📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
28 Posts • 8K views
தமிழகம் முழுவதும் மழை: இந்த புயல் வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று இரவு வரை மழைக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை: மேலும், தலைநகர் சென்னைக்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சென்னையில் மழையின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரிப்பு. மேலும், இரவு 8 மணிக்கு நீர் திறப்பை 3000 கன அடியாக அதிகரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பூண்டி ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும்: திட்வா புயல் நாளைய தமிழக கடலோர மாவட்டங்களில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும் கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மத்தியம் முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ம் தேதிக்குப்பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
6 likes
17 shares
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44), அவரது மனைவி ஜெயலட்சுமி (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்களின் உறவினரான காளிமுத்து (29) என்பவரும் பனியன் கம்பெனியில் வேலைக்காகத் திருப்பூர் வந்து, உறவினர் என்ற முறையில் சந்தனக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சந்தனக்குமாருக்கு, காளிமுத்து மாமா உறவு முறை ஆகும். ஒரே வீட்டில் வசித்ததால், காளிமுத்துவுக்கும் சந்தனக்குமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைக் கண்ட சந்தனக்குமார், இருவரையும் கண்டித்தும், அவர்கள் அந்த உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், சந்தனக்குமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாமா இறந்த பிறகும், காளிமுத்து அதே வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இதனை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினரும் ஜெயலட்சுமியுடனான உறவு குறித்து இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால், வாழ்க்கையில் விரக்தியடைந்த காளிமுத்து மற்றும் ஜெயலட்சுமி இருவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் உடல் துண்டாகி உயிரிழந்தனர். இது குறித்துப் பழனி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
15 likes
5 shares
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி! மருத்துவமனையில் அனுமதி மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன? பஸ் விபத்து நேரிட்ட பகுதி குறுகிய சாலை என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்படுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வேகம் குறைந்த காற்று.. அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்! வானிலை மையம் அப்டேட் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் விசாரணைக்கு பிறகே, பேருந்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி அண்மைக்காலமாக பேருந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்வது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது, வாகனங்கள் விதி மீறல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
113 likes
54 shares