தகாத உறவு கள்ள காதல் பரிகாரம்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.4K views
1 months ago
தெலுங்கானா மாநிலம் மென்ஷன் மாவட்டம் பிசாரா பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து ஆறு வயதில் மகளும்,ரெண்டு வயதில் ஹரி கிருஷ்ணா என்ற மகனும் இருந்தனர்..... திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு, தீகுலா கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது. கணவர் சுவாமி அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களைப் பயன்படுத்திக் கொண்ட ஜோதி, தனது கள்ளக்காதலன் நவீனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல கடந்த மே 29-ஆம் தேதி சுவாமி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜோதி நவீனைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது, ஜோதியின் 2 வயது மகன் ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோதியும், கள்ளக்காதலன் நவீனும் சேர்ந்து பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையைச் சரமாரியாகத் தாக்கி தூக்கி வீசியுள்ளனர். இதில் தலையில் பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்டு குழந்தை உயிருக்குப் போராடியதை அடுத்து, இருவரும் பதற்றத்துடன் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கொலையை மறைப்பதற்காக, ஜோதி தனது கணவர் சுவாமிக்கு போன் செய்து, குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய சுவாமி, பதறியடித்து வீடு திரும்பிக் குழந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அடக்கம் பண்ணியுள்ளார். ஆனால், சில நாட்களிலேயே ஜோதியின் நடத்தையில் சுவாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் சுவரில் இருந்த ரத்தக்கறையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்டு அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை இறந்ததாகக் கூறப்பட்ட நாளில் ஜோதி நவீனுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுவாமி, ஜோதியிடம் இதுகுறித்து நியாயம் கேட்க, அவர் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூன் 19-ஆம் தேதி சுவாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜோதியைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நவீனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காகப் பெற்ற தாயே 2 வயது மகனைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...... #தகாத உறவு கள்ள காதல் பரிகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
1 months ago
காமவெறியின் உச்சகட்டமாக கள்ளக்காதல் சேர்ந்து உன் தாய் தன் சொந்த குழந்தையை கொடூரமாக தரையில் அடித்து கொலை செய்துள்ளார்.... தங்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்புக்கு அந்தக் குழந்தை ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதிய அந்தப் பெண், இந்த அரும்பாவச் செயலைச் செய்துள்ளார். தனியார் இடத்தில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்க முயற்சிக்கும் போதெல்லாம், குழந்தை தொடர்ந்து அழுது இடையூறு செய்ததாக அந்தப் பெண் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தின் காரணமாகவே, குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்றதாக அந்தப் பெண் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி ஒப்புக்கொண்டுள்ளார்.... #தகாத உறவு கள்ள காதல் பரிகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்