Follow
அம்மை ஆச்சி நேசன்
@432439658
6,618
Posts
5,349
Followers
அம்மை ஆச்சி நேசன்
497 views
17 hours ago
இன்புறு தமிழலில் பதிகம் நாளூம் எழுதி இமயவளே உம் திருவடிகள் நித்தம் சாற்றி அன்புறுவான அம்மை ஆச்சியே ஆதிசக்தியே ஆவுடை மாகாளியே என அனுதினம் நின் திருவடி போற்றி புகழ் பாடி புகழ் மிகு கழல்களை வேண்டி பழம்பதிக நாயகியே பாவியேனுக்கு அருள்வாயே என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
அம்மை ஆச்சி நேசன்
1.5K views
1 days ago
கருணைக்கொண்டு நீரூம் காத்து அருள வேண்டும் எம்மை நாளூம் பிறையை சூடிய பிஞ்சகன் போல் எம் இறைவியே நீர் உம் திருவடி மேல் காதல் கொள்ள வேண்டும் நாளூம் வளர்பிறை தேய்பிறை போல் இல்லாமல் வள்ளலே வளர்ந்த பிறை போலவே வாழ்வு நிலையனாதாக இருக்க நீர் அருள் புரிய வேண்டும் என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
அம்மை ஆச்சி நேசன்
3.4K views
1 days ago
பரம தயாபரி பட்டிஸ்வர தேவி அம்மை ஆச்சி அன்பு செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 73 வது திருத்தலம் திருப்பட்டீச்சரம் அருள்மிகு பல்வளைநாயகி உடனுறை பட்டீச்சுரநாதர் மரம்: வன்னி: ஞான தீர்த்தம் பாடல் எண் : 11 பண் : சாதாரி மந்தமலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறையதனுள் பந்தம் உயர் வீடு நல பட்டிசர மேயபடர் புன்சடையனை அந்தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தர் அணியார் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்பவல தொண்டர்வினை நிற்பது இலவே. பொழிப்புரை: தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில், தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும், வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும், உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும். #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
அம்மை ஆச்சி நேசன்
675 views
2 days ago
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 73 வது  திருத்தலம் திருக்கானூர் அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர் மரம்: வன்னி மரம், வில்வ மரம் குளம்: கொள்ளிட நதி பாடல் எண் 3பண் தக்கேசி சிறையார் வண்டும் தேனும் விம்மும் செய்ய மலர் கொன்றை மறையார் பாடல் ஆடலோடு மால்விடை மேல் வருவார் இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே. பொழிப்புரை: கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?. #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
2.3K views
2 days ago
கமல திருக்கரங்கள் போற்றி கண்ணே மணியே கற்பகமே காழி செல்வமே போற்றி சிரபுரத்து ராணியே போற்றி சிங்கார தமிழ் அன்னையே போற்றி புறவத்து பொன்மகளே போற்றி அரவத்து நாயகியே அம்மை கோமதியே போற்றி திருவிடை நாயகியே தில்லை காளியே போற்றி அம்மை ஆச்சியே அழகே போற்றி ( S.ஜெயவீரபத்தரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
507 views
2 days ago
மனம் விரும்பும் காலம் மங்களமே நீர் அருளாயோ எந்நாளூம் துணை நீ என்றே அம்மை ஆச்சியே போற்றுகிறேனே நானும் நாளூம் தூயவளே நீ அருளாமல் ஆடுவது எம்மை வதைக்கிறதே நாளூம் பொருளும் புகழும் வளமும் நலமுமம் தேவை உள்ளதே நாளூம் பொன்மணியே கண்மணியே நீர் அருளிவிரே அம்மை ஆச்சியே அன்புடன் நாளூம் வாழும் காலம் (S.ஜெயவீரபத்திரன் ) #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
அம்மை ஆச்சி நேசன்
775 views
3 days ago
நற்குண மங்கையே நானிலம் போற்றும் என் அம்மையே ஆச்சியே பொற்கமலத்தில் அமர்ந்து இருக்கும் பொன்னம்பல நாயகி எம் தாயே அருட்கரங்கள் கொண்டு அடியவர்க்களூக்கு அருளூம் அற்புதமே கற்பகமே காழி செவ்வமே நின் பொற்பதமே என்றும் துணை என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
அம்மை ஆச்சி நேசன்
615 views
4 days ago
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 73 வது  திருத்தலம் திருக்கானூர் அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர் மரம்: வன்னி மரம், வில்வ மரம் குளம்: கொள்ளிட நதி பாடல் எண் : 2 பண் : தக்கேசி நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கும் நீள் சடை தன் மேல் ஒர் ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழிலார் போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம் காந்தள் விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே குறிப்புரை: கானூர்மேவிய செல்வர், கங்கையினையுடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர்போலாம் என்கின்றது. நீந்தலாகாவெள்ளம் மூழ்கும் நீள்சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்துபோன சடை. ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த தலைமகன் காலம் நீட்டிக்க, கவன்றதலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி நைகின்ற நிலையை அறிவிக்கின்றது. #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்
See other profiles for amazing content