தமிழ்நாடு தமிழருக்கே!

Rationalist
521 views
21 days ago
கவின் ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய் எனும் முழக்கத்துடன் மே17 இயக்கத்தினரின் சாலைமறியலில், தன் மகள் காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறார். எந்த ஒரு தந்தைக்கும் இது வருத்தத்தை, கோபத்தை கொடுத்திருக்கும். தன் மகள் ஏன் போராட்டத்தில் இறங்கி அல்லல் படவேண்டுமென ஆதங்கம் வரும். ஆனால் சிவா திலீபன் அப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. "மறியல் போராட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?" என்கிறார். இருநூறுக்கும் சற்று குறைவாக வந்திருந்தார்கள். கால அவகாசம் குறைவு, வேலைநாள் அதனால் திரட்ட இயலாமல் போய்விட்டது என்ற காரணத்தை அவரால் ஏற்க இயலவில்லை. பெருந்திரளாய் தமிழர்கள் திரளாமல் தீர்வு எப்படி கிடைக்கும் என அங்கலாய்த்தார். அந்த சாலை மறியல் சிவா திலீபன் அன்பு மகளான கோகிலாவின் திருமண காலகட்டத்தில் நடந்த போராட்டம். அதில் அவர் காயம்பட்டதெல்லாம் அவருக்கு கவலையளிக்கவில்லை. சாதியொழிப்பு போராட்ட களத்தில் முன்னனியில் தன்மகள் நிற்பதில் அவருக்கு பெருமை. தன் மகளுக்கு சாதி-மறுப்பு திருமணத்தை சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக செய்துவைத்து தற்போது, ஓராண்டு கூட முடியவில்லை. தொடர்ச்சியாக நடந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்தில் அன்றாடம் மாலை முதல் இரவுவரை சிவா திலீபனின் இணையர் இசைமொழி பங்கெடுத்து நேரம் கழித்தே வீடுதிரும்புவார். மனைவி போராட்ட களம் சென்று வருவது அவருக்கு மனத்தடையை கொடுத்ததில்லை. எத்தனை பேர் ஆதரித்து வருகிறார்கள் என கேட்பார். பால-ஸ்*தீன ஆதரவு பேரணியே அவர் மிக மகிழ்வுடன் பங்கெடுத்த நிகழ்வு. ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கெடுத்த பேரணியில் பெருமையுடன் நடந்து வரும் படங்களை காணலாம். மாஞ்சோலை, அனகாபுத்தூர் வீடு இடிப்பு என நடந்த போராட்டங்களில் போதுமான மக்கள் பங்கேற்பு இல்லை என்பது அவருக்கு சோர்வை கொடுத்தது. மதவாதிகள், சாதியவாதிகளை எதிர்த்த போராட்டங்களில் பெருந்திரளாய் தோழர்கள் பங்கெடுப்பதில்லை என்பது அவர் மனதை துன்புறுத்தியது. தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆளுனர் எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்பு என எவையும் கூர்மையடையவில்லை என்பதை அவர் தொடர்ந்து பேசி வந்திருந்தார். ரயில்வேயில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என்பது குறித்து 2015ம் ஆண்டுவாக்கில் ஐ.சி.எப் அப்ரண்டிஷ் போராட்டத்திற்கு மே17 தோழர்களுடன் சிவா பங்கெடுத்துள்ளார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் முன் தீக்குளித்து இறந்து போனார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கபப்ட்டு நடந்த போராட்டத்தில் மே17 இயக்கம் பங்கெடுத்திருந்தது. இவையனைத்தையும் சிவா திலீபன் நன்கு அறிந்தவர். இதேபோல ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தமிழர் வேலை பறிபோவது குறித்த போராடங்களில் அவர் பங்கெடுத்துள்ளார். பெருதிரளாய் தமிழர்கள் திரளாமல் போராட்டம் வெல்லாது என்பார். இறுதியாக தமிழ் மொழிக்காகவாவவது தமிழன் திரளமாட்டானா என கவலைகொண்டார். சிவா திலீபன் இறுதி ஊர்வலத்தில் அவரது இணையர் பேசும் போது சொன்ன வார்த்தைகள் இதை சுட்டிக்காட்டும், " நம் மொழிக்காககவாவது வர மாட்டீர்களா..." எனக் கேட்டார் தோழர் இசைமொழி . சிவா திலீபனின் மகள் கோகிலா இன்னும் மேலதிகமாக, தன் தந்தை பாசிசத்தை வெல்வதற்காக உயிரைக் கொடுத்துள்ளார். போலி தமிழ்த்தேசியவாதிகளை அம்பலப்படுத்த அவர் தன்னுயிர் ஈகம் செய்திருக்கிறார் என