் அர்ச்சித்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து கன்னிப் பெண்களுக்கு தானம் செய்தால் திருமணம் ஆகாதாவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும். வில்வமரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. சித்திரை நட்சத்திரம் அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இந்த பிள்ளையாரை வலம் வந்தால் பிரிந்த கணவன்-மனைவி விரைவில் ஒன்று சேருவர். இதே பிள்ளையாருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசமரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிசேகம் செய்தால் விளைசல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும். பணக் கஷ்டம் தீரும். ஆலமரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. மகம் நட்சத்திரத்தன்று இவருக்கு எலுமிச்சை சாதம், புளியோதரை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் என ஐந்து வகையான சித்திரான்னங்களை படைத்து வழிபாடு நடத்தி தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகி விடும். வேப்பமரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகிய ஐந்து வித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட மனதிற்கு பிடித்த வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்படும் நிலை அகலும். நெல்லிமரப் பிள்ளையார் பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன சாந்தி கிட்டும். மாமரப் பிள்ளையார் கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்டு 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு, ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை, பொறாமையால் பாதிப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும். நாவல்மரப் பிள்ளையார் இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியினர், குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேருவர். புன்னைமரப் பிள்ளையார் ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவருக்கு இளநீர் அபிசேகம் செய்து ஏழை எளியவர்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன்-மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும். தாம்பத்திய வாழ்க்கை வளமாகும். இலுப்பைமரப் பிள்ளையார் ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய் கிழமைகளிலும் இவருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு அளித்து வர தனித்த வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும். மிகஉயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள், எந்தவித விபத்துக்கள் இன்றி- நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும். சந்தனமரப் பிள்ளையார் மிகமிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிசேகம் செய்து வழிபட அரிய அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும். புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும். மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் "சீதக்களப செந்தாமரைப்பூம்" என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய விநாயகர் காரிய சித்திமாலை துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார். 🚩🕉🪷🙏🏼 #🕉️கணபதி போற்றி #🙏ஆன்மீகம் #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் ##🙏🏻 கணபதி மந்திரங்கள் 🕉️
ரவிசங்கர் ராஜா, ஆரணி
601 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
AI indicator
*லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற பலனை தரும்* *பாக்ய ஸுகூர்த்த* (பாக்ய ஸூக்தம்) *மந்திரம்* (பாக்ய ஸூக்தம்) ஸுகூர்த்தம் என்றால் கொடுப்பினை என பொருள். கேரளாவில் விஷ்ணு கோவில்களில் இந்த வழிபாடு பிரசித்தி பெற்றது. குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் க்ஷேத்திரம், திருப்றையார் போன்ற. விஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்வார்கள், முடியாதவர்கள் உங்கள் இல்லங்களில் பாக்ய ஸுகூர்த்தம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்யலாம், எதற்கு? ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பாக்யஸ்தானம். அந்த பாக்யாதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்க தோஷம், பாக்யாதிபதி வக்கிரம், மறைவு போன்றவவை உண்டானால் பெரும்பாலும் பெண்களுக்கு பிள்ளைபேறு நல்ல கணவன் போன்ற பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் பாவம் சம்மந்தப்பட்ட காரியங்கள் நன்கு சீராக நடைபெற தங்களின் அதிதேவதையை மனதில் நன்கு வேண்டி இந்த மந்திரம் சொல்லி வர வேண்டும், பாக்ய ஸுகூர்த்த முதல் மந்திரத்தில் அக்னி பகவான், இந்திரன், மித்ர வருணதேவன் தேவலோக வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள் தேவகுருவாகிய ப்ரகஸ்பதியையும் மந்திரத்தால் வணங்கப்படுகிறது, மீதமுள்ள ஆறு மந்திரங்களில் ஆதித்யன், மற்றும் பிற தேவர்களை வணங்கப்படுகிறது *இந்த மந்திரத்தை* *அதிகாலை பிரம்ம* *முகூர்த்தத்தில் ஜெபம்* *செய்தால் லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற புண்யம்* *கிடைக்கும் என்பது* *ப்ரமாணம்* ஒன்பதாம் பாவத்திற்க்கான காரியங்கள் சித்தியாகும் 1.ஓம் ப்ராதரக்னீம் ப்ராதரிந்த்ரம் ஹவாமஹே, ப்ராபாதர்மித்ரா வருணா ப்ராதசின்யன, ப்ராதர்பஹம் பூஷணம் ப்ரம்ணஸ்பதிம் ப்ராதஸஸ்ஸோமமுத ருத்ரம் ஹுவேம. பொருள் : அக்னி. இந்திரன், மித்ர வருணதேவன்மார்கள், அஸ்வினி தேவன்மார்கள், பூஷன். ப்ரகஸ்பதி, ஸோமன், ருத்ரன். என்கின்ற தேவர்களை வந்தனை செய்யப்படுகிறது, 2.ப்ராதர்ஜிதம் பஹமுகம் ஹுவேம வயம் புத்ரமதிதேரேய்யா வியாதா ஆத்யஞ்சிதய்யம் மன்யமானஸ்து ரஞ்சித்ராஜா சைத்யம் பஹம் பக்ஷித்யாஹ, பொருள் ; பாவப்பட்டவர்களும், இராஜாக்கன்மார்களும் ப்ராத்திக்கின்ற ஆதிதியுடைய புத்ரனாகிய பஹனை எல்லாவித ஐஸ்வர்யமும் உண்டாகும்படி வணங்குகிறோம், 3. பஹ ப்ரணதர் பகஸத்யா ராதோ பஹே மாந்திய முதவததண பகப்ரணோ ஜனய கோபிரசைர் பஹப்ரன்ய ப்ர்ன்யவம் தஸ்யாம பொருள் : எல்லா ஐஸ்வர்யங்களின் மூர்த்தியாகிய தெய்வமே எங்களுக்கு சத்ய தர்மங்களின் மூலம் வாழ நல்ல புத்திகள் நல்கி அனுக்கிரகியுங்கள், 4.உதேதானீம் பகவல்ஸ்யா மோத ப்ரபித்ய உத மத்யே அஹனாம் உதோதினா மகவன் ஸுரஸ்ய வயம் தேவானாம் ஸுமுதௌ ஸ்யாம, பொருள் :ஈஸ்வர்ய அனுகிரகத்தால் எனக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்லவர்கள் ஸகவாசத்தை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று பெற்றவர்கள் ஆகிய. எங்களுக்கு பேரூம் பெருமைகளை தேடி தரும்படி ஈஸ்வரனை வேண்டுகிறோம். 5.பஹ ஏவ பகவாஹம் ஆஸ்தூ தேவா ஸ்தேன வயம் பகவல்ஸ்யாம தந்த்யா பக ஸர்வ இஜ்ஜோஹவீமி ஸனோ பக பூர ஏதா பவேஹ.. பொருள் ; பகவானே எங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமலும். தன கஷ்டத்தை போக்கியும் நீங்கள் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், 6. ஸமயய்ராயோ ஷஸோனமந்த ததி வேவ ஸுச்சயே பதாய அர்வாசீனம் வஸுவிதம் பகணோ ரதமி வாஸ்ய வாஜின ஆவாஹந்து பொருள் ; இரக்ஷகனாகிய வனங்களில் குதிரைகளுக்கு நீங்கள் எவ்வளவு பலம் கொடுத்திரிக்கிறீர்களோ அவ்வளவு பலத்தை எனது குடும்பம் காக்கக பலத்தை கொடுங்கள், 7.ஆஸாய்யவதீர்கோமதீர்ண உஷாஸோ வீரபதீஸ்ஸதமு ச்சந்து பத்ரோ ஹல்யதந்துஹானா விஸுத்ய ப்ரவீனா யுயம் பாத ஸ்யஸ்திபீஸ்ஸதான பொருள் ; இந்த குடும்பத்தின் கிரக நாதியாகிய பெண்ணான எனக்கு நீங்கள் கூட இருந்து பலத்தை தந்து என் கணவன், பிள்ளைகளுக்கு நோய் நொடிகள் வராமல் தந்தை ஸ்தானத்தில் ஈஸ்வரனாகிய நீங்கள் என்னை காப்பாற்றி கொண்டே இருக்க வேண்டும் ஓம் ஸாந்தி! ஓம் ஸாந்தி!! ஓம் ஸாந்தி!!! பாக்ய ஸூக்தம் மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #மந்திரங்கள்
Muruga guruji
1.3K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
#குடும்பபிரச்சனை #தோலில்பிரச்சனை #திருமணபொருத்தம் #கணவன்மனைவி பிரச்சனை #கோழத்தை இல்லண்மை#ஜோதிடம் #கருப்பர் மந்திரம் #marrage