பக்தி கதைகள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
597 காட்சிகள்
9 மணி நேரத்துக்கு முன்
AI indicator
*ஒரு வருடம் மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்* *கண்ட பலனை* *வழங்கும் மகிமை மிக்க* *வைகாசி மாத மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்*! இன்று(18-5-26) வைகாசி மாத மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதால் ஒரு வருடம் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் கண்ட பலன் கிடைக்கும். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் ,கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை சிவன் பார்வதி தரிசனம் என பலரும் குறிப்பிடுவது உண்டு. எனினும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் காண்பது என்பதை சரியானதாகும். சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள். சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். மாலை வேளைக்கும், மேற்கு திசைக்குரிய சனிஸ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் . காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும். ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை கழிந்த மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டிய முறைகள்: ஒரு தாம்பள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். உங்களது தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் மூன்றாம் பிறை நாளன்று காலையில் இருந்து மாலைக்குள் ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும். இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் பின்பற்றபட்டு வருகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம்,மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார். சூரியனிடமும், சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது எனப்படும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். எனவே இந்த கையேந்துவதை இறைவனிடத்தில் ஒரு தவறான கண்ணேட்டத்தில் காணக்கூடாது. நம்மிடம் இல்லாத ஒன்றையோ,நமது தேவையையோ நாம் இறைவனிடம் கேட்பதால் நாமும் பிச்சை எடுப்பவர்தான். பிச்சை என்பதை தவறானதாக கருதக்கூடாது. சிவபெருமான் கூட அனு தினமும் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சையாக இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது கையேந்தி வேண்டுங்கள். செல்வ சந்தோஷ வளம் கிட்டும். சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார கூற வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும். இது போல் குறைந்தது மூன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை தொடர்ந்து காணபது நலம். இதை ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திர நிலையில் இருப்பவனும் தரித்திர நிலை மாறி உயர்ந்த செல்வத்தை பெறுவான் . இது உறுதி, அனுபவ வெற்றி . மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது . எனினும் கவலை வேண்டாம், மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து மேலே கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும். பிறை தரிசனம் செய்யும் போது நிதானமான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும். அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ, கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது. குறிப்பாக அழுகையுடன் பிறையை காண கூடாது. என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ, அதுவே வரமாக பெருகி நமக்கு கிடைக்கும். எனவே நல்ல மனதோடு நமது தேவைகளை கேட்க வேண்டும். அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காண்பதற்காக 30 நாட்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்து வருகிறாரகள். இந்த பிறைதரிசன நாள் திங்கள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. அதே போல் சித்திரை. மாதத்தில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும். திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும். சூழ்நிலையால் காண முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை. யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு கையேந்தி வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் . ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என வெதும்பக் கூடாது . நமக்கு கர்ம பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறைவன் அதை முதலில் சரிசெய்வார். பின்பு யோகத்தை அருளுவார். எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும். சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும். கர்ம வினை பாவம் நிறைந்தவராக இருந்தால் 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும். யாருக்கு எவ்வளவு வினைகள் இருக்கிறது என யாருக்கும் தெரியாது . எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காணுங்கள். அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் . 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் ##🙏சந்திர தரிசனம் #🌙சந்திர தரிசனம்🔯
ரவிசங்கர் ராஜா, ஆரணி
596 காட்சிகள்
9 மணி நேரத்துக்கு முன்
AI indicator
