வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
3.1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மத்திய பிரதேசச் சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.... இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது கணவரிடம் வந்து அதே வீட்டில் காதலனையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். இதற்கு கணவர் முற்றிலும் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனின் இந்த மறுப்பால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரது தலையை அடித்து உடைத்துவிட்டு, காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை நாடியுள்ளார். 4 பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், கணவனைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் காதலனை வீட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நிலையத்திற்கே சென்ற விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
812 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அந்தோணி போதே சேர்ந்தவர் கங்கம்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ன மல்லையா என்பவருக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் மட்டும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்னும் இல்லையா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார.... எனவே கங்கம்மா அவரது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது நரசிம்மலு கங்கம்மா வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த கங்கம்மாவின் மூத்த மகனான 15 வயதுடைய வீரேந்திரா அவரது தாயின் செயலை கண்டித்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த கங்கம்மா அவரது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 10 தேதி இரவோடு இரவாக வீரேந்திராவை கொலை செய்து யாருக்கும்தெரியாமல் உடலை சுடுகாட்டில் புதைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரேந்திராவை இரண்டு வருடங்களாக தேடி வந்த நிலையில் கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் "இரண்டு வருடங்களாக போலீசார் மகனை கண்டுபிடிக்கவில்லை" என வழக்கு பதிவு செய்திருக்கிறார. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி மூலம் போலீசாருக்கு கங்கம்மாவின் கள்ள காதல் குறித்து தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாககங்கம்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவரே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொன்று நடனமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீரேந்திராவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்த போலீசார் கங்கம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா நேரு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கம்மாவின் உடலை அடக்கம் செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கள்ள காதலன் நரசிம்மலுவை தேடி வருகின்றனர். பெட்ரா தாயே கள்ளக்காதலை கண்டித்ததால் 15 வயது மகனை கொன்று புதைத்து இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
581 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கன்னிவாடி ரெட்டியார் பட்டியைச் காலனியை சேர்ந்த காசிராஜா (வயது 42). அவரது மகன்கள் சஞ்சய் (வயது 20) மனோஜ் குமார் (வயது 21) வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காசிராஜன் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எ எழுந்து பார்த்தபோது தனது மனைவி மருதாயம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். எனவே உடனடியாக தனது மகன்களுடன் காசிராஜன் தனது மனைவியை தேடி சென்ற போது வீட்டின் வெளியே மருதாயம்மாள் இல்லாததை அடுத்து பாலசுப்பிரமணியம் வீட்டில் பாலசுப்பிரமணியம், மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து கணவன் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தனது உறவினரான வாடிப்பட்டி கச்சராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு (25) தகவல் தெரிவிக்கவே ஜானகிராமன் பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டச் சொல்லி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விட்டார். இதனையடுத்து நால்வரும் பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே ஜானகிராமன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளார். பாலசுப்ரமணியம் பதிலுக்கு அவர்களை தாக்கியதில் கடும் கோபமடைந்தநால்வரும் பாலசுப்ரமணியத்தை அருகில் இருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) எடுத்து அடித்து கொலை செய்துவிட்டு அந்த கல்லை கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் பெர்ஜின், மனைவிக்கு தெரியாமல் சில நாட்களாக தனது நண்பனின் மனைவியுடன் கள்ளகாதலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாந்தி கணவரை கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவரது கணவர் பெர்ஜின் நண்பனின் மனைவியான அமலிவனஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை நாகர்கோவிலில் உள்ள கட்டையன்விளை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து பெர்ஜின் மனைவி சாந்திக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரது கவனர் கள்ளகாதலியோடு வசித்து வரும் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வெகு நேரமாக கதவினை தட்டியும் யாரும் கதவினை திறக்கவில்லை. இதனால் வீட்டின் முன்பு தனது இரண்டு மகன்களோடு அமர்ந்து முற்றுகையிட்டு கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பெர்ஜின் மனைவி சாந்தி. இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சாந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாந்தி, 50,000க்கு மேல் சம்பளம் வாங்கியும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதுவும் செய்யாமல் அவரது நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் , அண்டைவீட்டார் தன்னை இங்கிருந்து வெளியேறுமாறு கூறுவதாகவும், அவர்கள்தான் இவர்களுக்கு வீட்டினை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், எல்லாம் தெரிந்திருந்தது இதை அந்த அண்டைவீட்டார் செய்வதாகவும் கூறினார். மேலும், வனஜாவின் மூத்தமகன் கத்தியை எடுத்து குத்த முயற்சிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சாந்தி தனது கணவர் போலீசார் என்பதால் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கதறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
514 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் நாராயணகேட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தியம் - கல்பனா தம்பதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். தனக்கு சொந்தமான நிலத்தில் முத்தியம் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கல்பனாவிற்கு அதே மருத்துவமனையில் பணியில் இருந்த மனூரு மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டூ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு நாளும் காதலனுடன் நேரத்தைச் செலவழித்துவிட்டு கல்பனா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். : ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர்... விசாரிக்காத போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வீட்டில் இருந்தாலும் அடிக்கடி போனிலேயே நேரத்தைச் செலவழித்து இருக்கிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் முத்தியம், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார். தங்கள் உறவுக்கு கணவன் முத்தியம் தடையாக இருப்பதாக நினைத்த கல்பனா, காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். கொலை திட்டத்தின்படி கடந்த 16ஆம் தேதி இரவு, கணவனுக்கு அதிக அளவில் கல்பனா மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இருக்கிறார். அதன்படி போதையில் முத்தியம் தூங்கிய பிறகு, காதலன் சிண்டூவை வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கிராமத்தின் எல்லையில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு உடலை எடுத்துச் சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைத்து விட்டனர். மேலும் அந்த இடத்தில் கற்களைப் போட்டு குழி தோண்டப்பட்ட அடையாளம் தெரியாமல் செய்து விட்டனர். இரு நாட்கள் கடந்த நிலையில் கணவன் காணாமல் போய்விட்டதாக முத்தியம் ரெட்டியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் கல்பனா தெரிவித்து இருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்தனர். அப்போது அவர் அடிக்கடி தனது காதலன் சிண்டூவிற்கு போன் செய்வது தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். கல்பனா, சிண்டூ ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
502 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்யம்ரெட்டி (38). இவரது மனைவி கல்பனா (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயண்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா நர்ஸாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கல்பனாவுக்கும், சிந்து (30) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த கணவர் முத்யம்ரெட்டி கடும் வேதனை அடைந்தார். மனைவிக்கு அறிவுரை கூறினார். இதை ஏற்காத கல்பனா தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கல்பனா, கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை கொல்ல முடிவு செய்தார். இதை தனது கள்ளக்காதலன் சிந்துவிடம் கூறியுள்ளார். அதன்படி 10 நாட்களுக்கு முன், கணவரை மானூர் அடுத்த எல்கோய் கிராமத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு கள்ளக்காதலனை வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து முத்யம்ெரட்டியை சரமாரி அடித்து, உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்யம்ரெட்டி இறந்தார். பின்னர் சடலத்தை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். அதன்பிறகு வீடு திரும்பிய கல்பனா தனது கணவர் மாயமானதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால் முத்யம்ரெட்டி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கல்பனாவின் நடவடிக்கையை கண்காணித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், நேற்று முன்தினம் கல்பனாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்ததாக ​​ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார், நேற்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கல்பனாவையும், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலன் சிந்துவையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
847 காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி பானுப்பிரியா (30). மகேஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில், பானுப்பிரியாவுக்கும் வேன் டிரைவர் பூவரசனுக்கும் (24) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மகேஷ் குமார், ஊருக்கு வந்து மனைவியைக் கண்டித்துள்ளார். கடந்த மே 10-ஆம் தேதி இரவு, மகேஷ் குமார் வீட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூவரசன் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து மகேஷ் குமாரை குத்தினார். தடுக்க வந்த மாமனார் செல்லப்பனையும் பூவரசனும், பானுப்பிரியாவும் சேர்ந்து மாறி மாறி குத்திக் கொலை செய்தனர். கொலையை மறைக்க ரத்தக்கறையைத் துடைத்தெறிந்த இருவரும், இரு சடலங்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்னர், வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் சடலங்களை வைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டனர். வழியில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி, வெப்பாலம்பட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் சடலங்களை வீசி தீ வைத்து எரித்துள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் பானுப்பிரியாவிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதலனுக்காக ராணுவ வீரரான கணவரையும், வயதான மாமனாரையும் எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் இந்தச் செயல் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
9.8K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவருக்கும், ரேணுகா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில், ரேணுகாவின் தவறான பழக்கவழக்கங்கள் புயலை வீசியுள்ளன. கணவர் சீதாராமுக்குத் தெரியாமல், ரேணுகா மூன்று வெவ்வேறு ஆண்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் குறிப்பாக ரமணா ரெட்டி என்பவருடன் பழகியபோது, அவருடனான அந்தரங்கத் தருணங்களை ரேணுகா வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் இந்தத் தவறான செயல்பாடுகள் மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம் கணவர் சீதாராமுக்குத் தெரிய வந்துள்ளது. தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதாராம், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீதாராமின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் காரணமான அந்தரங்க வீடியோ மற்றும் ரேணுகாவின் கள்ளத்தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
970 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
சென்னை திருவொற்றியூர் மணலி பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார் இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பாதி சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.... இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும்இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் "எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்" என தெரிவித்துள்ளார். தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதி அளித்ததை அடுத்து மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் "என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், குண பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்" என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #கூடா நட்பு கேடாய் முடியும்.. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
991 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மைசூர் மாவட்டம் சரகுரு பகுதியில் கூலித் தொழிலாளி ஆன ஐவரப்பா என்பவர் கடந்த 16ஆம் தேதி சாலையோரம் பிணமாக கடந்தார்... முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் 'கள்ளக்காதல்' பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ஜவரப்பா தான் வேலை பார்த்து வந்த மேஸ்திரி சித்தேஷை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஜவரப்பாவுக்குத் தெரியவந்துள்ளது. மனைவியைக் கண்டித்த ஜவரப்பா, தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்று கருதிய அந்த ஜோடி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. திட்டமிட்டபடி, சித்தேஷ் தனது காரில் ஜவரப்பாவை மது குடிக்க அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போலச் சித்தரித்து உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது கைதான அம்ருதா மற்றும் சித்தேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
866 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர். இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