கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼

💕குறும்புக்காரன்🐬
888 views
2 months ago
#காட்சி ஒன்று செய்தி இரண்டு. #🌻🌻காலை வணக்கம்🌻🌻 மேற்கு வங்கத்தில் SIR பணிகளுக்குப் பிறகான வாக்காளர் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு இதனால் தமிழ்நாடு உள்பட 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இதற்குப் பிறகே அறிவிக்க வாய்ப்பு. #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba!
💕குறும்புக்காரன்🐬
1K views
2 months ago
பெங்களூருவில் வெள்ளி விழா கொண்டாடிய கமலின் 8 திரைப்படங்கள் சாதனைகள் பலவிதம். அதில் ஒன்று வெளி மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டுவது. சிவாஜி, கமல், ரஜினி என பலரது படங்கள் வெளிமாநிலங்களிலும் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன. அதில் கமலின் சாதனை தனித்துவமானது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கமல் நடித்த எட்டு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளன. அதாவது பெங்களூருவில் 25 வாரங்கள் கமலின் எட்டு திரைப்படங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1. மரோசரித்திரா (1978 தெலுங்கு) பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிகா, மாதவி நடித்த மரோசரித்ரா திரைப்படம் 1978 இல் வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ்நாடு கர்நாடகா இரு மாநிலங்களிலும் தெலுங்கிலே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் 500 தினங்களுக்கு மேல் சபையர் திரையரங்கில் ஓடிய திரைப்படம், பெங்களூரு கல்பனா திரையரங்கில் 693 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. 2. சிகப்பு ரோஜாக்கள் (1978 தமிழ்) அதே 1978 தமிழில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்யராஜ் கதை, திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்தார். வித்தியாசமான கதையாம்சத்துடன் வந்த இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது. 3. சனம் தேரி கசம் (1982 இந்தி) 1982ல் கமல் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் சனம் தேதி கசம். நரேந்திர பேடி இயக்கத்தில் கமலுடன் ரீனாராய் நடித்திருந்தார். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்தப் படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. 4. சாகர சங்கமம் (1983 தெலுங்கு) கமல் நடிப்புக்கு உதாரணமாக திகழும் படங்களில் ஒன்று சலங்கை ஒலி. கே. விஸ்வநாத் தெலுங்கில் சாகர சங்கமும் என்ற பெயரில் எடுத்தத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் சலங்கை ஒலி. 1983இல் கமல், ஜெயப்ரதா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான சாகர சங்கமம் திரைப்படம் கர்நாடகா பொங்களூருவில் தெலுங்கில் வெளியாகி 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது 5. சுவாதி முத்யம் (1986 தெலுங்கு) கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் ராதிகா நடிப்பில் 1986இல் சுவாதி முத்யம் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. சுவாதி முத்யம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தெலுங்கில் பெங்களூருவில் வெளியாகி 175 தினங்களை கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது. 6. நாயகன் (1987 தமிழ்) கமலின் பெஞ்ச் மார்க் திரைப்படமான நாயகன் 1987இல் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம் தமிழிலேயே கர்நாடகாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெங்களூருவில் இந்தத் திரைப்படம் 175 தினங்களைக் கடந்து சாதனை படைத்தது. 7. புஷ்பக விமானம் (1987 தெலுங்கு) 1987 சசிங்கீதம் சீனிவாச ராவ் கன்னடத்தில் புஷ்பக விமான திரைப்படத்தை இயக்கினார். கமல் அமலா நடித்த இந்தத் திரைப்படம் வசனங்கள் இல்லாமல் உருவானது. மௌன பட காலத்திற்குப் பிறகு வசனமே இல்லாமல் உருவான இந்தியாவின் முதல் திரைப்படமாக அது அமைந்தது. நடிப்புக்கு சவாலாக அமைந்த இந்தத் திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா கேரளா தமிழகம் வடமாநிலங்கள் என இந்தியா முழுக்க வெளியானது. கர்நாடகா பெங்களூருவில் இந்த் திரைப்படம் 175 தினங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 8. அபூர்வ சகோதரர்கள் (1989 தமிழ்) கமலின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான அபூர்வ சகோதரர்கள் சந்தான பாரதி இயக்கத்தில் கிரேசி மோகன் வசனத்தில் 1989 வெளியானது. கமல் இதில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் குள்ள அப்புவாக நடித்த வேடம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடியது. ஒரு நடிகரின் படம் பிற மாநிலத்தில் வெள்ளி விழா காண்பதே அரிது. கமலின் எட்டு திரைப்படங்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் வெள்ளி விழா கண்டுள்ளன. இது வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத சிறப்பாகும். #மதிய வணக்கம் #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba! .
