பக்தி கதைகள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
18 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் தேடிக் கொண்டே வாழாதே... வாழ்ந்து கொண்டே தேடு... இதில் தான் வாழ்க்கை பயணமாகிறது. ஆன்மாவை விடுவிப்பான்...! அனாதி பசு வியாத்தியாகும் இவனை அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி, அநாதியில் கேவலம், அச் சகலத்து இட்டு, அனாதி பிறப்பு அற, சுத்தத்துள் ஆகுமே. எம்பெருமான் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏 #கடவுளுக்கு #உருவம் #உண்டா ?? ஒரு சமயம் #ராமகிருஷ்ண #பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்- இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். #இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். #இறைவனும் #அப்படித்தான். #பக்தியின் #குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். #ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் #அனைத்தும் #அறிந்த #ஞானிக்கு #வடிவம் #தேவைப்படுவதில்லை. #திருச்சிற்றம்பலம் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் திருச்சிற்றம்பலம் ! சுந்தரர் பெருமான் அருளிய தேவாரம்.(திருப்பாட்டு). ஏழாம்திருமுறை ! பதிக எண் : 04. பாடல் அருளிய தலம் : திரு அஞ்சைக்களம். பண் : இந்தளம். வானோர்க்கு அரிய மருந்தே போற்றி ! ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி ! 🐿 #தேவாரம்🐿 *************** (திரு அஞ்சைக்களம்). #பாடல்_எண் : 07. **************** " ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்; சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ என்பன், நான்; நாக்கும் செவியும் கண்ணும், நீ” என்பன், நான்; நலனே! இனி நான்உனை நன்கு உணர்ந்தேன்- நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி ஆர்க்கும் கடல் அம் கரைமேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! ." #பொழிப்புரை : ****************** எப்பொருட்கும் தலைவனே! இன்பம் தருபவனே , விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி , நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே , அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின் , எப்பொருளின் ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் காரணன் நீயே என்றும் , அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே என்றும் , புலனுணர்வுக்குக் காரணமான , நாக்கு , செவி , கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுவேன் . #திருச்சிற்றம்பலம் ! #நற்றவா_உனைநான்_மறக்கினும்_சொல்லும் #நா_நமசிவாயவே! #திருச்சிற்றம்பலம் #தேவாரம் கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி உன்தன் தாளே வந்தடைந்தேன் தலைவா என்னை ஏற்றுக்கொள் நீ வாள்ஆர் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே | #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் #திருச்சிற்றம்பலம் #திருநாவுக்கரசர் #தேவாரம் #ஐந்தாம்_திருமுறை பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் ஒல்லை சென்று உணங்கல் கவர்ந்தார் அவர், அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ நல்ல ஆயின நம்மை அடையுமே #திருச்சிற்றம்பலம் அவமானங்கள் நம்மை திசை திருப்பும். திரும்பும் திசையை சரியாக்கிகொள்ள வேண்டும் _*வாய்ப்புகள்*_ _உங்களைத் தேடி வந்தால்,_ _*நீங்கள்*_ அதிர்ஷ்டசாலி... _*வாய்ப்புகளை*_ _நீங்கள் தேடிச் சென்றால்,_ _*நீங்கள்*_ _புத்திசாலி..._ _*கிடைத்த*_ _வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தத் தவறினால்,_ _*நீங்கள்*_ _ஏமாளி..._ _*வாய்ப்புகளே*_ _இல்லை என்று புலம்பினால்,_ _*நீங்கள் கோமாளி..!!* எதை இழந்தோம் என்பது முக்கியமல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம் இழந்தவைகளுக்கு வருந்த வேண்டும்என்றால் வாழ்நாள்போதாது அடுத்து என்னநடக்குமோ என பயந்து வாழ்பவர்கள் மத்தியில் என்ன நடந்தாலும் பார்த்துகொள்ளலாம் என வாழ்பவர்களேபுத்திசாலிகள் என்றும் மகிழ்வுடன் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #பக்தி கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
916 views
