திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 73 வது திருத்தலம்
திருக்கானூர்
அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர்
மரம்: வன்னி மரம், வில்வ மரம்
குளம்: கொள்ளிட நதி
பாடல் எண் : 2 பண் : தக்கேசி
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கும் நீள் சடை தன் மேல் ஒர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழிலார் போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம் காந்தள் விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே
குறிப்புரை:
கானூர்மேவிய செல்வர், கங்கையினையுடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர்போலாம் என்கின்றது. நீந்தலாகாவெள்ளம் மூழ்கும் நீள்சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்துபோன சடை. ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த தலைமகன் காலம் நீட்டிக்க, கவன்றதலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி நைகின்ற நிலையை அறிவிக்கின்றது.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்