பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
19 days ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 🌹தியானம் என்றால் என்ன ? அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், " நான் எப்போ ' ‌ம் சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ " ம் "' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில்‌‌ தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். மகரிஷியின் " ம் " க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சறறு பின் " ம்‌ " சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது " ம் ' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா ' ம்‌ ' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் ' ம் ‌ சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான். ‘இரண்டு ' ம் ‌ ' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?’ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி .அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய பகவான் ரமண மகரிஷி அவர்களின் எளிமையை கண்டு வியக்காதவர்கள் உளரோ.குருவே சரணம் ஒரு முறை ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது ,அதை அவரின் தொண்டர் ஒருவர் மேற்ப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாராம் ,அப்போது வெயில் காரணமாக ,காலில் செருப்பும் ,தலையில் முண்டாசும் கட்டி இருப்பாராம் ஆன்மீக முன்னேற்றத்திற்க்காகத் தான் அனைவரும் அவரை அணுகி இருக்கிறார்கள் ,இந்த தொண்டர் சேவை பொருட்டு அவருடன் ,அவருடைய ஹாலில் இருப்பது தடை படுவதை நினைத்து தானோ ,ஒரு நாள் ,ரமணரே இவரை நோக்கி வந்தாராம் , வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அந்த தொண்டர் ,திடீரென்று ==குரு--- தன் அருகில் வருவதை பார்த்து ,குரு முன்பு காலில் செருப்பு அணியக்கூடாது என்று நினைத்து ,,செருப்பை கழற்றி விட்டு --தலை முண்டாசையும் அவிழ்த்துள்ளார் ,,அதற்க்கு ரமணர் "இயல்பாக எப்படி இருக்கிறாயோ அப்படி இருந்தால் உன் அருகில் வருவேன் ,இது எல்லாம் தேவையற்றது ""என்று சொன்னாராம என்ன ஒரு எளிமையான உபதேசம் !!! அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
936 views
19 days ago
AI indicator
ஆசிரமத்தில் ஒரு நாள் பிற்பகல் உதவியாளர்கள் பக்தர்கள் வழங்கிய பெரிய அளவிலான இனிப்புகளை விநியோகத்திற்காக கொண்டு வந்தனர். அப்போதே ஒரு வயதான பெண்மணியும் ஒரு பாக்கெட் தோசை கொண்டு வந்தார் ஒரு ஆலமர இலையில் வைத்து. அவள் நேராக ரமணரிடம் சென்றார் ஆசிரம பணியாளர்களின் ஆட்சேபனைகளை மீறி மற்றும் அந்த தோசைகளை ரமணரிடம் கொடுத்து, “சுவாமி இந்த தோசைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மன்னிக்கவும், நான் கொண்டு வருவதற்கு இதைவிட சிறந்தது எதுவுமில்லை” என்றார். அவள் வருத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை கவனித்த ரமணர் அவளிடம் மெதுவாக, “பாட்டி, அவர்கள் (ஆசிரம பணியாளர்கள்) சிறு குழந்தைகள். என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. தயவுசெய்து அவர்களின் கருத்துக்களை தவறாக எண்ணாதீர்கள். இந்த தோசை எந்த மாவில் நீங்கள் தயாரித்தீர்கள்? உங்கள் சகோதரனின் மகன்கள் யாரும் உங்களை சரியாக கவனிக்கவில்லையா? நீங்கள் நடந்து வந்தீர்களா, அல்லது ஒரு வண்டியில் வந்தீர்களா? ” இந்த அன்பான கருத்துக்களை அவர் கூறும்போது, தனக்கு வழங்கப்பட்டதை அவர் சாப்பிட ஆரம்பித்தார். கொஞ்சம் கூட விடாமல் எல்லா தோசைகளையும் சாப்பிட்டார். சில உதவியாளர்கள் ரமணர் சாப்பிடுவதை எதிர்த்தனர், "ஒழுங்காக வறுத்தெடுக்கப்படாத அந்த தோசை சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை எங்களிடம் கொடுத்து இனிப்புகளை ஏன் சாப்பிடக்கூடாது?" என்றனர். ரமணர் அவர்களிடம், “ஓ! இந்த தோசையை விட சுவையாக இருக்குமா நீங்கள் நினைக்கும் இனிப்புகள்? நீங்கள் விரும்பினால், நீங்கள் அனைத்து இனிப்புகளையும் சாப்பிடுங்கள். இந்த தோசை எனக்குப் போதுமானது” என்றார் பகவான். குருவின் அருட்பார்வை கிட்டாதா என்று ஏங்கி தவமிருப்பவர்கள்‌ மத்தியில் குருவிற்கு எல்லோரும் ஒன்றே என்கிற அற்புத தத்துவத்தை போதித்த நிகழ்வு. 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #ஞானிகள் பேசுகிறோம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
2 months ago
AI indicator