18 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் நம்மை நேசிப்பவர்களுக்காக வாழ வேண்டும்... ஆயிரம் துன்பங்களை தந்தாலும் எதிரிக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் 💪 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே🥰🥰🙏🙏 சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் #மணிவாசகர். நம் குறிக்கோள் எதுவோ, அதில் மட்டுமே நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். நம் முயற்சி முழுவதும் அந்த குறிக்கோளை நோக்கியே பயணம் செய்ய வேண்டும். கவனத்தை வேறெங்கும் சிதற விடாமல், நம் மனம், மெய், மொழி, சித்தம் என அனைத்தும் அந்த குறிக்கோளில் குவிந்தால், நம் இலக்கை எளிதாக அடையலாம். இவ்வுலகை நன்றாக புரிந்து கொண்ட எவர்க்கும் இறைவன் திருவடி அருளைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும். ஏனெனில், வேறு எவையும் நிலையில்லாதவை. தாற்காலிகமானவை. அவற்றை விலக்கி இறைவனின் திருவடி பேற்றைப் பெருவதே குறிக்கோளாகும். #பாடல் "வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே" #உயிருண்ணிப்பத்து, #திருவாசகம். #பொழிப்புரை நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன். #திருச்சிற்றம்பலம் #புறம் #பேசுதலை #பற்றி....... நாம் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம். இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது. ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் பேச்சு சுவாரஸ்யம் இல்லாமல் ஆகி விடுகிறது! இந்த சொல்லைக் கேட்கும்போதே நடுங்குகிறது... புறம் பேசுவதற்கு முக்கியமான காரணங்களை பற்றி பார்ப்போம் 1)பொறாமை... மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்று. பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது. அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டுபிடிக்கத் தொடங்கி, அந்த குறைகளை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிப்பார். 2)எரிச்சல்... நமக்கு ஒருவர் தவறிழைத்திருந்தால், அதை மறந்து, அவரை மன்னிப்பதை விட்டு, அவரைப் பற்றி தீயவைகள் அனைத்தையும் பேசிக் கொண்டிருப்போம். இது ஒரு திருப்தியைத் தரும், ஆனால், நம் மனதில் சூழும் இருளைக் கவனிக்கத் தவறி விடுவோம். 3)கேளிக்கை... சிலர், யாரோ ஒருவருடைய குறையைப் பற்றி அவர் இல்லாத போது பேசி மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்கள். இது அவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் பேசப்பேச மக்கள் அதிகமாகச் சிரிப்பார்கள். 4)இன்பம்... சிலர் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களுடைய குறையைப் பற்றி விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். இது பெரும்பாலும், வீணாக்குவதற்கு நிறைய நேரம் இருப்பவர்களால் தான் செய்யப்படும். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால், அவர்களுக்கு தாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்று தெரியாது, அவர்களுடைய சொற்களின் விளைவால் அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியாது. 5)தற்பெருமை... தங்களைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொண்டு, அதனால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இல்லாத போது அவர்களைப் பற்றி மற்றவர் மனதில் எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்க அம்மாதிரி செய்வார்கள். இது மிகவும் அநியாயமானதும், நேர்மையற்றதும் ஆகும். இனி புறம் பேசுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போமா! 1)நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்ப்போம்! சில சமயங்களில், யாருடனாவது புறம் பேசுவது நமக்கு ஆர்வமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், நம்மை வைத்துப் பாருங்கள். அதே போல், நம்மைப் பற்றி யாராவது பேசினால், நமக்கு எப்படி இருக்கும்? இதை நினைவு படுத்திக்கொண்டால், நம்மை புறம் பேசுவதிலிருந்து காப்பதுடன், நாம் பணிவாகவும், பெருந்தன்மையுடனும் இருக்கத் தூண்டும். 2)நன்மையைக் எடுத்துக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வோம்! இது தான் புறம் பேசுவதிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மிகச் சிறந்த வழி, மேலும், நாம் ஒரு குழுவில் இருக்கும்போது, விளைவு இன்னும் நன்றாக இருக்கும். அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்களோ அவரைப் பற்றிய நல்லவைகளை நாம் சொல்வதன் மூலம் அவர்களைத் தடுக்கலாம். அது அவர்கள் மனதில் குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்தக் கூடும். மேலும், யாரையாவது பற்றி நாம் புறம் பேச விரும்பினால், அவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நினைப்போம். இது அவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை நம்முடையடைய மனதிலிருந்து நீக்கும். 3)அமைதியாக இருப்போம்! ‘மௌனம் பொன் போன்றது’ என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால், எப்போதாவது ஏன் என்று யோசித்ததுண்டா? ஏனென்றால், மௌனம், நம்மை தீமையானவற்றைப் பேசுவதிலிருந்து காக்கும். இது தான் நம் இதயங்களைத் தூய்மையாக வைத்திருக்க சிறந்த வழி! 4)குறைகளற்றவர்கள் எவருமில்லை! புறம் பேசுவதற்கு முன், நாம் 100% குறைகளற்றவர்களாக இருக்கிறோமா? என்று பார்த்துக் கொள்வோம். இல்லையென்றால், ஒரு பேனாவை எடுத்து, நம்முடைய குறைகளை எழுதி, அந்த பட்டியலைப் பார்த்து, அவைகளைத் திருத்தக் கூடிய வழிகளைப் பற்றி யோசித்தால்.... இறுதியில் நம்மை புறம் பேசுவதிலிருந்து தடுத்து விடும். 