💕💕என்னை கொள்ளாதே❣️❣️

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
665 views
4 days ago
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது... குடும்ப விவகாரத்தில் தட்டிக் கேட்ட ஒரு பெண்ணின் உயிரைக் கள்ளக்காதல் வெறி பறித்துள்ள சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணி (டிரைவர்). இவரது மனைவி பிரியா (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா அதே ஊரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். கணவனை இழந்த பிரியாவின் அக்கா லட்சுமி (42), பிரியா வீட்டில்தான் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு குறித்துத் தெரியவந்ததும், பிரியா தனது அக்காவைக் கண்டித்துள்ளார். இந்தத் தகவலை லட்சுமி முத்துக்குமாரிடம் கூறவே, பிரியா மீது முத்துக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.... நேற்று இரவு பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்துக்குமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முத்துக்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையிலும் முகத்திலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து, பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய முத்துக்குமாரைப் புதுக்கோட்டை போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முத்துக்குமார் சாதாரண நபர் அல்ல; அவர் தட்டாரமடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.... மேலும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர், ஏற்கனவே தனது மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், இந்தத் துணிகரக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிச் சட்டை அணிந்தவரே இப்படிப்பட்ட கொடூரக் செயலில் ஈடுபட்டது பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
515 views
6 days ago
ஈரோடு மாவட்டம் பி.பி. அஹ்ரகாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தினேஷின் மனைவி சுகுணா. இவருக்கும் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் தவுபீக் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.... இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இருமுறை காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்... சம்பவத்தன்று தவுபீக்கின் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தவுபீக் அவரது கழுத்தை நெரித்ததில் சுகுணா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்தவரைச் சாலையோரம் இழுத்துச் சென்று விட்டுவிட்டுத் தவுபீக் தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது.... இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுகுணா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
616 views
6 days ago
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், உறவுகளின் புனிதத்தைக் கேள்விகுறியாக்கும் ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.... அதாவது சத்தாரி பகுதியில், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மனைவியை கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவனும், அவனது காதலியும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய ஷீலா பிபி ஆவார். இவருக்கும் மொஜம்மல் என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மொஜம்மல் வெளிமாநிலங்களில் சென்று வேலை செய்யும் ஒரு புலம்பெயர் தொழிலாளி ஆவார். இவர்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகளும் உள்ளனர். விசாரணையில், கடந்த சில மாதங்களாக மொஜம்மலுக்கும் அவரது உறவினர் முறைப் பெண்ணான அண்ணி முறையில் உலா ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவறறிந்த ஷீலா பிபி தனது கணவனின் சில்மிசக் காதலைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் அந்தத் தம்பதியிடையே தினமும் தகராறும் குடும்பக் கலவரமும் வெடித்துள்ளது. சம்பவத்தன்றும் இதே விவகாரம் தொடர்பாக அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மொஜம்மல், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கண்மூடித்தனமாக ஷீலாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.... தன் மனைவியைக் கொன்றபிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஷீலாவின் இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலத்தை வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியில் தள்ளி மறைத்து வைத்துள்ளான். ஆனால், வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நடவடிக்கைகளில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலுக்கு அடியில் ஷீலாவின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடப்பது கண்டு அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.... மேலும் இந்தச் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான கணவன் மொஜம்மல் மற்றும் அவனது கள்ளக்காதலி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
575 views
6 days ago
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இந்த கொடூரம் நடந்துள்ளது.. 40 வருட நண்பன் என்றுகூட பார்க்காமல், அவரது மனைவியுடனேயே நெருங்கி பழகியிருக்கிறார் பாக்குமட்டை வியாபாரி நாகராஜ்...... கடைசியில் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு, கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. கோவை மாவட்டத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த 10வது கொலை இதுவாகும்.!!! சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற கொலையாளியைக் காவல்துறையினர் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ளது வெள்ளிமலைப்பட்டினம்.. இங்கு வசித்து வருபவர் நாகராஜ்.. 62 வயதாகிறது.. பாக்கு மட்டை வியாபாரியான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி லதா ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (65). மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் இவரது மனைவி பாக்கியா (58). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நாகராஜும் கந்தசாமியும் கடந்த 40 ஆண்டுகளாக மிகவும் நெருங்கிய நண்பர்கள்.. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் குடும்ப நிகழ்வு நடக்காது.. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள். 