மருந்து இல்லாத வைத்தியம் ( நீங்கள் இந்த வியாதிக்கு எந்தவிதமான மருந்தும் கொடுக்காமல், அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தானாகவே போய்விடும்) பகவானுக்கு முழங்கால்களில் வீக்கம், வலி - வாத நோய். அவரது அணுக்கத் தொண்டர்கள் அவரது முழங்கால்களில் தைலத்தைத் தேய்த்து அவரது கால்வலியைப் போக்க பலவிதத்திலும் முயற்சி செய்து வந்தனர். ஒருநாள் தொண்டர்கள் பகவானின் கால்களுக்குத் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தபோது பகவான் வேடிக்கையாகக் கூறினார் : " உங்கள் வீட்டிற்கு விருந்தாளி ஒருவர் வருகிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவரை அலட்சியம் செய்து சரிவர கவனிக்கவில்லையானால் அவர் கூடிய சீக்கிரம் உங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவாரல்லவா ? ஆனால், நீங்கள் அவருக்கு அதிகமாக மரியாதை காட்டி, அவர் தேவைகளை யெல்லாம் பூர்த்தி செய்து அவருக்கு உபசாரம் செய்தால் அவர் உங்கள் வீட்டைவிட்டுப் போகவே மாட்டார் !" " இதைப் போலத்தான் வியாதியும் ; நீங்கள் இப்போது என் கால்வலியைப் போக்குவதற்கு இப்படியெல்லாம் முயற்சி செய்து அதைக் கவனித்தால், அது என்னைவிட்டு ஏன் போகும் ? நீங்கள் இந்த வியாதிக்கு எந்தவிதமான மருந்தும் கொடுக்காமல், அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தானாகவே போய்விடும்.” இது பகவானது வைத்தியம், மருந்து இல்லாத வைத்தியம் ! எவ்வித வைத்தியத்தையும் பகவான் விரும்பி ஏற்றதில்லை. தமது உடலை தம் அடியார்களிடம் ஒப்படைத்து விட்டார். பகவானுக்குத்தான் உடலைப்பற்றிய கவலை இல்லையே ! அவர்தான் "உபாதிரஹிதன்' ஆயிற்றே... ஸ்ரீ ரமண விருந்து Page - 137 , 138 Ramana path 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
2 months ago
AI indicator
அருணாசலத்தில் நான் சாப்பிடுவதற்காக நுழைந்த ஒரேயொரு வீடு உன் தாத்தாவுடையதுதான். அருணாசலேச்வரரின் பக்தரான அவர் தினமும் தவறாமல் கோயிலுக்குச் செல்வார். வாட்ட சாட்டமாக இருந்த அவர் ருத்ராக்ஷ மாலையோடு வேறு பல மணிகளையும் அணிந்திருப்பார். அந்த நாட்களில், சுமார் 1896-ம் ஆண்டில், அருணாசலேச்வரர் கோயில் நுழைவாயில் கோபுரத்தின் அருகேயுள்ள சுப்ரமண்யர் ஸந்நிதியில் நான் இருப்பது வழக்கம். தினமும் உன்னுடைய தாத்தா என் முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பார் என்றாலும், எதுவும் பேச மாட்டார். நான் அப்போது 16 வயது இளைஞனாக இருந்தேன். அவர் சற்று வயது முதிர்ந்தவர் என்றாலும் என்னுடன் இருக்கும் போது அவரும் மௌனமாகவே இருப்பார். ஊரில் பிரபலமாக இருந்த அவருடைய வீட்டிற்குப் பல முக்கியஸ்தர்கள் விருந்தினர்களாக வருவதுண்டு. ஒரு நாள் அவருடைய இல்லத்திற்கு முக்கியமாக ஒருவர் வருவதாக இருந்ததால் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றும் கூட உன்னுடைய தாத்தாகோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தவர், என் முன்னே வந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து எழுந்திருந்து தன் வழக்கமான மௌனத்தைக் கைவிட்டு என்னைப் பார்த்து, 'எழுந்திரு! என்னுடைய வீட்டிற்கு நாம் சென்று பிக்ஷை எடுத்துக் கொண்ட பின்னர் நீ திரும்பி வரலாம்!' என்று கூறினார். அப்போதெல்லாம் நான் பேசுவது வழக்கமில்லை. அதனால் சைகையால் 'நான் வரவில்லை' என்பதைத் தெரிவித்தேன். ஆனால் நான் சொல்வதை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் வாட்ட சாட்டமாக இருந்தார். நானோ மெலிந்து பலவீனமாயிருந்தேன். அவர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார். நானும் சமிக்ஞையால் வரவில்லையென்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டிருந்தேன். நான் சிறிதும் அசைந்து கொடுக்காததால், குனிந்து அவர் கையோடு என் கையைப் பிணைத்து என்னைப் பலவந்தமாக எழும்பச் செய்து அவரைத் தொடருமாறு செய்தார். இவ்வாறாக அவருடைய வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழையும்படிச் செய்யப்பட்டேன். என்னை முக்கியமான ஒரு இடத்தில் அமரச்செய்து எல்லோருடைய இலையையும் விடப் பெரிய ஒரு இலையைப் போட்டு அதில் அவரே பரிமாறினார். நான் உண்ட பிறகு அவர் உண்டார். அந்த நாட்களில் நான் குளிக்கும் வழக்கமில்லை. அதனால் என் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பதால் யாரும் என் அருகே வரமாட்டார்கள். அவ்வாறிருந்த போதும் உனது பாட்டனார் மட்டும் தவறாமல் என் முன் வந்து நெருக்கமாக அமர்ந்து கொள்வார். பலரும் என்னைக் காண வந்துவிட்டுப் போய் விடுவார்கள். இளமைப் பருவத்திலிருந்த போதும் இந்த உடம்பினுள் இருந்தது பூரணப் பொருள் என்பதை உனது பாட்டனார் மட்டுமே உணர்ந்து கொண்டார்' என்று பகவான் கூறியதாக TPR சொன்ன போது அவருடைய கண்கள் பனித்தன. - T P. ராமச்சந்ரய்யர் ( ரமண பெரியபுராணம் ) 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி