பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

ரவிசங்கர் ராஜா, ஆரணி
997 views
2 months ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️அக்ஷரமணமாலை 52. தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந் தோடமொன் றிடவரு ளருணாசலா (அ) ☘️☘️பொருள்:☘️☘️ அருணாசலா! குற்றமற்ற நீ என்னோடு இரண்டறக் கலந்து, யான் என்றும் நின் கலவிப் பேரின்பம் அனுபவிக்க அருள்செய் அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views
2 months ago
AI indicator
பக்தர்: பக்தன் ஞானியிடமிருந்து வேறுபடுவதேன்? முழுமையை அடைந்த பின்னும் இம்மாற்றம் நிகழ்கிறது, இல்லையா? பகவான்: உங்கள் கூற்று முற்றிலும் தவறு... பக்தன் ஞானியிலிருந்து வேறுபட மாட்டான்... பக்தன் பக்தியின் சாரமாகிறான்... ஞானியோ ஞானத்தின் சாரமாகிறான்... இருவரும் ஒருவரே... வேறில்லை... போலி பக்தரிடமும், போலி ஞானியரிடமுமே வாக்குவாதம் எழுகிறது... ஸ்ரீ ரமண மகரிஷி.... 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
937 views
2 months ago
AI indicator
ரமணானந்த ஸ்வர்ணகிரி 1934ம் வருஷம் மார்ச் மாதம் ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு விஜயம் செய்து ஹாலில் ஸ்ரீ ரமணரை நமஸ்கரித்தேன். “யார் நீ?” என்று பகவான் என்னைக் கேட்டார். “நான் நாராயணஸ்வாமி” என்றேன். [அவரது இயற்பெயர்] “இந்த நான் என்று நீ சொல்வது உன்னுடைய தேகமா வாயா அல்லது கையா?” என்று கேட்டார். மேலும் “நீ உனது தேகத்திலிருந்து வேறுபட்டிருக்கிறாய். நீ அதை வைத்துக்கொண்டிருப்பவன். தேகமானது உனது உடைமை” என்றார். “நான் தேகத்திலிருந்து வேறுபட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய தேகத்தையும் நான் என்னும் எந்தன் சுயத்தையும் இரண்டாகப் பிரிக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியவில்லை” என்று நான் சொன்ன போது... “சுயத்தினை விசாரம் செய். ”நான்” என்ற எண்ணம் முளைக்கும் இடத்தைத் தேடிச் சென்றால் நீ யார் என்று உனக்குத் தெரிய வரும்” என்று விளக்கினார். ஸ்ரீ ரமணர் நான் முயற்சி செய்து பார்ப்பதற்கு வேலை கொடுத்தார். அந்தப் பாடத்தில் நான் திருப்தியுற்று அவரது வாழ்வும் போதனைகளும் என்ற புத்தகத்தை வாங்கி ஆஸ்ரமத்தில் தங்கி அன்றிரவே படித்துமுடித்தேன். நிறைய படிக்கப் படிக்க நான் நிறையவே பகவானின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். அவரது உதாரணங்களும் போதனைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்திழுத்தன. பகவானிடம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்பி