Follow
Arab Tamil Daily
@arabtamildaily
8
Posts
110
Followers
Arab Tamil Daily
523 views
11 days ago
குவைத்தில் இந்தியர் உட்பட இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்: குவைத்திலுள்ள ஜஹ்ரா மாகாணத்தின் கப்த்(Kabd) பகுதியில் ஈரானியர் மற்றும் இந்தியர் உட்பட இருவரை திட்டமிட்டு கொலை செய்த பிறகு நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற எகிப்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, குவைத்தின் தரைவழி எல்லை ரட்கா(Ratqa) வழியாக தப்பிக்க முயன்ற நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் அவன் பிடிபட்டுள்ளான் என்ற செய்தியினை இன்று(09/08/2026) நள்ளிரவில் உள்துறை வெளியிட்டுள்ளது. கப்த் பகுதியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் இருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து இந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கத்திக்குத்துக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில் கிடந்த இருவருடைய உடலை கண்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரிய அளவிலான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவியல் புலனாய்வுத்துறையின் சிறப்புப் பிரிவினர் குற்றவாளியைக் கண்டறிய விரிவான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, கொலை தொடர்பான நிகழ்வுகளைத் தொகுத்து ஆராய்ந்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம்(கத்தி) சம்பவ இடத்திற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது. இது இவ்வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. விசாரணை தீவிரமடைந்த நிலையில், குற்றவாளி அடையாளம் காணவும், நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் முடிந்தது. தரைவழி எல்லைப் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், குவைத்தை விட்டு தப்பிக்க முயன்றபோது ரட்கா பகுதியில் வைத்து குற்றவாளி பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டார். குற்றவாளி தப்பிச் செல்லும் முன்பே கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரட்டைக் கொலைக்கான சூழ்நிலைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இந்தியர் தொடர்பான கூடுதல் விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. வரும் மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
590 views
29 days ago
குவைத்தில் வசிக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்தது;மொத்த மக்கள் தொகை 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது: குவைத் குடிமைத் தகவல் ஆணையம் நேற்று(21/07/26) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, குவைத்தின் மொத்த மக்கள் தொகை ஜூன் 30 நிலவரப்படி 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனுடன், இந்தியர்களின் எண்ணிக்கையும் 1.06 மில்லியனாக அதிகரித்துள்ளது(பத்து லட்சத்து அறுபதாயிரம்). நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.56 மில்லியன் பேர் குவைத் குடிமக்கள்(30 சதவீதம்) மற்றும் 3.74 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களும் ஆவார்கள்(70 சதவீதம்). வெளிநாட்டவர்களில் 10,60,000(20 சதவீதம்) பேருடன் முதல் இடத்தில் உள்ள இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, சுமார் 670,000 பேருடன்(13 சதவீதம்) எகிப்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 333,060 பேருடன்(6 சதவீதம்) வங்காளதேசத்தினர் மூன்றாம் இடத்திலும், 226,500 பேருடன்(4 சதவீதம்) பிலிப்பைன்ஸ் நாட்டினர் நான்காம் இடத்திலும், 201,500 பேருடன்(4 சதவீதம்) சிரியா நாட்டினர் ஐந்தாம் இடத்திலும், 197,400 பேருடன் (4 சதவீதம்) இலங்கையர்கள் ஆறாம் இடத்திலும், 186,600 பேருடன் (4 சதவீதம்) நேபாளிகள் ஏழாம் இடத்திலும், 155,500 பேருடன் (3 சதவீதம்) சவுதி நாட்டினர் எட்டாம் இடத்திலும், 105,700 பேருடன்(2 சதவீதம்) பாகிஸ்தானியர்கள் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர். இதற்கிடையே நாட்டில் வேலை செய்கின்றவர்கள் எண்ணிக்கை 32.