💕குறும்புக்காரன்🐬
1.2K views
2 months ago
44 years of #வாழ்வே_மாயம் 26, ஜனவரி. 1982 கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! இந்து தமிழ் திசை நாளிதழ். 26_01_2020 எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்‌ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’. ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான். கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள். ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள். கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார். தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ! ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. ‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா. #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #ரெங்கா! #renga-vamba! புன்னகை மன்னன் FB இருந்து .
💕குறும்புக்காரன்🐬
1.2K views
3 months ago
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்: தமிழ் ஹிந்து நவம்பர் 15, 2019 நந்து: தீமையின் ஆற்றல் * ஆளவந்தான், மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைமையும் முரட்டுத்தனமும் * குணா ‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது. அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும். தோற்ற கலைஞன் * சலங்கை ஒலி ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம். ‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி. சமூகப் போராளி * சத்யா சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார். வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார். காவியத்தலைவன் * நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள். அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர். ஆதித் தமிழன் * விருமாண்டி பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன். படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான். சரித்திரத்தின் ரணம் * ஹேராம் நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான். பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன். அழகிய கிழவி * அவ்வை சண்முகி அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட கோமாளி * அபூர்வ சகோதரர்கள் சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான். மௌனச் சித்தன் * பேசும் படம் இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம். ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார். அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.World Actor The GENIUS ONly KAMALHASSAN
💕குறும்புக்காரன்🐬
1.5K views
3 months ago
#மாலை வணக்கம் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba! ராஜபார்வை ஒரு பார்வை சினிமா விகடன் கட்டுரை சினிமாத் துறையில் கமல்ஹாசன் செய்த பல பரிசோதனை முயற்சிகள், முன்னோடியான ஆக்கங்கள் போன்றவற்றை இன்று நாம் வியக்கிறோம் அல்லவா? ஆனால் இதன் குறிப்பிடத்தக்க முதல் மைல் கல் என்று ‘ராஜ பார்வையை’ சொல்லலாம். இது கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரித்த முதல் திரைப்படம். (பின்பு இந்த நிறுவனத்தின் பெயர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலாக மாறியது). கமல் நடன உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்த விஷயம் நமக்குத் தெரியும். அவர் மெல்ல மெல்ல நடிகராக முன்னேறிய சமயத்தில் இயக்குநர் பாலசந்தரின் பார்வையில் பட்டு மேலதிகமாக பிரகாசிக்கத் தொடங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது திரைப்பட இயக்குநராவது. ஆனால் அப்போது அவரது விருப்பத்திற்கு முட்டுக்கட்டையிட்டார் பாலசந்தர். “நீ எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகலாம். ஆனால் நடிகன் என்கிற வாய்ப்பைத் தவறவிட்டால் பின்பு கிடைக்காது. பொருளாதார ரீதியாக உன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு உன் விருப்பமான திரைப்படங்களை உருவாக்கு” என்று மிக முக்கியமானதோர் அறிவுரையைத் தந்தார் பாலசந்தர். குருநாதரின் பேச்சைத் தட்டாமல் கேட்டதால் கமல் என்கிற அற்புதமான நடிகர் நமக்குக் கிடைத்தார். அல்லாமல் அன்றே அவர் இயக்குநராக முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அப்போதே காணாமல் போயிருக்கக்கூடும். இளம் வயதிலேயே கமல்ஹாசனுக்கு உலக சினிமாக்களின் பரிச்சயம் இருந்தது. ஆர்.சி. சக்தி, சந்தானபாரதி என்று கமலுக்கு நெருக்கமாக இருந்த நண்பர் குழு ‘சாம்கோ ஹோட்டலில்’ அமர்ந்து தாம் கண்ட சிறந்த அயல் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த அனந்து உலக சினிமாவில் தனக்கிருந்த ஆர்வத்தைக் கமலிடம் அவ்வப்போது கடத்திக்கொண்டிருப்பார். கோடார்ட், ஃபெலினி என்று மிகச்சிறந்த ஐரோப்பிய இயக்குநர்களின் படைப்புகளை கமல் கண்டிருப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதும் சுஜாதாவின் பத்தி எழுத்துக்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. எனவே அவை போன்ற நல்ல சினிமாக்களின் குறைந்த பட்ச முயற்சியையாவது தமிழில் நிகழ்த்த வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் கமலுக்குள் கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும். இப்படியோர் உள்ளார்ந்த விருப்பத்தை ஒருபுறம் உள்ளே வைத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி டூயட் பாடும் சாதாரணப் பாத்திரங்களில் நடிப்பதென்பது ஒரு கலைஞனுக்கு மனஉளைச்சலைத் தரும் விஷயம். சினிமாவில் தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக கமல் செய்த சமரசம் என்று இதைச் சொல்லலாம். ராஜபார்வை - கமலின் 100வது படம்! உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு முதல் கனலாக வெளிவருவதற்கு 99 திரைப்படங்கள் வரை கமல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம். ‘ராஜபார்வை’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த நூறாவது திரைப்படம். பார்வையற்ற ஓர் இசைக்கலைஞன், ஓர் அழகான பெண்ணுடன் காதலில் விழுவதும் அவர்களின் திருமணத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இந்தத் திரைப்படம். இதைக் கலைப்படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருந்த பெரும்பாலான வெகுசன சினிமாக்களிலிருந்து கணிசமான அளவு விலகி நின்ற மாற்று முயற்சியாக இருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவின் காதலர்களுக்குத் தடையாக இருப்பது சாதி அல்லது வர்க்கமாக இருக்கும். ஆனால் இதில் நாயகனுக்கு இருக்கும் குறைபாடு தடையாக இருந்தது. அதுவரையான இந்திய சினிமாக்களில் பொதுவாக கண் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் கையில் குச்சியைக் கொடுத்து கறுப்புக்கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் கறுப்புக் கண்ணாடி அணியாமல் பார்வையற்றவர்களின் உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்திருந்தார் கமல். ராஜபார்வை பொதுவாக கமல் சிறந்த திரைப்படத்தை உருவாக்கினாலும் அதில் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் வாசனையாவது இருக்கிறதா என்று திரை ஆர்வலர்கள் தேடுவது உண்டு. ‘ராஜ பார்வை'யும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆம். 