Follow
அம்மை ஆச்சி நேசன்
@432439658
6,737
Posts
5,428
Followers
அம்மை ஆச்சி நேசன்
387 views
2 hours ago
கண்ணன் வாழத்து தர்மர் அறம் கூறுதல் 3 மாயவன் மேயவன் தூயவன்.என்று அடியவர்கள் போற்றி மயங்கும் மங்கள நிறைந்த குழல் இசை செல்வன் கண்ணன் கழலை காதலுடன் போற்றுகின்றேன் நான் நானிலத்தின் காக்கும் தேவகி மைந்தனின் திருவடிகளை கவி அருள் புரிவான் என்றும் அவனியோர் விரும்பும் படி (ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
556 views
19 hours ago
கைதொழுதேன் கவலை தீரவே மெய்வருந்த செய்கிறாயே செல்வமே நாளூம் பேயோன் உடன் நடம் ஆடும் பெம்மான் நாயகியே இந்த சிறியேனை வருந்த செயும் ஆடல் எதற்கு? தாயே தயாபரியே என்று நாளூம் தளர்ச்சி இன்றி நாயேன் காதலுடன் நவின்று போற்றினாலும் ஆடல் அரசியே அருள மனமில்லையோ அருள்வாயே மாகாளியே கோமதியே என் அம்மை ஆச்சியே (S.ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
607 views
1 days ago
திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம் திருவேதிகுடி அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் மரம்: வில்வம் வைத தீர்த்தம் பாடல் எண் 2 பண் சாதாரி சொற்பிரி விலாத மறைபாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை மற்புரி புயத்தின் இனிது மேவுவர் எந் நாளும் வளர் வானவர் தொழம் துற்பரிய நஞ்சு அமுதமாக முன இன்றவர் இயன்ற தொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர் நகர் என்பர் திருவேதிகுடியே. #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
555 views
1 days ago
கண்ணன் வாழத்து தர்மர் அறம் கூறுதல் களவு லீலையால் கோகுலத்தை மயங்க செய்து காளிங்க நர்த்தனம் செய்து காதல் கொண்ட அனைவர் நெஞ்சிலும் கலந்து வாழ்ந்து வளம் அருளி வாழ்வின் பேதத்தை போக்கும் கீதையை உரைத்து கீர்த்தி உடைய செயல்களை சதா புரிந்து கிருஷ்ணன் என்று திருநாமம் கொணடு (தொடரும்). (ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
555 views
1 days ago
பக்தியுடன் பதிகங்கள் பல பாடி பாவியேன் வினை களைய பாதங்கள் பணிந்து குறைமதியை நிறைமதியை போல என்றும் ஒளிர செய்த நின் கருணை செயலை கூறி அரவு சூடிய அய்யன் அன்புக்கு இணங்கி ஒரு பாகம் கூடிய உம் காதலை புகழ்ந்து கூறி பெருமழைபோல் கனகமழை பொழிந்த நின் கருணையை வேண்டி கைதொழும் இவ் சிறியேனுக்கு அருள்வாயே சிந்தாமணியே என் அம்மை ஆச்சியே ( S.ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
525 views
2 days ago
மலர்ச்சியுடன் நானும் தளரச்சி இன்றி நின் திருத்தாளை போற்றுகிறேன் எழுச்சி நிறைந்த வாழ்வு அருள்வாயே என தொழுது ஏக்கத்துடன் கேட்கிறேன் இகழ்ச்சியுடன் எம்மை கடப்பவரை கண்டு புன்னைகயுடன் என் தாய் எமக்கு அருள்வாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என் அம்மை ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
615 views
2 days ago
கண்ணன் வாழத்து தர்மர் அறம் கூறுதல் கண்ணன் வாழத்து ஏழுவர்க்கு பின் பிறந்து ஏற்றம் உடைய அரக்கனை அழித்து ஐவர்க்கு அருளி அவனியில் அமைதி நிலவித்து ஈர் ஐந்து மாதங்கள் பெறாத தாயுடன் வாழ்ந்து மழலை லீலைகளை புரிந்து மகிழ செய்து வெண்ணெயயும் மண்ணையும் உண்டு வியத்தகு செல்வன் என்று காட்டி {தொடரும்} (ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
அம்மை ஆச்சி நேசன்
512 views
3 days ago
காதல் கொண்டேன் உம்மீது கண்மணியே கோமதியே காணீரோ நீரும் ஆவலுடன் பல கானங்களை எழுதி சூட்டுகிறேன் நாளூம் அன்புடையீர் அறியீரோ நீரும் திருவடி போற்றாத அரக்கன் மேல் மலரடி வைத்து விந்தை புரிந்த நீரும் விருப்புமுடன் போற்றும் எம் மேல் வெறுப்பு கொண்ட தாயான தெய்வமோ நீரும் கருணையுடன் அரக்கனுக்கு அருள் புரிந்த நீரும் கருணையுடன் எமக்கு அருள்வீரே அம்மை ஆச்சியே நாளூம் {S.ஜெயவீரபத்திரன்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
அம்மை ஆச்சி நேசன்
623 views
3 days ago
ஸ்ரீ கோமதி அம்பாள் கலித்துறை அந்தாதி திருவண்ணநாதக் கவிராயர் பாடல் 5 சன்னிதி போற்றி திருத்தளி சூழ்வந்து சாநுவிபாம் நன்னதி ஏற்ற சடையார்க்கு ஒருதனி நாயகியார் தன்னுயர் நாமம் பெறுமா உடைபொய்கை தன் அருகில் துன்னவீடுவோரை தொடரா மரணமும் தோற்றமுமே #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
அம்மை ஆச்சி நேசன்
506 views
3 days ago
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 13 செப்பும் சிவ ஆகமம் என்னும் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள் நந்தி தாள்பெற்று தப்பிலா மன்றில் தனிக்கூத்து கண்டபின் ஒப்பில் ஒரு கோடி யுகம் இருந் தேனே . பொழிப்புரை: உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன். #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான்