📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
686 views
4 months ago
தமிழகம் முழுவதும் மழை: இந்த புயல் வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று இரவு வரை மழைக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை: மேலும், தலைநகர் சென்னைக்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சென்னையில் மழையின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரிப்பு. மேலும், இரவு 8 மணிக்கு நீர் திறப்பை 3000 கன அடியாக அதிகரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பூண்டி ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும்: திட்வா புயல் நாளைய தமிழக கடலோர மாவட்டங்களில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும் கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மத்தியம் முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ம் தேதிக்குப்பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
810 views
4 months ago
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44), அவரது மனைவி ஜெயலட்சுமி (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்களின் உறவினரான காளிமுத்து (29) என்பவரும் பனியன் கம்பெனியில் வேலைக்காகத் திருப்பூர் வந்து, உறவினர் என்ற முறையில் சந்தனக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சந்தனக்குமாருக்கு, காளிமுத்து மாமா உறவு முறை ஆகும். ஒரே வீட்டில் வசித்ததால், காளிமுத்துவுக்கும் சந்தனக்குமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைக் கண்ட சந்தனக்குமார், இருவரையும் கண்டித்தும், அவர்கள் அந்த உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், சந்தனக்குமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாமா இறந்த பிறகும், காளிமுத்து அதே வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இதனை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினரும் ஜெயலட்சுமியுடனான உறவு குறித்து இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால், வாழ்க்கையில் விரக்தியடைந்த காளிமுத்து மற்றும் ஜெயலட்சுமி இருவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் உடல் துண்டாகி உயிரிழந்தனர். இது குறித்துப் பழனி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
699 views
4 months ago
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி இப்ராகிம்.. இவரது மனைவி பெயர் கோகிலா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன.. இது காதல் திருமணமாகும்.. தற்போது இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வேலூர் காட்பாடி வாடகை வீடு இவர்கள் காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.. இதே காட்பாடியில் சுனில் என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார்.. இவர் சென்னையில் ஒரு செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கோகிலாவுக்கும், சுனிலுக்கும் நட்பு ஏற்பட்டு இதுவே தகாத உறவாக வளர்ந்துள்ளது.. இந்த விஷயம் இப்ராஹிமுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட கோகிலா தயாராக இல்லை.. எனவே, கோகிலாவை பிரிந்து, குழந்தைகளின் நன்மை கருதி, அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கே சென்று விட்டார். கோகிலாவின் ஆண் நண்பர்கள் இதனால் கோகிலா, சுனிலின் கள்ளக்காதல் வேகமாக வளர்ந்தது.. இதனிடையே, கோகிலாவுக்கு, மணி, சதீஷ் என்ற 2 ஆண் நண்பர்கள் உண்டு.. இவர்கள் 2 பேருமே கோகிலாவுடன் சிறுவயது முதலே பழகி வருபவர்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி கோகிலாவை சந்தித்து செல்வது வழக்கமாம். இவர்களுடனும் கோகிலா உறவு வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் சுனில் கோகிலாவை கண்டித்துள்ளார்.. அடிக்கடி மது அருந்திவிட்டு, கோகிலாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, சுனில் சித்ரவதை செய்வதாக, தன்னுடைய நண்பர்கள் மணி, சதீஷிடம் சொல்லி புலம்பி உள்ளார்.. கோகிலாவுக்கு கள்ளக்காதலன் டார்ச்சர் உடனே நண்பர்கள் 2 பேரும் சுனிலிடம், கோகிலாவிடம் இனிமேல் தகராறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனாலும், சுனில் 2020ம் ஆண்டு மே 8ம் தேதி மதுபோதையில் சென்று கோகிலாவிடம் தகராறு செய்துள்ளார்.. "உனக்கு குடும்பம் இல்லை, என்னுடன் மட்டும்தான் பழக வேண்டும்.. நான் சொல்வதைதான் கேட்க வேண்டும், வேறு யாருடனும் பழககூடாது " என்று சொல்லி அடித்து உதைத்தாராம். இதே தகராறு மறுநாளும் நடந்துள்ளது.. இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன கோகிலா.. தன்னை நிம்மதியாக வாழ விடாத சுனிலை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார் கோகிலா.. நைசாக பேசிய கோகிலா உடனே நண்பர்கள் மணி, சதீஷ், தன்னுடைய அப்பா முத்து ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்து, விஷயத்தை சொன்னார்.. அதற்கு 3 பேருமே ஒப்புக்கொண்டர். பிறகு சுனிலுக்கு போன் செய்து, நைசாக பேசி வீட்டுக்கு கோகிலா வரவழைத்தார். வீட்டுக்கு வந்த சுனிலை, கோகிலாவின் அப்பா முத்து, மணி, சதீஷ் என 3 பேரும் சேர்ந்து தலையில் கத்தியால் வெட்டினார்கள்.. இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினார்கள்.. இதில் ரத்த வெள்ளத்திலேயே சுனில் இறந்துவிட்டார்,.. பிறகு சுனில் தலையை சிதைத்து, மூளையை மட்டும் வெளியே எடுத்து அருகிலுள்ள கிணற்றில் வீசினார்கள்.. சுனிலின் சடலத்தை அங்குள்ள கீரை தோட்டத்தில் வீசிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கீரை தோட்டத்தில் மூளை இல்லாத உடல் வேலூர் முழுக்க இந்த கொலை சம்பவம் அன்று நடுநடுங்க வைத்துவிட்டது.. பிறகு, கொலையாளிகள் 4 பேரையுமே போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தலைமையில் நடந்து வந்தது.. இதில் கடந்த வருடம் கோகிலாவின் அப்பா முத்து இறந்துவிட்டார். இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, கோகிலா, மணிகண்டன் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.. வேலூரையே உறைய வைத்த கொலையின் இந்த தீர்ப்பானது, பலரது கவனத்தை பெற்று வருகிறது #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
8.4K views
4 months ago
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி! மருத்துவமனையில் அனுமதி மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன? பஸ் விபத்து நேரிட்ட பகுதி குறுகிய சாலை என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்படுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வேகம் குறைந்த காற்று.. அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்! வானிலை மையம் அப்டேட் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் விசாரணைக்கு பிறகே, பேருந்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி அண்மைக்காலமாக பேருந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்வது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது, வாகனங்கள் விதி மீறல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
830 views
4 months ago
நெல்லையைச் சேர்ந்த பிரியா என்பவர், கோவையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவரைப் பார்க்க வந்த அவரது கணவர் பாலமுருகன், விடுதி அருகே வைத்துப் பிரியாவைக் கொலை செய்துள்ளார். . கொலையை அரங்கேற்றிய பாலமுருகன், பின்னர் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "துரோகத்தின் சம்பளம் மரணம்" என்று ஒரு ஸ்டேட்டஸை வைத்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலமுருகனைக் கைது செய்தனர். தனிப்பட்ட தகராறு அல்லது குடும்பப் பிரச்சினையின் காரணமாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது துரோகம் என அவர் குறிப்பிட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
652 views
4 months ago
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் "டிட்வா" புயல் நிலவி வந்தது. இது தொடர்ந்து நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவியது. அதன் பிறகு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று பகல் 11.30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும். அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து நேற்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், இன்று அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலையில் 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும். இதனால், இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 1ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 2ம் தேதி மற்றும் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4 மற்றும் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகளில் இன்று காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வரை காற்றின் வேகம் அதிகரித்து மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 1ம் தேதி முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்ச தீவு மாலத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பெய்தது. வேதாரண்யம் 19 செ.மீ, வேளாங்கண்ணி 13 செ.மீ, திருப்பூண்டி, நாகப்பட்டினத்தில் தலா 12 செ.மீ, தலைஞாயிறு 11 செ.மீ, பாம்பன், காரைக்கால் (காரைக்கால்) தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும், உள்ளாட்சித்துறையினரும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். * எங்கே இருக்கிறது புயல்? வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
861 views
4 months ago
சில ஆண்டுகளுக்கு முன்பு, சந்தனக்குமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரைச் சேர்ந்த காளிமுத்து (29), வேலைக்காக திருப்பூர் வந்தார். உறவினர் என்பதால், சந்தனக்குமார் அவரை தன் வீட்டில் தங்க அனுமதித்தார். இதன் காரணமாக, காளிமுத்துவுக்கும் ஜெயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரத்தை அறிந்த சந்தனக்குமார், இருவரையும் கண்டித்திருந்தார். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலால், சந்தனக்குமார் நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும், காளிமுத்து அந்த வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததுடன், இருவரின் உறவும் தொடர்ந்ததாக தெரிகிறது. இந்த கள்ளக்காதல் குறித்து காளிமுத்துவின் குடும்பத்தினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, ஜெயலட்சுமி மற்றும் காளிமுத்து நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் வந்தனர். பின்னர் அரங்கநாதபுரம் அருகிலுள்ள ரெயில் தண்டவாளத்தில், கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ரெயிலின் முன் பாய்ந்து உயிரிழந்தனர். இருவரின் உடலும் பல துண்டுகளாக சிதைந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து, பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
768 views
4 months ago
திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். 30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். காந்திபுரம் 100 அடி சாலை இரண்டாவது வீதி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த நிலையில் பாலமுருகனின் உறவினர் இசக்கிராஜா என்பவருடன் ஸ்ரீபிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜா whatsapp மூலம் பாலமுருகனுக்கு அனுப்பி உள்ளார். இதற்கு உட்ந்தையாக ஸ்ரீபிரியாவும் இருந்துள்ளார். அதை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று நேற்று முன் தினம் திருநெல்வேலியில் இருந்து கிளம்பிய பாலமுருகன் நேற்று காலை கோவை வந்துள்ளார். பின்னர் ஸ்ரீபிரியா வேலை செய்யும் டவுன்ஹால் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று உள்ளார். அப்போது ஸ்ரீபிரியா பாலமுருகனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதால் அவரை அங்கே விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீபிரியா மீண்டும் இரவு பாலமுருகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இசக்கியுடன்தான் இருப்பேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற பாலமுருகன் இன்று காலை தனது ஊருக்கு செல்வதாக கூறி ஸ்ரீபிரியாவின் தாய்மாமா உடன் ஸ்ரீபிரியா தங்கிருந்த மகளிர் விடுதிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மனைவி ஸ்ரீபிரியா காலை உணவருந்துவதற்காக வந்த போது அவரை கண்ட பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியாவின் தலை முடியை மடக்கி பிடித்து கழுத்து பகுதியில் ஐந்து இடங்களில் சரமாரியாக மகளிர் விடுதி வளாகத்திலேயே வெட்டி கொலை செய்து உள்ளார். மேலும் கொலை செய்து விட்டு , காவல் துறையினர் வரும் வரை அங்கிருந்த ஒரு இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்த பாலமுருகன், அதை புகைப்படமாகவும் எடுத்து 'துரோகத்தின் சம்பளம் மரணம்' என தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைத்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பிரியா தங்கியிருந்த விடுதிக்கு வந்துள்ளனர். பின்னர் விடுதியில் இருந்த சக பெண்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ஸ்ரீபிரியாவின் சடலத்தை கைப்பற்றியதுடன் அங்கிருந்த சிசிடிவி காட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அறிவாலுடன் அமர்ந்திருந்த பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி ஸ்ரீ பிரியா விற்கும் அவரது உறவினரான இசக்கி ராஜாவிற்கும் தொடர்பு இருந்ததும் அதனை தட்டிக் கேட்டது போதுதான் கணவன் மீது கோபப்பட்டு ஸ்ரீபிரியா கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் நேற்று காலை கோவைக்கு வந்த பாலமுருகன் நேற்றைய தினமே ஸ்ரீ பிரியாவை கொல்ல திட்டமிட்டு இருந்ததும் டவுன்ஹால் பகுதியில் சந்தித்த பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது அந்த பகுதியில் ஆட்கள் அதிகமாக இருந்ததால் கொலை செய்யாமல் விட்டு விட்டு இன்று காலையிலேயே மது அருந்திவிட்டு விடுதிக்கு வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
764 views
4 months ago
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் (43). இவரது பூர்வீகம் குமரி மாவட்டம் நாகர்கோவில். சுதந்திரகுமாரின் சகோதரிகள் இருவரும், கரடிகுளத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரை திருமணம் செய்துள்ளனர். இதனால் சுதந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கரடிகுளம் அருகே சி.ஆர்.காலனியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்காக 5 மாதமாக விடுமுறை எடுத்து படித்து கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு சி.ஆர்.காலனியில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தென்காசி மாவட்ட எல்கையான ஆலங்குளம்- பழங்கோட்டை சாலையில் சுதந்திரகுமாரை மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். சாலையோரம் கிடந்த சுதந்திரகுமார் சடலத்தை குருவிகுளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மதுபாட்டில்களும் கிடந்தது. எனவே மர்மநபர்கள், போதையில் ஆசிரியர் சுதந்திரகுமாரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, கொலையாளிகள் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சுதந்திரகுமார் செல்போனில் கடைசியாக யார், யாரிடம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது அஜித்குமார் உள்பட இருவரிடமும் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சுதந்திரகுமாரை இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'சுதந்திரகுமாருக்கும், நாலாட்டின்புத்தூர் அருகே ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் அஜித்குமார் (28), 17 வயது சிறுவனுக்கும் இடையே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை சுதந்திரகுமார், கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் இருவரையும் வருமாறு கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுதந்திரகுமாரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு இருவரும் பதற்றத்தில் பைக்கை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனாலும், செல்போன் உரையாடலை வைத்தும் சிக்கிக்கொண்டனர். அஜித்குமார் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் இருந்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்' என்றனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த குருவிகுளம் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். * தூத்துக்குடியில் வியாபாரி அடித்துக்கொலை தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன் (50). கடலை மிட்டாய் வியாபாரி. இவரது மனைவி இறந்துவிட்டார். 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 27ம்தேதி நாகராஜனின் பேத்திக்கு சடங்கு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக நாகராஜன் 28ம்தேதி நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான ஜெய்சங்கர்(27) என்பவர் நேற்று முன்தினம் நாகராஜன் வீட்டுக்கு சென்று, பேத்தி சடங்குக்கு அனைவருக்கும் மதுவிருந்து கொடுத்துள்ளீர். எனக்கும் மது வாங்கி தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நாகராஜன் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் கத்தியால் நாகராஜனை குத்தியதுடன், அங்கு கிடந்த உலக்கையால் அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிந்து, நாசரேத் அருகே வெள்ளமடம் பெட்ரோல் பங்க் அருகே பதுங்கி இருந்த ஜெய்சங்கரை நேற்று கைது செய்தனர். #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
673 views
4 months ago
திருமணம் 2 காரணங்கள் நான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க 2 முக்கிய காரணங்கள் இருந்தன... என்னை பற்றி ஒரு வதந்தி பரவியது.. மூத்த பெரிய தொழிலதிபர் ஒருவருடன், என்னை இணைத்து பேசப்பட்டது.. இது என்னுடைய பெரிய அதிர்ச்சியை தந்துவிட்டது.. இப்ராஹிம் ராவுத்தரே என்னிடம், உங்களை சினிமாவில் புக் செய்தால், சரியாக ஷூட்டிங் வரமாட்டீங்கள், நீங்கள் பெரிய இடம்" என்றெல்லாம் பேசினார்.. அந்த அளவுக்கு என்னை பற்றின வதந்தி தீயாய் பரவியது.. ஆனால் என்னுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த மனிரை ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. ஆனால், தவறான செய்தி நெருப்பு போல பரவியது.. நான் ஒரு நெருப்பு நான் நெருப்பு என்பது என்னுடைய பெற்றோருக்கு தெரியும்.. என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு எப்போதுமே போகாது.. ஆனால், இந்த வதந்தியை அவர்களால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.. மகளின் பெயர் கெடுகிறதே, நாளைக்கு திருமணம் நடக்காமல் போய்விடுமோ? என்று பயந்தார்கள்.. அதுவும் இல்லாமல் என்னுடைய அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது.. அதனால்தான் என்னுடைய கல்யாணத்தை செய்வது என்று முடிவானது. 4 விருப்பங்கள் அதற்கு பிறகு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள்.. ஒன்றரை வருடத்துக்கு மாப்பிள்ளை எனக்கு கிடைக்கவில்லை.. காரணம், தனக்கு வரப்போகும் கணவரிடம் 4 விஷயங்களை எதிர்பார்த்தேன்.. முதலாவதாக, ஜாதி எனக்கு முக்கியமில்லை.. ஆனால் கணவர் சைவமாக இருக்க வேண்டும், ஏனென்றால் எனக்கு சைவம்தான் சமைக்க தெரியும். அடுத்ததாக சிகரெட் பிடிக்க கூடாது, மது அருந்தக்கூடாது, இந்திய சினிமாவில் தொடர்வதற்கு இங்குள்ள மாப்பிள்ளை வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த நான்குமே சேர்ந்தது போல மாப்பிள்ளை அமைவது சிரமமாகிவிட்டது. இறுதியில் சினிமாவை தியாகம் செய்தேன். அமெரிக்கா செல்லும்படி ஆனது.. சினிமாவில் தயாரிப்பு, சினிமாவில் விநியோகஸ்தர் பணிகளை மேற்கொண்டு சினிமாவிலேயே தொடர்பில் இருந்தாலும், என்னால் நடிக்க முடியவில்லை. தவறான கணிப்பு நான் சிறுவயதில் ஒருவரை காதலித்தேன்.. அந்த இளைஞர் எங்கள் வீட்டில்தான் இருந்தார்.. ஆனால் நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அந்த இளைஞன் என்னை ஜட்ஜ் செய்துவிட்டார்.. என்னை தவறாக கணித்துவிட்டார்.. இதில் என்னுடைய அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம்.. அதனால் பிரிய வேண்டியிருந்தது. அதற்கு பிறகு பெற்றோர் விருப்பப்படியே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொண்டேன்.. நான் ஐஏஎஸ் ஆகணும் என்று நினைத்தார்கள்.. ஆனால் சினிமாவுக்கு சென்றுவிட்டேன்.. அதனால், பெற்றோர் பேச்சை திருமண விஷயத்தில் கேட்டு நடந்தேன். கணவரின் புரிதல் நடிகர், நடிகைகளுக்கு சினிமா தொழிலில் நேரம் காலம் கிடையாது.. ஆனால், என் கணவர் ஒரு டாக்டராக இருப்பதால், ஒரு நடிகையின் பணி சூழலை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.. சினிமாவில் ஒரு கிசுகிசு என்னை பற்றி வந்ததுக்கே, எனக்கு வீட்டில் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள். ஆனால், இப்போது அரசியலில் என் மீது தினம் தினம் அவதூறு பரப்பப்படுகிறது. தவறான செய்திகள் வரும்போதெல்லாம் , இன்றுவரை எனக்கு புகுந்த வீட்டில் உறுதுணையாக இருக்கிறார்கள்" என்றெல்லாம் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #💃நடிகை கஸ்தூரி கருத்தில் சர்சை