1972-ல் வெளிவந்த ‘Butterflies Are Free’ என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் அழுத்தமான சாயலை ராஜபார்வை கொண்டிருந்தது. இதன் க்ளைமாக்ஸ் காட்சி, 1967-ல் வெளிவந்த ‘The Graduate’ என்கிற திரைப்படத்தின் க்ளைமாக்ஸின் அப்பட்டமான பாதிப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. `Butterflies Are Free’ இந்தத் திரைப்படமானது, லியோனார்ட் கெர்ஷே என்கிற அமெரிக்க நாடக ஆசிரியர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. டான் என்கிற கண் பார்வையற்ற இளைஞன், தன்னை மிகவும் கட்டுப்படுத்தும் தாயிடமிருந்து விலகி ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அவன் ஒரு கிட்டார் வாத்தியக்காரன். அங்கு பக்கத்து அறைக்குக் குடிவருகிறாள் ஜில் என்கிற இளம்பெண். ஜில் ஏறத்தாழ ஒரு ஹிப்பி வாழ்க்கையை வாழ்பவள். திருமணமாகி ஏழாம் நாளிலேயே விவாகரத்து பெற்றவள். சுதந்திரமாக வாழும் எண்ணத்தை உடையவள். டானுக்கும் ஜில்லுக்கும் குறைந்த நாள்களிலேயே மிக ஆழமான நட்பு உருவாகிறது. தனிமையில் உழலும் டான், ஜில்லின் களங்கமற்ற அன்பில் கரைந்து போகிறான். டானின் தாயின் வருகை இவர்களின் உறவில் ஒரு புயலை வீசுகிறது. ஜில் தன் சுபாவப்படி பிரிந்து போகத் தயாராக இருக்கிறாள். டான் மனதளவில் உடைந்து போகிறான். பிறகு என்னவாகிறது என்பதை நெகிழ்வுபூர்வமாக விவரிக்கிறது இறுதிக்காட்சி. நாடகத்தை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் உள்ளரங்கிலேயே நடைபெறும். டானாக எட்வர்ட் ஆல்பர்ட்டும் ஜில் ஆக கோல்டி ஹானும் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்கள். டானின் தாயாக நடித்திருந்த எலைன் ஹெக்கார்டின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. இவர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். ராஜபார்வையின் பிரதான பகுதி, இந்த அமெரிக்கத் திரைப்படத்தின் தூண்டுதலிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சியமாக உள்ளன. ராஜபார்வை திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன. படத்தின் தொடக்கமே ஒரு சேஸிங் காட்சிதான். கெளபாய் உடை அணிந்த ஒருவன் குதிரையிலிருந்து தாவி ஒரு வண்டிக்குள் ஏறுகிறான். பின்னணியில் டிரம்ஸ்ஸும் வயலின்களும் பரபரப்பான இசையைத் தருகின்றன. வண்டியில் வீரமுடன் தாவி ஏறியவன், பயணிகளின் கையால் அடிவாங்கி பரிதாபமாக விழுகிறான். திரை அப்படியே பின்னுக்குச் செல்லும் போது அது ஒரு ரீ-ரெக்கார்டிங் காட்சி என்பதை அறிகிறோம். இசைக்கலைஞர்கள் அந்தக் காட்சியின் மிகைத்தன்மையைக் கண்டு சிரிக்கிறார்கள். இது வெகுசன சினிமாக்களின் மீது கமலுக்கு இருந்த உள்ளார்ந்த கிண்டலின் வெளிப்பாடு என்று கருதலாம். ராஜபார்வை இசையமைப்பாளாக ஜி.