நான் ஆரம்பிக்கும் போதே பால் பிரண்டனின் The Secret Pathஐ மேற்கோள் காட்டி எனக்கு பதிலளித்து விட்டார். அதில் குறிப்பிட்டுள்ளபடி பேச்சு என்பது அமைதியாக உள்ள எண்ணங்களின் தொடர்பை தொந்தரவு செய்யும் வாதம் என்றார். உபதேச சாரத்தை மனப்பாடம் செய்யும் சில வாலிபர்களுக்கு அதைச் சரியாகச் சொல்லிக்கொடுத்து உதவி செய்துகொண்டிருந்தார். தத்துவார்த்தமான வரிகளின் அரிச்சுவடிக் கூட தெரியாத அந்த வாலிபர்களுக்கு இவர் பயிற்சியளித்துக்கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. இதனால் என்ன பயன் என்று எண்ணினேன். இதைப் பற்றி நான் ஒரு வார்த்தைக் கூட பேசாத போது பகவான் என் பக்கம் திரும்பி... “இந்த வரிகளின் அர்த்தம் இக்குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒரு வயதை எட்டியவுடன் அல்லது சிரமமான நிலையில் இருக்கும் போது இதை நினைவுபடுத்திப் பார்க்கும் போது இது மனதுக்கு இதமளிப்பதாகவும் சந்தோஷம் தருவதாகவும் அமையும்” என்றார். அடுத்த நாள் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பண்டிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். (அவர் கணபதி முனி) உள்ளூர் பள்ளிகளில் அவர் சம்ஸ்க்ருத ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பகவான் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தங்கியிருந்த இடங்களில் இவரும் தங்கியிருந்திருக்கிறார். அப்படி அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பகவான் மாலை வேளைகளில் உட்கார்ந்திருக்கும் இடம் ஒன்றிற்கு வந்தோம். உடனே அந்த பண்டிதர் கீழேயிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து நெற்றியில் கொஞ்சம் பூசிக்கொண்டு வாயிலும் சிறு துளி போட்டுக்கொண்டார். “அந்தப் புனிதமான மனிதர் அமர்ந்த இந்த இடம் மிகவும் தெய்வகடாக்ஷம் நிரம்பியது. ஸ்வர்க்கம் முழுவதும் சுற்றிவந்ததற்கு சமானம் அவரது காலடித் தடங்கள் பட்ட இடம்” என்றார். 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
890 views
2 months ago
AI indicator
சாதனை சாரம் 118. பத்தியா, ஞானப் பயிற்சியா, விவ்விரண்டில் முத்திக் குயர்ந்த முறையெதென்று - புத்தியா யாசமுற வேண்டா மவரவர்க்குள் ளத்திலெது நேசமுறு மோவதுவே நேர். மோக்ஷ மடைவதற்குச் சிறந்த வுபாயம் பக்தியா அல்லது ஞானாப்பியாசமாகிய விசாரமா, இவ் விரண்டில் எது சிறந்தது என்று புத்திக் கலக்கமடைய வேண்டாம். ஒவ்வொருவர்க்கும் உள்ளத்தில் எவ்வொரு மார்க்கத்தில் விருப்பம் அதிக முண்டாகிறதோ அதுவே, அவ்வொருவர்க்குச் சிறந்த முக்தி மார்க்க மாகும். அப்பனேஅருணாசலம் 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