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 28.8 சதவீதம் பேர் இந்தியர்கள். எகிப்து 14.6%, குவைத்திகள் 14.2%, பங்களாதேஷ் 9.9%, பிலிப்பைன்ஸ் 6.6%, இலங்கை 5.8%, நேபாளம் 5.7%, சிரியா 2.3%, பாகிஸ்தான் 2.3% மற்றும் ஜோர்டான் 1% என்றும் புள்ளிவிவரங்கள் தெளிவு படுத்துகின்றன. அதேபோல் தனியார் துறையில் பணிபுரிபவர்களில் 30.7 சதவீதம் பேரும் இந்தியர்கள் ஆவார்கள், இந்தியர்களுக்கு அடுத்த படியாக இந்தத் துறையில் 23.6 சதவீத எகிப்தியர்களும், 11.2 சதவீத பங்களாதேசியர்களும் பணியாற்றுகின்றனர். அதேநேரம் அரசு துறைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களில் சுமார் 74.7 சதவீதம் பேரும் குவைத் நாட்டவர்கள் ஆவார்கள், அவர்களுக்கு அடுத்தபடியாக 7.1 சதவீத எகிப்தியர்களும், 5.1% இந்தியர்களும் பணிபுரிகின்றனர். நாட்டில் 8.83 லட்சம் வெளிநாட்டினர் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். நாட்டிலுள்ள மொத்த தொழிலாளர்களில் 27 சதவீதமும், மக்கள் தொகையில் 17 சதவீதமும் இவர்களே ஆவார்கள். அதேபோல் இவர்களில் 57.7 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதிலும் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் 39 சதவீதம். இலங்கையர்கள் 17.9%, பிலிப்பைன்ஸ் 17.1%, பங்களாதேஷ் 12.1% மற்றும் நேபாளம் 7.8% வேலை செய்வதாகவும் புள்ளிவிவர கணக்குகள் தெரிவிக்கின்றன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
923 views
29 days ago
குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது: குவைத் மனிதவள ஆணையம் இன்று(22/07/26) புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில், தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது. இதில், சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வரும் சூழல்கள் மற்றும் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களில் தொழிலாளியின் பணியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வேலையளிப்பவருக்கு(முதலாளிக்கு) உண்டு என்று ஆணையம் விளக்கியுள்ளது. இதில், காலவரையற்ற ஒப்பந்தங்களில் உரிய அறிவிப்புக் காலத்தைக்(Notice Period) கடைப்பிடித்து பணிநீக்கம் செய்வது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்வது ஆகியவை அடங்கும். அதேவேளையில், பணிநீக்க முடிவு தவறானது என்று கருதினால், தொழிலாளர் சட்டத்தின் 41, 44 மற்றும் 46-வது பிரிவுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கான உரிமை அத்தொழிலாளிக்கு உண்டு எனவும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை தொழிலாளிக்கு உண்டு என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 48-வது பிரிவின்படி, வேலையளிப்பவர்(Sponsor) ஒப்பந்தம் அல்லது தொழில் சட்டத்தை மீறுதல், முதலாளி அல்லது அவரது நிறுவனத்தின் துணை அதிகாரிகளின் தாக்குதல் அல்லது தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகவும், அதே சமயம் பணிக்கால நிறைவுக்கான ஊக்கத்தொகையைப்(End Of Service Bonus) பெறவும் அவருக்கு உரிமை உண்டு. அதேபோல் சில குறிப்பிட்ட சூழல்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொழிலாளர் சட்டத்தின் 49 மற்றும் 50-வது பிரிவுகளின்படி தானாகவே முடிவுக்கு வருகிறது என்றும் ஆணையம் விளக்கியுள்ளது. இதில் தொழிலாளியின் மரணம், வேலை செய்ய இயலாமைக்கான ஆதாரம், மருத்துவ விடுப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகும் தொடரும் நோய், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் அல்லது தொழிலாளிக்கு வேலையளிப்பவர் திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் இறுதித் தீர்ப்பு ஆகியவை சூழ்நிலைகளில் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒப்பந்தம் முடிவடைகிறது.. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
1.2K views
3 months ago
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள் ஜூன்-1 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: குவைத் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து விமானங்களும் ஜூன் 1 முதல் மீண்டும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக டிராவல் துறையை சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.ஆரம்பத்தில் இருவழி சேவையாக ஒவ்வொரு வழித்தடத்திற்கும் வாரத்திற்கு ஒரு சேவை இயக்க அனுமதி வழங்கப்படும். தொடர்ந்து படிப்படியாக சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குவைத்திலிருந்து விமான சேவையை வழங்கி வந்த வி்மான நிறுவனங்களுக்கு இந்த சேவைக்கான அனுமதி வழங்கப்படும். விமான சேவைகள் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்திற்கு இடையே இருக்கும். இது தொடர்பாக அதிகாரிகள் விரைவில் விமான அட்டவணையை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து, குவைத் பிப்ரவரி 28 அன்று தனது வான்வெளியையும் விமான நிலையத்தையும் மூடி, விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சமீபத்தில், குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை குவைத் விமான நிலையத்திலிருந்து சேவைகளைத் தொடங்கின, ஆனால் மற்ற விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது, தமிழர்கள் உட்பட குவைத்திலுள்ள இந்திய பயணிகளுக்கு நிம்மதியளிக்க கூடிய செய்தி ஆகும். தற்போது, ​​குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் மட்டுமே குவைத்திலிருந்து விமானங்களை இயக்குகின்றன. இவை தமிழகம் உட்பட உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இயக்கப்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதால், விமான டிக்கெட்டுகளின் விலையும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
