சிவனுடைய மந்திரங்கள்
20 Posts • 3K views
*இறைவனின் வடிவம்* *திருமுறைகள்*! இறைவன் மந்திர வடிவமாக உள்ளான். திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில் மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர் இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப் பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார் என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார். திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான். நியாசம் = வைப்பு, பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல். திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை, சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர் இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்! கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும். திருச்சிற்றம்பலம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #திருமுறை #பன்னிரு திருமுறை
6 likes
14 shares
*இறைவனை உணரச்செய்யும்* *அற்புத மந்திரம்*! கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும் வழி செய்யும் ஒரு அற்புத மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரம் ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம் ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி: தமேவ பாந்தமனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இந்த மந்திரம் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் இதை பாராயணம் செய்வது கடினம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள தாயுமானவரின் பாடலை பாராயணம் செய்யலாம் கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால் தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால் விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் – அந்த உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி. இந்த அற்புத பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனை உணர்ந்து அவர் அருள் மழையில் நனைந்து சிறப்பாக வாழலாம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சமஸ்கிருதம் பலன் #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
14 likes
6 shares
*சூட்சும பஞ்சாட்சரம்.* பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூட்சுமம் என்று இரண்டு வகைப்படும். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். ஆரம்பநிலையில் சமயதீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை விசேஷ தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும். எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகலநலன்களையும் தரவல்லவை. சிவய நம” என்ற சூட்சும பஞ்சாட்சர மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது. சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன். ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம் நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'சிவாயநம' என்பதன் பொருள் அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே” சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே” திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே” சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...” திருமூலர் அருளிய *சிவய நம*சூட்சும சிவ மந்திரத்தின் விளக்கம் தொடர்பான ஒரு ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉ஓம் நமசிவாய 🕉 #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿
17 likes
23 shares