982 views
2 months ago
AI indicator
குருவாசகக்கோவை 17. வேதாந்தவுண்மைத்திறன். 148. புலவிடய மன்றிப் பொருள்வேறு தேறார் கிலமடையும் புந்திக் கிறுக்கர் - புலத்தின் திறத்துவிரா கத்தாற் செழிப்புறுஞா னத்தை வறட்டுவே தாந்தமென் பார். பதச்சேதம்:- புல விடயம் அன்றிப் பொருள் வேறு தேறார் கிலம் அடையும் புந்திக் கிறுக்கர் புலத்தின் திறத்து விராகத்தால் செழிப்பு உறு ஞானத்தை வறட்டு வேதாந்தம் என்பார். அரும்பதவுரை:- புலவிடயம் - இந்திரிய விஷயங்கள்; கிலம் - அழிவு; புந்திக்கிறுக்கர் - கிறுக்குப் புத்தியுடையோர். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- அழிவைத் தரும் புத்திமயக்க முற்ற இலௌகிக மக்கள் ஐம்புல விஷயானுபவங்களைத் தவிர, மற்றொரு அழிவற்ற மெய்ப்பொருள் உண்டு என்பதை அறிய மாட்டார்கள். ஐம்புல விஷயங்களில் தீவிர வைராக்கியம் அடைவதால், அத்தகையோர் முமுக்ஷுக்களிடம் செழித்து ஓங்கும் ஞான வளத்தை 'வறட்டு வேதாந்தம்' என்று சொல்வர்! விளக்கக் குறிப்பு:- ஞானம் வறண்ட தென்பதும், புல விஷயங்கள் செழிப்பானவை என்பதும் பாமரர் கூற்று. அதற்கு நேர்மாறாக 'செழிப்புறு ஞானம்' என்றும், புல விடயங்கள் பொருளல்லாத 'புந்திக் கிறுக்கு - வறண்டது' என்றும் கூறினார். கூகைக்கு (கோட்டானுக்கு)ச் சூரியன் இருளாவது போல் புல விஷயப் புல்லர்கட்கு வைராக்கிய விளைவான ஞானம் வறட்சியாய்க் காணப்படும். 'தத்துவங் கண்டவற்கு.....' என்ற உள்ளது நாற்பது - அநுபந்தம் 29வது வெண்பாவில் ஞானத்தை வசந்த ருதுவிற்கு ஒப்பிட்டிருப்பது இங்குக் காணத் தக்கது. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
975 views
2 months ago
AI indicator
சிவமணியம் கேள்வி: புருஷ - பிரகிருதின்னா என்ன? பகவான்: பரத்தை இரண்டாப் பிரிச்சுக்கறா. புருஷன்... பிரகிருதின்னு. ஏன் பிரிக்கறான்னா சிஷ்யனிடம் துவைத பாவம் இருக்கறதனாலே. அதே கீதை புருஷோத்தமன் புருஷ பிரகிருதியைக் கடந்து இருக்கான்னு சொல்றதே! கேள்வி: பரநாடி, சுழுமுனை நாடி, ஹிருதயம்ன்னா என்ன? பகவான்: சுழுமுனை பரநாடியிலே அடங்கிடும். ஹிருதயம்ன்னா சம்வித். கேள்வி: அனாஹதம்ன்னா என்ன? பகவான்: ஒரு சக்கரம். ஆனா சம்வித் இல்லே. கேள்வி: உணவுக்கும் ஆத்மிக முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் உண்டா? பகவான்: ஆமாம். சாத்விக உணவு சத்வ குணத்தை வளர்க்கும். ஆத்மிக முன்னேற்றம் ஏற்படும். கேள்வி: கிரஹஸ்தர்க்கு எது சிறந்தது? பகவான்: தியானமோ... பக்தியோ... கேள்வி: பைபிள் கடவுள் பெயரை வீணா உச்சரிக்காதேங்குது. ஹிந்து சாஸ்திரங்கள் எல்லா நேரமும் நாமத்தை