40 வருட நண்பன் இந்நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நாகராஜுக்கும், தன்னுடைய மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அது உறுதியாகியும் விட்டது. இந்த தவறான உறவால் நொந்து போன கந்தசாமி, நாகராஜை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதைக் பொருட்படுத்தவில்லை... இதனால் நண்பர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன... ஊர் பொதுமக்கள் பலமுறை இவர்களை சமாதானம் செய்து வைத்தும், கந்தசாமிக்கு நண்பர் மீது இருந்த ஆத்திரம் குறையவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நாகராஜ் தனது பைக்கில் டீ வாங்குவதற்காக நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கந்தசாமி, தனது நண்பர் நாகராஜை திடீரென வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் கள்ளக்காதலை கைவிட முடியாது என்று கறாராக சொன்னார்.. மிளகாய்ப்பொடி - கத்திக்குத்து இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன கந்தசாமி, கையோடு சென்று சென்றிருந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் முகத்தில் வீசினார். இதனால் கண் எரிச்சலால் நாகராஜ் அலறினார்.. அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார் கந்தசாமி.. இதில் நாகராஜ், ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். கொலையை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார் கந்தசாமி.. அதற்குள் தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார் நாகராஜின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .. பிறகு தப்பியோடிய கொலையாளி கந்தசாமியையும் வலைவீசி தேடினார்கள். இறுதியில் அவர் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.... திமுக பிரமுகர் , பாக்குமட்டை வியாபாரி போலீசாரிடம் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக கந்தசாமி உடனே, மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது வலது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் கந்தசாமியை மீட்டு கைது செய்தனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவரை அனுமதித்தனர்.. இப்போது ஆலந்துறை போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். பாக்குமட்டை வியாபாரியான நாகராஜ், திமுக பிரமுகராகவும் இருந்து வந்தாராம்.. தகாத உறவில் ஈடுபட்டு கழுத்து, தலையின் பின்பகுதி மற்றும் வயிறு உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்தாராம் நாகராஜ்.. தகாத உறவில் சிக்கி, தன் குடும்பத்தையே நாசம் செய்த 40 ஆண்டு கால நண்பனை, தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் கோவை மாவட்டத்தில்அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 10 கொலைகள் ஆனால், கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 10 படுகொலைகள் நடந்துள்ளன.. இதனால் பொதுமக்கள் பீதியிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.. குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றாலும், ரோந்து பணியை தீவிரப்படுத்தி சட்டம்-ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
923 views
10 days ago
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது... கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. அதாவது சிற்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (எ) ரூபன் (32). பெயிண்டராக வேலை செய்து வந்த இவர் மீது சில அடிதடி வழக்குகளும், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த புகாரும் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல், நேற்று காலை 11 மணியளவில் தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு பைக்கில் சென்றுள்ளார். வெங்கடேசன் பைக்கை ஓட்ட, பின்னால் மாரி அமர்ந்து சென்றுள்ளார். பாகல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்த போது, திடீரெனப் பின்னால் வந்த கார் ஒன்று அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாரியைச் சுற்றி வளைத்தது. உயிர் தப்பிக்க மாரி அலறிடித்துக் கொண்டு ஓட முயன்றார்; ஆனால், அந்த கூட்டம் அவரைப் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் மாரியின் கையின் மணிக்கட்டுப் பகுதி துண்டாகித் தனியாக விழுந்ததுடன், முகம் முழுவதும்படி கொடூரமாகச் சிதைக்கப்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.... கொலையை அரங்கேற்றிய அந்த கும்பல் மீண்டும் காரில் ஏறித் தப்பியோட முயன்றது. அப்போது பதற்றத்தில் அவர்கள் ஓட்டிய கார் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. உடனே உஷாரான அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அதில் மூன்று பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் சிக்கிய கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீனா (25), நரேஷ் (20), விக்கி (எ) கலாநிதி (23) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மேலானூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு (19), ராஜ்குமார் (20) ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். இது பற்றி காவல்துறையின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட தீனாவின் திருமணமான சகோதரி தீபாவுடன், மாரி கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபாவின் கணவர் அவரை அடித்துத் துன்புறுத்தித் தாய் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார்.... இதன் காரணமாகத் மனமுடைந்த தீபா கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது சகோதரியின் சாவுக்குக் காரணமான மாரியைப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் தீனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொடூரத் திட்டத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெயிண்டர் மாரிக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
207.4K views
19 days ago
நீ என்கூடதான் தொடர்புல இருக்கனும்" - 5 வருட கள்ளக்காதல்.. கணவனோடு மீண்டும் சேர்த்த மனைவி! ஆத்திரத்தில் தீவைத்த காதலன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் சின்ன கெங்குராஜ் (47) என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிலகாலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துகொண்டிருந்த� #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
815 views
22 days ago
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு தடையாக உள்ள கணவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததால் ரூ 5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர்... இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்