வெங்கடேஷ் தோன்றி டிரம்ஸ் வாசிப்பவரிடம் (அபஸ்வரம் ராம்ஜி) சில திருத்தங்களைச் சொல்கிறார். அனைத்து இசைக்கலைஞர்களின் முன்னாலும் இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள் இருக்க, ஒருவரின் முன்னால் மட்டும் அது இல்லை. நாயகனுக்குக் கண்பார்வையில்லை என்கிற செய்தி ‘நச்’சென்று பார்வையாளர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சியுடன் சொல்லப்படுகிறது. டிரம்ஸ் ஒலிக்க பின்னணியில் டைட்டில் ஒடுகிறது. எந்தெந்த துறையை யார் கையாண்டார்கள் என்கிற குறிப்புடன் டைட்டில் காட்டப்படுவதுதான் அதுவரையான வழக்கம். (இன்றும் கூட). ஆனால் முதலிலேயே இந்த ஒழுங்கு கலைக்கப்படுகிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று எந்தத் துணைக்குறிப்பும் இல்லாமல் பெயர்கள் மட்டும் வரிசையாக ஓடுகின்றன. நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். பார்வையற்ற நாயகனைக் கொண்ட திரைப்படத்தின் தலைப்பு அதற்கு முரணாக ‘ராஜபார்வை’ என்று வைக்கப்பட்டிருப்பதே சுவாரஸ்யம். படத்தின் உள்ளே இதற்கொரு லாஜிக் சொல்லப்பட்டிருக்கிறது. நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருப்பதன் காரணமாக எப்படி பாரபட்சமின்றி நீதி வழங்கப்படுகிறதோ, பார்வையற்றவர்களும் அப்படியே மற்றவர்களை சமமாக ‘பார்க்கிறார்களாம்’. இதன் casting வரிசையும் சுவாரஸ்யமானது. மிக அழகான கண்களைக்கொண்டிருக்கும் மாதவியை இதன் நாயகியாக இட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. பல ஃபிரேம்களில் இவருடைய கண்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது. ராஜபார்வை எல்.வி.பிரசாத் – இந்திய சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பெயர். ‘தாதாசாகிப் பால்கே விருது’ பெற்ற இவருக்கு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், ஸ்டூடியோ உரிமையாளர் என்று பல முகங்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முக்கியமான அடையாளம். இவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து ‘ராஜபார்வைக்காக’ அணுகிய போது நடிக்கத் தயங்கினாராம். பிறகு, ‘ஒரு நாள் மட்டும் நடிக்கிறேன். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்த பின்புதான் நடிப்பதைத் தொடர்வேன்’ என்று நிபந்தனை விதித்தாராம். இந்தத் திரைப்படத்தில் குறும்பும் நகைச்சுவையும் பேத்தியின் காதலுக்கு ரகசியமாக உதவும் தாத்தாவாக இவரின் பாத்திரம் சுவாரஸ்யமானது. வயதை மறக்க வைத்த துள்ளலுடன் இவர் நடித்திருந்தது சிறப்பாக இருந்தது. ராஜபார்வை அதே சமயத்தில் தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருந்ததால், தெலுங்கு ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகம். தங்களுக்குப் பரிச்சயமான ஒரு முகம் இருந்தால் இதர மாநிலங்களின் ரசிகர்கள் அந்நியமாக உணர மாட்டார்கள். பிற்காலத்தில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்பட்ட இந்த வணிக உத்தியை முதலில் பயன்படுத்தியவராக கமலைச் சொல்லலாம். நாயகனின் சித்தியாக K. P. A. C.லலிதா அட்டகாசமாக நடித்திருந்தார். நாயகனிடமுள்ள சொத்துதான் இவரது நோக்கம் என்றாலும் அதை மறைத்து தேனொழுக பேசி அன்பு காட்டும் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். மலையாள ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் கமல் ஏற்கெனவே பார்வையாளர்களை கணிசமாக சம்பாதித்து வைத்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ராஜபார்வை இது தவிர கமலின் சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசனும் சிறிய