சொல்லுங்கங்குது. எப்படி எடுத்துக்கறது ? பகவான்: உணர்ச்சி இல்லாமே ஜபம் பயிற்சியா இருக்கக் கூடாது. நாமத்தை ஜபிச்சா சரணடையணும். சரணடைஞ்சா அப்புறம் நாமம் நம்ம கூடவே இருக்கும். கேள்வி: ஆத்மீகத்துலே பெரிய நிலை அடைஞ்சு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு அடிப்படை சோதனைகள் என்ன? ஏன் கேக்கறேன்னா... சிலர் பைத்தியம் மாதிரி இருக்காங்க. பகவான்: ஞானியை ஞானியே அறிவான். நாம ஞானியாயிருந்தாத்தான் இன்னொரு ஞானியைத் தெரியும். இருந்தாலும் ஞானியிடம் நமக்கு ஏற்படற மன அமைதியாலேயும் அவன்கிட்டே ஏற்படற மரியாதையாலும் தெரிஞ்சுக்கலாம். அவனோட வார்த்தைகளோ, செயல்களோ, தோற்றமோ, அடையாளம் இல்லை. இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. கேள்வி: நமக்கு இங்கே சுதந்திரம் இருக்கா? இல்லை. எல்லா முன்கூட்டியே முடிவு பண்ணிட்டாங்களா? பகவான்: தனித்தன்மைக்குத்தான் தற்சுதந்திரம். அது (த.த) இருக்கற வரைக்கும் இதுவும் (த.சு) இருக்கும். எல்லா சாஸ்திரங்களும் தற்சுதந்திரத்தை அடிப்படையாக் கொண்டதே. அதனாலேதான் சுதந்திரத்தை சரியான வழியிலே செலுத்தச் சொல்றா. விதியோ... மதியோ... யாருக்குன்னு பாருங்கோ? அதிலேயே நில்லுங்கோ. அதைக் கடந்துடலாம். அதுதான் இதைப் பேசறதுக்கான பிரயோஜனம். கேள்வி: புத்தி, உணர்ச்சிகள் இதெல்லாம் உடம்புமாதிரி பிறக்கறப்பவே சேந்தே வருதா? இறந்த பின்னாடி என்ன ஆகும்? பகவான்: இறந்ததுக்கு அப்புறம் என்ன ஆகும்ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி தூக்கத்துலே என்ன ஆறதுன்னு பாருங்கோ! இரண்டு விழிப்புக்கு இடையிலே தூக்கம். இரண்டு பிறப்புக்கு இடையிலே மரணம். கேள்வி: அந்த இடைவெளியில என்ன ஆகுது? புத்தி இருக்குமா? பகவான்: ஆமாம் இருக்கு. தூங்கும்போது புத்தி ஆத்மாவிலே ஒடுங்கியிருக்கு. முழிச்ச உடனே வந்துடறது. அதேதான் மரணத்துக்கும். பிறப்பிறப்பு உடலுணர்வையே குறிக்கும். வேற ஒண்ணும் இல்லே. நீங்க உடம்புன்னா.... அது உங்களை எப்பவும் பிடிச்சுக்கும். நீங்க உடம்பு இல்லேனா... அது உங்களைப் பாதிக்காது. யார் தூக்கத்துலே இருக்கானோ... அவனேதான் இப்போ பேசிக் கொண்டிருக்கான். நீங்க தூங்கும்போது உடம்பு இல்லே. இப்போ நீங்க உடம்பா? கண்டுபிடிங்கோ! எல்லாம் பிரச்சனையும் தீந்துடும். பிறந்தது இறக்கும். யாரோட பிறப்பு? நீங்க பிறந்திருக்கேளா? நீங்கதான் பிறந்திருக்கேள்ன்னா... எதோட பிறப்பைப் பத்திப் பேசறேள்? உடம்புதான் பிறந்தது. அது சாகும். அதோட பிறப்பும் இறப்பும் எப்பவும் இருக்கற உங்களை என்ன பண்ணும்? இந்தக் கேள்வி எல்லாம் யாருக்கு வாறது? யோசிங்கோ! அப்போ உங்களுக்குத் தெரியும். கேள்வி: ஆத்ம ஞானத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்படுதுங்கறதுக்கு, தியானத்துலே ஏதாவது குறிப்பிட்ட அனுபவங்கள் உண்டா? பகவான்: தேவையில்லாத சிந்தனையிலே இருந்து விடுபட்டிருக் கறதும், ஒரே சிந்தனையிலே நிக்கறதும், எந்த அளவுக்கு நம்மகிட்டே ஏற்பட்டுருக்கோ அந்த அளவுக்கு முன்னேற்றம். கேள்வி: ஆத்மஞானம் அடைய சன்யாசம் வாங்கணுமா? பகவான்: நாம தனித்தன்மையை இழக்கறதுதான் சன்யாசம் வாங்கறது. மொட்டை போட்டுக் காவி கட்டறது இல்லே. ஒருத்தன் கிருஹஸ்தனாக்கூட இருக்கலாம்... ஆனா அவன் தன்னை கிருஹஸ்தன்னு நினைக்கலேன்னா அவன்தான் சன்யாசி. இதுக்குமாறா ஒருத்தன் காவிகட்டி அலையலாம்... அவன் சன்யாசின்னு நினைச்சா அதோட நோக்கமே செத்துடும். கேள்வி: நான் அனாத்மாவை ஒழிக்கணும்ன்னு ஆசைப்படறேன். ஆத்மாவை அடையணும். எப்படி பண்றது? அனாத்மாவோட ஸ்வபாவம் என்ன? பகவான்: அனாத்மாவை ஒழிக்கணும்னு ஆசைப்படற ஒருத்தன் இருக்கான். அவன் யார்? பக்கம்:421 - 424. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
970 views
2 months ago
AI indicator
குருவாசகக்கோவை 147. குற்றமறு ஞானங் குலவுநூ லாமென்னக் கற்றலுறு மார்வத்தாற் கற்றாலும் - கற்றுச் சிறந்தகலை யெல்லாஞ் செறிவுமுய லுங்கால் மறந்தகல வேண்டி வரும். பதச்சேதம்:- குற்றம் அறு ஞானம் குலவு நூல் ஆம் என்னக் கற்றல் உறும் ஆர்வத்தால் கற்றாலும் கற்றுச் சிறந்த கலை எல்லாம் செறிவு முயலுங்கால் மறந்து அகல வேண்டி வரும். அரும்பதவுரை:- குலவு - பொருந்திய; கற்றல் உறும் - கற்கின்ற; செறிவு - நிஷ்டை. ஶ்ரீ முருகனார் சுவாமிகள் உரை:- அறிவு விளங்கற்காதாரமாய நூல்கள் கற்கக்கடவனவேயா மென்று தனக்குக் கல்வியின் மீதுள்ள காதலால் எத்துணை யூக்கமா யொருவன் கற்கினும் பரிபாகப்பட்டு மூலத்து ளொடுங்கலைப் பின்னர் முயலும் பொழுது, முன்னர்த்தானரிதிற் கற்று மேம்பட்ட கலை ஞான மெல்லாம் முற்றும் மறந்தொழிய வேண்டியே நேரும். விசேடவுரை:- குற்றமறு ஞானமென்றேனும் குற்றமறு நூலென்றேனுங் கூட்டுக. ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- "இவை குற்றமற்ற ஞான நூல்கள்" என்று அவை களைக் கற்கும் பேராவலுடன் ஒருவன் கற்றுத் தேர்ந்த ஞான நூல்களைக் கூட, இதயத்தில் நிலை (நிஷ்டை) பெற முயலும் நிதித் தியாசன காலத்தில், மறந்து, அவைகளை விட்டு, தான் தனிப்பட வேண்டியே வரும்! விளக்கக் குறிப்பு:- 'குற்றமறு ஞானம்' என்றாவது, 'குற்றமறு நூல்' என்றாவது மூலத்தைப் பொருள் கொள்ளலாம். 