ரவிசங்கர் ராஜா, ஆரணி
655 views
3 days ago
AI indicator
சிவமணியம் பகவான் பொதுவாகச் சொன்னது: பகவான்: கர்மம் மூவிதம். பிராப்தம், சஞ்சிதம், ஆகாமியம். கர்மத்துக்குக் கர்த்துருத்துவமும், கர்த்தாவும் இருக்கணும். கர்மம் உடம்புக்கு கிடையாது. அது ஜடம். தேகாத்ம புத்தியிருக்கற வரைக்கும்தான் கர்மம் இருக்கும். தேகாத்ம புத்தி போச்சுன்னா.... அவன் ஞானி. புத்தி இல்லாம கர்த்துருத்துவமோ, கர்த்தாவோ இருக்க முடியாது. அதனாலே ஞானிக்கு மூணு கர்மமும் இல்லை. அது அவனோட அனுபவம். இல்லேன்னா அவன் ஞானி இல்லை. ஒரு அஞ்ஞானி, அவனை உடம்போட பாக்கறதாலே, ஞானியையும் உடம்பாத்தான் பார்ப்பான். ஆனா, ஞானி தன்னை உடம்பாக பாக்கறது இல்லை. அதனாலேயே, அஞ்ஞானி, ஞானியும் நம்மள மாதிரியேதான், சாப்பிடறான், வேலைப்பாக்கறான், தூங்கறான். அப்போ இவனைக் கர்மம் பாதிக்குமா? இல்லையான்னு கேக்கறான். சாஸ்திரங்கள் ஞானமங்கற நெருப்பு எல்லாக் கர்மங்களையும் எரிச்சுடறதுன்னு சொல்றது. 'எல்லாக் கர்மங்களையும்'ங் கறதிலே இரண்டு கருத்து சொல்றா. 1. சஞ்சிதம், ஆகாமியம் மட்டும் எரிஞ்சுடும். பிராப்தம் அனுபவமாகும். 2. மூணும் எரிஞ்சுடும். எதுவும் மிஞ்சாது. முதல் கருத்து என்ன சொல்றது. ஒருத்தனுக்கு மூணு மனைவி இருந்தா அவன் இறந்ததுக்கு பிறகு இரண்டு பேர்தான் விதவை ; இன்னொருத்தி சுமங்கலிங்கறது. இரண்டாவது: எல்லாரும் விதவைதாங்கறது. அப்படியே கர்த்தா இல்லைன்னா மூணு கர்மமும் இருக்காது. இன்னொரு விளக்கமும் கொடுக்கறா அது கேக்கறவனைத் திருப்திப்படுத்தறதுக்காக. எல்லாக் கருமமும் போயிடும். பிராப்தம் மட்டும் மிஞ்சும். உடம்பு எதுக்கு வந்ததோ... அதைச் செய்யும். அதுதான் பிராப்தம். ஞானிக்கு அன்னியமா உடம்பும் இல்லை... கர்மமும் இல்லை... அதனாலே கர்மம் அவனைப் பாதிக்காது. கேள்வி: ஞானிக்கு தேகாத்ம புத்தி இல்லைன்னா.... ஒரு உதாரணத்துக்கு பகவானுக்கு எறும்பு கடிச்சா வலிக்குமா? பகவான்: இது ஞானி அஞ்ஞானி இரண்டு பேருக்கும் பொது. ஆனா அஞ்ஞானி நான் உடம்பு மட்டும்தான்னு நினைப்பான். ஆனா ஞானிக்கு எல்லாம் அவன்தான். வலியிருந்தா இருக்கட்டுமே! அதுவும் ஆத்மாதான். ஆத்மா பூரணமாத்தான் இருக்கு. கர்மங்கள் ஞானியைப் பாதிக்காது. பொதுவா ஒவ்வொருத்தருக்கும் கர்மம் ஸம்ஸ்காரமா மனசுலே பதியும். ஞானிக்கு மனம் நாசமானதாலே அவன் மனசுக்கு அதீதப்பட்டுட்டான். வறுத்த விதை முளைக்காது. எந்த ஸம்ஸ்காரமும் பதியாது. அதனாலேயே, ஞானியின் மனம் பிரம்மம்ன்னு சொல்றா. பிரம்மம் வேற எதுவும் இல்லை.... ஞானியின் மனம்தான். ஆனாலும் அவனுக்கு பிராப்தம் உண்டுன்னு சொல்றதாலே வாசனைகள் ஞானிக்கும் இருக்கும். ஆனா அவை போக ஹேதுவான வாசனைகள். பொதுவா கர்மம் இரண்டு