5)தவிர்த்து விடுவோம்! புறம் பேசுவதில் ஆர்வமுள்ள குழுக்களில் பங்கேற்பதையும், அந்த இடங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்ப்போம். ஏனென்றால், சூழ்நிலைகள் நம் மீது ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். நல்ல விஷயமான இதை அடுத்தவரை கடைப்பிடி என்று சொல்லுவதை தவிர்த்து இன்று முதல் நாம் கடைப்பிடிக்க போகிறோம் என்று சொல்வோம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத மனம் தான். மன அழுத்தத்தை நினைத்து உங்களைச் சோர்வாக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் நல்லவற்றை நினைத்து சுவாசியுங்கள். மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள். இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள். கோயில் திருப்பதிகம் பாடல் எண் : 5 ************** குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே பொழிப்புரை: ************** முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே! கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது? செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் அன்னைப்பத்து பாடல் எண் : 4 **************** ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுஎன்னே அன்னே என்னும் . பொழிப்புரை: **************** தாயே! ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது; இது என்ன காரணம்? என்று சொல்லுவாள். உங்களது முயற்சிகளின், தோல்விகளை எல்லாம், போரடிக்காமல், கேலி செய்பவர்களுக்கு, உங்கள் முயற்சிகளின், வலியின் ஆழத்தை, புரிந்து கொள்வது, சற்று கடினம்தான்... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.9K views
18 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் சிவ காலை வணக்கம் கோயில் திருப்பதிகம் பாடல் எண் : 4 *************** உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக் குறிகினேற் கினியென்ன குறையே பொழிப்புரை: ************** கற்று உணர்ந்த, பெரிய முனிவரும், தேவருடன், ஏனையோரது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அருமையான பொருளே! ஒப்பில்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே! பிறப்புப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே! செறிந்த இருளில் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! குணங்கள் இல்லாத ஆனந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறை உள்ளது? #நீங்கள் #கடவுள்_இருக்கிறார் #என்று #உணர்ந்த_தருணம் #எது...!? - ஓர் தம்பியின் வினா .. ஏதோ நடந்தால் கடவுள் இருக்கிறார் !! ஏதோ நடக்கவிட்டால் கடவுள் இல்லை !! என்பது தேவையை மட்டுமே பார்பவர்கள் கண்ணோட்டம் தான் .. ஆனால் நான் !! நானாய் இருக்க !! என்ன நடக்கிறது என்று கூட எனக்கு தெரியாது .. நான் என்று சுட்டி காட்டும் இவ்வுடலுக்குள் ஏது ?? எப்போது ?? எப்படி ?? எந்த நேரத்தில் எந்த மாதிரி இயங்குது என்றும் எனக்கு தெரியாது .. அதில் என்னுடைய ஒவ்வொரு நொடியும் என் இருப்பதை இந்த உடலோடு தக்கவைக்க .. எதை உள்வாங்க !! வெளியேற்ற !! தக்கவைக்க !! என்று என்னை மீறிய எனக்குள் எனக்கான இயக்கப்படும் போது .. நானே என்னுள்ளே " இருதயமே !! சிறுநீரகமே !! இயங்காதே " என்று ஆணையிட்டால் கூட என் உடல் என்று வெளியே பிதற்றி கொள்ளும் இந்த உடல் கெடுக்காதே இயங்கிக்கொண்டே என் இருப்பை தக்கவைத்து கொண்டே இருக்கும்போது .. அப்போது என்னுள்ளே என்னை மீறி ஒன்று உள்ளது என்று உள் கடந்து உணர .. அங்கே என்னை மீறிய பேராற்றலாய் என்னுள்ளே கடந்து இருக்கும் ஒன்று .. என்னை மீறி என்னை நானாக வைத்துக்கொண்டு இருக்கின்றது என்ற மெய் புரியும் .. அது வேண்டும் ?? இது வேண்டாம் ?? அது நடக்கவேண்டும் ?? இது மாற வேண்டும் !! இப்படியெல்லாம் நடந்தால் கடவுள் உண்டு !! இல்லை என்றால் கடவுள் இல்லை !! போன்ற பொய் எல்லாம் கடந்து .. எது நடந்தாலும் அதை அனுபவிக்க நான் நானாக இருத்தாலே பிரதானம் .. அந்த பிரதனத்தை நான் கேட்க்காதே, நினைக்காதே கூட .. அதியற்புதங்களை நிகழ்வித்து சாத்தியப்படுத்தி கொண்டு இருக்கிறது கடவுள் தானே .. கடவுள் என்பது கட - உன் - உள் உணர்ந்து கொள் என்பதே அது .. இதில் கடவுள் இருக்கிறார் என்று எப்போது உணருவீர்கள் என்றால் ?? நான் என்னை நானாக பார்க்கும் போது எல்லாம் உணர்வது தானே மெய் .. