ராமலிங்க அடிகளார்🙏

ரவிசங்கர் ராஜா, ஆரணி
753 views
14 days ago
AI indicator
குருவாசகக்கோவை 17. வேதாந்தவுண்மைத்திறன். 148. புலவிடய மன்றிப் பொருள்வேறு தேறார் கிலமடையும் புந்திக் கிறுக்கர் - புலத்தின் திறத்துவிரா கத்தாற் செழிப்புறுஞா னத்தை வறட்டுவே தாந்தமென் பார். பதச்சேதம்:- புல விடயம் அன்றிப் பொருள் வேறு தேறார் கிலம் அடையும் புந்திக் கிறுக்கர் புலத்தின் திறத்து விராகத்தால் செழிப்பு உறு ஞானத்தை வறட்டு வேதாந்தம் என்பார். அரும்பதவுரை:- புலவிடயம் - இந்திரிய விஷயங்கள்; கிலம் - அழிவு; புந்திக்கிறுக்கர் - கிறுக்குப் புத்தியுடையோர். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- அழிவைத் தரும் புத்திமயக்க முற்ற இலௌகிக மக்கள் ஐம்புல விஷயானுபவங்களைத் தவிர, மற்றொரு அழிவற்ற மெய்ப்பொருள் உண்டு என்பதை அறிய மாட்டார்கள். ஐம்புல விஷயங்களில் தீவிர வைராக்கியம் அடைவதால், அத்தகையோர் முமுக்ஷுக்களிடம் செழித்து ஓங்கும் ஞான வளத்தை 'வறட்டு வேதாந்தம்' என்று சொல்வர்! விளக்கக் குறிப்பு:- ஞானம் வறண்ட தென்பதும், புல விஷயங்கள் செழிப்பானவை என்பதும் பாமரர் கூற்று. அதற்கு நேர்மாறாக 'செழிப்புறு ஞானம்' என்றும், புல விடயங்கள் பொருளல்லாத 'புந்திக் கிறுக்கு - வறண்டது' என்றும் கூறினார். கூகைக்கு (கோட்டானுக்கு)ச் சூரியன் இருளாவது போல் புல விஷயப் புல்லர்கட்கு வைராக்கிய விளைவான ஞானம் வறட்சியாய்க் காணப்படும். 'தத்துவங் கண்டவற்கு.....' என்ற உள்ளது நாற்பது - அநுபந்தம் 29வது வெண்பாவில் ஞானத்தை வசந்த ருதுவிற்கு ஒப்பிட்டிருப்பது இங்குக் காணத் தக்கது. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
778 views
23 days ago
AI indicator
ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம் 836. செய்யாத மாதவமுந் தீராவென் புன்குணமு மையாநீ யெண்ணி யகலாதே — கையாலென் சென்னிமிசைத் தீண்டித் திருவருளைப் பாய்ச்சியெனை யுன்னிடமே வைத்துள் ளுறை. நான் செய்து முடிக்காத நல்ல தவத்தையும், நான் விலக்கி யொழிக்காத அற்ப குணங்களையும் கருதிப் பார்த்து, ஐயனே, நீ என்னை விட்டு அகலாதே. உன் அருட்கரங்களால் என் சிரத்தைத் தீண்டி, உன் திருவருளை என்னுள் பாய்ச்சி, என்னை எப்பொழுதும் உன்னிடமே இருக்க வைத்து, நீயும் என் உள்ளத்திலேயே உறைவாயாக. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.7K views
1 months ago
AI indicator
பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️☘️அக்ஷரமணமாலை 36. சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று சும்மா விருந்தா யருணாசலா (அ) 🌹🌹பொருள்:🌹🌹 அருணாசலா! பேச்சறச் சும்மா இரு, என்று வாய் வார்த்தையாற் கூறாது மோன முத்திரையால் கூறி, (அதற்கேற்பவே நீயும்) பேச்சுமூச்சற்றுச் சும்மாவிருந்தாய். அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி