ரவிசங்கர் ராஜா, ஆரணி
909 views • 2 months ago •
சிவமணியம்
ஜி.வி. சுப்பராமய்யா கேட்டார்.
பகவான்: குழந்தையும் ஞானியும் ஒண்ணு. ஸம்ஸ்காரங்கள் குழந்தைகிட்டே வெளிப்படலே. அதனாலே, அதோட அறியாத்தன்மை முழுமையாயிருக்கு. ஸம்ஸ்காரங்கள் போயிடுத்துன்னா வயசான ஆளும் குழந்தையாயிடுவான்.
கேள்வி: குழந்தைகள் ஆசிரமத்துலே வீட்டுச்
சூழ்நிலையைக் கொண்டு வந்துடறது...
பகவான்: குழந்தைகள் எப்பவும் வீட்டிலேதான் இருக்கா. நாமளும் எப்பவும் வீட்டிலேதான் இருக்கோம். ஆனா வீட்டைவிட்டு வெளியே இருக்கறதா கனவிலே கற்பனை பண்ணிக்கறோம்.
கேள்வி: கம்பராமாயணம் படிச்சு இருக்கீங்களா?
பகவான்: இல்லே. நான் எதையும் படிச்சது இல்லே. 14 வயசு வரைக்கும்தான் நமக்குப் படிப்பு.
அப்போவே எனக்குப் படிக்கப் பிடிக்காது.
ஆனா பகவத்கீதை ஸ்லோகம் எல்லாம் எப்படி சொல்றேன்னு எல்லாரும் ஆச்சர்யப்படுவா. கேள்வி ஞானம்தான். நான் கதையோ, பாஷ்யங்களோ, உபநிஷத்களோ படிச்சது இல்லை. யாராவது ஒரு சுலோகம் சொன்னா... அதோட அர்த்தம் சரிதான்னு எனக்குப்பட்டா... என்னாலே திரும்பச் சொல்ல முடியும். அவ்வளவுதான். வேற ஒண்ணும் இல்லை.
வேற குறிப்புகளும் அப்படித்தான். ஸ்வபாவமா வர்றதுதான். உண்மை அறிவுக்கும் வார்த்தைக்கும் அப்பாற் பட்டதுன்னு எனக்குத் தெரியும். அப்போ ஏன் அதை படிக்கணும். நோக்கம்... உண்மைய உணரணும்ன்னு வந்தாச்சு... அப்புறம் எதுக்கு படிக்கணும் ?
கேள்வி: பகவான் ஒருவேளை படிச்சுருந்தா இங்கே எங்களுக்கு பகவான்
கிடைச்சுருக்க மாட்டார்.
பகவான்: என்னோட பூர்வத்திலேயே எல்லாத்தையும் முடிச்சிருப்பேன். அதனாலே அதிலே எனக்கு ஸம்ஸ்காரம் இல்லை.
கேள்வி: 'சூரியன் அங்கு சுடர்வதில்லை; சந்திரன் இல்லை; நட்சத்திரங்களும் இல்லை; மின்னலும் இல்லை; அங்கு எப்படி நெருப்பு பிரகாசிக்கும்? இந்த எல்லா ஒளிகளும் ஒளிர்வது அவனுடைய ஒளியினாலே, அவன் ஒளியாலே எல்லாம் சுடர்கிறது'.
இந்த ஸ்லோகத்துலே அவனுடைய ஒளியாலேன்னா என்ன அர்த்தம்?
பகவான்: எல்லாம் அவனாலே ஒளிர்றதா? இல்லே. அவனோட ஒளியாலே ஒளிர்றதா?
அவன் மட்டும்தான் இருக்கான். அவனும் அவன் ஒளியும் ஒண்ணுதான்.
'இங்கு யாரும் எதையும் பார்ப்பதில்லே'... அப்படின்னா என்ன அர்த்தம்?
