ஃபாலோவ்
Arab Tamil Daily
@arabtamildaily
134
போஸ்ட்
105
பின்தொடர்பவர்கள்
Arab Tamil Daily
566 காட்சிகள்
குவைத்தில் நண்பனின் உடலை மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு ஓடிய இரண்டு இந்தியர்கள் கைதாகியுள்ளனர்: குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் நண்பரின் உடலை சிகிச்சைக்காக என்ற போர்வையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று(16/01/26) வெள்ளிக்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் நடந்தது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு நபருடன் மருத்துவமனைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் இருந்த நபரை வார்டு உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு, அடையாளம் தெரியாத நபர் உடனடியாக நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நைசாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றார். இதை தொடர்ந்து மருத்துவர் நடத்திய பரிசோதனையில் சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கண்டறிந்தனர். இவருடைய மரணத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலை தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். பின்னர், உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து வெளியே சென்ற நபரை அடையாளம் காண பாதுகாப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. மருத்துவமனையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருக்க இன்னொரு நபர் இறந்த நபரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை உறுதி செய்தனர். பின்னர் தலைமறைவான இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவரும் இந்தியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் உடலை மருத்துவமனையில் விட்டுச் சென்றதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இவர்களுடைய அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் என்றும், இவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இது தொடர்பாக காவல்நிலையம் செல்லவும் பயந்தும் உடலை தங்களுடைய காரில் எடுத்து வந்து இப்படி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுடைய இந்த செயல் காரணமாக இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ அறிக்கையில் மரணம் இயற்கையாக நடந்தது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
570 காட்சிகள்
தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பில் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது: பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
485 காட்சிகள்
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது: குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார். மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
556 காட்சிகள்
குவைத்திலிருந்து நாடுகடத்தபட்ட நபர்கள் அமீரகத்திலும் நுழைய முடியாத தகவல் பரிமாற்ற திட்டம் நடைமுறையில் வந்துள்ளது: குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, டேட்ரா வயர்லெஸ் தகவல் தொடர்பு திட்டம் மற்றும் மின்னணு கைரேகை பதிவு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(09/11/25) மாலையில் அறிவித்துள்ளது. இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு இணைப்புத் திட்டங்களைப் பின்தொடர்வதற்காக இன்று நடைபெற்ற எட்டாவது கூட்டத்தில் பங்கேற்ற குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினர்களை போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் துறைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல்-அதிகி சந்தித்தார். புதிய அமைப்பு நிறைவடைந்த நிலையில், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்வார்கள். மேலும் ஒருங்கிணைந்த வளைகுடா விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதிலிருந்து நிலைமை இதைவிட மோசமாக மாறும், காலு வச்ச இடம் எல்லாம் கன்னிவெடி என்கிற மாதிரி ஒரு வளைகுடா நாட்டில் பயணத்தடை கிடைக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் மற்ற எந்த வ‌ளைகுடா நாட்டிலும் வேலைக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
593 காட்சிகள்
குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்: குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
1.2K காட்சிகள்
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்: குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(வயது-27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார். குவைத்தில் வேலை செய்துவந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து,விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இரவு ஊருக்கு திரும்புகிறார். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
573 காட்சிகள்
குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் குடிமகன் கைதாகியுள்ளார்: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயன்ற குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய இவரை தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(25/11/25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒரு பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து வெடிபொருட்களை தயாரித்து பெரும் அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டது. சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களின் வழியாக பயங்கரவாதக் கருத்துக்களை பரப்பி சிறார்களை ஈர்ப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை திரட்டுவதும் நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்தார் என்பதையும் உள்துறை கண்டறிந்துள்ளது. இதேபோல் கடந்த மாதங்களிலும் இதே திட்டத்துடன் செயல்பட்ட சிலரை உள்துறை கண்டறிந்து கைது செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்திருந்தனர். இந்நிலையில் இந்த நபர் கைது தொடர்பான செய்தியை உள்துறை இன்று வெளியிட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
Arab Tamil Daily
2.9K காட்சிகள்
குவைத்தில் இந்தியாவை சேர்ந்த வீட்டு பணிப்பெண் மாரடைப்பால் மரணமடைந்தார்: குவைத்தில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த காஞ்சியார் பகுதியை சேர்ந்த ரெஷ்மி(47), அமிரி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். தன்னுடைய முதலாளி வீட்டில் வைத்து வேலைக்கு இடையே திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மீட்ட முதலாளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்,ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவருடைய கணவர் பெயர் விஸ்வநாதன் என்பதாகும். உயிரிழந்த ரெஷ்மியின் உடலை இந்தியா கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகளை ஓஐசிசி கெயர் குழுவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
See other profiles for amazing content