பதிவு செய்தார். இபப்டியான ஒரு சிந்தனையாளனுக்கு, களப்போராளிக்கு, குடும்ப தலைவனுக்கு, தமிழ் மொழி நேயனுக்கு, மொழிப்போர் கண்ட பெருவீரனுக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் நடக்க இருக்கிறது. இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஒரு தன்னலமற்ற போராளிக்கு தமிழினம் மரியாதை செய்ய வேண்டிய நிகழ்வு. இந்நாளிலும் உங்களுக்கு தனிப்பட்ட பணிகள் முன்னிலை பெறுமென நீங்கள் நினைத்தால், உங்களை போன்றோரின் பங்கேற்பற்ற நிலையை எண்ணி வருந்தியே சிவா திலீபன் உயிர்விட துணிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை பெருந்திரளாய் போராட்டங்களில் பங்கெடுத்திருப்பீர்களென்றால், சிவா திலீபன் நம்மோடு இன்று உரையாடிக் கொண்டிருப்பார். எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் நடத்திய சமயத்தில் அதுகுறித்து பதிவுகளையோ, பகிர்வையோ கூட செய்யாத பலர் சிவா திலீபன் மரணம் தேவையற்றது, இறந்து சாதிக்க இயலாதென என்றெல்லாம் எழுதி பார்க்க முடிந்தது.. 'குடும்பம் உள்ளது, ஆகவே உயிர்விடாதீர்கள்' என பதிவு எழுதியவர்கள், இதே போல, போராட்ட நிகழ்வுகளை ஆதரித்து பதிவு செய்து, களத்தில் பங்கெடுத்திருந்தால் சிவா திலீபன் தன் குடும்பத்தோடு அன்றாட வாழ்வை தொடர்ந்திருப்பார். இதுவரை போராட்டங்கள், நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்காமல் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் நண்பர்களே, உங்களுக்காகவும் சேர்த்தே தனது வாழ்வை கொடுத்திருக்கிறார் சிவா திலீபன். அத்தகைய உன்னத மனிதனுக்கு மரியாதை செய்ய வாருங்கள். நாள் :29-03-2026 - ஞாயிறு நேரம்: மாலை 4:00 இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு பாலம் அருகில், அடையாறு-ஆர்.ஏ.புரம், சென்னை. எங்களது செய்திகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே இச்செய்திகளை உங்கள் பதிவில் பதிந்தும், பிற சமூகவளைதளமாகிய வாட்சப், எக்ஸ், இண்ஸ்டா வாயிலாகவும் பரப்புரை செய்ய வேண்டுகிறோம். திருமுருகன் காந்தி மே17 இயக்கம். #தமிழ்நாடு தமிழருக்கே! #மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் #மொழிப்போர் ஈகி சிவா திலீபன் #💪 மே17 இயக்கம் #இந்தி திணிப்பு
Rationalist
2.8K views
27 days ago
மொழிப்போர் போராளி தோழர் சிவா திலீபன் ஈகியானார்! அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்! - மே பதினேழு இயக்கம் ஆதிக்க இந்திக்கு எதிராக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 11 அன்று சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் சிவா திலீபன் எனும் சிவக்குமார் (வயது 55), ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருந்த தோழர் சிவா திலீபன் அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இன்று (18-03-2026 புதன்கிழமை) இயற்கை எய்தினார். அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. மே பதினேழு இயக்கத்தின் மூத்த தோழரான சிவா திலீபன் ஓர் சமரசமற்ற போராளி, தமிழினப் பற்றாளர், அன்னைத் தமிழை உயிரென நேசித்தவர், அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகு பிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன். 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்ற தீவிர புலிகள் பற்றாளர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட சூற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்றவர். நீட் எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டு உரிமை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்களில் களம் கண்டவர். