📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢

28 Posts • 10K views
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44), அவரது மனைவி ஜெயலட்சுமி (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்களின் உறவினரான காளிமுத்து (29) என்பவரும் பனியன் கம்பெனியில் வேலைக்காகத் திருப்பூர் வந்து, உறவினர் என்ற முறையில் சந்தனக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சந்தனக்குமாருக்கு, காளிமுத்து மாமா உறவு முறை ஆகும். ஒரே வீட்டில் வசித்ததால், காளிமுத்துவுக்கும் சந்தனக்குமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைக் கண்ட சந்தனக்குமார், இருவரையும் கண்டித்தும், அவர்கள் அந்த உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், சந்தனக்குமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாமா இறந்த பிறகும், காளிமுத்து அதே வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இதனை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினரும் ஜெயலட்சுமியுடனான உறவு குறித்து இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால், வாழ்க்கையில் விரக்தியடைந்த காளிமுத்து மற்றும் ஜெயலட்சுமி இருவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் உடல் துண்டாகி உயிரிழந்தனர். இது குறித்துப் பழனி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
15 likes
5 shares
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி இப்ராகிம்.. இவரது மனைவி பெயர் கோகிலா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன.. இது காதல் திருமணமாகும்.. தற்போது இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வேலூர் காட்பாடி வாடகை வீடு இவர்கள் காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.. இதே காட்பாடியில் சுனில் என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார்.. இவர் சென்னையில் ஒரு செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கோகிலாவுக்கும், சுனிலுக்கும் நட்பு ஏற்பட்டு இதுவே தகாத உறவாக வளர்ந்துள்ளது.. இந்த விஷயம் இப்ராஹிமுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட கோகிலா தயாராக இல்லை.. எனவே, கோகிலாவை பிரிந்து, குழந்தைகளின் நன்மை கருதி, அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கே சென்று விட்டார். கோகிலாவின் ஆண் நண்பர்கள் இதனால் கோகிலா, சுனிலின் கள்ளக்காதல் வேகமாக வளர்ந்தது.. இதனிடையே, கோகிலாவுக்கு, மணி, சதீஷ் என்ற 2 ஆண் நண்பர்கள் உண்டு.. இவர்கள் 2 பேருமே கோகிலாவுடன் சிறுவயது முதலே பழகி வருபவர்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி கோகிலாவை சந்தித்து செல்வது வழக்கமாம். இவர்களுடனும் கோகிலா உறவு வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் சுனில் கோகிலாவை கண்டித்துள்ளார்.. அடிக்கடி மது அருந்திவிட்டு, கோகிலாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, சுனில் சித்ரவதை செய்வதாக, தன்னுடைய நண்பர்கள் மணி, சதீஷிடம் சொல்லி புலம்பி உள்ளார்.. கோகிலாவுக்கு கள்ளக்காதலன் டார்ச்சர் உடனே நண்பர்கள் 2 பேரும் சுனிலிடம், கோகிலாவிடம் இனிமேல் தகராறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனாலும், சுனில் 2020ம் ஆண்டு மே 8ம் தேதி மதுபோதையில் சென்று கோகிலாவிடம் தகராறு செய்துள்ளார்.. "உனக்கு குடும்பம் இல்லை, என்னுடன் மட்டும்தான் பழக வேண்டும்.. நான் சொல்வதைதான் கேட்க வேண்டும், வேறு யாருடனும் பழககூடாது " என்று சொல்லி அடித்து உதைத்தாராம். இதே தகராறு மறுநாளும் நடந்துள்ளது.. இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன கோகிலா.. தன்னை நிம்மதியாக வாழ விடாத சுனிலை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார் கோகிலா.. நைசாக பேசிய கோகிலா உடனே நண்பர்கள் மணி, சதீஷ், தன்னுடைய அப்பா முத்து ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்து, விஷயத்தை சொன்னார்.. அதற்கு 3 பேருமே ஒப்புக்கொண்டர். பிறகு சுனிலுக்கு போன் செய்து, நைசாக பேசி வீட்டுக்கு கோகிலா வரவழைத்தார். வீட்டுக்கு வந்த சுனிலை, கோகிலாவின் அப்பா முத்து, மணி, சதீஷ் என 3 பேரும் சேர்ந்து தலையில் கத்தியால் வெட்டினார்கள்.. இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினார்கள்.. இதில் ரத்த வெள்ளத்திலேயே சுனில் இறந்துவிட்டார்,.. பிறகு சுனில் தலையை சிதைத்து, மூளையை மட்டும் வெளியே எடுத்து அருகிலுள்ள கிணற்றில் வீசினார்கள்.. சுனிலின் சடலத்தை அங்குள்ள கீரை தோட்டத்தில் வீசிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கீரை தோட்டத்தில் மூளை இல்லாத உடல் வேலூர் முழுக்க இந்த கொலை சம்பவம் அன்று நடுநடுங்க வைத்துவிட்டது.. பிறகு, கொலையாளிகள் 4 பேரையுமே போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தலைமையில் நடந்து வந்தது.. இதில் கடந்த வருடம் கோகிலாவின் அப்பா முத்து இறந்துவிட்டார். இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, கோகிலா, மணிகண்டன் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.. வேலூரையே உறைய வைத்த கொலையின் இந்த தீர்ப்பானது, பலரது கவனத்தை பெற்று வருகிறது #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
9 likes
12 shares
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி! மருத்துவமனையில் அனுமதி மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன? பஸ் விபத்து நேரிட்ட பகுதி குறுகிய சாலை என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்படுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வேகம் குறைந்த காற்று.. அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்! வானிலை மையம் அப்டேட் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் விசாரணைக்கு பிறகே, பேருந்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி அண்மைக்காலமாக பேருந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்வது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது, வாகனங்கள் விதி மீறல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
113 likes
54 shares