Follow
Arab Tamil Daily
@arabtamildaily
91
Posts
107
Followers
Arab Tamil Daily
605 views
17 days ago
#BreakingNews || குவைத் விமான நிலையத்தை குறிவைத்து இன்று புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: குவைத் சர்வதேச விமான நிலையமானது இன்று(01/04/26) புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஆளில்லா(ட்ரோன்) விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்போது(அதிகாலை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், குவைத் ஏவியேஷன் ஃபியூலிங் கம்பெனியின்(KAFCO) கீழ் இயங்கும் எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்தது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார். இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்தும், தொட்டிகளுக்குக் கணிசமான சேதமும் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அவசரக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தத் தாக்குதலால் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். கூடுதல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் தொடங்கிய பிறகு குவைத் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
552 views
17 days ago
#BreakingNews||குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக நபர் சந்தானச் செல்வம் உடல் சற்று நேரத்தில் தாயகம் செல்கிறது: Read More 📎 https://www.facebook.com/share/p/18daz4GsnF/ #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
571 views
18 days ago
#BreakingNews || துபாய் கடற்கரையில் வைத்து ஈரானிய ட்ரோன்கள் 'அல் சல்மி' என்ற மிகப்பெரிய குவைத்தின் எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது: துபாய் துறைமுகம் அருகே வைத்து குவைத்தின் மிகப்பெரிய 'அல் சல்மி'(Al Salmi) என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து பல தாக்குதல் நடத்தியதில் கப்பலின் வெளிப்புறப் பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், தீ விபத்தும் மற்றும் எண்ணெய் கசிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பலான(VLCC) 'அல் சல்மி' மீது இன்று மார்ச்-31,2026 செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 12:10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பெட்ரோலியக் கழகம்(KPC) அறிவித்துள்ளது. துபாய் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'அல் சல்மி' கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், அந்தக் கப்பல் முழுமையாக எண்ணெய் நிரப்பப்பட்ட நிலையில் இருந்ததாக KPC வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக,கப்பலின் வெளிப்புறப் பகுதி(Hull) சேதமடைந்ததுடன், கப்பலுக்குள் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும்,சுற்றியுள்ள கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் KPC மேலும் தெரிவித்துள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
3.1K views
18 days ago
#BreakingNews || குவைத்தில் காலையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர் ராமநாதபுரத்தை சேர்நதவர்: குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பாத்திமா ஹயாத் இன்று(30/03/26) திங்கட்கிழமை அதிகாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான் நடத்திய தாக்குதலில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் பகிர்வு சேவைகளை வழங்கும் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், மேலும் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தன எனவும் மற்றும் பெரும் அளவிலான பொருள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த இந்தியர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பெயர் சந்தானச் செல்வம்(37) எனவும், இவர் ராமநாதபுரம் மாவட்டம், முத்துக்குளத்தூர் அடுத்த தேரிருவேலி பகுதியை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. குவைத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் நடத்தி வருகின்றன தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இது குவைத்திலுள்ள இந்திய சமூகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
575 views
3 months ago
குவைத்தில் நண்பனின் உடலை மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு ஓடிய இரண்டு இந்தியர்கள் கைதாகியுள்ளனர்: குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் நண்பரின் உடலை சிகிச்சைக்காக என்ற போர்வையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று(16/01/26) வெள்ளிக்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் நடந்தது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு நபருடன் மருத்துவமனைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் இருந்த நபரை வார்டு உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு, அடையாளம் தெரியாத நபர் உடனடியாக நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நைசாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றார். இதை தொடர்ந்து மருத்துவர் நடத்திய பரிசோதனையில் சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கண்டறிந்தனர். இவருடைய மரணத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலை தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். பின்னர், உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து வெளியே சென்ற நபரை அடையாளம் காண பாதுகாப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. மருத்துவமனையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருக்க இன்னொரு நபர் இறந்த நபரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை உறுதி செய்தனர். பின்னர் தலைமறைவான இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவரும் இந்தியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் உடலை மருத்துவமனையில் விட்டுச் சென்றதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இவர்களுடைய அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் என்றும், இவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இது தொடர்பாக காவல்நிலையம் செல்லவும் பயந்தும் உடலை தங்களுடைய காரில் எடுத்து வந்து இப்படி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுடைய இந்த செயல் காரணமாக இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ அறிக்கையில் மரணம் இயற்கையாக நடந்தது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
576 views
4 months ago
தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பில் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது: பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
509 views
4 months ago
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது: குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார். மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
561 views
4 months ago
குவைத்திலிருந்து நாடுகடத்தபட்ட நபர்கள் அமீரகத்திலும் நுழைய முடியாத தகவல் பரிமாற்ற திட்டம் நடைமுறையில் வந்துள்ளது: குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, டேட்ரா வயர்லெஸ் தகவல் தொடர்பு திட்டம் மற்றும் மின்னணு கைரேகை பதிவு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(09/11/25) மாலையில் அறிவித்துள்ளது. இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு இணைப்புத் திட்டங்களைப் பின்தொடர்வதற்காக இன்று நடைபெற்ற எட்டாவது கூட்டத்தில் பங்கேற்ற குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினர்களை போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் துறைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல்-அதிகி சந்தித்தார். புதிய அமைப்பு நிறைவடைந்த நிலையில், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்வார்கள். மேலும் ஒருங்கிணைந்த வளைகுடா விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதிலிருந்து நிலைமை இதைவிட மோசமாக மாறும், காலு வச்ச இடம் எல்லாம் கன்னிவெடி என்கிற மாதிரி ஒரு வளைகுடா நாட்டில் பயணத்தடை கிடைக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் மற்ற எந்த வ‌ளைகுடா நாட்டிலும் வேலைக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
548 views
4 months ago
குவைத்தில் மத பிரிவுகளின் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தெளிவான மற்றும் விரிவான வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரைவுச் சட்டத்தை இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் அமைச்சகம் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய வரைவுச் சட்டம், குடிமக்களிடையே மத சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதோடு,வழிபாட்டுத் தலங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் புதிய வரைவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியல், வணிகம் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கு வழிபாட்டுத் தலங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் வரைவுச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நிதி விவகாரங்களை கடுமையாக மேற்பார்வையிடுவதை உறுதி செய்வதற்கும் வரைவு சட்டம் அழைப்பு விடுக்கிறது. நாட்டில் அவரவர் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள பல்வேறு மத பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்க ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குவதற்கும் வரைவுச் சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவது இந்தக் குழுவின் பொறுப்புகளில் அடங்கும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும், நாட்டில் பிற மதங்களுக்கான பல வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். அதே நேரத்தில்,புதிய சட்டம் பிற மதங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாட்டின் நலன்களை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
598 views
4 months ago
குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்: குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️