ரவிசங்கர் ராஜா, ஆரணி
• 1 months ago •
குருவாசகக்கோவை
22. அகந்தைமுடித்திறன்.
156. காணுந்தன் மெய்யாங் கனசிதா காயவளம்
பேணுங் கருத்துப் பிறிதாகி - ஆணவத்தால்
யானென் றெழுந்த விழுக்கே விடயமாத்
தானொன் றெதிர்காண் சழக்கு.
பதச்சேதம்:-
காணும் தன் மெய் ஆம் கன சிதாகாய வளம் பேணும் கருத்துப் பிறிது ஆகி ஆணவத்தால் யான் என்று எழுந்த இழுக்கே விடயமாத்
தான் ஒன்று எதிர் காண் சழக்கு.
அரும்பதவுரை:-
பிறிதாகி - மாறுபட்டு; சழக்கு - குறைபாடு.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
காண்பானாகிய ஜீவனின் மெய்த் தன்மையான சிதாகாச பூரண ஆன்ம வளத்தையே (அழகையே) கண்டு நிற்க வேண்டிய நம் கவனசக்தி, ஆணவமாம் பிரமாதத்தால் ஆன்ம கவனம் தவறி 'நான் இது (உடல்)' என்று எண்ணி ஒரு வியக்தியாய் எழுச்சியுற்ற குற்றமே (அவ்வான்மாவாம் தன்னையே) தன் முன்னுள்ள புலவிஷய உலகப் பொருள்களாகப் பார்க்கும் குறைபாடு ஆகும்.
விளக்கக் குறிப்பு:- அகண்ட நம் சுபாவ இரப்பை, அகங்கார மாகிய உடலளவு இருப்பாகக் குறுக்கி எல்லைக்குட்படுத்திக் கொண்டு பார்த்தால் அப்போது, எங்கும் என்றும் உள்ள நம் (ஆன்ம) சொரூபமே பார்க்கும் நமக்கு அன்னியமான உலகமாகவும் கடவுளாகவும் தோன்றுகின்றது என்பதாம். இத் தோற்றம் ஜீவனாகிய அகந்தைக்கே தவிர ஆன்மாவுக் கல்ல என்பதை மறந்துவிடக் கூடாது.
"தன்னைக் குறுக்கித் தனுவாக்கித் தனுவி னுணர்வை ஜகமாக்கித்
தன்னைக் கண்டே தான் மயங்குந் தடுமாற் றந்தான் ஜகமாயை !"
- சாதனைச்சாரம்.
இதே கருத்து 158வது பாடலிலும் விளக்கப்படுதல் காண்க.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