Follow
நஜிராஅமான்
@6851781
9,184
Posts
16,009
Followers
நஜிராஅமான்
611 views
20 days ago
கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் அமைந்துள்ள கிடங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கவுன மகரிஷியின் வேண்டுகோளின் படி முருகப்பெருமான் இங்கே பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார் மூலவர் பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை கொடி மரம் அருகில் இருந்து தரிசனம் செய்ய வேண்டும் தம்பதியாக வந்தாலும் மனைவி நெல்லில் இருந்தே வேண்டிக் கொள்ள வேண்டும் கேரளாவில் உயரமான கொடி மரங்களில் இதுவும் ஒன்று இதன் உச்சியில் அழகிய மயில் வீற்றிருக்கும் இங்கு உள்ள நாடக மேடை குறுந்தொட்டி மருத்துவ குணம் கொண்ட மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது இதில் ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன குழந்தை வரம் வேண்டி முருகன் வழிபட்டு குழந்தை வரம் பெற்றவர்கள் நன்றி கடனாக பிரம்மச்சாரி கூத்து என்ற கலை நிகழ்ச்சியை நடத்துகின்றனர் காலை நாலு மணி முதல்1 2 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரைதிறந்திருக்கும் #ஆன்மீக தகவல்கள்
நஜிராஅமான்
1.6K views
22 days ago
விண்கல் பாறையில் வடிவமைக்கப்பட்ட சிலை மகாராஷிராவின்புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரியில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கலம் மோதியதால் உருவானது இந்தவிண்கல் மோதலின் போது உருவான அதீத காந்த சக்தி கொண்ட பாறையில் தான் மோதா மாருதி சிலை வடிவமைக்கப்பட்டது இந்த சிலை இயற்கையான காந்த பாறையினால் ஆனது இன்றும் ஒரு காந்த திசைகாட்டியை இந்த சிலைக்கு அருகில் கொண்டு சென்றாள் அதன் முள் திசை மாறி குழம்புவதை காணலாம் இக்தளத்தில் நிலவும் அதித காந்தப்புலம் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒருவித நேர்முக ஆற்றலையும் மன வலிமையும் தருவதாக நம்பப்படுகிறது பொதுவாக ஆஞ்சநேயர் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்தகோலத்திலோ காட்சி அளிப்பார் ஆனால் இங்கே அனுமன் சயன கோளத்தில் காட்சியளிப்பது மிகவும் அற்புதமானது எட்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பம் நம் முன்னோர்களின் சிற்பக் கலைக்கும் அறிவியல் ஆற்றலுக்கும் ஒரு சான்றாகும் ஸ்ரீ மோதா மாருதி மந்திர் அம்பர் ஏரி அருகில் லோனா புல்தானா மாவட்டம் மகாராஷிரா #ஆன்மீக தகவல்கள்
நஜிராஅமான்
638 views
25 days ago
முருகன் என்றாலே கையில் வேலும் வாங்கிய அழகிய திருவுருவம் நினைவுக்கு வரும் ஆனால் மதுரையில் ஒரு அபூர்வ கோலத்தில் முருகப்பெருமான் சுயம்புலிங்கமாக அருள் புரிகிறார் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை ஜமினை சேர்ந்த ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் சுப்பிரமணிய ஞானியார் என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்றே சுமார் 80 மயில் தொலைவில் உள்ள நெல்லை மாவட்டம் கழுகுமலை கந்தனை தர்சிக்க கால்நடையாகவே சென்று வருவதை தன் வாழ்நாள் முழுவதும் விரதமாக கொண்டிருந்தார் தனது பிரயோதிக காலத்திலும் கழுகு மலைக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்று ஞானியர் வருந்தும்போது முருகர் அவரது கனவில் தோன்றி தான் அருகிலுள்ள கவுண்டியநதியில் சுயமபுலிங்கமாக எழுந்தருளி இருப்பதாக கூறி மறைந்தார் இந்தச் செய்தி அறிந்த அன்றைய ஏழுமலை ஜமீன்தார் திரு நல்தாது நாயக்கர் அங்கே கற்பக கிரகம் மற்றும் மயில் மண்டபம் ஆகியவற்றை கட்டினார் ஞானியார் மாதந்தோறும் கழுகு மலைக்கு சென்று வந்ததை நினைவு படுத்தும் வகையில் இத்தளத்திற்கு மாதங்கம் என பெயரிட்டார் இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உருவானவர் என்பது சிறப்புடையது காலை ஆறு மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் அருள்மிகு மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஏழுமலை பேரையூர் வட்டம் சேடப்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம் #ஆன்மீக தகவல்கள்
நஜிராஅமான்
296 views
25 days ago
கடலூர் மாவட்டம் திருச்சோர்புரம் மங்களபுரி ஈஸ்வர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி சிலை வெறும் கற்சிலை அல்ல அது ஒரு இசைக்கருவி இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மீது மென்மையாகதட்டினால் சங்கீதத்தின் அடிப்படை நாதமான சப்த ஸ்வரங்கள் துல்லியமாக ஒலிக்கின்றன ஒரு கர்ச்சிலைக்குள் எப்படிஏழு விதவிதமான அதிர்வுகளை கொண்டு வந்தார்கள் என்று இன்றைய நவீன காலத்திலும் வியக்க வைக்கும் அறிவியல் அதிசயம் இசை துறையில் சாதிக்க நினைப்பவர்கள் குரல் வளம் பெற விரும்புபவர்கள் மற்றும் இசைக்கருவி பயிலும் மாணவ மாணவியர்கள் இத்தலத்திற்கு வந்து சப்தஸ்வர தட்சணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வழிப்படுகின்றனர் இவரை வணங்கினால் கலைகளின் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதிகம் அகத்தியர் தனது கைத்தடம் பதிய மனலில் படித்த சிவலிங்கம் சிவனுக்கு மஞ்சள் சாற்றி செய்யப்படும் அபூர்வ வழிபாடு கடல் சீற்றத்தால் மணலில் புதைந்து மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட தொன்மையான ஆலயம் அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோர்புரம் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் #ஆன்மீக தகவல்கள்
நஜிராஅமான்
659 views
25 days ago
பொதுவாக சனீஸ்வரன் காக வாகனத்தில் இருப்பதை தான் பார்த்திருப்போம் ஆனால் இத்தலத்தில் சனிஸ்வரன் கழுகு வாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார் தசரத சக்கரவர்த்தி காகத்தை வாகனமாக வழங்குவதற்கு முன்னரே அதாவது ராமாயண காலத்திற்கே முற்பட்ட பழமையான வடிவம் இது என்பது குறிப்பிடத்தக்கது சனிக்கிழமைகளில் இவரை வாங்குவது விசேஷ நன்மைகள் தேடி வரும் கோயில் முழுவதும் தேர் போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது இந்தத் தேரின் சக்கரத்தை விநாயகர் மிதித்ததால் இடது பக்க சக்கரம் பூமியின் சற்று பதிந்து இருப்பது போல சிற்ப வேலைப்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3 4 5 தேதிகளின் சூரியன் ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழுந்து சூரிய பூஜை செய்தது இதேபோல் ஐப்பசி அண்ணாபிஷேகம் அன்று சந்திரன் ஒலி இறைவன் மீது விழுவது இக்கோயிலின் ஆன்மீக ஆற்றலுக்குஓர் சான்றாகும் இங்குள்ள சிவலிங்கம்நவபாஷணத்தால் ஆனது இங்குள்ள தட்சிணாமூர்த்தி கையில் புல்லாங்குழல் மற்றும் வீணையுடன் இசைக்கோளத்தில் காட்சியாளிக்கிறார் கடுமையான செவ்வாய் தோஷம் மிகவும் ஆயுர்வேதிக்காகவும் வழிபட வேண்டிய தலங்களில் ஒன்றாகும் இக்கோயில் மேலகடம்பூர் காட்டுமன்னர்கோயில் அருகில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது #ஆன்மீக தகவல்கள்
நஜிராஅமான்
746 views
27 days ago
சூரியனை 8 புத்திரர்கள் 01= கர்ணன் 02=காளந்தி 03=தத்தியமகன் 04=சனி 05=நாதன் 06=மனு 07=எமன் 08=சுக்கிரவன் '''""""""""""""""""""""''''''"""""""''''''""'''"''''"""'""''''"""'"'''''''" நந்தியின் அருள் பெற்ற எட்டு பேர் 01=சனகர் 02=சனாதர் 03=சனந்கர் 04=சனத்குமார் 05=வியாக்கரபாதர் 06=பதங்சலி 07=சிவயோகமுனிவர் 08=திருமூலர் ''"""""""""""''''''''''''''''''''"''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"" அஷ்ட பர்வதங்கள் 01=கைலாயம் 02=இமயம் 03=ஏமகூடம் 04=கந்தமாதனம் 05=நீலகிரி 06=நிமிடதம் 07=மந்தாரம் 08=விந்தியமலை , ""''''''''"""''"''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""'""""'''"""''' எட்டு வகை ஆத்ம குணங்கள் 01=கருணை 02=பொருமை 03=பேராசையின்மை 04=போறாமையின்மை 05=நல்லவனவற்றில்பற்று 06=உலோகதன்மையின்மை 07=மனமகிழ் 08=தூய்மை """''''''''""''''""""''''''''''''''''''''"""""""""'''''''""""'''''''''''''''''''''''''"''' எட்டு வகை மங்களங்கள் 01= கண்ணாடி 02=கொடி 03= இணைக்கையல் 04= சாமரம் 05=நிறைகுடம் 06= விளக்கு 07=முரசு 08=ராஜசின்னம் "''''''''''""""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""'"'""""' எட்டு வகை வாசனைப் பொருள்கள் 01=சந்தணம் 02=கோட்டம் 03=கஸ்தூரி 04=பச்சைகற்பூரம் 05=குங்குமம் 06=பச்சிலை 07=அகில் 08= விளாமிச்சைவேர் """""''""""""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""'"'''''''''''''"""''''''''' ஏழு வகை பிறப்பு 01= தேவர் 02= மனிதர் 03= விளங்கு 04= பறவை 05=ஊர்வன 06= நீர் வாழ்வன 07= தாவரம் #ஆன்மீக தகவல்கள்