பாத்திரங்களில் தோன்றியிருந்தார்கள். சந்தானபாரதி, கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, சித்ரா, டெல்லி கணேஷ் ஆகியோரும் வந்து போனார்கள். கமலின் நண்பனாக நடித்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் தனது நகைச்சுவையின் மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினார். இவர் கமலுக்கு முகச்சவரம் செய்து கொண்டே.. ‘அப்படின்னா.. நானெல்லாம் எதுக்கு இருக்கேன்.. செரைக்கறதுக்கா..?” என்று தன்னிச்சையாகக் கேட்டு விடும் காட்சி நகைப்புக்குரியது. ‘ரிடிகுலஸ்.. ரிடிகுலஸ்’.. என்று ஹைப்பர் டென்ஷன் ஆசாமியாக மகளின் காதலை எதிர்த்து அவ்வப்போது வெடிக்கும் தந்தை பாத்திரத்தை தனுஷ்கோடி ஏற்றிருந்தார். பார்வையற்றவர்களின் நடைமுறை வாழ்வியல் இந்தப் படத்தின் காட்சிகளில் மிக அருமையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படம் உண்மையிலேயே ‘ராஜ பார்வை’யைப் பெற்றிருந்தது எனலாம். ஆம். இதற்கு இசை இளையராஜா. பார்வையற்றோர்களின் பள்ளியில் சிறார்கள் பாடும் மிக நெகிழ்வான வரிகளில் தொடங்கி அப்படியே அதை ரொமான்ஸின் உச்சிக்குக் கொண்டு செல்ல ராஜாவால்தான் முடியும். ‘அந்திமழை பொழிகிறது’ என்னும், இன்றைக்கும் தன் இளமையை இழக்காத பாடல்தான் அது. இளையராஜா + வைரமுத்து என்னும் புதிய காவியக்கூட்டணி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்த நேரம். ‘சிப்பியில் தப்பிய நித்திளமே… ரகசிய ராத்திரி புத்தகமே’ என்று வார்த்தைகளில் மதுவைக் கலந்து கிறக்கத்தை ஏற்படுத்தினார் வைரமுத்து. எஸ்.பி.பி & எஸ்.ஜானகி என்னும் கூட்டணி இந்தப் பாடலை அதன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. ராஜபார்வை சோகமான பாடலின் இடையே உற்சாகம் கொப்பளிக்கும் இடையிசையை உறுத்தல் இல்லாமல் மிக ஒத்திசைவுடன் கலக்கும் லாகவம் ராஜாவிற்கே உரியது. ‘விழியோரத்துக் கனவும் வந்து’ என்கிற பாடலில் இந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கும். ‘விடியும் எனும் பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்கிற மிக அருமையான வரியுடன் கூடிய இந்தப் பாடலை எழுதியிருந்தவர் கங்கை அமரன். கமல்ஹாசன் மற்றும் சசிரேகா இந்தப் பாடலை உருக்கமாகப் பாடியிருந்தார்கள். சசிரேகாவின் மிக இயல்பான குரல் இந்தப் பாடலுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது. ‘அழகே அழகு’ என்னும் பாடலை எழுதியிருந்தவர் கண்ணதாசன். பார்வையற்ற நாயகன், தன் இணையின் அழகை தொட்டுத் தடவி விவரிக்கும் பாடல். ‘ஒரு அங்கம் கைகள் அறியாதது’ என்பதில் கவிஞரின் குறும்பு வெளிப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருந்தார். இந்தித் திரைப்படங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பரூன் முகர்ஜி என்கிற வங்காளக்காரர்தான் இதன் ஒளிப்பதிவு. ‘அந்திமழை பொழிகிறது’ என்கிற மாண்டேஜ் பாடலில் ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்திருக்கும். மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் கமலின் ஓவியம் அப்படியே மெல்ல மெல்ல காட்சியாய் மாறுவதை பிற்காலத்திய கிராஃபிக்ஸ் ஜாலங்களின் முன்னோடி பரிசோதனை எனலாம். இதைப் போலவே மாதவி, தன் காதலைச் சந்திப்பதற்காக மிக பரபரப்பாக காத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு மட்டும் நேரம் மிக மிக மெதுவாக ஓடுவது போன்று சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிக் கோர்வை சுவாரஸ்யமானது. ஒரே ஃபிரேமில் மாதவியின் அசைவு இயல்பாக