ரவிசங்கர் ராஜா, ஆரணி
5K views 2 months ago AI indicator
குருவாசகக்கோவை 151. அவனவ னூழை யவனவ னுண்ணச் சிவன்கரியாத் தன்னிற் றிகழ்வான் - எவனூழை யுண்போனாத் தான்பே துறாதுசச் சித்தளவாம் பண்போ னவனப் பரன். பதச்சேதம்:- அவன் அவன் ஊழை அவன் அவன் உண்ணச் சிவன் கரியாத் தன்னில் திகழ்வான் எவன் ஊழை உண்போனாத் தான் பேது உறாது சத் சித்து அளவாம் பண்போன் அவன் அப் பரன். அரும்பதவுரை:- உண்போனா - அனுபவிப்போனாக; பேதுறாது - மயங்கி நினையாது; பண்போன் - தன்மையோன்; பரன் - சிவன். ஶ்ரீ முருகனார் சுவாமிகள் உரை:- சிவமென்ற பரம்பொருள் சாக்ஷிமாத்திரமாய்ப் பிரகாசித்தலின், அந்த சாந்நித்ய அளவிலே, கருமங்கள் நடைபெறுகின்றன. கடவுளுக்குப் பக்ஷபாதம் எள்ளளவுமில்லை. கர்மியாகத் தன்னை யெண்ணிப் பேதுறாமல் எவன் தன்னையும் சித்தின் இயல்பாகக் காண்கிறானோ, அந்த அளவில் அவன் பரனாகவே விளங்குகின்றான். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- ஜீவன் ஒவ்வொருவனும் அவனவனது பிராரப்தத்தை அவனவனே அனுபவிக்கின்றான். இறைவனோ அதற்குதவும் சாந்நித்திய சாக்ஷி மாத்திரமாக இதயத்தில் விளங்கிக் கொண்டிருக்கின்றான். எனவே, எவனொருவன் தான் கர்ம பலனை புஜிக்கும் போக்தாவாகத் தன்னை நினைத்து மயங்காமல் தான் சச்சித் ஆன்மா மாத்திரமாகவே உணரக் கூடியவனாயிருக் கின்றானோ அவனே பரன். அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
26 likes
55 shares

More like this