
Arab Tamil Daily
@arabtamildaily
|No.1 Tamil News Updater From Gulf|350K+Followers|
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள் ஜூன்-1 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
குவைத் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து விமானங்களும் ஜூன் 1 முதல் மீண்டும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக டிராவல் துறையை சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.ஆரம்பத்தில் இருவழி சேவையாக ஒவ்வொரு வழித்தடத்திற்கும் வாரத்திற்கு ஒரு சேவை இயக்க அனுமதி வழங்கப்படும். தொடர்ந்து படிப்படியாக சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குவைத்திலிருந்து விமான சேவையை வழங்கி வந்த வி்மான நிறுவனங்களுக்கு இந்த சேவைக்கான அனுமதி வழங்கப்படும். விமான சேவைகள் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்திற்கு இடையே இருக்கும்.
இது தொடர்பாக அதிகாரிகள் விரைவில் விமான அட்டவணையை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து, குவைத் பிப்ரவரி 28 அன்று தனது வான்வெளியையும் விமான நிலையத்தையும் மூடி, விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சமீபத்தில், குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை குவைத் விமான நிலையத்திலிருந்து சேவைகளைத் தொடங்கின, ஆனால் மற்ற விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது, தமிழர்கள் உட்பட குவைத்திலுள்ள இந்திய பயணிகளுக்கு நிம்மதியளிக்க கூடிய செய்தி ஆகும். தற்போது, குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் மட்டுமே குவைத்திலிருந்து விமானங்களை இயக்குகின்றன. இவை தமிழகம் உட்பட உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இயக்கப்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதால், விமான டிக்கெட்டுகளின் விலையும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
#BreakingNews || குவைத் விமான நிலையத்தை குறிவைத்து இன்று புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது:
குவைத் சர்வதேச விமான நிலையமானது இன்று(01/04/26) புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஆளில்லா(ட்ரோன்) விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்போது(அதிகாலை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், குவைத் ஏவியேஷன் ஃபியூலிங் கம்பெனியின்(KAFCO) கீழ் இயங்கும் எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்தது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார். இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்தும், தொட்டிகளுக்குக் கணிசமான சேதமும் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
அவசரக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தத் தாக்குதலால் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். கூடுதல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் தொடங்கிய பிறகு குவைத் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும்.
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
#BreakingNews||குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக நபர் சந்தானச் செல்வம் உடல் சற்று நேரத்தில் தாயகம் செல்கிறது:
Read More 📎
https://www.facebook.com/share/p/18daz4GsnF/ #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
#BreakingNews || துபாய் கடற்கரையில் வைத்து ஈரானிய ட்ரோன்கள் 'அல் சல்மி' என்ற மிகப்பெரிய குவைத்தின் எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது:
துபாய் துறைமுகம் அருகே வைத்து குவைத்தின் மிகப்பெரிய 'அல் சல்மி'(Al Salmi) என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து பல தாக்குதல் நடத்தியதில் கப்பலின் வெளிப்புறப் பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், தீ விபத்தும் மற்றும் எண்ணெய் கசிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பலான(VLCC) 'அல் சல்மி' மீது இன்று மார்ச்-31,2026 செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 12:10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பெட்ரோலியக் கழகம்(KPC) அறிவித்துள்ளது. துபாய் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'அல் சல்மி' கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், அந்தக் கப்பல் முழுமையாக எண்ணெய் நிரப்பப்பட்ட நிலையில் இருந்ததாக KPC வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக,கப்பலின் வெளிப்புறப் பகுதி(Hull) சேதமடைந்ததுடன், கப்பலுக்குள் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும்,சுற்றியுள்ள கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் KPC மேலும் தெரிவித்துள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
#BreakingNews || குவைத்தில் காலையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர் ராமநாதபுரத்தை சேர்நதவர்:
குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பாத்திமா ஹயாத் இன்று(30/03/26) திங்கட்கிழமை அதிகாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான் நடத்திய தாக்குதலில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் பகிர்வு சேவைகளை வழங்கும் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், மேலும் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தன எனவும் மற்றும் பெரும் அளவிலான பொருள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த இந்தியர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பெயர் சந்தானச் செல்வம்(37) எனவும், இவர்
ராமநாதபுரம் மாவட்டம், முத்துக்குளத்தூர் அடுத்த தேரிருவேலி பகுதியை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. குவைத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் நடத்தி வருகின்றன தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இது குவைத்திலுள்ள இந்திய சமூகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்தில் நண்பனின் உடலை மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு ஓடிய இரண்டு இந்தியர்கள் கைதாகியுள்ளனர்:
குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் நண்பரின் உடலை சிகிச்சைக்காக என்ற போர்வையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று(16/01/26) வெள்ளிக்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் நடந்தது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு நபருடன் மருத்துவமனைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் இருந்த நபரை வார்டு உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு, அடையாளம் தெரியாத நபர் உடனடியாக நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நைசாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றார். இதை தொடர்ந்து மருத்துவர் நடத்திய பரிசோதனையில் சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கண்டறிந்தனர்.
