பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 13
செப்பும் சிவ ஆகமம்
என்னும் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்தி தாள்பெற்று தப்பிலா மன்றில் தனிக்கூத்து கண்டபின்
ஒப்பில் ஒரு கோடி யுகம்
இருந் தேனே .
பொழிப்புரை:
உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான்