ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 2 months ago •
குருவாசகக்கோவை
21. வாதனைவலித்திறன்
155. ஆற்றங் கரையென்னு மான்மநிலை நிற்கத்தாம்
ஆற்றாத சிற்சிலவா மாருயிரே - ஆற்று
மறிபுனலாம் வாழ்க்கையிடை வாசச் சிறாரால்
எறியுண் டிடர்ப்படு வார்.
பதச்சேதம்:-
ஆற்றங்கரை என்னும் ஆன்ம நிலை நிற்கத் தாம் ஆற்றாத சிற்சில ஆம் ஆர் உயிரே ஆற்று மறிபுனல் ஆம் வாழ்க்கை இடை வாசச் சிறாரால் எறியுண்டு இடர்ப் படுவார்.
அரும்பதவுரை:-
சிற்சிலவாம் ஆருயிர் - சிறிய பிராணிகள்; மறிபுனல் - சுழல்; வாச - வாசனைகளாகிய.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
சில சிறிய ஜந்துக்கள் ஆகிய மனிதர்கள் ஆற்றங்கரை யாகிய ஆன்ம நிலையில் ஏறித் திரமாக நிற்க முடியாததால், ஆற்றின் சுழல் நீரோட்டமாகிய உலக சமுசார வாழ்வில், துஷ்டச் சிறுவர்களாகிய (தத்தம்) வாசனைகளால் தூக்கி எறியப் பட்டுத் துன்ப மடைகின்றனர்.
விளக்கக் குறிப்பு:- ..... இப்பாடல் உருவகமாக அமைந்திருப்பதால் பொழிப்புரை சற்று விரிக்கப் பெற்றது.
ஆற்றோட்டத்தில் அகப்பட்டுத் தவிக்கும் சிறு பிராணிகள் சில, உயிர் பிழைக்க ஆற்றங் கரையை நெருங்கி வந்து, கரை மேல் ஏறித் திரம்பட நின்றுகொள்ள முயன்று கொண்டிருக்கும் போது, துஷ்டச் சிறுவர்களால் மீண்டும் ஆற்றின் சுழல் நீரோட்டத்திலேயே தூக்கி எறியப்பட்டுத் துன்பம் அடைவதே போல, சாதனைக் காலத்தில் ஆன்மநிலையில் திரம்பட நிற்க வியலாமல் முயன்று கொண்டிருக்கும் ஜீவர்கள் அவர்களது பூர்வ வாசனைகளின் வலிமையால் மீண்டும் பகிர்முக உலக நடையிலேயே உந்தித் தள்ளப்பட்டுத் துன்புறுவர்!
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள்
20 likes
9 shares