625 views
4 months ago
#BreakingNews || குவைத் விமான நிலையத்தை குறிவைத்து இன்று புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: குவைத் சர்வதேச விமான நிலையமானது இன்று(01/04/26) புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஆளில்லா(ட்ரோன்) விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்போது(அதிகாலை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், குவைத் ஏவியேஷன் ஃபியூலிங் கம்பெனியின்(KAFCO) கீழ் இயங்கும் எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்தது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார். இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்தும், தொட்டிகளுக்குக் கணிசமான சேதமும் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அவசரக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தத் தாக்குதலால் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். கூடுதல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் தொடங்கிய பிறகு குவைத் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
571 views
4 months ago
#BreakingNews||குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக நபர் சந்தானச் செல்வம் உடல் சற்று நேரத்தில் தாயகம் செல்கிறது: Read More 📎 https://www.facebook.com/share/p/18daz4GsnF/ #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
597 views
4 months ago
#BreakingNews || துபாய் கடற்கரையில் வைத்து ஈரானிய ட்ரோன்கள் 'அல் சல்மி' என்ற மிகப்பெரிய குவைத்தின் எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது: துபாய் துறைமுகம் அருகே வைத்து குவைத்தின் மிகப்பெரிய 'அல் சல்மி'(Al Salmi) என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து பல தாக்குதல் நடத்தியதில் கப்பலின் வெளிப்புறப் பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், தீ விபத்தும் மற்றும் எண்ணெய் கசிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பலான(VLCC) 'அல் சல்மி' மீது இன்று மார்ச்-31,2026 செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 12:10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பெட்ரோலியக் கழகம்(KPC) அறிவித்துள்ளது. துபாய் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'அல் சல்மி' கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், அந்தக் கப்பல் முழுமையாக எண்ணெய் நிரப்பப்பட்ட நிலையில் இருந்ததாக KPC வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக,கப்பலின் வெளிப்புறப் பகுதி(Hull) சேதமடைந்ததுடன், கப்பலுக்குள் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும்,சுற்றியுள்ள கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் KPC மேலும் தெரிவித்துள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
3.1K views
4 months ago
#BreakingNews || குவைத்தில் காலையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர் ராமநாதபுரத்தை சேர்நதவர்: குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பாத்திமா ஹயாத் இன்று(30/03/26) திங்கட்கிழமை அதிகாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான் நடத்திய தாக்குதலில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் பகிர்வு சேவைகளை வழங்கும் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், மேலும் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தன எனவும் மற்றும் பெரும் அளவிலான பொருள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த இந்தியர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பெயர் சந்தானச் செல்வம்(37) எனவும், இவர் ராமநாதபுரம் மாவட்டம், முத்துக்குளத்தூர் அடுத்த தேரிருவேலி பகுதியை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. குவைத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் நடத்தி வருகின்றன தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இது குவைத்திலுள்ள இந்திய சமூகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️