குர்ஆன் பொன்மொழிகள் 📖📗

SHEIK 🌺KSN🌺
643 views
5 days ago
"இன்னும் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது" அல்குர்ஆன் அல்-முனாஃபிகூன் 63:8. "அல்லாஹ் யாரை இழிவுபடுத்துகிறானோ அவரை கண்ணியப்படுத்துபவர் யாருமில்லை" அல்குர்ஆன் அல்-ஹஜ் 22:18. "நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானவர், உங்களில் அதிகம் இறையச்சம் உடையவரே" அல்குர்ஆன் அல்-ஹுஜுராத் 49:13. கண்ணியம் தேடினால் அல்லாஹ்விடம் தேடுங்கள்: பதவி, பணம், கூட்டத்தில் இல்ல. தொழுகை, குர்ஆன், தக்வாவில் இருக்கு. கண்ணியம் என்றால் ? ஈமான், தக்வா, நல்ல அமல், மக்களிடம் மரியாதை, ஜன்னத். இழிவு என்றால் ? குஃப்ர், பாவம், அல்லாஹ்வை மறத்தல், மக்களிடம் கேவலம், நரகம். இழிவு எதனால் வரும்? அல்லாஹ்வை மறந்தால், பாவம் செய்தால், மக்களை கேவலப்படுத்தினால். எல்லாம் அல்லாஹ்வின் தீர்ப்பு யாரையும் கேலி செய்யாதீர்கள். இன்று அவர் இழிவாக இருக்கலாம். நாளை அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்தலாம். "யா அல்லாஹ்! இஸ்லாத்தை கொண்டு எங்களை கண்ணியப்படுத்துவாயாக. எங்களை கொண்டு இஸ்லாத்தை கண்ணியப்படுத்துவாயாக" ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.1K views
7 days ago
"அவர் தான் முதல்ல சொல்லட்டும்"னு நினைக்காம, நாம முதல்ல அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லுறதுதான் சிறந்தது. அதுல தான் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கு. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் சொர்க்கம் போகனும்னா ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பு செலுத்துங்க. அதுக்கு நான் ஒரு வழி சொல்லவா? உங்களுக்குள்ள ஸலாமை பரப்புங்க" — (ஹதீஸ் முஸ்லிம்) இரண்டு முஸ்லிம்கள் கை கொடுத்து ஸலாம் சொல்லும்போது, அவர்கள் பிரிவதற்குள் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. _ அபூதாவூத் 5212. இரண்டு பேரும் சிரிச்ச முகத்தோட, ஒருத்தர் நெஞ்சுல கை வச்சு, இன்னொருத்தர் கை கொடுத்து வரவேற்கிறாங்க. இதுதான் இஸ்லாம் காட்டுற சகோதரத்துவம். இன்னைக்கு வீட்ல, கடைல, ஆபீஸ்ல யாரை பார்தாலும் முதல்ல நாமளே ஸலாம் சொல்லுவோம். "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு" அதுக்கு "வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு"னு பதில் சொல்லுவோம். அல்லாஹ் நம்மை அவனுக்கு நெருக்கமானவர்களில் ஆக்கட்டும். ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
9.7K views
8 days ago
மக்ரிப் நேரத்திலிருந்து இரவு நேரம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே தனியாக விளையாட விடக்கூடாது. அவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைந்ததும் ஷைத்தான்களும், தீய ஜின்களும் பூமியில் அதிகமாக நடமாடுகிறார்கள். அதனால் குழந்தைகளை பாதுகாக்க சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் அதான் கேட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு வர சொல்லுங்க வீட்டு கதவை மூடுங்க, அல்லாஹ்வின் பெயரால் சொல்லுங்க குழந்தைகளுக்கு ஆயத்துல் குர்ஸி, மூன்று குல்கு வல்லாஹு சூராக்கள் ஓதி ஊதுங்க. பகல்ல விளையாடுவது தப்பில்லை. வெளிச்சம் இருக்கும்போது, பாதுகாப்பான இடத்தில் விளையாடலாம். ஆனா இருட்டியதும் வீடுதான் பாதுகாப்பான இடம். இறைவா! எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாயாக" — ஆமீன்.! 🤲 நம்ம வீட்ல இருக்குற குட்டீஸை இன்றையில் இருந்து மக்ரிப்க்கு முன்னாடியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இன் ஷா அல்லாஹ். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
636 views
9 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் தவறான பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி 6243. "நம்பிக்கையாளர்களிடம் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்" — அல்குர்ஆன் அந்-நூர் 24:30 தவறுதலா ஒரு பார்வை விழுந்தா அது பாவமில்லை. ஆனா அதே பார்வையை திரும்ப திரும்ப பார்தா, ஆசையோட பார்தா அதுதான் பிரச்சனை. உடனே பார்வையை திருப்பிடனும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
6.2K views
9 days ago
இன்னைக்கு வெள்ளிக்கிழமை வந்த மாதிரி இருக்கும், அதுக்குள்ள அடுத்த வெள்ளிக்கிழமை வந்துடுது. இது நபி ﷺ அவர்கள் சொன்ன அடையாளம் தான். வருடங்கள் மாதங்கள் போல, மாதங்கள் வாரங்கள் போல தெரியுது. முன்னாடி ஒரு நாள்ல நிறைய வேலை முடிச்சோம். இப்போ 24 மணி நேரம் இருந்தும் பத்தல. ஏன்னா நேரத்துல அல்லாஹ் பரக்கத்தை குறைச்சுட்டான். இது நாம அலட்சியமா இருக்க கூடாதுன்ற எச்சரிக்கை. நேரம் வேகமா போகுதுனா, நம் ஆயுளும் குறைஞ்சிட்டே போகுது. தொழுகை, துஆ, பெற்றோர், குர்ஆன், தௌபா... இதெல்லாம் "அப்புறம் பார்ப்போம்"னு தள்ளி போட முடியாது. அல்லாஹ் நம்முடைய நேரத்தை நல்லதுக்கு பயன்படுத்தும் மக்களாக ஆக்கட்டும். கடைசி மூச்சு வரை ஈமானோடு வாழவும், ஈமானோடு மரணிக்கவும் அருள் புரியட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️