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க முடியாது வாழ்க்கையில் போராடி பாருங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொறுத்து பாருங்கள் வேதனைகள் முடிவு பெறும்! ஏனெனில் இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை...!!! பொறுமை கொண்டவன் வாழ்வில் சிறப்பான் பொறாமை கொண்டவன் வாழ்வையே இழப்பான் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்கிட நீங்கள் தினமும் கூற வேண்டிய #கந்தபுராணம் #மேன்மை #கொள் #சைவ #நீதி #விளங்குக என்கிற #பாடல் பற்றிய #சிறப்பு #பதிவு ! #கச்சியப்ப #சிவாச்சாரியார் அருளிச் செய்தது #கந்த #புராணம். அதில் வரும் #வாழ்த்துப் #பாடல் இது. #பாடல் வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் #பொருள் #விளக்கம் வான் முகில் = வானில் உள்ள மேகங்கள் வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க. மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல். நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும். மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது. குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும். நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும். நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும் அது என்ன #சைவநீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் #முன்னோர்கள். மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும். எவ்வளவு ஒரு உயர்ந்த மனம். இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்/பாடுங்கள் உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா? இல்லையா?என்பதை பாருங்கள். #திருச்சிற்றம்பலம் எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அது உன்னிடத்தில் இருந்தால் அதை நீ திருத்திக் கொள்… நிராகரிப்பு என்பது நிரந்தரமல்ல........ உன் தரம் உயரும் போது உன்னை கொண்டாடும் உலகம் இது.........!! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் இப்போது நடந்து விட்டது 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
859 views
26 days ago
AI indicator
*அரிச்சந்திர புராணம்* *கதி இழக்கினும்* *கட்டுரை இழக்கிலேம்* அரிச்சந்திர புராணம். கல் மனதையும் கரைய வைக்கும் கதை. கண்ணில் நீர் தளும்பாமல் படிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி, உண்மை பேசுவதை விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறான் அரிச்சந்திரன். அவன் மனைவியும் அவனுக்கு உறு துணையாக இருக்கிறாள். நாட்டை இழந்தான். சொத்து சுகங்களை இழந்தான். மனைவியை ஒரு அந்தணனுக்கு விற்றான். மகன் போனான். மனைவிமேல் கொலைப் பழி விழுந்தது. அவளை தெருவில் இழுத்துக் கொண்டு கொலை களத்திற்கு கொண்டு போனார்கள். அவளை சிரச் சேதம் பொறுப்பும் அரிச்சந்திரனிடம் கொடுக்கப் பட்டது. கௌசிக முனிவன் அப்போது வந்து சொல்கிறான் " அரிச்சந்திரா, ஒரே ஒரு பொய் சொல். நீ எனக்கு அரசை தரவில்லை என்று ஒரு பொய் சொல். நீ இழந்த அத்தனையும் உனக்குத் திருப்பித் தருகிறேன் " என்றான். அரிச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் மனைவியும் அதற்கு ஒப்பவில்லை. இருவரும் கௌசிக முனிவனிடம் கூறினார்கள்..... "எம் அரசை இழந்தோம்... எங்கள் பிள்ளையை இழந்தோம்...எங்கள் சொத்து சுகம் எல்லாம் இழந்தோம். இனி எங்களுக்கு என்று இருக்கிறது என்று நினைக்க ஒன்றே ஒன்று தான் இருக்கிறது . அது நல்ல கதி அல்லது சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை சொன்ன சொல்லை இழக்க மாட்டோம் " என்று கூறினார்கள். அதை கேட்ட முனிவன் மதி இழந்து, சொல்ல சொல் இல்லாமல் மறைந்தான். பாடல் பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும் கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார் மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான். பொருள் பதிஇ ழந்தனம் = அரசை இழந்தோம் பாலனை இழந்தனம் = பிள்ளையை இழந்தோம் படைத்த நிதி இழந்தனம் = நாங்கள் கொண்ட நிதியை இழந்தோம் இனி நமக்குளதென நினைக்கும் = இனி எங்களுக்கு உள்ளது என்று நினைக்கும் கதி இழக்கினும் = நல்ல கதியை இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார் = சொன்ன சொல் தவற மாட்டோம் என்றார் மதி இழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான் = மதி இழந்து, சொல்ல வார்த்தை இல்லாமல் கௌசிகன் மறைந்தான். இந்த பாடல் சொல்லும் செய்தி என்ன ? செய்யும் செயல் சரியானது என்று முடிவு பண்ணிவிட்டால் எத்தனை தடை வந்தாலும், எவ்வளவு இன்னல் வந்தாலும் உறுதியாக இருக்க வேண்டும். அரிச்சந்திரன் உண்மை சொல்வது சரியானது என்று முடிவு செய்து விட்டான். ஒரு இம்மி அளவும் பின் வாங்க வில்லை. ஆனது ஆகட்டும் என்று தான் சரி என்று நினைத்த வழியில் இறுதி வரை சென்றான். சின்ன சின்ன துன்பங்கள், தடைகள் வந்தாலும் துவண்டு போகிறோம். எடுத்த காரியத்தை கை விட்டு விடுகிறோம். சிறு தோல்விகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன. நம்மால் முடியாது என்று பின் வாங்கி விடுகிறோம். அது கூடாது. பதினாலு வருடம் காட்டுக்குப் போ என்றால் சிரித்துக் கொண்டே போனான் இராமன். பதிமூன்று வருடம் வனவாசம்,ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் - சரி என்று போனார்கள் பாண்டவர்கள். செய்யும் செயலில் உறுதி வேண்டும். சவால்களை கண்டு துவளக் கூடாது என்று உரமூட்ட வந்தவை இந்த கதைகள் சொல்லித்தாருங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும். 🚩🕉🪷🙏🏼 #அரிச்சந்திரன் கதை #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பக்தி கதைகள் #புராண கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
