ரவிசங்கர் ராஜா, ஆரணி
14K views • 2 months ago •
கேள்வி: இப்போ எல்லாம் நல்லா புரியுது. மனசு லேசா இருக்கு. அப்புறம் மறந்துடுது.
பகவான்: மறக்கறதுன்னாலே அங்கே அறிவு இருக்குன்னுதான் அர்த்தம். இல்லேன்னா.... மறந்துடுத்துன்னு எப்படித் தெரியும்? மறந்துடுத்துன்னு எப்படிச் சொல்ல முடியும் ? மறக்கறதுக்கும் நீங்க இருக்கணும். மறந்துடுத்துன்னா நினைக்கறதுக்கும் நீங்க இருக்கணும்.
அப்புறம் வந்து கம்பிளைண்ட் (complaint) பண்றதுக்கும் நீங்க இருக்கணும். அதனாலே மறதியும்... சிதாகாசம் தான்.
கேள்வி: அப்போ ஏன் எனக்கு சரியா புரியமாட்டேங்குது?
பகவான்: சித் எப்பவும் இருக்கற சாமான்ய சுத்த அறிவு. அதிலே இருந்து மனம் கிளம்பிடறது. மனம் நினைப்பாலே ஆனது. அஞ்ஞானம் குறுக்கிடறதாலே... சுத்த அறிவு எப்படி இருந்ததோ... அப்படித் தெரியாம, வேறயா தெரியறது. அதுதான் நம்மளாவும் உலகமாவும் பாக்கப்படறது. ஆசையும் பற்றும் வெறுப்பும் நிறைஞ்சு இருக்கு. அதனாலே தான் 'ஆசை கண்ணை (உண்மையை) மறைக்கறது'ன்னு சொல்றா.
கேள்வி: எனக்குப் புரியலை.
பகவான்: 'நினைப்பு இல்லாம இரு.' 'நினைப்பற்ற உண்முகமான மனத்தாலேயே உணர்' ன்னு சுருதிகள் சொல்றது. அதனாலே நினைப்பற்ற மனம் ஹிருதயத்திலே ஒடுங்கிடும். அதுவே சித்.
கேள்வி: பிரம்மம் வேறு ஜீவன் வேற இல்லை. ஜீவன் மாயைல
இருக்குன்னு சொன்னா... பிரம்மமே மாயைலே இருக்குன்னு சொல்ற மாதிரி ஆகுமில்லையா. எப்படிப் பொருந்தும் ?
பகவான்: பிரம்மம் மாயையிலே இருந்தா... அது விடுபடணும்ன்னு அதுவே கேள்வி கேட்டுக்கட்டும்.
கேள்வி: பகவானே நாம ஸ்மரணம் எப்படி ஆத்மஞானத்துல கொண்டு போய் சேக்கும்?
பகவான்: மூல நாம ஸ்மரணம் எப்பவும் முயற்சியில்லாமே இடைவிடாம நடந்துகொண்டே இருக்கு. அந்த மூல நாமம்தான்
'நான்'. ஆனா அது வெளிப்படும்போது அகந்தையா வர்றது. நாமஜபம், மானசீக ஜபமா மாறி, கடைசியிலே மூல நாமஸ்மரணத்திலே கரைஞ்சுடும். 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள்
116 likes
208 shares