வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்

-
698 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் ஷாஜகான் ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். ... அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது. ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான் பிறந்த தேதி: 5 ஜனவரி, 1592 பிறந்த இடம்: லாகூர், பாக்கிஸ்தான் இறந்த தேதி: 22 ஜனவரி, 1666 இறந்த இடம்: ஆக்ரா போர்ட், ஆக்ரா அடக்கம் செய்த இடம்: தாஜ் மகால், ஆக்ரா
-
653 views
2 months ago
ஜனவரி 21, எம். எஸ். உதயமூர்த்தி நினைவு தினம் இன்று. (தோற்றம்: 08.04.1928 மறைவு: 21.01.2011) மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். . 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர் ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’ என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. #வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
-
644 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் *18 January 1996* என். டி. ராமராவ் நினைவு நாள். இவர் ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக 1968 ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரது மகன்களும் பேரன்களும் கூட தற்போது திரைப்பட நடிகர்களாக உள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இவரது மருமகன் ஆவார்.
-
660 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் முதன்முதலாக பறக்கும் தட்டை (unidentified flying object (UFO) அமெரிக்கா Boston பகுதியைச் சேர்ந்த சிலர் இன்றைய தினம் பார்த்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த அமெரிக்கா Massachusetts Bay Colony ன் கவர்னர் John Winthrop தனது டைரிக்குறிப்பில் பதிவு செய்த தினம் இன்று. ( *18 ஜனவரி 1644*)
-
698 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் காகிதம் தயாரிக்கும் (paper-making machine) இயந்திரத்தை முதன்முதலாக புதியமுறையில் கண்டுபிடித்து பிரான்ஸை சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் இயந்திரப்பொறியியலாளர் Louis-Nicolas Robert காப்புரிமம் பெற்ற தினம் இன்று. ( *18 ஜனவரி 1799*) காகித இயந்திர தொழிற்சாலைக்கு இவரே முன்னோடியாக கருதப்படுகிறார்.
-
670 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் உலகில் முதன்முதலாக அமெரிக்கா San Francisco Bay துறைமுகத்தில் கப்பல் மீது விமானம் இறக்கப்பட்ட தினம் இன்று. ( *18 ஜனவரி 1911*) அமெரிக்கா Davenport, Iowa வை சேர்ந்த Eugene Burton Ely முதன் முதலாக San Francisco Bay துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS Pennsylvania கப்பல் மீது விமானத்தை இறக்கிக்காட்டினார்.
-
634 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் தற்கால இந்தியப் பாராளுமன்றம் ( Parliament of India ) பிரிட்டிஷ் இந்தியாவின் Viceroy of India, Lord Irwin ல் திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று. ( *18 ஜனவரி 1927*) பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர்களான Edwin Lutyens மற்றும் Herbert Baker ல் வடிவமைக்கப்பட்டு, 1921 ல் கட்டத் துவங்கி 1927 ல் ரூ. 83 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
-
644 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் ஐரோப்பிய நாடான Norway ஐ சேர்ந்த துருவங்களின் பயணி Borge Ousland அண்டார்க்டிக்காவை (Antarctic) முதன்முதலாக தனி ஆளாக கடந்த தினம் இன்று. ( *18 ஜனவரி 1997*)
-
641 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் 17 ஜனவரி 2012* முதலாவது பெண் நாதஸ்வரக் கலைஞர் எம். எஸ். பொன்னுத்தாய் நினைவு நாள். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர் பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய் புகழ்பெற்று விளங்கினார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9வது வயதில் நாதஸ்வரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய் 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார். கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம். பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர்.
-
666 views
2 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் விஞ்ஞான மருத்துவமும், அதன் தேவையும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை,இதற்கு முன்பு உருவான பல தொற்று நோய்களும், கொரோனாவும் அதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. 2400 படுக்கை வசதிகளைக் கொண்டது. இந்த கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராஜர் முடிவெடுக்கிறார். திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார். காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள், தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார். அந்த நிலப்பகுதியே இன்று திருநெல்வேலியில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது. அங்கு தான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் இன்று இயங்குகிறது. இன்று அந்த இடத்தின் விலை ஒரு சென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய். அய்யா காதர் மீரா சாஹிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்.