'செறிவு முயலுங்கால் - சிரவண காலத்தில் ஞான நூல்களின் மேல் பெருகிய காதல் தோன்ற வேண்டுவது அத்தியாவசியமே. மனன காலத்தில் அந்நூல்களின் கருத்துக்களில் (முடிபுகளில்) நாம் மனம் ஒப்பி, நம் இயல்பை அவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்வதால், அவை புதுமையற்றுப் போகின்றன. அதனால் அவைமேல் காதல் நீங்கி மீண்டுங் கற்கும் அவா ஓய்கின்றது. பிறகு நிதித்தியாசன காலத்தில் மனம் உண்முகப் படுவதற்கு, கற்றவைகளால் ஏற்பட்ட சாஸ்திர வாசனைகள் பெருந்தடையாய் அமைவதை உணரும் முமுக்ஷுவால் நூல்கள் நிராதரவு செய்யப்பட்டு (உதாசீன பாவத்தால்) அகன்று மறைய, சகல அறிவும் சகல மனத் தொழிலு மற்றுத் தான் மாத்திரமாக மிஞ்ச வேண்டியது அவசிய மாகின்றது. அதனால் ஞானநூல்களும் மறக்க வேண்டியவைகளே யாகின்றன!! அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
909 views
2 months ago
AI indicator
சிவமணியம் ஜி.வி. சுப்பராமய்யா கேட்டார். பகவான்: குழந்தையும் ஞானியும் ஒண்ணு. ஸம்ஸ்காரங்கள் குழந்தைகிட்டே வெளிப்படலே. அதனாலே, அதோட அறியாத்தன்மை முழுமையாயிருக்கு. ஸம்ஸ்காரங்கள் போயிடுத்துன்னா வயசான ஆளும் குழந்தையாயிடுவான். கேள்வி: குழந்தைகள் ஆசிரமத்துலே வீட்டுச் சூழ்நிலையைக் கொண்டு வந்துடறது... பகவான்: குழந்தைகள் எப்பவும் வீட்டிலேதான் இருக்கா. நாமளும் எப்பவும் வீட்டிலேதான் இருக்கோம். ஆனா வீட்டைவிட்டு வெளியே இருக்கறதா கனவிலே கற்பனை பண்ணிக்கறோம். கேள்வி: கம்பராமாயணம் படிச்சு இருக்கீங்களா? பகவான்: இல்லே. நான் எதையும் படிச்சது இல்லே. 14 வயசு வரைக்கும்தான் நமக்குப் படிப்பு. அப்போவே எனக்குப் படிக்கப் பிடிக்காது. ஆனா பகவத்கீதை ஸ்லோகம் எல்லாம் எப்படி சொல்றேன்னு எல்லாரும் ஆச்சர்யப்படுவா. கேள்வி ஞானம்தான். நான் கதையோ, பாஷ்யங்களோ, உபநிஷத்களோ படிச்சது இல்லை. யாராவது ஒரு சுலோகம் சொன்னா... அதோட அர்த்தம் சரிதான்னு எனக்குப்பட்டா... என்னாலே திரும்பச் சொல்ல முடியும். அவ்வளவுதான். வேற ஒண்ணும் இல்லை. வேற குறிப்புகளும் அப்படித்தான். ஸ்வபாவமா வர்றதுதான். உண்மை அறிவுக்கும் வார்த்தைக்கும் அப்பாற் பட்டதுன்னு எனக்குத் தெரியும். அப்போ ஏன் அதை படிக்கணும். நோக்கம்... உண்மைய உணரணும்ன்னு வந்தாச்சு... அப்புறம் எதுக்கு படிக்கணும் ? கேள்வி: பகவான் ஒருவேளை படிச்சுருந்தா இங்கே எங்களுக்கு பகவான் கிடைச்சுருக்க மாட்டார். பகவான்: என்னோட பூர்வத்திலேயே எல்லாத்தையும் முடிச்சிருப்பேன். அதனாலே அதிலே எனக்கு ஸம்ஸ்காரம் இல்லை. கேள்வி: 'சூரியன் அங்கு சுடர்வதில்லை; சந்திரன் இல்லை; நட்சத்திரங்களும் இல்லை; மின்னலும் இல்லை; அங்கு எப்படி நெருப்பு பிரகாசிக்கும்? இந்த எல்லா ஒளிகளும் ஒளிர்வது அவனுடைய ஒளியினாலே, அவன் ஒளியாலே எல்லாம் சுடர்கிறது'. இந்த ஸ்லோகத்துலே அவனுடைய ஒளியாலேன்னா என்ன அர்த்தம்? பகவான்: எல்லாம் அவனாலே ஒளிர்றதா? இல்லே. அவனோட ஒளியாலே ஒளிர்றதா? அவன் மட்டும்தான் இருக்கான். அவனும் அவன் ஒளியும் ஒண்ணுதான். 