அமைந்திருக்க, மற்றவர்களின் அசைவு ஸ்லோ மோஷனில் வருவது ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. ராஜபார்வை கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருந்தார். கமல்ஹாசனோடு இணைந்து சந்தானபாரதி, அனந்து, பாலகுமாரன் ஆகியோரும் வசனம் எழுதுவதில் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இப்படியொரு திறமைசாலிகளின் கூட்டணியால் உருவானதின் காரணமாக, இன்றைக்கும் ‘ராஜபார்வை’ தன் இளமை உற்சாகத்தை இழக்கவில்லை என்பதை இப்போதைய தலைமுறையினர் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதின் மூலம் உணர முடியும். முகநூல் பதிவு தரவு. நன்றி: புன்னகை மன்னன்
💕குறும்புக்காரன்🐬
1K views
4 months ago
#😇நம்மவர் கமல்😎 #ரெங்கா! #renga-vamba! சிகப்பு ரோஜாக்கள்: தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தை பூர்விகமா கொண்ட ராமன் ராகவ், சிறுவயதில் அம்மா, மனைவி போன்றோரால் ஏற்பட்ட வருத்தங்கள் காரணமா பெண்களை கண்டாலே வெறுக்கும் நிலை உருவாகி எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க என்ற நிலைக்கு போய் மும்பை மாநகரத்தையே நடுங்க வைத்தவன். சாலையில் படுத்திருக்கும் பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள், சிறுமிகள் என யாரையும் இவன் விட்டு வைக்கவில்லை, அந்த அளவு பெண் வெறுப்பு இவனுக்கு. மும்பை இரவுகளை தூங்காத இரவுகளாய் ஆக்கி வைத்திருந்தான் இவன். பெண்கள் வெளியே வரவே பயந்தனர்.இது நடந்தது 60களில். மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பபட்டு அப்போதைய ஆளும் அரசுக்கு பெரிய நெருக்கடி உண்டாக்கிய விசயம் இது. ஒரு வழியாக சைக்கோ ராமன் ராகவ் கைது செய்யப்பட்டு ம..... ண தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்தும் விடுதலையாகி இயற்கையாக தான் இறந்து போனான். இதை ஒரு மூலக்கதையாக மட்டுமே பாரதிராஜா எடுத்துக்கொண்டார், தன்னுடைய திரையுலக மந்திரிசபையில் முக்கிய மந்திரிகளில் ஒருவரான பாக்யராஜை வசனம் எழுத கூட வைத்துக்கொண்டு பாரதிராஜாவே திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கினார். இப்பட நாயகன் கமல் ரோடு ரோடா போய் ராமன் ராகவ் மாதிரி கொ.. செய்யல, தனக்கு பிடித்த பெண்களை ஒரு ஆடம்பர அழகான வாலிபனான கமல் காதல் வலையில் விழ வைத்து அவர்களை முடிப்பதுதான் கதை. சிறுவயதிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட கமல் இவ்வாறு செய்வதாக ப்ளாஷ்பேக் விரியும். ஒரு வீட்டில் விசுவாசமாக இருந்த நிலையில் அந்த வீட்டு எஜமானியம்மா தவறாக நடந்த நிலையில் வீட்டு ஓனரான எஜமானர் வந்து அவர் மனைவியை கொ.செய்ய , இந்த பொம்பளைங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க என ஆரம்பிக்கிறார், வீட்டு வேலைக்காரனான அந்த சிறுவன். அந்த வாரிசு இல்லாத கோடீஸ்வர முதலாளிக்கு புள்ளையாகி போகிறார் அவர்தான் கமல். வளர்ந்து வாலிபன் ஆனாலும் தனது வளர்ப்பு தந்தையும் பெண்களால் பாதிக்கப்பட்டார் என அவருக்காகவும் பெண்களை ஏமாற்றி கொ. செய்கிறார். இறுதியில் இவரிடம் காதலித்து மனைவியாக மாட்டிய ஸ்ரீதேவி இவரிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை. கமல் வடிவுக்கரசியை ஏமாற்றுவது, அவரை கொ.. செய்வது, கமல் பற்றி தெரிந்து கொண்ட ஹோட்டல் சர்வர் பாக்யராஜ் கமலால் , கொ...