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் அவருக்கெதிரான கருப்புக்கொடி போராட்டங்களில் பங்கெடுத்தவர். அப்படியாக மோடி திருச்சி வருகை தந்த மார்ச் 11 அன்று பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிக்கும் போராட்டத்தில் பங்கெடுத்து, தாய் தமிழை காக்க தன் உயிரை ஈந்த முன்வந்தவர். தோழர் சிவா திலீபன் அவர்கள் 13 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். கடந்த 2017ம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் நடத்த முற்பட்ட போது அரசின் அடக்குமுறையை சந்தித்தவர். அச்சமயத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களோடு சிறை சென்றவர். மே பதினேழு இயக்கத்தின் அனைத்து போராட்டத்திலும் தவறாது கலந்துகொண்டவர். அவர் மட்டுமல்லாது அவரது இணையர் தோழர் இசைமொழி எனும் கீதா அவர்களையும் மகள் கோகிலா அவர்களையும் அரசியல்படுத்தி தமிழினப் போராட்டக் களத்திற்கு அளித்தவர். ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்த்தேசியப் பெருவிழா மாநாட்டில் இந்திக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொண்டது. ஒன்றிய அரசினால் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்படுவதும், ஒன்றிய அரசுப் பணிகளில் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் என தமிழ்-தமிழர்கள் மீதான ஒன்றிய அரசின் பாரபட்சம் தீவிரமடைந்த நிலையில், மே 17 இயக்கம் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டங்களை மேற்கொள்ளுமென அறிவித்தது. அதன்படி உலகத் தாய்மொழி நாளன்று (பிப். 21) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது. அந்த போராட்டத்தின் போதும் தோழர் சிவா திலீபன் களத்தில் முன்னின்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 11 அன்று, மொழிப்போர் தியாகி தாலமுத்து அவர்களின் நினைவு நாளில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை மேற்கொண்டது. அப்போது எதிர்பாராதவிதமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களுடைய தோழர் சிவா திலீபன், ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற தோழர்கள், கடுமையாக காயமடைந்திருந்த அவரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து உயர் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்திச் சென்றார். முன்னதாக மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிகிச்சையை மேற்பார்வையிட்டு சென்றார். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் ஐயா வைகோ மற்றும் பொருளாளர் தோழர் செந்திலதிபன், விசிக தலைவர் முனைவர் தொல். திருமாவளவளன் மற்றும் தோழர் வன்னி அரசு, தோழர் சிந்தனைச் செல்வன், சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவஹிருல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அப்துல் சமது, தாம்பரம் யாக்கூப், @எஸ்டிபிஐ தமிழ்நாடு தலைவர் தோழர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தோழர் அன்சாரி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் தோழர் முகமது ஷெப்லி, தோழர் பிர்தவ்ஸ், திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் தோழர் சுப.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் தோழர் ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் வெற்றிவேல் செழியன், மேலும் அம்மா அற்பதம்மாள், தோழர் பேரறிவாளன், தோழர் மன்சூர் அலிகான் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், ஆளுமைகள், தோழர்கள் நேரில் வந்திருந்திருந்து சிவா திலீபன் தோழரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து சென்றனர். 