Follow
அம்மை ஆச்சி நேசன்
@432439658
6,683
Posts
5,532
Followers
அம்மை ஆச்சி நேசன்
569 views
10 hours ago
காழி செல்வர்க்கு அமுது அளித்து கழலை பற்றிய பாலகனுக்கு வாழ்வு அளித்து திருவருட் செல்வர்க்கு திருவருள் புரிந்து தீராப் உடல் பிணி தீர்த்து திருவடி தீட்சை விரும்பிய அடியவர்க்கு அருள் புரிந்து திருச்சதகம் சூடிக்கொண்டு மன்றல் வந்து அடியவரை ஆட்கொண்டு மனம் விரும்பிய இரு தேவியருடன் வாழ கருணை புரிந்த கற்பகமே என் அம்மை ஆச்சியே நின் ஆடல் போற்றி (ஜெயவீரபத்திரன்) 3 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அம்மை ஆச்சி நேசன்
502 views
19 hours ago
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 32 ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ஆர் அறிவார் அவ் அகலமும் நீளமும் பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேர் அறியாமை விளம்புகின்றேனே #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
445 views
19 hours ago
சிரமாலா பூஷணம் நாநாவித அஸ்தர தாரிணம் கரமாலா வஸ்திரம் காபாளி நாம தாரிணம் விசித்ர நரவாஹனம் விஜய ரூப கீர்த்திபிரதம் நித்யம் பூஜிதம் ஸர்வகார்ய ஜய ஸம்பத் பிரதம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அம்மை ஆச்சி நேசன்
618 views
1 days ago
திங்களை சூடிய எம் தெய்வமே எம் தீவினை தீர்க்காமல் இருக்கிறாயே என் செல்வமே மங்களமும் மகிழ்ச்சியும் அருளூம் தெய்வம் என்று மாநிலம் உம்மைபுகழ்கின்றதே நல்வாழ்வு வேண்டி நாயேன் பணிந்து போற்றினாலும் பாராமல் இருக்கிறாயே தாய் நீ அன்றோ தயாபரியே அருள்வாயே கோமதியே என் அம்மை ஆச்சியே ( S.ஜெயவீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
528 views
1 days ago
தேய்ந்த பிறை மேல் கருணை கொண்டு தேவியே நீர் அதனை நின் தலைவனை சடையில் சூடச்செய்து வாழவேண்டும் என்று விரும்பி வள்ளல் திருவடி பற்றியவனை என்றும் வாலிபனாக வாழுமாறு கருணை புரிந்து காதலனை காக்க கதிரை நிறுத்திய கற்புடைய மங்கையின் பெருமையை பாரோர் தொழுமாறு செய்து எண்ணற்ற அற்புத செயல்கள் புரியும் கற்பகமே என் அம்மை ஆச்சியே நின் கருணை செயல்கள் போற்றி போற்றி {S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அம்மை ஆச்சி நேசன்
529 views
2 days ago
தர்மர் அறம் கூறுதல் {33} நானிலத்து நன்மைக்காக தனது மூன்று அடி நாடகத்தை நடத்தி முடித்தார் ஶ்ரீலட்சுமி நாயகன் நாரணணன் இந்த கதையை கேட்பவர்களூக்கும் படிப்பவர்களூக்கும். தான் என்ற அகந்தை இழந்து நாரணன திருவடிகள் அடைவார்கள் என்று பெரியோர்கள் கூறும் முது நெறியாகும் வாமனன் வடிவு கொண்ட தாமரை செல்வன் கழல் போற்றி மூன்று அடி அளந்த ஊழி முதல்வன் புகழ் போற்றி தேடி வந்து அருளும் தேவாதி தேவன் திருவடிகள் போற்றி நலம் தரும் லட்சுமி நாரணன் திருநாமத்தை என்றும் போற்றுவோம் போற்றி என்று கைகூப்பி ஆயுதங்கள் இன்றி அரக்கன் அடர்த்திய கதையைஅரங்கன் பெருமையை கூறி முடித்தார் அறவடிவு செல்வர் தர்மர் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
551 views
2 days ago
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 31 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் உயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம் மானை இயற்று திகழ் சோதி இறைவனும் ஆமே #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அம்மை ஆச்சி நேசன்
2.4K views
2 days ago
திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம் திருக்கோகரணம் அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர் மரம்: வில்வம் கோடி தீர்த்தம் பாடல் எண் : 6 பண் : சாதாரி நீறுதிரு மேனி இசைஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலி செய ஏறுவிளை ஆட இசை கொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடமாம் ஆறு சமயங்களும் விரும்பிய அடி பேணி அரன் ஆகம மிக கூறுமனம் ஏறி ரதி வந்த அடியர் கம்பம் வரு கோகரணமே. பொழிப்புரை: சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும். குறிப்புரை: திருமேனிமிசை, நீறு ஆடி - விபூதி பூசி. வார் கழல் சிலம்பு நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த ஒலி செய்ய. ஏறு - இடபமானது. விளையாட விசைகொண்டு - விளையாடுவதைப் போற் செல்ல விசையாகச் செலுத்தி. இடுபலிக்கு வரும் - மாதர் இடும் பிச்சைக்கு வருகின்ற, ஈசன் இடமாம். ஆறு சமயங்களும் - ஆறுசமயத்தவர்களும், விரும்பி, அடிபேணி - திருவடியைக்கருதி. அரன் ஆகமம் மிகக்கூறு - சிவபெருமானது ஆகம நெறிகளைப் பயன் மிகும்படி சொல்லுகின்ற கோகரணம். ( மனம் ) வேறு இரதி வந்து - உலக இன்பத்தின் வேறான சிவானந்தம் விளைய. அடியர் - அடியார்கள். கம்பம் வரு - அவ்வானந்தம் மேலீட்டால் உடல் நடுக்கம் வரப்பெறுகின்ற கோகரணம் - திருக்கோகரணமே. ` ஆகம் விண்டு கம்பம் வந்து ` ( தி.8 திருச்சதகம். 72) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
6.8K views
2 days ago
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 76வது  திருத்தலம் இலம்பையங்கோட்டூர் அருள்மிகு கோடேந்து முலையம்மை உடனுறை சந்திரசேகரர் மரம்: வில்வம் குளம்: சந்திர தீர்த்தம் பாடல் 8 குறிஞ்சி வேர் உலா ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன் உலகில் ஆருலா எனது உரை தனது உரையாக வாக ஒர அரவு அணிந்து உழிதரும் அண்ணல் வாரு உலா நல்லன மாக்களும் சார வாரண முழிதரு மல்லலங் கானல் ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்பேணி என் எழில் கொள்வது இயல்பே. பொழிப்புரை: நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ? குறிப்புரை: இராவணனை அடர்த்தவன்; இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக்கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறாள். வேர் உலாம் - பூமியின் அடிவரை உலாவுகின்ற, ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு. வாரணம் - யானை. மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள். #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அம்மை ஆச்சி நேசன்
507 views
3 days ago
காதலுடன் நானும் கை தொழுகின்றேன் நாளும் கண்ணே நாயேனை பாராமல் இருப்புது இன்னும் ஏனும் அழுத குழந்தைக்கு அமுது அளிக்காத தாய் என்றும் தொழுபவரை வஞசிக்கும் மாயவள் என்றும் தங்கமே நீ பேர் எடுக்காதே நாளூம் அன்பு நிறைந்த , அன்னை என்றும் அருளூம் தெய்வம் அம்மை ஆச்சி என்றும் புகழ் கொள்வாயே நீரும் நாளூம் (ச.ஜெய வீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்