படுவது என அதிர்ச்சியூட்டும் அட்டாக் காட்சிகள் படத்தில் உண்டு. அழகான கணவன் அன்பான கணவன் என நினைத்துக்கொண்டு கனவுலக வாழ்க்கையில் சஞ்சரிக்கும் ஸ்ரீதேவி ஜன்னலை திறந்தவுடன் பார்க்கில் பூமிக்கு அடியில் இருந்து வரும் கை, அதற்கு இளையராஜா கொடுத்திருக்கும் அமானுஷ்ய இசை போன்றவற்றை தனியொருவன் இரவு 12மணிக்கு மேல் உட்கார்ந்து கேட்டால் கண்டிப்பா அவனை அசைத்து பார்த்துவிடும். கிராமப்படம்தான் தன்னால் எடுக்க முடியும் என்று இருந்த முத்திரையை பாரதிராஜா தகர்த்து எறிந்த படம் இது. இப்படத்தில் ஒரு பூனை ஒன்று உண்டு அதுவும் அமானுஷ்ய பூனைதான். இதை தனது நண்பர் ஆர்சி பிரகாஷ் என்பவரிடம் இருந்து பெற்றாராம் பாரதிராஜா. கமலுக்கு பதில் இப்படத்தில் சிவக்குமாரை தான் நடிக்க வைக்க இருந்தாராம் பாரதிராஜா, உதவி இயக்குனர்களும் அவர் இதற்கு சரியாக வர மாட்டார் என கருத்து தெரிவித்து, ஒரு வழியாக கமல் களமிறக்கப்பட்டார் என கூறப்படுகிறது. கமலும் முன்பே ராமன் ராகவ் பற்றி அறிந்து இருந்தாராம். ரெட்ரோ காலத்து பட்டன் அப் சட்டைகள், டைகள் போன்றவற்றை பார்த்து பார்த்து செய்தாராம் கமல், ஸ்டைலான காஸ்ட்யூம்ஸில் கவனம் செலுத்தி இருக்கிறார் இவர். மேலும் தோற்றம் அமெரிக்க சைக்கோ சீரியல் கில்லர்களாக இருந்த டெட் பண்டி, ஆல்பர்ட் டிசால்வோ போல் தன்னை நடை உடைகளில் உருமாற்றிக்கொண்டாராம் கமல். படத்தில் பாடல்களுக்கு அதிக வேலையில்லை நிறைய பாடல்கள் இருப்பது போல் தெரியும், ஆனால் இரண்டு பாடல்கள்தான் படத்தில்.ஆபிஸ் குமாஸ்தாவாக வரும் கவுண்டமணி சில காட்சிகளில் கலகலக்க வைத்திருந்தார். பின்னணி இசையை பர பரவென அமைத்திருந்தார் இளையராஜா. இவரின் பின்னணி இசை இல்லையென்றால் சிரமப்பட்டு நடித்த கமல், சிரமப்பட்டு இயக்கிய பாரதிராஜா, வசனம் எழுதிய பாக்யராஜ் அனைவரின் உழைப்பும் பெரிய அளவில் தெரியாமல் போய் இருக்கும். படத்தில் இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ். கிராமத்து ஒளிப்பதிவை பாரதிராஜாவின் படங்களில் மேற்கொண்ட இவர், டார்க்கான இரவுகளில் நடக்கும் காட்சிகளை அழகாய் படமாக்கி இருந்தார். 1978 அக்டோபர் 28 தீபாவளியன்று கமல் , ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் இது . இதே தீபாவளி நாளன்று கமல் , ஸ்ரீதேவி நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா என்ற அமைதியான படமும் ரிலீஸ் ஆகியது. இறுதியில் சிகப்பு ரோஜாக்கள் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. ம் அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம். இதையெல்லாம் டிஜிட்டலில் கொண்டு வரலாம். ஆனால் டிஜிட்டலில் வந்தாலும் ரஜினி படமாய் இருந்தாலும் கமல் படமாய் இருந்தாலும் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படங்கள்தான் வருகிறது. கவுண்டமணி கோவில் காளைல கேட்டது மாதிரி ஏன் நம்ம நாட்ல பணமே இல்லையா இருந்த பணம்லாம் என்னாச்ச்சுனு கேட்பாரே, அது போல தமிழ் சினிமால எத்தனையோ நல்ல படம் வந்திருக்கு அதை எல்லாம் டிஜிட்டலில் கொண்டு வாருங்கள் நல்லா இருக்கும். சிகப்பு ரோஜாக்களை எல்லாம் பின்னணி இசைக்காகவே டிஜிட்டலில் பார்க்கலாம் கண்டிப்பா வொர்த்.CREDIT: goes to Abiram Arunachalam முகநூல் பதிவு தரவுகளில் இருந்து #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼
💕குறும்புக்காரன்🐬
1.7K views
4 months ago
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 தி ஒன்லி ஒன் மேன் தி சீனியஸ் #கமல்ஹாசன் #ரெங்கா! #renga-vamba! Source & Courtesy: WHISTLE முகநூல் பதிவு தரவுகளில் இருந்து