'இங்கு யாரும் எதையும் பார்ப்பதில்லே'... அப்படின்னா என்ன அர்த்தம்? பாக்கறவனும் பாக்கப்படறதும் அவன்தான்னு அர்த்தம். சூரிய சந்திரர்கள் ஒளிர்வது எப்படி? அவாளா வந்து உன்கிட்டே, 'நாங்க ஒளிர்றோம்'னு சொன்னா? இல்லே. வேற ஏதோ தனியா இருந்து சொல்றதா? கேள்வி: நான்தான் சொல்றேன். பகவான்: அப்போ சூர்ய சந்திரர்கள் ஒளிர்வது உன்னாலேயே! அறிவு வேணும். சூரிய சந்திரரைப் பாக்கறதுக்கு. அந்த அறிவுதான் நீ. அப்போ நீயும் உன் அறிவும் ஒண்ணுதான்... அவனும் அவன் ஒளியும் மாதிரி. கேள்வி: அந்த ஒளி சூரிய வெளிச்சம் மாதிரியா? பகவான்: இல்லே. சூரிய வெளிச்சம் ஜடம். நீதான் அதை அறியறே. சூரிய ஒளி பொருட்களைப் பாக்கப் பயன்படறது. இருட்டைப் போக்கறது. ஆனா அறிவுதான் இருட்டையும் வெளிச்சத்தையும் அறியற ஒளி. இருள்... சூரிய ஒளி முன்னாடி இருக்காது. அறிவொளி முன்னாடி இருள் இருக்கும். இந்த அறிவுதான் அறிவு, அறியாமைக்கு ஆதாரம். கேள்வி: கடவுள்தான் எல்லாம் செய்றார்ன்னா நாம ஏன் துன்பப் படணும்? கடவுள் தூண்டுறார்... அவன் செய்றான்... அவன் ஒரு கருவி தானே! அவனை ஏன் தண்டிக்கணும்? பகவான்: நான் செஞ்சேன்னு எவன் நினைக்கறானோ... அவனே துன்பப்படறான். இதைத் துன்பத்திலேதானே சொல்றேள்... சந்தோஷத்திலே சொல்ல மாட்டேங்கறேளே...! இன்பத்திலேயும் இந்த நினைப்பு இருந்தா... துன்பம் வராது. கேள்வி: துன்பம் எப்போ ஒழியும்? பகவான்: தனித்தன்மை போற வரைக்கும் துன்பம் போகாது. நல்லதும் கெட்டதும் கடவுள் செயல்ன்னா அதிலே வாற துன்பமும், இன்பமும் கடவுளுக்குத்தான். அதை ஏன் நம்ம மேலே ஏத்திக்கணும்? கேள்வி: மனோபலம் (Will power) எப்படிப் பெறுவது? நீ மனோபலம்ன்னு நினைக்கறது எல்லாத்திலேயும் வெற்றி அடையறது தானே...! மனோபலமன்னா வெற்றி தோல்வியை சமமா பாக்கறது. வெற்றி மட்டுமே அடையறது இல்லை. ஏன் எப்பவுமே ஜெயிக்கணும்? அது அகந்தையைத்தான் வளர்க்கும். ஆத்மிகம் தடைபடும்! தோல்வி நல்லது! கண்ணைத் திறக்கும்! தன்னை மீறிய சக்தியிருக்குன்னு தெரியும். சரணடையத் தயார் பண்ணும். சமசித்தம்தான் எப்பவும் வேணும். மேலும் வெற்றி, தோல்வி பிராப்தப்படி. ஒருத்தன் நல்லதே செய்றான்... ஆனா, தோத்துடறான். இன்னொருத்தன்... அநியாயக்காரன். அவன் ஜெயிக்கறான். அதுக்கு அர்த்தம் அவர் மனோபலம் பெறலே. இவர் மனோபலம் பெற்றுட்டார்ன்னு இல்லை. பக்கம்:417 - 421. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி