இறை சிந்தனை🌹

ரவிசங்கர் ராஜா, ஆரணி
839 views
11 hours ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #மூங்கிலுக்குள் #ஈரம் #பாடல் பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே! நூல்: #திருவாசகம் (ஆனந்த பரவசம் 89) #திருவாசகம் #எட்டாம் #திருமுறையில் 005வதாக #மாணிக்கவாசகர் #திருப்பெருந்துறையில் அருளிச்செய்த #திருச்சதகத்தில் உள்ள 100 பாடல்களில் #விச்சுக் #கேடு #பொய்க் #காகா என்று தொடங்கும் #ஆனந்த #பரவசம் என்ற தலைப்பில் உள்ள 89வது பாடல். #பொருள்: பொய்யான மாயைகளை விலக்கி மெய்யான இன்பம் தருகிறவனே, உன்னை வணங்குகிற அடியவர்களுக்கு உன்னுடைய அழகான திருவடியைக் கொடுத்து அருளுகிறாய், உனது திருவருள் மிகவும் அரிதானதுதான்! ஆனால், என் மனமோ வலிமை பொருந்திய மூங்கிலைப் போன்றது. நான் செய்த பிழைகளும் நிறைய. எனக்கும் உன் கருணை கிடைக்குமா? விரைவாக வா, என்னுடைய தவறுகளை உடைத்துப் பொடிப்பொடியாக்கிக் குளிர்ச்சியான உன்னுடைய பாதங்களைக் கொடுத்து அருள் செய்! ’கல் போன்ற மனம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இங்கே #மாணிக்கவாசகர் #மூங்கில் #போன்ற #மனம் என்கிறார். இதன் அர்த்தம், ’கொஞ்சமும் ஈரப்பசை (அன்பு) இல்லாத, கடினமான மனத்தைக் கொண்டவன் நான், எனக்கும் நீ அருள் செய்வாயா?’ நிச்சயம் செய்வான், ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள் ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே! #திருச்சிற்றம்பலம் பேச்சாற்றல் வளர்க்கும் பதிகம். திருமாலை மாற்று பதிகம். ♥♥♥♥♥♥♥♥♥♥♥ பதிக சிறப்பு:- ------------------------- 1) அகில உலகத்தில் எந்த மொழியிலும் இப்படி ஒரு தமிழ் இலக்கணத்தை காணமுடியாத அதி அற்புத பதிகம். 2) திருமாலை மாற்று பதிகம்" *இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடல் வரியும் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகப் படித்தால் ஒரே பொருளைத் தரும். 3) இதை அருளியவர் தன் உயிர், மூச்சு, உடம்பு இம்மூன்றும் தமிழால் ஆனது என தமிழுக்காக அர்ப்பணித்த "தமிழாகரன்" திருஞானசம்பந்தப் பெருமான் ஆகும்.* பதிக பலன்:- திருஞானசம்பந்தர் அருளிய இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்பவர்கள் தமிழ் மொழியிலும், பேச்சாற்றலும் சிறந்து விளங்கி தமிழாகரன் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமானுடைய ஆசியை பெறுவார்கள். 🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸 மூன்றாம் திருமுறை. --------------------------------------- பதிகம்: 117. ---------------------- தலம் : சீகாழி ♦♦♦♦♦♦ திருமாலைமாற்றுப்பதிகம் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> பண் - கௌசிகம்* ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ திருச்சிற்றம்பலம். யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 1 யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 2 தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 3 நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 4 யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. 5 மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. 6 நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண. 7 நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 8 காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. 9 வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. 10 நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே..11 திருச்சிற்றம்பலம் கஷ்டத்தில் இருப்பவர்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திப் பார்ப்பவர் ஈனப்பிறவி என்றும்,... அந்தக் கஷ்டத்தைத் தன் வசமாக்கும் உள்ளத்தை இறைவன் என்றும் நம்புகிறது மனம்... உன் வரிகள் கண்டு ஆவல் கொண்டு ஆர்ப்பரிக்கும் என்னிதயத்தை என்ன செய்வதோ என் கண்ணாளா வார்த்தைக்கு எதிர் வார்த்தை தருவதில் நீயோர் பெரும் சாமர்த்தியமான புத்திசாலி என்பதாலா கவிதை இயற்றும் நானும் கற்றுக் கொள்ள விழைகிறேன் என் கவியின் அற்புதமான வரிகளுக்கு ரசிகையாகிறேன்😂 செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறையாக இல்லாமல் போகும் 📝 சில சமயங்களில் நிதானத்தை இழந்தால் பல சமயங்களில் வேதனை பட நேரிடும் சிந்தித்து பேசுங்கள் செயல் படுங்கள்,, உங்கள் #வார்த்தைக்கு மதிப்பளிக்காதவர்... உங்கள் #உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்.. உங்கள் ஏழ்மையை #ஏளனம் செய்பவர்... #தனது #தேவைக்காக மட்டும் அன்பு காட்டுபவர்.. #மனதில் #வன்மத்தை வைத்து கொண்டு வெறும் வார்தையால் உறவாடுபவர்... உங்களிடம் ஒரு காரியத்தை செய்து கொள்ள உங்களை பற்றி பெருமை பேசுபவர்.. தன்னை #காப்பாற்றி கொள்ள உங்களை #ஆபத்தில் #தள்ளிவிடுபவர்... இவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய
ரவிசங்கர் ராஜா, ஆரணி
657 views
11 hours ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் சிவ காலை வணக்கம் பாடல்-4 ********** அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் எனைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய் வன்பராய் முருடொக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்பராய்த் துறை யாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே. 💐 யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன? 💐 இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது. 💐 சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா? 💐 இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. 💐 உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய். 💐 உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை. 💐 உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. 💐 எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை. 💐 சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. 💐 சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது. 💐 கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. 💐 வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. 💐 இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது. 💐 அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய். 💐 பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய். 💐 உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. 💐 உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது. 💐 இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை. 💐 சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன. 💐 ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை. 💐 தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு. 💐 வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய். சிவசிவ #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம் #திருக்கருகாவூர் #ஆறாம் #திருமுறை #பதிகம் #பாடல் பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. #பொழிப்புரை பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் . #திருச்சிற்றம்பலம் கெட்ட பழக்கம் என்பது வேறு கெட்ட குணம் என்பது வேறு நம்முடைய கெட்ட பழக்கம் எந்த வகையிலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஆகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை.அதில் கவனம் இருக்கும் பட்சத்தில் கெட்ட பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமே. ஆனால் கெட்ட குணம் அப்படி அல்ல.அது அடுத்தவருக்கு தீங்கிழைக்கவே உருவாவது.அதீத பொறாமைப்படுவது, தன் தேவைக்காக அடுத்தவர்களை வஞ்சிப்பது,நன்றி மறத்தல், அடுத்தவர்களை அவமானம் செய்தல், அதீத சுயநலம்,புறம் பேசுதல், நம்பியவரை ஏமாற்றுவது,ஒருவரை தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு அதீத பாதகம் செய்ய முனைவது.இவை போன்றவை கெட்ட குணங்கள். ஒரு முதிர்ச்சி வந்து விட்ட பிறகு தான் நம்மால் கெட்ட பழக்கத்திற்கும், கெட்ட குணத்திற்கும் வித்யாசப்படுத்தி பார்க்க முடியும். கெட்ட பழக்கம் இருந்தாலும், ஒருவன் கெட்ட குணமுடையவன் அல்ல என்று தெரிந்து அவர்களிடம் பழகுவதிலோ,போற்றுவதிலோ தவறு இருக்காது. #திருச்சிற்றம்பலம் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் இல்லாமல் போனதும் நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் சொர்க்கம் எனக்கு, தேவையில்லை என, ஆயிரம் முறை, சொன்ன போதும், தள்ளிக்கொண்டு, தானிருக்கின்றது, நரகத்திற்குள், வலுக்கட்டாயமாக, இந்த வாழ்க்கை.. #வாழ்க்கையின், கடைசி காலகட்டத்தில், சொர்கத்தையோ, நரகத்தையோ, நமக்கு காட்டுவது, கடவுள் அல்ல, காலம் முழுதும், கஷ்டப்பட்டு வளர்த்த, நம் மழலைசெல்வங்களே. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் ஆறுதல் என்பதற்காக எல்லோரிடமும் மனதைத் திறந்து பேசிவி முடியாது... எனக்கு உன்னை பிடிக்கும்’ என்பதைக் காட்டிலும், ‘உனக்கு என்னை உண்மையாகப் பிடித்திருக்கிறது’ என்பதுதான் முக்கியம். ஏனெனில், நம்மை புரிந்துகொள்ளும் ஒருவரின் அருகாமை மட்டுமே காயமடைந்த மனதிற்கு மருந்தாக மாறும்... அதுவே சில நேரங்களில் வார்த்தைகளைக் கூடமீறிய பெரும் ஆறுதலாகி* விடுகிறது... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்