ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 2 months ago AI indicator
சிவமணியம் கேள்வி: ஞானிகள் மத்தவங்க மாதிரியேதான் சாப்பிடறாங்க; வேற வேலை எல்லாம் பாக்கறாங்க. மத்தவங்களை மாதிரியேதான் கனவு, தூக்கம் எல்லாமுமா? பகவான்: ஏன் அடுத்தவா சமாச்சாரம். நமக்கு அதனாலே என்ன கிடைக்கப்போறது. நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கோங்கோ! நீங்க யார்ன்னு நினைக்கறேள்? இந்த உடம்புதானே! கேள்வி: ஆமாம். பகவான்: அப்படித்தான் ஞானியையும் உடம்புன்னு நினைக்கறேள். ஞானி.... கனவு வர்றதா... தூக்கம் வர்றதா...ன்னு கேக்கறது இல்லே. அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லே. சந்தேகம் எல்லாம் உங்களுக்குத்தான். ஞானி உடம்பு இல்லே. அவன் எல்லோரோட ஆத்மாவும். கனவு நனவு தூக்கம் எல்லாம் அஞ்ஞானிகளோட நிலை. ஆத்மா இது எல்லாத்திலேயும் விடுபட்டு இருக்கு. கேள்வி: ஸ்திதப்பிரஞ்ஞனோட நிலைமையை தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன். பகவான்: சாஸ்திரங்கள் ஞானிக்கு இல்லே. ஞானிகளுக்கு எந்தச் சந்தேகமும் தீக்கறதுக்கு இல்லே. புதிர் எல்லாம் அஞ்ஞானிக்குத்தான். சாஸ்திரமும் அவனுக்குத்தான். கேள்வி: தூக்கம் அறியாமை; அதைப் போய் சமாதின்னு எப்படிச் சொல்லலாம் ? பகவான்: ஞானம்... அறிவு அறியாமை கடந்தது. அங்கே எந்தக் கேள்வியும் இல்லே. அது ஆத்மாவேதான். கேள்வி: பகவான் தீட்சை கொடுக்கறதுண்டா? பகவான்: மௌனமே சிறந்த தீட்சை. பலிதத்திலேயும் அதுவே சிறந்தது. தக்ஷிணாமூர்த்தி அதையேதான் செஞ்சார். மத்த தீட்சைகள் இரண்டாம் தரம்தான். இங்கே குருவும் இல்லை... சிஷ்யனும் இல்லை... அஞ்ஞானி தன்னை உடம்பா நினைக்கறதாலே, இன்னொரு உடம்பைக் குருங்கறான். குரு தன்னை உடம்பாக் கருதறாரா? அவர் உடம்பைக் கடந்தவர். அவருக்கு எந்தப் பேதமும் இல்லை. அஞ்ஞானியாலே இதைப் புரிஞ்சுக்க முடியாது. உபாசனையோ தியானமோ மனம் இருக்கற வரைக்கும்தான் பண்ண முடியும். மனமற்ற நிலையிலே பண்ண முடியாது. சும்மாயிருக்கறதுக்கு முந்திய நிலையே அது. கேள்வி: சைவசித்தாந்தம் பசு, பதி, பாசம் அனாதிங்குதே! அது வேதாந்தத்துக்குப் பொருந்த மாட்டேங்குதே! பகவான்: மூணும் மனம் இருக்கற வரைக்கும் உண்மை. மனம் வந்த பிறகுதான் இறைவன். இறைவன் ஆத்மாவிலே இருந்து வேற இல்லை. ஆத்மாவே கடவுள்: ஆத்மாவே குரு. கேள்வி: ஏன் பிரம்மத்தை சத்சித்ஆனந்தம்னு சொல்றோம். கடவுள்ன்னு சொல்லமாட்டேங்கறோம்? பகவான்: சத்ன்னா சத்அசத் கடந்தது. சித்ன்னா சித்அசித் கடந்தது. ஆனந்தம்ன்னா ஆனந்தம் அனானந்தம் கடந்தது அப்போ அது என்ன ? சத்தும் இல்லை... அசத்தும் இல்லைன்னா... அதை சத்ன்னுதான் சொல்லணும். ஞானத்தை எடுத்துக்கோங்கோ... அது ஞான அஞ்ஞானம் கடந்தது... ஆனா அது அஞ்ஞானமில்லேங்கறதாலே அதை ஞானம்ங்கிறோம். அப்படித்தான் சத் சித் ஆனந்தம். கேள்வி: உபாசனை, தியானம், மனசு இருக்கற வரைக்கும்தான்னா... சும்மாயிருக்கறதுதான் ஞானம்ன்னா... உபாசனை, தியானம் இல்லாம ஞானம் வந்துடுமா? பகவான்: உபாசனை, தியானம் முதல்படி. அது சும்மாயிருக்கறதா முடிஞ்சுடும். கேள்வி: உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நீங்க ஆத்ம ஞானம் அடைஞ்சிருக்கீங்களா? பகவான் சிரித்தார். 'மேலே கேளுங்கோ' நிர்விகல்ப சமாதியனுபவம் உண்டா? நீங்க நினைச்சப்ப சமாதிக்கு போவீங்களா? இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாதுன்னு யாரோ கூட வந்தவா அவரைக் கேக்க விடலே. கேள்வி: பகவான் உண்மையை நாங்க உணர உதவுவங்களா? பகவான்: உதவி எப்பவும் இருக்கு. கேள்வி: அப்போ கேள்வியே இல்லை. எனக்குக் கிடைக்கற மாதிரி தெரியலை. பகவான்: சரணடைங்கோ தெரியும். கேள்வி: நான் உங்க சரணத்திலேயேதான் இருக்கேன். ஏதாவது உபதேசம் குடுங்க. 600 மைல் தள்ளியிருந்து எப்படி உங்க அருளுக்குப் பாத்தியமாவேன்? பகவான்: ஸத்குரு உள்ளேயே இருக்கார். கேள்வி: சத்குருவே என்னை வழிநடத்தி அதை உணர வைக்கணும். பகவான்: ஸத்குரு உள்ளேதான் இருக்கார். கேள்வி: எனக்கு கண்ணுக்கு தெரியற குருதான் வேணும். பகவான்: கண்ணுக்குத் தெரியற குருதான் உள்ளே இருக்குன்னு சொல்றார். கேள்வி: குருவோட அருளுக்கே என்னை விட்டுடவா? பகவான்: ஆமாம். உபதேசமெல்லாம் சரணடையற வரைக்கும்தான். கேள்வி: தியானம் குறிப்பிட்ட காலத்துலதான் பண்ணணுமா? பகவான்: தியானம் மனோபலத்தைப் பொறுத்தது: எப்பவும் பண்ணணும். வேலை பாக்கும்போதும் பண்ணணும். குறிப்பிட்ட காலம் எல்லாம் ஆரம்பசாதகர்களுக்குத்தான். கேள்வி: குரு என் தலையில கை வச்சு உதவுவேன்னு ஸத்யம் பண்ணுவாரா? எனக்கு ஆறுதலா இருக்கும். பகவான்: ஏன் ஒரு பாண்டு பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து எழுதிக்கேளுங்கோ! எதுவும் நடக்கலேன்னா... கேஸ் போடுவேள் போலிருக்கே! (சிரிக்கிறார்). கேள்வி: உங்க பக்கத்துலே வரலாமா? பகவான்: இந்தக் கேள்வி எல்லாம் வரலாமா? சரணடைஞ்சுட்டேன்னு சொன்னா குருவோட பாதம் எப்பவும் நம்மளோட தலைமேலேதான். கேள்வி: நிறைய முயற்சிக்கு பிறகுதான் முழுமையான சரணடைய முடியுமா? பகவான்: ஆமாம். நாள்பட முழுமையாகும். பக்கம்: 428 - 432. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️
9 likes
7 shares

More like this