பாக்கறவனும் பாக்கப்படறதும் அவன்தான்னு அர்த்தம்.
சூரிய சந்திரர்கள் ஒளிர்வது எப்படி?
அவாளா வந்து உன்கிட்டே,
'நாங்க ஒளிர்றோம்'னு சொன்னா?
இல்லே. வேற ஏதோ தனியா இருந்து சொல்றதா?
கேள்வி: நான்தான் சொல்றேன்.
பகவான்: அப்போ சூர்ய சந்திரர்கள் ஒளிர்வது உன்னாலேயே!
அறிவு வேணும். சூரிய சந்திரரைப் பாக்கறதுக்கு.
அந்த அறிவுதான் நீ.
அப்போ நீயும் உன் அறிவும் ஒண்ணுதான்... அவனும்
அவன் ஒளியும் மாதிரி.
கேள்வி: அந்த ஒளி சூரிய வெளிச்சம் மாதிரியா?
பகவான்: இல்லே. சூரிய வெளிச்சம் ஜடம். நீதான் அதை அறியறே.
சூரிய ஒளி பொருட்களைப்
பாக்கப் பயன்படறது. இருட்டைப் போக்கறது. ஆனா அறிவுதான் இருட்டையும் வெளிச்சத்தையும் அறியற ஒளி.
இருள்... சூரிய ஒளி முன்னாடி இருக்காது.
அறிவொளி முன்னாடி இருள் இருக்கும்.
இந்த அறிவுதான் அறிவு, அறியாமைக்கு ஆதாரம்.
கேள்வி: கடவுள்தான் எல்லாம் செய்றார்ன்னா நாம ஏன் துன்பப் படணும்? கடவுள் தூண்டுறார்... அவன் செய்றான்... அவன் ஒரு கருவி தானே! அவனை ஏன் தண்டிக்கணும்?
பகவான்: நான் செஞ்சேன்னு எவன் நினைக்கறானோ... அவனே துன்பப்படறான். இதைத் துன்பத்திலேதானே சொல்றேள்... சந்தோஷத்திலே சொல்ல மாட்டேங்கறேளே...! இன்பத்திலேயும் இந்த நினைப்பு இருந்தா... துன்பம் வராது.
கேள்வி: துன்பம் எப்போ ஒழியும்?
பகவான்: தனித்தன்மை போற வரைக்கும் துன்பம் போகாது.
நல்லதும் கெட்டதும் கடவுள் செயல்ன்னா அதிலே வாற துன்பமும், இன்பமும் கடவுளுக்குத்தான்.
அதை ஏன் நம்ம மேலே ஏத்திக்கணும்?
கேள்வி: மனோபலம் (Will power) எப்படிப் பெறுவது?
நீ மனோபலம்ன்னு நினைக்கறது எல்லாத்திலேயும் வெற்றி அடையறது தானே...!
மனோபலமன்னா வெற்றி தோல்வியை சமமா பாக்கறது. வெற்றி மட்டுமே அடையறது இல்லை.
ஏன் எப்பவுமே ஜெயிக்கணும்? அது அகந்தையைத்தான்
வளர்க்கும்.
ஆத்மிகம் தடைபடும்!
தோல்வி நல்லது!
கண்ணைத் திறக்கும்!
தன்னை மீறிய சக்தியிருக்குன்னு தெரியும். சரணடையத் தயார் பண்ணும்.
சமசித்தம்தான் எப்பவும் வேணும். மேலும் வெற்றி,
தோல்வி பிராப்தப்படி. ஒருத்தன் நல்லதே செய்றான்... ஆனா, தோத்துடறான். இன்னொருத்தன்... அநியாயக்காரன். அவன்
ஜெயிக்கறான். அதுக்கு அர்த்தம் அவர் மனோபலம் பெறலே. இவர் மனோபலம் பெற்றுட்டார்ன்னு இல்லை.
பக்கம்:417 - 421.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
6 likes
9 shares