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தோழரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமான இரவு 9:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. தோழர் சிவா திலீபன் அவர்களை இழந்தது மே பதினேழு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிராக போராடிய தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகியரில் ஒருவராகிப் போனார். அன்னை தமிழுக்காகப் போராடிய தோழர் சிவா திலீபன் இன்று தமிழ்ச் சமூகத்தின் சொத்தாகிவிட்டார். தமிழ் மொழிக்கான அவரது ஈகம் தமிழ் வாழும் வரை தமிழ்ச் சமூகத்தால் போற்றப்பட வேண்டும். தோழர் சிவா திலீபன் பற்ற வைத்த ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. தோழர் சிவா திலீபன் மூட்டிய நெருப்பை அணையவிடாமல் ஒவ்வொரு தமிழனும் பாதுகாப்போம். ஆதிக்க இந்தியை தமிழ்நாட்டை அகற்றுவதே தோழர் சிவா திலீபனின் ஈகத்திற்கு அளிக்கும் மரியாதையாகும். அதனை செய்துமுடிப்போம் என உறுதியேற்போம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! வீரவணக்கம் வீரவணக்கம்! மொழிப்போர் ஈகி சிவா திலீபனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழ்நாடு தமிழருக்கே! #✍️மே17 இயக்கக் குரல் #இந்தி திணிப்பு
Rationalist
913 views
28 days ago
இன்று ஈரோடு... தமிழர்களுக்கு, ஒன்றிய அரசு பணியிடங்களில் வேலையை நிராகரிக்கும் பாஜக அரசு, இந்தியை, இந்தி நபர்களை தமிழர்கள் மீது திணிக்கிறது. தமிழர்களுக்கான பணியிடங்களில் வடநாட்டு இந்தி பேசும் மாநிலத்திலிருந்து ஆட்களை நியமனம் செய்கிறார்கள். இதையெதிர்த்த மே17 போராட்டம், தோழர் சிவா திலீபன் அவர்களின் விருப்பப்படி முழுவீச்சுடன் தொடர்கிறது. தமிழர்களே தயக்கம் ஏன்? தடைகளை உடைத்து அன்னைத் தமிழ் காக்க வாருங்கள்! #இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்
Rationalist
600 views
28 days ago
இதுதான் மே17 இயக்கம் நடத்தும் 'இந்தி அழிப்பு போராட்டம்' உருவாக்கிய கேள்வி. "...ஏன் இந்தி, எதற்காக திணிக்கப்படுகிறது.. எங்கே எங்கள் தமிழர்களுக்கான வேலைகள்? .." இதைத்தான் மே17 இயக்கம் எழுப்பியது. இதை இன்று சாமானிய தமிழர்கள் கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதில் மே17 இயக்கத்தின் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. பாஜக, நாம்தமிழர் கும்பல்களால் அவதூறுகள் பரப்பப்பட்டாலும், தமிழர்கள் மே17 இயக்கத்தின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். "எமது இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஏன் வேலை மறுக்கப்படுகிறது? ஏன் இந்தி பேசுபவருக்கு தமிழ்நாட்டு வேலைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?.." மே17 இயக்கம் எழுப்பிய கேள்வி சாமானிய தமிழ் மக்களிடமிருந்து எழுகிறது. பாஜக தலைவரிடம் நேரடியாக, துணிச்சலாக கேள்வி எழுப்பிய அந்த மூதாட்டி எம் தமிழன்னையின் குரல். அந்த தாயார், தமிழிசையை நோக்கி தொடர்ந்து கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனால் அவரை கூட்டத்திலிருந்து பாஜகவினர் அப்புறப்படுத்தியுள்ளார்கள் பாஜகவை அம்பலப்படுத்தி, தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்திய அந்த அன்னைக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள். எளிய சாமானிய உழைக்கும் மக்களுக்கு எமது கோரிக்கைகள் சென்றடைந்திருக்கின்றன என்பதே எமது போராட்டத்தின் வெற்றி. தோழர் சிவா திலீபன் தன்னை கொடையாக கொடுத்து வலுப்படுத்திய போராட்டத்தின் நியாயம் மக்களை சென்றடைந்துள்ளது. பதில் சொல் சங்கிகளே? எங்கே எங்கள் வேலை? ஏன் இங்கே இந்தி? எமது வேலைகளை வடநாட்டானுக்கு தாரை வார்க்கும் பாஜகவே பதில் சொல்! மே17 இயக்கத்தின் போராட்டம் தொடரும்.. தமிழ்த்தேசிய அரசியலின் சமரசமற்ற இயக்கமாக எமது தோழர்கள் போராட்டத்தை தொடர்வார்கள். #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு
Rationalist
1.1K views
1 months ago
மோடியின் கடந்த வருகையின் போது, "... தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் திணிக்கப்பட்ட இந்தியை மாற்றிடுங்கள், இல்லையெனில், ஆதிக்க இந்தியை நாங்கள் அழித்திடுவோம்.." எனும் போராட்டத்தை மே17 நடத்தியது. அறிவித்ததை போல, இன்றைய மோடி வருகையின் போது மே17 தோழர்கள் இந்தியை அழித்தோம். சொன்னதைச் செய்தோம். இன்று 11-03-2026 முதல் மொழிப்போரில் ஈகியரான தாலமுத்துவின் நினைவுநாள். இந்த நாளில், மோடியின் வருகையை முன்னிட்டு போராட தொடங்கினோம். சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகக்ளை அழித்து முழக்கமிட்டோம். வெகுசன மக்கள் எங்களோடு இணைந்து முழக்கமிட்டார்கள். ஒரு தம்பதியினர் எங்களது போராட்ட பேனரை கையில் ஏந்திக் கொண்டனர். பயணிகளாக காத்திருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மெளனமாக நின்று கவனிக்கவில்லை, எங்களுடன் கைகோர்த்தார்கள். மக்களின் புரட்சிகர மனநிலை குன்றவில்லை. போராட்டம் விரிவடையுமெனும் நம்பிக்கை பிறந்தது. இந்தி திணிப்பை தமிழர்கள் ரசிக்கவில்லை. இந்தி திணிப்பால் வேலைவாய்ப்பு பறிபோவதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். "..ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன..இதனால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு வேலைகளை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். வங்கிகள், ரயில்வே, இன்சூரன்ஸ், என்.எல்.சி, வருமானவரி, சுங்கவரி என அனைத்து இடங்களிலும் இந்தி பேசும் மாநிலத்தவர்களே அதிகம். பஞ்சாப், மராத்தியம், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலத்தவர்களும் தேர்வாவதில்லை... ஆகவே இந்தி கற்றுக்கொண்டாலும், நமக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. இதனால் தான் சொல்கிறோம், இந்தி ஒழியட்டும், தமிழ் வெல்லட்டும்..." என முழக்கமிட்டு உரை நிகழ்த்திய போது வெகுமக்கள் கைதட்டினார்கள், ஆமோதித்தார்கள்... இந்த எழுச்சிகரமான போராட்டத்தில் சென்னை பார்க் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய தோழர் சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். போர்க்குணத்தோடு நடந்த இப்போராட்டம் குறித்து பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் கவனப்படுத்தும் செய்தியை காண இயலவில்லை. ஓரிரு வரி செய்திகளாக சில ஆளும்கட்சி ஆதரவு சேனல்கள் ட்வீட் போட்டிருந்தன. திராவிடம் -பெரியார் என பேசும் பெரும்பாலான ஊடகங்கள் வரி செய்தியாகக் கூட வெளியிடவில்லை. திடீர் பெரியாரிஸ்டு யூட்யூபர்களும் செய்தியாக்கவில்லை. போலி தமிழ்த்தேசியவாதிகள் பார்ப்பன கடப்பாரையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் வாய்மூடி நிற்பது வழக்கமான விடயம் தான். அதிகாரத்தில் இல்லாத அமைப்புகள் கார்ப்பரேட் ஊடகத்தவரை நம்பி இயங்க இயலாது. பெரியாரிய, முற்போக்கு தமிழ்த்தேசிய தோழமைகள், சனநாயக ஆற்றல்கள் இதுபோன்ற போராட்ட செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென வேண்டுகிறேன். உங்களது சமூக வலைதளங்கள் வழியே இச்செய்திகள் மக்களை சென்று சேர உதவிடுங்கள். நமக்கு நாமே ஊடகமாக வேண்டும். சனாதன எதிர்ப்பு போரில், சமரசமற்று மே17 இயக்கம் களத்தில் நிற்கிறது. கைகோர்க்க வாருங்கள். #தமிழ்_வெல்க #இந்தி_ஒழிக #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #📺வைரல் தகவல்🤩 #💪 மே17 இயக்கம்