அடியே

SHEIK 🌺KSN🌺
0 view
7 days ago
இன்னைக்கு வெள்ளிக்கிழமை வந்த மாதிரி இருக்கும், அதுக்குள்ள அடுத்த வெள்ளிக்கிழமை வந்துடுது. இது நபி ﷺ அவர்கள் சொன்ன அடையாளம் தான். வருடங்கள் மாதங்கள் போல, மாதங்கள் வாரங்கள் போல தெரியுது. முன்னாடி ஒரு நாள்ல நிறைய வேலை முடிச்சோம். இப்போ 24 மணி நேரம் இருந்தும் பத்தல. ஏன்னா நேரத்துல அல்லாஹ் பரக்கத்தை குறைச்சுட்டான். இது நாம அலட்சியமா இருக்க கூடாதுன்ற எச்சரிக்கை. நேரம் வேகமா போகுதுனா, நம் ஆயுளும் குறைஞ்சிட்டே போகுது. தொழுகை, துஆ, பெற்றோர், குர்ஆன், தௌபா... இதெல்லாம் "அப்புறம் பார்ப்போம்"னு தள்ளி போட முடியாது. அல்லாஹ் நம்முடைய நேரத்தை நல்லதுக்கு பயன்படுத்தும் மக்களாக ஆக்கட்டும். கடைசி மூச்சு வரை ஈமானோடு வாழவும், ஈமானோடு மரணிக்கவும் அருள் புரியட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.8K views
12 days ago
அவர்கள் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதைத் தவிர,_ வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். #யார்_அந்த_அவர்கள் ? பெரும்பாலும் நம்ம பெற்றோர்கள் தான். நடக்க, பேச, சாப்பிட, விழுந்தா எழுந்திருக்க, நல்லதை கெட்டதை பிரிச்சு பார்க்க... வாழ்க்கையோட A முதல் Z வரை எல்லாமே அவங்க கையில தான் நம்ம கத்துக்கிறோம். ஆனா அவங்க இல்லாம நாம வாழ பழகணும்னு மட்டும் சொல்லித் தர மாட்டாங்க. ஏன்னா அந்த வலியை அவங்க நமக்கு தர விரும்ப மாட்டாங்க. அல்லாஹ் அல்குர்ஆன்ல சொல்றான்: "உங்கள் இறைவன் கட்டளையிட்டிருக்கிறான்: அவனைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். மேலும் பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்" — அல்குர்ஆன் அல்-இஸ்ரா 17:23 தாய், தந்தை உயிரோடு இருக்கும்போதே அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.! அவர்களுக்கு பணிவிடை செய்து நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
نركيس
4.4K views
15 days ago
அளவற்ற அருட்கொடைகளால் மறுமை வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடையதாக ஆக்க உன்னிடம் இறைஞ்சுகிறேன். #🤲துஆக்கள்🕋 #இறை அடியான்☝️ #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள்
SHEIK 🌺KSN🌺
3.8K views
25 days ago
அல்லாஹ் நம் செயல்களை மலக்குமார்கள் மூலம் பதிவு செய்கிறான். ஆனால் இந்த மூவரின் நிலைமையில் உள்ளவர்களின் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். தூக்கத்தில் பேசினாலோ, நடந்தாலோ பாவம் இல்லை. விழித்த பிறகு தான் பொறுப்பு. பருவம் அடையும் வரை செய்யும் தவறுகளுக்கு கணக்கு இல்லை. ஆனால் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது, அவர்களுக்குத் தொழுகையை முறையாகக் கற்றுக்கொடுத்து, அதனைத் தொடங்குமாறு ஊக்கப்படுத்துங்கள். அபூ தாவூத் 495 மனநிலை சரியில்லாதவர் புத்தி சுவாதீனம் இல்லாதவரை அல்லாஹ் நிர்பந்திக்க மாட்டான். புத்தி வந்த பிறகு தான் பொறுப்பு. அல்லாஹ் எவ்வளவு கருணையானவன் பாருங்க. புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்களை அவன் தண்டிப்பதில்லை. ஆனால் நமக்கு புத்தியும், விழிப்பும், பருவமும் இருக்கு. அதனால் நம்முடைய ஒவ்வொரு செயலும் எழுதப்படுகிறது. "அணுவளவு நன்மை செய்தாலும் அதை காண்பான்" — அல்குர்ஆன் _அஸ்-ஸில்ஸால் 99:7 அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து, நன்மைகளை அதிகப்படுத்தட்டும். ஆமீன்.! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.8K views
1 months ago
பகலிலும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு). (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
12.8K views
1 months ago
ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் குறித்த தீர்ப்பு: மூன்று நாட்கள் முடிந்து #நபி_ﷺ அவர்கள் மக்காவை விட்டு வெளியேறிய போது, அவர்களின் மாமா ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் "என் சிறிய தந்தையே!" என்று அழைத்துக்கொண்டு பின்னால் ஓடிவந்தார். அப்போது அவளை வளர்க்கும் உரிமைக்காக அலி (ரலி), ஜாஃபர் (ரலி) மற்றும் ஸைத் (ரலி) ஆகிய மூவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. #நபி_ﷺ அவர்கள் அந்தச் சிறுமியை ஜாஃபர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துத் தீர்ப்பளித்தார்கள். அதற்கான காரணம் மற்றும் #நபி_ﷺ அவர்கள் கூறிய பொன்மொழிகள்: #தீர்ப்பு: "#தாய்வழிச்_சித்தி, தாயின் அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்" என்று கூறி ஜாஃபர் (ரலி) அவர்களின் மனைவியே அச்சிறுமியின் சித்தி என்பதால் அவரிடம் ஒப்படைத்தார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.1K views
1 months ago
அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான். [#அல்குர்ஆன் 14:42] #நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்: " அநீதி இழைக்கப்பட்டால், அநீதி இழைக்கப்பட்டவரின் #துஆவுக்கும் #அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை." [புகாரி 2448] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.7K views
1 months ago
அந்த நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியால் பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் எனும் அல்குர்ஆனின் (75:22, 23) ஆகிய வசனங்கள். ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள்’ என்றார்கள். (புகாரி: 7434) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.6K views
1 months ago
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன(நற்செயல்களைத் தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று திரும்பக் கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் மறுமையில் நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களையும் அபூபக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் மறுமையில் அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே! அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) (புகாரி: 3688) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️