ரவிசங்கர் ராஜா, ஆரணி
975 views 2 months ago AI indicator
சிவமணியம் கேள்வி: புருஷ - பிரகிருதின்னா என்ன? பகவான்: பரத்தை இரண்டாப் பிரிச்சுக்கறா. புருஷன்... பிரகிருதின்னு. ஏன் பிரிக்கறான்னா சிஷ்யனிடம் துவைத பாவம் இருக்கறதனாலே. அதே கீதை புருஷோத்தமன் புருஷ பிரகிருதியைக் கடந்து இருக்கான்னு சொல்றதே! கேள்வி: பரநாடி, சுழுமுனை நாடி, ஹிருதயம்ன்னா என்ன? பகவான்: சுழுமுனை பரநாடியிலே அடங்கிடும். ஹிருதயம்ன்னா சம்வித். கேள்வி: அனாஹதம்ன்னா என்ன? பகவான்: ஒரு சக்கரம். ஆனா சம்வித் இல்லே. கேள்வி: உணவுக்கும் ஆத்மிக முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் உண்டா? பகவான்: ஆமாம். சாத்விக உணவு சத்வ குணத்தை வளர்க்கும். ஆத்மிக முன்னேற்றம் ஏற்படும். கேள்வி: கிரஹஸ்தர்க்கு எது சிறந்தது? பகவான்: தியானமோ... பக்தியோ... கேள்வி: பைபிள் கடவுள் பெயரை வீணா உச்சரிக்காதேங்குது. ஹிந்து சாஸ்திரங்கள் எல்லா நேரமும் நாமத்தை சொல்லுங்கங்குது. எப்படி எடுத்துக்கறது ? பகவான்: உணர்ச்சி இல்லாமே ஜபம் பயிற்சியா இருக்கக் கூடாது. நாமத்தை ஜபிச்சா சரணடையணும். சரணடைஞ்சா அப்புறம் நாமம் நம்ம கூடவே இருக்கும். கேள்வி: ஆத்மீகத்துலே பெரிய நிலை அடைஞ்சு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு அடிப்படை சோதனைகள் என்ன? ஏன் கேக்கறேன்னா... சிலர் பைத்தியம் மாதிரி இருக்காங்க. பகவான்: ஞானியை ஞானியே அறிவான். நாம ஞானியாயிருந்தாத்தான் இன்னொரு ஞானியைத் தெரியும். இருந்தாலும் ஞானியிடம் நமக்கு ஏற்படற மன அமைதியாலேயும் அவன்கிட்டே ஏற்படற மரியாதையாலும் தெரிஞ்சுக்கலாம். அவனோட வார்த்தைகளோ, செயல்களோ, தோற்றமோ, அடையாளம் இல்லை. இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. கேள்வி: நமக்கு இங்கே சுதந்திரம் இருக்கா? இல்லை. எல்லா முன்கூட்டியே முடிவு பண்ணிட்டாங்களா? பகவான்: தனித்தன்மைக்குத்தான் தற்சுதந்திரம். அது (த.த) இருக்கற வரைக்கும் இதுவும் (த.சு) இருக்கும். எல்லா சாஸ்திரங்களும் தற்சுதந்திரத்தை அடிப்படையாக் கொண்டதே. அதனாலேதான் சுதந்திரத்தை சரியான வழியிலே செலுத்தச் சொல்றா. விதியோ... மதியோ... யாருக்குன்னு பாருங்கோ? அதிலேயே நில்லுங்கோ. அதைக் கடந்துடலாம். அதுதான் இதைப் பேசறதுக்கான பிரயோஜனம். கேள்வி: புத்தி, உணர்ச்சிகள் இதெல்லாம் உடம்புமாதிரி பிறக்கறப்பவே சேந்தே வருதா? இறந்த பின்னாடி என்ன ஆகும்? பகவான்: இறந்ததுக்கு அப்புறம் என்ன ஆகும்ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி தூக்கத்துலே என்ன ஆறதுன்னு பாருங்கோ! இரண்டு விழிப்புக்கு இடையிலே தூக்கம். இரண்டு பிறப்புக்கு இடையிலே மரணம். கேள்வி: அந்த இடைவெளியில என்ன ஆகுது? புத்தி இருக்குமா? பகவான்: ஆமாம் இருக்கு. தூங்கும்போது புத்தி ஆத்மாவிலே ஒடுங்கியிருக்கு. முழிச்ச உடனே வந்துடறது. அதேதான் மரணத்துக்கும். பிறப்பிறப்பு உடலுணர்வையே குறிக்கும். வேற ஒண்ணும் இல்லே. நீங்க உடம்புன்னா.... அது உங்களை எப்பவும் பிடிச்சுக்கும். நீங்க உடம்பு இல்லேனா... அது உங்களைப் பாதிக்காது. யார் தூக்கத்துலே இருக்கானோ... அவனேதான் இப்போ பேசிக் கொண்டிருக்கான். நீங்க தூங்கும்போது உடம்பு இல்லே. இப்போ நீங்க உடம்பா? கண்டுபிடிங்கோ! எல்லாம் பிரச்சனையும் தீந்துடும். பிறந்தது இறக்கும். யாரோட பிறப்பு? நீங்க பிறந்திருக்கேளா? நீங்கதான் பிறந்திருக்கேள்ன்னா... எதோட பிறப்பைப் பத்திப் பேசறேள்? உடம்புதான் பிறந்தது. அது சாகும். அதோட பிறப்பும் இறப்பும் எப்பவும் இருக்கற உங்களை என்ன பண்ணும்? இந்தக் கேள்வி எல்லாம் யாருக்கு வாறது? யோசிங்கோ! அப்போ உங்களுக்குத் தெரியும். கேள்வி: ஆத்ம ஞானத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்படுதுங்கறதுக்கு, தியானத்துலே ஏதாவது குறிப்பிட்ட அனுபவங்கள் உண்டா? பகவான்: தேவையில்லாத சிந்தனையிலே இருந்து விடுபட்டிருக் கறதும், ஒரே சிந்தனையிலே நிக்கறதும், எந்த அளவுக்கு நம்மகிட்டே ஏற்பட்டுருக்கோ அந்த அளவுக்கு முன்னேற்றம். கேள்வி: ஆத்மஞானம் அடைய சன்யாசம் வாங்கணுமா? பகவான்: நாம தனித்தன்மையை இழக்கறதுதான் சன்யாசம் வாங்கறது. மொட்டை போட்டுக் காவி கட்டறது இல்லே. ஒருத்தன் கிருஹஸ்தனாக்கூட இருக்கலாம்... ஆனா அவன் தன்னை கிருஹஸ்தன்னு நினைக்கலேன்னா அவன்தான் சன்யாசி. இதுக்குமாறா ஒருத்தன் காவிகட்டி அலையலாம்... அவன் சன்யாசின்னு நினைச்சா அதோட நோக்கமே செத்துடும். கேள்வி: நான் அனாத்மாவை ஒழிக்கணும்ன்னு ஆசைப்படறேன். ஆத்மாவை அடையணும். எப்படி பண்றது? அனாத்மாவோட ஸ்வபாவம் என்ன? பகவான்: அனாத்மாவை ஒழிக்கணும்னு ஆசைப்படற ஒருத்தன் இருக்கான். அவன் யார்? பக்கம்:421 - 424. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
17 likes
10 shares

More like this