871 views
28 days ago
AI indicator
*ஒரு வருடம் மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்* *கண்ட பலனை* *வழங்கும் மகிமை மிக்க* *வைகாசி மாத மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்*! இன்று(18-5-26) வைகாசி மாத மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதால் ஒரு வருடம் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் கண்ட பலன் கிடைக்கும். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் ,கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை சிவன் பார்வதி தரிசனம் என பலரும் குறிப்பிடுவது உண்டு. எனினும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் காண்பது என்பதை சரியானதாகும். சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள். சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். மாலை வேளைக்கும், மேற்கு திசைக்குரிய சனிஸ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் . காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும். ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை கழிந்த மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டிய முறைகள்: ஒரு தாம்பள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். உங்களது தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் மூன்றாம் பிறை நாளன்று காலையில் இருந்து மாலைக்குள் ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும். இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் பின்பற்றபட்டு வருகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம்,மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார். சூரியனிடமும், சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது எனப்படும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். எனவே இந்த கையேந்துவதை இறைவனிடத்தில் ஒரு தவறான கண்ணேட்டத்தில் காணக்கூடாது. நம்மிடம் இல்லாத ஒன்றையோ,நமது தேவையையோ நாம் இறைவனிடம் கேட்பதால் நாமும் பிச்சை எடுப்பவர்தான். பிச்சை என்பதை தவறானதாக கருதக்கூடாது. சிவபெருமான் கூட அனு தினமும் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சையாக இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது கையேந்தி வேண்டுங்கள். செல்வ சந்தோஷ வளம் கிட்டும். சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார கூற வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும். இது போல் குறைந்தது மூன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை தொடர்ந்து காணபது நலம். இதை ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திர நிலையில் இருப்பவனும் தரித்திர நிலை மாறி உயர்ந்த செல்வத்தை பெறுவான் . இது உறுதி, அனுபவ வெற்றி . மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது . எனினும் கவலை வேண்டாம், மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து மேலே கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும். பிறை தரிசனம் செய்யும் போது நிதானமான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும். அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ, கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது. குறிப்பாக அழுகையுடன் பிறையை காண கூடாது. என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ, அதுவே வரமாக பெருகி நமக்கு கிடைக்கும். எனவே நல்ல மனதோடு நமது தேவைகளை கேட்க வேண்டும். அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காண்பதற்காக 30 நாட்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்து வருகிறாரகள். இந்த பிறைதரிசன நாள் திங்கள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. அதே போல் சித்திரை. மாதத்தில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும். திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும். சூழ்நிலையால் காண முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை. யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு கையேந்தி வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் . ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என வெதும்பக் கூடாது . நமக்கு கர்ம பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறைவன் அதை முதலில் சரிசெய்வார். பின்பு யோகத்தை அருளுவார். எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும். சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும். கர்ம வினை பாவம் நிறைந்தவராக இருந்தால் 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும். யாருக்கு எவ்வளவு வினைகள் இருக்கிறது என யாருக்கும் தெரியாது . எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காணுங்கள். அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் . 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் ##🙏சந்திர தரிசனம் #🌙சந்திர தரிசனம்🔯
ரவிசங்கர் ராஜா, ஆரணி
759 views
28 days ago
AI indicator
*நான் என்னும்* *ஆணவம் கூடாது*! சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று;நடைபெற்ற‍தாக இணையத்தில் கட்டுரை ஒன்றை படித்தேன். அதனை நீங்களும் படித்து மகிழ இங்கு பகிர்ந்திருக்கிறேன். இதோ அந்த பதிவு! ஒரு தேங்காய் மட்டும் ஆணவத்தாேடு அருளே வடிவான‌ சிவபெருமானை நெருங்கி பேசத் தாெடங்கியது. தேங்காய் – ” நான் தேவர்களையே காய் (காேபி)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?” (எனக்கேட்டு தானும் சிவபெருமானும் ஒன்றுதான் என வாய்ப்பந்தல் பாேட்டது. அதன் நாேக்கம் அறிந்த சிவபெருமானும்) சிவபெருமான் – அப்படியா? நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார். (தேங்காய் விடவில்லை) தேங்காய் – நானும் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே கேள்விப்பட்டதில்லையா?” என்றது இறுமாப்பாேடு. சிவபெருமான் – “யானை, புலி பாேன்றவற்றை உரித்திருக்கிறேனே” என்று சாெல்ல, தேங்காய் – “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்றது இறுமாப்பாக. சிவபெருமான் – மேலும் பாெறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார். தேங்காய் – இன்னும் ஆணவத்தாேடு, ” எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத் தான் இருக்கிறேன்” என்றது. சிவபெருமான் – “நான் கங்கையைத் தாங்குகிறேன்” என்றார் தேங்காய் – “நான் இளநீரைத் தாங்குகிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு மூன்று கண்கள்” என்றார் தேங்காய் – “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் உள்ளன” என்றது. சிவபெருமான் – “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார் தேங்காய் – “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார் தேங்காய் – “எனக்கும் தான் குடுமி இருக்கிறது” என்றது தேங்காய். (ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான்) சிவபெருமான் – “தேங்காயே… பணிவு என்பதே காெஞ்சமும் இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும் படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்” என்றார். (அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறு (தேங்)காயாக நம் வாழ்க்கை சிதறிப்பாேகும் என்று உணர்த்துகிறது இந்தக்கதை…) 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
4.8K views
1 months ago
AI indicator
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 *ஆன்மீக சிறு கதை* பக்தி உண்மை என்றால்,எதுவும் சாத்தியமே ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார். “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” “என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கறாராக கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அவர் விளையாட்டாக சொன்னதை, அந்த பெண் மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள். மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது. “என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”என்றார். “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை” என்றாள் அந்த பெண். “என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார். ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள். நடந்ததை பார்த்த சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று பலவாறாக யோசித்தபடியே,ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார். “அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள். சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார். கடவுள் மேல் நமது நம்பிக்கை வெறும் உதட்டளவில் இல்லாமல்,உள்ளத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் அந்த மாயக் கண்ணன். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பக்தி #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
894 views
1 months ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் தன் வினைதான் தன்னைச் சுடும்.!! #குதம்பைச்சித்தர்... "எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த #வினையின் #எதிர்வினை ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது. ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும். அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம். ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார். "தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார் சிந்தை தெளிந்திலரேகுதம்பாய் சிந்தை அதளிந்திலரே." #குதம்பைச்சித்தர் - "பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால் வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய் வெள்ளறிவு ஆகுமடி." -#குதம்பைச்சித்தர் - “என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும். "என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும். "இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் #குதம்பைச்சித்தர். #ஓம் #நமச்சிவாய... #விழிப்புணர்வு எப்போது பிறக்கும் ?? நீங்கள் நீங்களாக இருக்க கூடாது என்பதற்காக எப்படி எல்லாம் கையளபடுகிறீர்கள் என்று நீங்களே அனுபவித்து உணரும் தருணம்.. உங்களுக்கு விழிப்புணர்வு என்று ஒன்று இருக்கிறது என்று தெரியும் தருணமே... நீங்கள் நீங்களாக சிந்திக்க வெளிப்பாடும் உணர்வே விழிப்புணர்வு.. அதுவரையில் யார் என்ன சொன்னாலும் நீங்கள் அவர் உணர்வை வேண்டுமானால் எற்றுகொள்ளலாம்... அது உங்களுக்கான விழிப்புணர்வு இல்லை என்பது தான் மெய்... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்து பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #இழப்புகள் என்று பொதுப்படையாக சொல்லி விடுகிறோம், ஆனால் இழப்புகள் வழியே பெற்றதை உணர மறுக்கிறோம் !! இழப்புகள் வழியே பெற்றது எல்லாமே !! என்றுமே , எதிலுமே இழக்கவே முடியாத பக்குவங்கள் தான் , வெளியே இழந்தது உள்ளே கொடுத்துவிட்டு தான் இழந்தது !! இழப்பு வழியே பெற்றது தான் அனைத்துமே !! எதையோ ஏமாந்தது தொலைத்தல் அது இழப்பு என்று சொல்கிறோம் என்று வைத்து கொள்வோம் , ஆனால் அந்த இழப்பு வழியே எப்படி ஏமாற கூடாது என்பதை பெற்றோம் தானே !! சுவாசம் இழந்து சுவாசம் பெறுவது போல , யாவும் பரிமாற்றமே இங்கு , கொஞ்சம் ஆழ்ந்து உணர்ந்தால் இழப்பே நம் பிழைப்பு என்ற மெய் புரியும் , மெய் புரிய வாழ்த்துகள் .. சுமப்பது இன்பம் என்று ஏமாறும் உலகில் .. இழப்பதே விடுவிப்பான பேரின்பம் என்று மெய்யுணர்ந்தோர் மிக சிலரே .. நம்மையே நாளும் கொஞ்சம் , கொஞ்சமாக இழந்து .. முழுவதாய் இழப்பது தானே வாழ்க்கை .. எதையோ இழப்பதுபோல காட்டி .. உன்னையே இழந்துகொண்டு இருக்கிறாய் .. ஆதலால் பரிபூரணமாய் அனுபவித்து வாழு என்றே எல்லா இழப்புகளும் நமக்கு அறிவுறுத்துகின்றது .. தன்னையே இழந்துகொண்டு இருப்பதோ .. இப்போது இழந்துகொண்டு இருப்பதை உணராதே .. என்றோ இழந்ததை எண்ணியே ஏங்கி .. இப்போது பெற்று அனுபவிப்பதை , உணராதே இழந்து கொண்டு இருக்கின்றது என்பது தானே மெய் .. திருச்சிற்றம்பலம் தோற்கும் போது, அதுதான் நமக்கு, இறுதியென, உறுதி செய்துவிடாதே, ஏனென்றால் இங்கு, இறப்பை தவிர, இறுதியானதும், உறுதியானதும் நமக்கு, வேறொன்றுமில்லை.. சந்தோஷம் இருக்கனும். சந்தேகம் இருக்கக்கூடாது..! அன்பு இருக்கனும் ஆணவம் இருக்கக்கூடாது..! கண்டிப்பு இருக்கனும் கட்டாயம் இருக்கக்கூடாது..! விருப்பம் இருக்கனும் வெறுப்பு இருக்கக்கூடாது..! நம்பிக்கை இருக்கனும் நடிப்பு இருக்கக்கூடாது சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் நாம் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லாத போது வரக்கூடியது தான் தோல்வி... வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல... தொடர் முயற்சி ஒருபோதும் தோற்பதில்லை ஓடு... மீண்டும் வேகமாக ஓடு ஜெயிப்பாய் 🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏 அப்பர் பெருமான் அருளிச் செய்த ஐந்தாம் திருமுறை பதிகம் - 41 தலம் - திருப்பைஞ்ஞீலி *காவிரி வடகரைத் தலங்களில் அறுபத்து ஓராவது தலம்* *இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.* *இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.* *பண் - திருக்குறுந்தொகை* *திருச்சிற்றம்பலம்* உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே. மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே. விழுது சூலத்தன்; வெண்மழுவாட்படை கழுது துஞ்சு இருள் காட்டுஅகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே. ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்! இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே. வேழத்தின்(ன்)உரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர் தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; யாழின் பாட்டை உகந்த அடிகளே. குண்டுபட்டு குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து உய்யப் போந்து நான் கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தெனே. வரிப் பை ஆடுஅரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர் வானவரோடு இனிதுஆகவே. கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் ஆடும் நாகம் அசைத்த அடிகளே. கார் உலாம் மலர்க்கொன்றைஅம்தாரினான் வார்உலாம்முலைமங்கை ஓர்பங்கினன் தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே! தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே. *திருச்சிற்றம்பலம்* #புகழ்ச்சியில் வளர்பவருக்குத் தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவருக்குத் #தன்னம்பிக்கையே துணை. வாழ்த்தியவர்களை விட, #வீழ்த்தியவர்களே நாம் முன்னேற மிகப்பெரிய #தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் வாழ்த்தியவர்கள் தூண்டியது #தன்னம்பிக்கையை. வீழ்த்தியவர்கள் தூண்டியது நம் #தன்மானத்தை. உங்களை வீழ்த்தியவர் விழிபிதுங்கிப் பார்க்கும் வளர்ச்சியை எட்டுங்கள். உங்கள் முயற்சிக்கு வெற்றியின் வாசல் திறந்தே இருக்கிறது வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர்.. ஊற்றித் தான் ஆகவேண்டும். #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #தெய்வீக சிந்தனைகள் #ஆன்மீகம் #பக்தி கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3.5K views
1 months ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #ஆறாம் #திருமுறை. #திருக்காளத்தி. #பாடல் இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண் வில்லாடி வேடனா யோடி னான்காண் வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண் மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள் கல்லாலின் கீழிருந்த காபா லிகாண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. #பொழிப்புரை இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் . #திருச்சிற்றம்பலம் திருவாசகம்🙏 *அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே* *பாவமாயங் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி* *நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து* *சிவமானவா பாடித் தௌ;ளேணம் கொட்டாமோ.* *பொருள்* *வீடு பேறு அளிக்க இயலாத, பயனற்ற விண்ணவர்களின் நெறியில் அழுந்தா வண்ணம், மாயப் பிறவிதனில் இருந்து காத்து ஆட்கொண்ட பேரொளி, புதுமையான, செவ்விய நல்லறிவை நமக்குத் தந்தான். அதன் விளைவாக ஜீவ போதம் மறைந்து நாம் சிவபோதம் எனும் தன்மை எய்திய விதத்தைப் பாடித் தௌ;ளேணம் கொட்டுவோமாக.* *ஓம் நமசிவாய🙏 செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #”#சிவாயநம' என்போம். அதே சமயம் பொருள் தெரிந்து சொல்வோம்.... ஒருமுறை #நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார். #உயிர் பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார். நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார். பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். ""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். ""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! என்றால் மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார். நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். இந்த மந்திரமே "#பிறவியில்_உயரிய #மானிடப்பிறப்பை எனக்குத் தந்தது" என்றது குழந்தை... இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "#சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். #சி_சிவம்; #வ_திருவருள், #ய_ஆன்மா, #ந_திரோதமலம், #ம_ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "#நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "#சிவயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "#சிவயநம' என்போம். ஓம் நமசிவய *ஸ்ரீ சிவபெருமான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!* கொடை என்பது இருப்பதை கொடுப்பதல்ல. இருப்பதில் கொடுப்பதே. துரோகத்தில் தோற்பது மனிதர்கள்' அல்ல... மனிதர்களை நம்பிய நம்பிக்கை' தான்..!! நீண்ட நேரம் சிந்தித்த பின்பே உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் எப்போதும் அவமானம் அடைய மாட்டீர்கள்...! எதுவுமே செய்ய இயலாது தான்... ஆனால்... எல்லாவற்றையும் கடந்து போக உதவுகிறது... சீக்கிரம் சரியாகிவிடும்" எனும் சொல். நிகழ்காலத்தில் தப்பித்துக் கொள்ளும் மரங்கள்.. எதிர்காலப் பறவைகளுக்கு வரமாகும் #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #ஆன்மீகம் #பக்தி கதைகள் #தெய்வீக சிந்தனைகள்