ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
567 views
2 days ago
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (28). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (64) என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னார்கோவிலுக்கு வருமாறு கூறி, உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனைச் செருப்பால் அடித்துள்ளார். மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த காமாட்சி, "இனிமேல் இப்படி நடந்துகொண்டால், இந்த வீடியோவை உனது உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன்" என மிரட்டியுள்ளார். இருப்பினும், ஆத்திரம் தீராத காமாட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த செருப்படி வீடியோவை மகேந்திரனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மகேந்திரன் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் காமாட்சியின் வீட்டிற்குச் சென்ற மகேந்திரன், அவரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து காமாட்சியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமாட்சி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமாட்சியைத் தாக்கியபோது, அதனைத் தடுக்க முயன்ற அவரது தந்தை பாண்டுரங்கனையும் மகேந்திரன் கட்டையால் சரமாரியாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாண்டுரங்கன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், காமாட்சியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற கொலையாளி மகேந்திரனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம்