*வெற்றி தரும்*
*விநாயகர் வழிபாடு*!*எந்த பிரச்சினைகளுக்கு* *எந்த விநாயகரை* *வழிபடவேண்டும்*?
மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன்.
மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும்.
குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன்.
குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன்.
புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.
வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன்.
வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.
கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன்.
கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும்.
விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன்.
விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும்.
சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன்.
சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும்.
பசுமாட்டு சாண பிள்ளையார் வழிபாட்டு பலன்.
பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் (பசுமாட்டு சாண பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.
சந்தன பிள்ளையார் வழிபாட்டு பலன்.
சந்தனத்தில் பிள்ளையார் (சந்தன பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
வாழைப்பழ பிள்ளையார் வழிபாட்டு பலன்.
வாழைப்பழத்தில் பிள்ளையார் (வாழைப்பழ பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் குடும்பம் விருத்தியாகும்.
வெண்ணை பிள்ளையார் வழிபாட்டு பலன்.
வெண்ணையில் பிள்ளையார் (வெண்ணை பிள்ளையார் ) பிடித்து வழிபாடு செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்
பலவித மரங்களின் கீழே அமர்ந்திருக்கும் பிள்ளையாரை (விநாயகர்) வழிபடும் முறைகளும் அதனால் கிடைக்கப் பெறும் பிள்ளையார் வழிபாட்டு பலன்களும்.
வன்னிமரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது விசேசம். அவிட்டம் நட்சத்திரத்து அன்று இவரை நெல் பொரியால் அர்ச்சித்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து கன்னிப் பெண்களுக்கு தானம் செய்தால் திருமணம் ஆகாதாவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும்.
வில்வமரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. சித்திரை நட்சத்திரம் அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இந்த பிள்ளையாரை வலம் வந்தால் பிரிந்த கணவன்-மனைவி விரைவில் ஒன்று சேருவர். இதே பிள்ளையாருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
அரசமரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிசேகம் செய்தால் விளைசல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும். பணக் கஷ்டம் தீரும்.
ஆலமரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. மகம் நட்சத்திரத்தன்று இவருக்கு எலுமிச்சை சாதம், புளியோதரை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் என ஐந்து வகையான சித்திரான்னங்களை படைத்து வழிபாடு நடத்தி தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகி விடும்.
வேப்பமரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகிய ஐந்து வித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட மனதிற்கு பிடித்த வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்படும் நிலை அகலும்.
நெல்லிமரப் பிள்ளையார்
பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன சாந்தி கிட்டும்.
மாமரப் பிள்ளையார்
கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்டு 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு, ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை, பொறாமையால் பாதிப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.
நாவல்மரப் பிள்ளையார்
இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியினர், குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேருவர்.
புன்னைமரப் பிள்ளையார்
ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவருக்கு இளநீர் அபிசேகம் செய்து ஏழை எளியவர்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன்-மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும். தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.
இலுப்பைமரப் பிள்ளையார்
ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய் கிழமைகளிலும் இவருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு அளித்து வர தனித்த வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும். மிகஉயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள், எந்தவித விபத்துக்கள் இன்றி- நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.
சந்தனமரப் பிள்ளையார்
மிகமிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிசேகம் செய்து வழிபட அரிய அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும். புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.
மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும்.
அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார்.
அவர் "சீதக்களப செந்தாமரைப்பூம்" என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர்.
இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.
விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது.
காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய விநாயகர் காரிய சித்திமாலை துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும்.
சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.
எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.
தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார். 🚩🕉🪷🙏🏼
#🕉️கணபதி போற்றி #🙏ஆன்மீகம் #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் ##🙏🏻 கணபதி மந்திரங்கள் 🕉️