arukanimembers
ShareChat
click to see wallet page
@781094736
781094736
arukanimembers
@781094736
Local Media Kanyakumari district
கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எல்லையோர பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கும் உள்ளூர் தேவைக்கும் மட்டுமே கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிடிபட்ட 10 லாரிகள் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - பாகபாட்ஸ்பாலின் 8 .் duuau பாகபாட்ஸ்பாலின் 8 .் duuau - ShareChat
ஆறுகாணி அருகே ஆனக்குளம் சாலையில் மரத்தடி ஏற்றி செல்லும் ஏற்றம் ஏறாமல் வழியில் சிக்கிக்கொண்டதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லாரி ஏறி கடந்து சென்றது. பல முறை கூறியும் இதே நிலைமை இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - BM.4415 BM.4415 - ShareChat
பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விரைவு செயல் – குற்றச்சாட்டுக்கு உட்பட்ட நபர் உடனடி கைது * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் துரிதமான உத்தரவு மற்றும் நேரடி கண்காணிப்பின் பேரில், சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட * கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் கிஷோர் கண்ணா (31) மீது, * சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 35/2026 U/S 296(b),79 BNS, 67 IT Act இன் கீழ் விரைவாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். * பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
பீர்பாட்டில் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் நாகர்கோவில் இருந்து குமரி நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றார். கொட்டாரம் பகுதியில் அவர் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் பீர் பாட்டிலை பேருந்து கண்ணாடி மீது வீசினர். இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - KAMNAKUMARI ] Cona lणागा KAMNAKUMARI ] Cona lणागा - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், பொதுமக்கள் இடங்களிலும் மது அருந்தப்படுவதாக எஸ்.பி. அவர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் சைமன் காலனி கடற்கரை பகுதி மற்றும் சைமன் காலனி செயின்ட் மேரீஸ் பள்ளி அருகிலுள்ள மேடை பகுதியில் “போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்த தடை, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற எச்சரிக்கை ஃப்ளக்ஸ் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 1 மாகை மற்றும்  ங்கு மது mpooon  ஈபாது பொருட் தகக அருந்தாவா  மறினால் டு கப்படும்  3 டகக - நட 1 மாகை மற்றும்  ங்கு மது mpooon  ஈபாது பொருட் தகக அருந்தாவா  மறினால் டு கப்படும்  3 டகக - நட - ShareChat
குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - TAMIL MADU police  NADU TAMIL சுருளீா்நூரம்  ಗನ SUCHINDRAN A TAMIL MADU police  NADU TAMIL சுருளீா்நூரம்  ಗನ SUCHINDRAN A - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த முத்து பாலன் என்பவர் நேற்று பழவிளையில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் மின்வாரியத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - பழவிளை கனயகுமாரி !9பளை CMul  பழவிளை கனயகுமாரி !9பளை CMul - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத்தாமரை குளம் பழையாறு அருகே மிதிவண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத தொழிலாளி மீது ரயில் மோதி பலி! சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - எச்சரிக்கை ரயில்வே சிராசிங் எச்சரிக்கை ரயில்வே சிராசிங் - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் – 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் திட்டமிட்டும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நிறைவு பெற்றன. தேர்தல் பரப்புரை பாதுகாப்பு * தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்ட பரப்புரைகளுக்கு காவல்துறை சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் சீராக நடைபெற உறுதி செய்யப்பட்டது. தேர்தல் நாள் பாதுகாப்பு * வாக்குப்பதிவு நாளில், மாவட்ட காவல்துறையின் தீவிர மற்றும் துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகளால், எந்தவித குற்றச்செயல்கள் அல்லது அசம்பாவிதங்களும் இன்றி, அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு * மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாள் பாதுகாப்பு * வாக்கு எண்ணிக்கை பணிகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று, அதற்காக பலத்த மற்றும் பலத்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணிக்கை மையத்திலும், மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. * நாட்டின் ஜனநாயகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க, முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Vip Vip - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல்விளை Y-183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க லிமிட்-ல் வெளிநாட்டில் பணியில் இருக்கும் வட்டவிளை ஊரைச்சார்ந்த சிவபாரத் என்பவரின் நகைகளை 68.3 கிராம் நகையை ஆவணத்தை திருத்தி போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்த செயலாளர் மனோகரன் கிளார்க் இராதிகா மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் R.சத்தியரூபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மேலும் இது போன்று பாதிக்கப்பட்ட நபர்கள் யார் யார் என விசாரிக்க வேண்டும் எனவும் இது போன்ற கையாடல்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்று உள்ளதா என மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்க ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் ஓட்ட பட்ட போஸ்டரால் பரபரப்பு. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - கன்னியாகுமரி மாவட்டமுதன்மை மற்றும் அமர்வுந்திமன்றம் மாகப்சபவில PRINCIPALDISIRIGT SEssloNs CoURTKAINYAAUMARI DISIRICTA4 ' COMBINED COURT NAGERCOIL, KANNIYAKUM வளாசம் 2026 2027 aplad S02G eiqral O ஈரும் ~ர்  م ا bir runucnucnms LLe L கன்னியாகுமரி மாவட்டமுதன்மை மற்றும் அமர்வுந்திமன்றம் மாகப்சபவில PRINCIPALDISIRIGT SEssloNs CoURTKAINYAAUMARI DISIRICTA4 ' COMBINED COURT NAGERCOIL, KANNIYAKUM வளாசம் 2026 2027 aplad S02G eiqral O ஈரும் ~ர்  م ا bir runucnucnms LLe L - ShareChat