வேலை பாக்கும். ஒண்ணு கர்மபலனை அனுபவிக்கறது. இரண்டு அதை மனசுலே ஸம்ஸ்காரங்களா திரும்பவும் பண்றதுக்காக பதிச்சு வச்சுக்கறது. ஒரு ஞானியோட வாசனைகள் பலனை மட்டும் கொடுத்துட்டு ஸம்ஸ்காரங்களைப் பதிக்காது. உண்மையிலேயே ஞானியோட கர்மம் அஞ்ஞானியோட பார்வையிலேதான். ஞானி அகர்த்தா. உடம்பை ஆத்மாவிலே இருந்து வேறாப் பாக்கமாட்டான். அவனுக்கு முக்தியோ, பந்தமோ எப்படி இருக்கும். இரண்டும் கடந்தவன். இப்பவும் எப்பவும் கர்மத்துக்குக் கட்டுப்படாதவன். அவனுக்கு ஜீவன் முக்தனும் இல்லை. விதேக முக்தனும் இல்லை. கேள்வி: ஞானிக்கு வாசனையெல்லாம் போயிடுச்சுன்னா... கல்லு மாதிரி அசையாம இருக்கலாமே! பகவான்: தேவையில்லே. வாசனைகள் அவனை ஒண்ணும் பண்ணாது, கல்லு மாதிரி அசையாம இருக்கறது கூட வாசனைதான். ஸஹஜம்தான் நிலை. நீர் ஞானமடையற வரைக்கும் ஞானியோட நிலை புரியாது. ஏன் ஈஸ்வரன் இப்படிப் பண்ணினான்னு பேசறதுலே ஒரு பிரயோஜனமும் இல்லை. சிலர், ஏன் தாருகாவனத்திலே, சிவன், ரிஷி பத்தினிகள் கற்பை எல்லாம் கெடுத்தார்ன்னு கேக்கறா. இந்தக் கதையைச் சொல்ற புராணங்கள்தான் சிவன் தேவர்களை வாழ வைக்க ஆலகால விஷத்தைச் சாப்பிட்டார்ன்னு சொல்றது. முனிவர்களை எல்லாம் முக்திக் கரையேத்தினவரே... அவாளோட மனைவிகள் முன்னாடி நிர்வாணமா உலவினார். இதையெல்லாம் நாம புரிஞ்சுக்க முடியாது. கேள்வி: ஒரு ஞானியோட செயல்களை பாத்து நம்மளும் பழகலாமா? பகவான்: ஒரு பிரயோஜனமும் இல்லை. கேள்வி: பக்திக்கும் ஞானத்துக்கும் சம்பந்தம் என்ன? பகவான்: எப்பவும் இடைவிடாமல் ஸ்வபாவமான நிலையிலேயே இருக்கறது ஞானம். அதுக்கு ரொம்பப் பிரியம் வேணும். அது பக்திதானே! கேள்வி: உருவ வழிபாடு தவறு. இஸ்லாம் அதை கண்டிக்குது இஸ்லாத்துல கடவுளுக்கு உருவம் இல்லை. பகவான்: அவா இறைவன்னா என்னன்னு சொல்றா. கேள்வி: எங்கும் நிறைந்தவர். எல்லாம் வல்லவர். பகவான்: அப்போ இறைவனுக்கு குணம் இருக்கா! உருவம் ஒரு அம்சம்; குணம். யாரும் இறைவனை குணம் கடந்து கும்பிட முடியாது. எந்த பாவனையும் இறைவனை சகுணமாத்தான் காட்டும். கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையான்னு தெரியறதாலே ஒரு பிரயோஜனமும் இல்லை. உமக்கு உருவம் இருக்கா இல்லையான்னு பாரும்! அப்போ கடவுளைப் பத்தித் தெரியும்! கேள்வி: எனக்கு உருவம் இல்லை. பகவான்: சரி, தூங்கும்போது உமக்கு உருவம் இல்லை. ஆனா விழிப்பு நிலையிலே உம்மை ஒரு உருவத்தோடேதானே சம்பந்தப்படுத்திக்கரீர். எது உம்முடைய உண்மையான ஸ்திதின்னு விசாரத்தாலேயே தெரியும். உம்மை அப்படித் தெரிஞ்சுக்கற வரைக்கும் கடவுளுக்கு உருவமில்லைன்னு சொல்றது பொருந்தாது. பக்கம்:382 - 386. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி