ரவிசங்கர் ராஜா, ஆரணி
4K views 1 months ago AI indicator
கே: நான் உங்க சரணத்திலேயே தான் இருக்கேன். ஏதாவது உபதேசம் குடுங்க. 600 மைல் தள்ளியிருந்து எப்படி உங்க அருளுக்குப் பாத்தியமாவேன்? ப: ஸத்குரு உள்ளேயே இருக்கார். கே: சத்குருவே எனை வழி நடத்தி அதை உணர வைக்கணும். ப: ஸத்குரு உள்ளேதான் இருக்கார். கே: எனக்கு கண்ணுக்கு தெரியற குருதான் வேணும். ப: கண்ணுக்குத் தெரியற குருதான் உள்ளே இருக்குன்னு சொல்றார். கே: குருவோட அருளுக்கே என்னை விட்டுடவா? ப: ஆமாம். உபதேசமெல்லாம் சரணடையற வரைக்கும்தான். கே: தியானம் குறிப்பிட்ட காலத்துலதான் பண்ணணுமா? ப: தியானம் மனோபலத்தைப் பொறுத்தது: எப்பவும் பண்ணணும். வேலை பாக்கும்போதும் பண்ணணும். குறிப்பிட்ட காலம் எல்லாம் ஆரம்ப சாதகர்களுக்குத்தான். கே: குரு என் தலையில கை வச்சு உதவுவேன்னு ஸத்யம் பண்ணுவாரா? எனக்கு ஆறுதலா இருக்கும். ப: ஏன் ஒரு பாண்டு பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து எழுதிக்கேளுங்கோ! எதுவும் நடக்கலேன்னா... கேஸ் போடுவேள் போலிருக்கே! (சிரிக்கிறார்). கே: உங்க பக்கத்துலே வரலாமா? ப: இந்தக் கேள்வி எல்லாம் வரலாமா? சரணடைஞ்சுட்டேன்னு சொன்னா குருவோட பாதம் எப்பவும் நம்மளோட தலை மேலே தான். நமோ ரமணா 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
33 likes
43 shares

More like this