திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥

திருநீற்றுச் சுவடு
567 views
19 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 வணங்கும் முறை ✨நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். ✨வறுமை நீங்க தேய்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். ✨இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும். ✨சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். ✨திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். ✨வீட்டில் செல்வம் செழிக்க தேய்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும். ✨ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ✨பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். #✡️தோஷ பரிகாரங்கள்
திருநீற்றுச் சுவடு
2.4K views
24 days ago
கற்சிற்பம் இந்து தெய்வமான முருகப்பெருமானின் ஆறுமுக (ஷண்முகன்) திருவுருவத்தை சித்தரிக்கிறது. இடம்: இந்த சிற்பம் தமிழ்நாட்டின் சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் காணப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: இந்த திருவுருவத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும், பல கரங்களுடனும் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அவரது கரங்களில் ஜெபமாலை உள்ளிட்ட தெய்வீகச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்புமிக்க வரலாறு: இந்த தியாகராஜ சுவாமி திருக்கோவில் முதலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. பின்னர் சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு, இன்று வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍
திருநீற்றுச் சுவடு
3.2K views
28 days ago
#🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️தோஷ பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 காலை வணக்கம்* *நடந்ததும்,நடந்து* *கொண்டிருப்பதும்* *இறைவன் செயல்* *நடக்கப் போவதும்* *அவன் அருளால் தான்* *ஏன் வீணான குழப்பம்*? *நடந்ததைப் பற்றி* *வருத்தமும் வேண்டாம்* *நடக்கப் போவதைப்* *பற்றி கவலையும்* *வேண்டாம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
திருநீற்றுச் சுவடு
4.7K views
1 months ago
#🕉🦚ஓம் முருகா கார்த்திக் 🦚🛐🕉அம்மன் பக்தி🦚🕉கருப்பு சாமி பக்தி🙏ஓம் சிவமயம்🦚🦚#🙏கணபதி போற்றி #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 மற்றும் சிறப்புகள் ஸ்ரீ வஜ்ரக்ஷேத்ரா: இக்கோவில் "ஸ்ரீ வஜ்ரக்ஷேத்ரா" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நரசிம்ம மூர்த்திகள் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும். அமைப்பு: இது ஒரு சக்திவாய்ந்த 'எனர்ஜி ஃபீல்ட்' (Energy Field) ஆக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்கோவில் சுமார் 80 ஆண்டுகள் பழமையானது. மூலவர்: இங்கு மூலவர் அபய லட்சுமி நரசிம்மராக அருள்பாலிக்கிறார். நரசிம்மர், அன்னை லட்சுமியுடன் இணைந்து பக்தர்களுக்குப் பாதுகாப்பையும், செல்வத்தையும் வாரி வழங்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். தூண் நரசிம்மர்: இந்தச் சன்னதியில் உள்ள ஒரு தூணின் மீது பக்தர்கள் தங்கள் முதுகை வைத்துச் சாய்ந்து வணங்கும் வழக்கம் உள்ளது. இது தடைகளை நீக்கவும், மன உறுதியைப் பெறவும் செய்யப்படுகிறது. தரிசன பலன்கள் தடைகள் நீங்குதல்: உங்கள் தொழிலிலோ, வேலையிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ முன்னேற விடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள், எதிரிகள் மற்றும் தடைகளைத் தகர்க்க நரசிம்மர் துணை நிற்பார். நரசிம்மரை வழிபட்டவர்கள் எதற்கும் அஞ்சாத மன உறுதியைப் பெறுவார்கள். பொருளாதார மேன்மை: லட்சுமி நரசிம்மரின் அருளால் நிதிநிலை சீராகும். குறிப்பாக, லட்சுமி கடாட்சம் பெருகி, வறுமை விலகி செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது. பாதுகாப்பு: மனதில் இருக்கும் பயம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெற நரசிம்மர் வழிபாடு சிறந்தது. குடும்ப நலம்: குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கவும், கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும் நரசிம்மர் அருள்புரிவார். கோவில் முகவரி மற்றும் நேரம்: அமைவிடம்: 7th Cross Rd, 3rd Block, Thyagaraja Nagar, Basavanagudi, Bengaluru, Karnataka 560070. தரிசன நேரம்: தினமும் காலை 6:30 முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:30 முதல் 8:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும் (செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை கூடுதல் தரிசன நேரம் உண்டு).
திருநீற்றுச் சுவடு
814 views
1 months ago
பூசை அறை வழிபாடு - சில குறிப்புகள் வீட்டில் பூசை அறையில் வழிபாடு செய்வதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள் * சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது சரியானதல்ல. * வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுவாமல் அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். * ஈரமான உடையுடனும், ஓராடையுடனும், தலைக்குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது. * பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம். * காலை, மாலை வேளைகளில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராகத் தேங்காய் உடைக்கக் கூடாது. * கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். * வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். * விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்தி விட வேண்டும். * விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுதோ கூடாது. * தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமேத் தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது. * வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். * பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். * சனி பகவானை வேண்டும் பொழுது ஒரு போதும் வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. * விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது. #பூஜை அறை குறிப்புகள் 🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️ஜோதிட பரிகாரங்கள்
திருநீற்றுச் சுவடு
5.5K views
2 months ago
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #good morning இனிய காலை வணக்கம் 🪷 🌼 வேலும் மயிலும் துணை 🌼 ✨ முருகப்பெருமானின் அருள் என்றும் உங்கள் இல்லத்தில் நிலைக்கட்டும் ✨ 🙏 _ஓம் சரவணபவ_ 🙏 🪷✨ *நன்றி* ✨🪷