*நான் என்னும்* *ஆணவம் கூடாது*! சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று;நடைபெற்ற‍தாக இணையத்தில் கட்டுரை ஒன்றை படித்தேன். அதனை நீங்களும் படித்து மகிழ இங்கு பகிர்ந்திருக்கிறேன். இதோ அந்த பதிவு! ஒரு தேங்காய் மட்டும் ஆணவத்தாேடு அருளே வடிவான‌ சிவபெருமானை நெருங்கி பேசத் தாெடங்கியது. தேங்காய் – ” நான் தேவர்களையே காய் (காேபி)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?” (எனக்கேட்டு தானும் சிவபெருமானும் ஒன்றுதான் என வாய்ப்பந்தல் பாேட்டது. அதன் நாேக்கம் அறிந்த சிவபெருமானும்) சிவபெருமான் – அப்படியா? நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார். (தேங்காய் விடவில்லை) தேங்காய் – நானும் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே கேள்விப்பட்டதில்லையா?” என்றது இறுமாப்பாேடு. சிவபெருமான் – “யானை, புலி பாேன்றவற்றை உரித்திருக்கிறேனே” என்று சாெல்ல, தேங்காய் – “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்றது இறுமாப்பாக. சிவபெருமான் – மேலும் பாெறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார். தேங்காய் – இன்னும் ஆணவத்தாேடு, ” எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத் தான் இருக்கிறேன்” என்றது. சிவபெருமான் – “நான் கங்கையைத் தாங்குகிறேன்” என்றார் தேங்காய் – “நான் இளநீரைத் தாங்குகிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு மூன்று கண்கள்” என்றார் தேங்காய் – “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் உள்ளன” என்றது. சிவபெருமான் – “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார் தேங்காய் – “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார் தேங்காய் – “எனக்கும் தான் குடுமி இருக்கிறது” என்றது தேங்காய். (ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான்) சிவபெருமான் – “தேங்காயே… பணிவு என்பதே காெஞ்சமும் இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும் படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்” என்றார். (அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறு (தேங்)காயாக நம் வாழ்க்கை சிதறிப்பாேகும் என்று உணர்த்துகிறது இந்தக்கதை…) 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
600 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
AI indicator
அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய அறிவுரை! "ஒரு நிமிடம் நிதானியுங்கள்!" விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய என்னை மிகவும் கவர்ந்த கீழ்கண்ட அறிவுரை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன் "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும்*react* செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை *reaction* என்கிறார்). அப்படி*react*செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ,செயலோ, எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை *response*என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும். பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம். இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும். ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம். யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் *respond* செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள்*react*செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள். நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும். 🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #ஆன்மீக கதைகள் #பக்தி #ஞானிகள் பேசுகிறோம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.9K காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #ஆறாம் #திருமுறை. #திருக்காளத்தி. #பாடல் இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண் வில்லாடி வேடனா யோடி னான்காண் வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண் மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள் கல்லாலின் கீழிருந்த காபா லிகாண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. #பொழிப்புரை இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் . #திருச்சிற்றம்பலம் திருவாசகம்🙏 *அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே* *பாவமாயங் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி* *நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து* *சிவமானவா பாடித் தௌ;ளேணம் கொட்டாமோ.* *பொருள்* *வீடு பேறு அளிக்க இயலாத, பயனற்ற விண்ணவர்களின் நெறியில் அழுந்தா வண்ணம், மாயப் பிறவிதனில் இருந்து காத்து ஆட்கொண்ட பேரொளி, புதுமையான, செவ்விய நல்லறிவை நமக்குத் தந்தான். அதன் விளைவாக ஜீவ போதம் மறைந்து நாம் சிவபோதம் எனும் தன்மை எய்திய விதத்தைப் பாடித் தௌ;ளேணம் கொட்டுவோமாக.* *ஓம் நமசிவாய🙏 செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #”#சிவாயநம' என்போம். அதே சமயம் பொருள் தெரிந்து சொல்வோம்.... ஒருமுறை #நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார். #உயிர் பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார். நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார். பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். ""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். ""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! என்றால் மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார். நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். இந்த மந்திரமே "#பிறவியில்_உயரிய #மானிடப்பிறப்பை எனக்குத் தந்தது" என்றது குழந்தை... இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "#சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். #சி_சிவம்; #வ_திருவருள், #ய_ஆன்மா, #ந_திரோதமலம், #ம_ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "#நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "#சிவயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "#சிவயநம' என்போம். ஓம் நமசிவய *ஸ்ரீ சிவபெருமான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!* கொடை என்பது இருப்பதை கொடுப்பதல்ல. இருப்பதில் கொடுப்பதே. துரோகத்தில் தோற்பது மனிதர்கள்' அல்ல... மனிதர்களை நம்பிய நம்பிக்கை' தான்..!! நீண்ட நேரம் சிந்தித்த பின்பே உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் எப்போதும் அவமானம் அடைய மாட்டீர்கள்...! எதுவுமே செய்ய இயலாது தான்... ஆனால்... எல்லாவற்றையும் கடந்து போக உதவுகிறது... சீக்கிரம் சரியாகிவிடும்" எனும் சொல். நிகழ்காலத்தில் தப்பித்துக் கொள்ளும் மரங்கள்.. எதிர்காலப் பறவைகளுக்கு வரமாகும் #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #ஆன்மீகம் #பக்தி கதைகள் #தெய்வீக சிந்தனைகள்