இவருடைய மரணத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலை தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். பின்னர், உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து வெளியே சென்ற நபரை அடையாளம் காண பாதுகாப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. மருத்துவமனையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருக்க இன்னொரு நபர் இறந்த நபரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் தலைமறைவான இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவரும் இந்தியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் உடலை மருத்துவமனையில் விட்டுச் சென்றதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இவர்களுடைய அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் என்றும், இவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இது தொடர்பாக காவல்நிலையம் செல்லவும் பயந்தும் உடலை தங்களுடைய காரில் எடுத்து வந்து இப்படி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுடைய இந்த செயல் காரணமாக இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ அறிக்கையில் மரணம் இயற்கையாக நடந்தது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பில் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது:
பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது:
குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.
மேலும் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்திலிருந்து நாடுகடத்தபட்ட நபர்கள் அமீரகத்திலும் நுழைய முடியாத தகவல் பரிமாற்ற திட்டம் நடைமுறையில் வந்துள்ளது:
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, டேட்ரா வயர்லெஸ் தகவல் தொடர்பு திட்டம் மற்றும் மின்னணு கைரேகை பதிவு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(09/11/25) மாலையில் அறிவித்துள்ளது.
இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு இணைப்புத் திட்டங்களைப் பின்தொடர்வதற்காக இன்று நடைபெற்ற எட்டாவது கூட்டத்தில் பங்கேற்ற குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினர்களை போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் துறைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல்-அதிகி சந்தித்தார். புதிய அமைப்பு நிறைவடைந்த நிலையில், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்வார்கள்.
மேலும் ஒருங்கிணைந்த வளைகுடா விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதிலிருந்து நிலைமை இதைவிட மோசமாக மாறும், காலு வச்ச இடம் எல்லாம் கன்னிவெடி என்கிற மாதிரி ஒரு வளைகுடா நாட்டில் பயணத்தடை கிடைக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் மற்ற எந்த வளைகுடா நாட்டிலும் வேலைக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
வணக்கம்
அரபு தமிழ் டெய்லி வாசகர்களே.......
வளைகுடா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வசிக்கின்ற நாடுகளை சேர்ந்த உறவுகளின் புரிதலுக்காக இந்த பதிவு....
அன்புடன்
Arab tamil daily-Team 🤝
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️





![🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - NEWS ARAB JUSI IN DAILY TAmL ரழர்களின் Li் UI ] செவ்வாய்க்கிழமை 31-03-2026| குவைத்தில் உயிரிழந்த சந்தானம் உடல் தாயகம் செல்கிறது குவைத்தில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம் உட்பட வெவ்வேறான காரணங்களால் கடந்த தினங்களில் உயிரிழந்த 24 இந்தியர்கள் உடல்கள் இன்று சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் செல்கின்றன Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements arabtamildailycom Contact editoratdnews@gmail com arabtamildaily W NEWS ARAB JUSI IN DAILY TAmL ரழர்களின் Li் UI ] செவ்வாய்க்கிழமை 31-03-2026| குவைத்தில் உயிரிழந்த சந்தானம் உடல் தாயகம் செல்கிறது குவைத்தில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம் உட்பட வெவ்வேறான காரணங்களால் கடந்த தினங்களில் உயிரிழந்த 24 இந்தியர்கள் உடல்கள் இன்று சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் செல்கின்றன Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements arabtamildailycom Contact editoratdnews@gmail com arabtamildaily W - ShareChat 🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - NEWS ARAB JUSI IN DAILY TAmL ரழர்களின் Li் UI ] செவ்வாய்க்கிழமை 31-03-2026| குவைத்தில் உயிரிழந்த சந்தானம் உடல் தாயகம் செல்கிறது குவைத்தில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம் உட்பட வெவ்வேறான காரணங்களால் கடந்த தினங்களில் உயிரிழந்த 24 இந்தியர்கள் உடல்கள் இன்று சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் செல்கின்றன Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements arabtamildailycom Contact editoratdnews@gmail com arabtamildaily W NEWS ARAB JUSI IN DAILY TAmL ரழர்களின் Li் UI ] செவ்வாய்க்கிழமை 31-03-2026| குவைத்தில் உயிரிழந்த சந்தானம் உடல் தாயகம் செல்கிறது குவைத்தில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த சந்தானச் செல்வம் உட்பட வெவ்வேறான காரணங்களால் கடந்த தினங்களில் உயிரிழந்த 24 இந்தியர்கள் உடல்கள் இன்று சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் செல்கின்றன Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements arabtamildailycom Contact editoratdnews@gmail com arabtamildaily W - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_505165_1df84387_1774947498148_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=148_sc.jpg)






