கள்ள😜காதல்😍😘

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
684 views
2 days ago
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது... அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய ரகசியத் தொடர்பு இருப்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலால் ராஜேஸ்வர ராவ் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் வாட்ஸ்அப் சாட்களை ஆழமாகப் படித்துப் பார்த்தபோது, அது வெறும் காதல் பேச்சுகளாக மட்டும் இல்லாமல் கொடூரமான கொலைத் திட்டமாக இருந்ததைக் கண்டு அவர் உறைந்துபோனார். "என் கணவரைக் கொலை செய்துவிட்டு, அதை யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒரு விபத்து போல சித்தரித்துவிடு" என்று தனது ஆண் நண்பரிடம் அந்தப் பெண் மிகத் துல்லியமாகத் திட்டம் தீட்டிப் பேசியிருப்பது ஆதாரத்துடன் சிக்கியது.... தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட அந்த வாட்ஸ்அப் உரையாடல்களை உடனடியாகத் தனது மொபைலில் ஆதாரமாகத் திரட்டிய ராஜேஸ்வர ராவ், உள்ளூர் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிப் புகாரளித்தார். போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #🥰கள்ளக்காதல் வேணுமா வா💪
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
753 views
2 days ago
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர் எதார்த்தமாக தன் மனைவியின் செல்போனை சோதித்த போது ஆடிப்போய்விட்டார்.... அவர் மனைவிக்கு வேறொரு நபரோடு திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமல்லாமல், அந்த நபரிடம் அடிக்கடி, "என் கணவரை கொன்றுவிடு.. அதை விபத்து போல சித்தரித்துவிடு" என்றெல்லாம் அவர் மனைவி வாட்ஸ அப்பில் கொஞ்சியும் வந்தது தெரியவந்திருக்கிறது. ராஜேஸ்வர ராவ் செல்போனில் இருந்த ஆதாரத்தோடு போலீஸில் புகாரளித்தார். இதனால் அவருடைய மனைவி, தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி உள்ளாராம். திருமணத்தை உறவு என்பது இன்றைக்கு எதார்த்தமான வாழ்க்கையை ஒப்பிட்டால், ஏதோ சீரியல்களை காட்டப்படும் விஷயமாக கடந்து போக முடியாது. ஏனெனில் கடந்த 15 வருடங்களில் கள்ளக்காதல் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் கூட கள்ளக்காதல் பெருகிவிட்டது. கணவனை பிடிக்காமல் திருமணம் செய்த பெண்கள், கணவனுக்கு பதில் காதலனை தேடி செல்வது அதிகமாக உள்ளது. அதேபோல் மனைவிக்கு தெரியாமல் அலுவலக தோழி அல்லது பள்ளி தோழி அல்லது நண்பனின் மனைவியுடன் தவறான நட்பை ஆண்கள் தேடுவதும் அதிகரித்துள்ளது. இப்படியான திருமணத்தை மீறிய உறவுகளை சமூகம் ஏற்பது இல்லை என்பதால், கடைசியில் விபரீதத்திலேயே முடிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து தன்னைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உரையாடல்களை அனுப்பி உள்ளார். அந்த உரையாடலில், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டத் திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது... தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த காடே ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவி பவானிக்கும் கம்மம் பகுதியைச் சேர்ந்த கூரியர் டெலிவரி ஊழியரான சைதுலுவுக்கும் இடையில் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் அவரது மனைவியின் செல்போனை எதார்தத்மாக பார்த்த போது, கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும், அதில் தன் கணவனை கொன்று விபத்து போல் சித்தரித்துவிடு என்பதாக இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வர ராவ் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கம்மம் ஊரகக் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளனர். ராஜேஸ்வர ராவின் புகாரின்படி, அவர் 2016-ல் பவானியைத் திருமணம் செய்துகொண்டார்; அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது மனைவிக்கு சைதுலுவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கூரியர் ஊழியர் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று வந்தாராம், ஜூலை 27 அன்று கள்ளகாதல் குறித்து சந்தேகம் அடைந்த ராவ், பின்னர் தனது மனைவியின் செல்போனைச் சோதித்தபோது, ​​தன்னை கொல்வது குறித்து விவாதிக்கும் செய்திகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் கணவரைக் கொன்றால் சந்தேகம் எழும் என்பதால், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டலாம் என்று பவானி யோசனை தெரிவித்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மற்றொரு உரையாடலில், சைதுலு தனது கணவரைக் கொல்லாவிட்டால், தானே அதைச் செய்வதாக பவானி கூறியதாகவும் கூறப்படுகிறது. தனது உயிருக்கும் மகள்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, ராவ் அதற்கான ஆதாரங்களையும் (ஸ்கிரீன்ஷாட்கள்) காவல்துறையிடம் சமர்ப்பித்தார்.... கம்மம் ஊரகக் காவல் ஆய்வாளர் எம். ராஜு கூறும் போது, காவல்துறை ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாகக் குற்றச்சாட்டுகளும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் நம்பகத்தன்மையும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார். டிஜிட்டல் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் சூழல் குறித்துபோலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்; அதேவேளையில், பவானி மற்றும் சைதுலு ஆகியோர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, தனக்கும் தனது மகள்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கணவர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
618 views
2 days ago
தெலங்கானாவில் கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது கிடைத்ததாக கூறப்படும் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வர் ராவ் காலை வேலைக்கு சென்றால் மீண்டும் மாலை தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் கடந்த (ஜூலை 27) ஆம் தேதி வழக்கத்துக்கு மாறாக மதிய உணவுக்காக ராஜேஸ்வர் ராவ் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனது மனைவி பவானி, வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததாக ராஜேஸ்வர் ராவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர் சைதுலு என்பதும், கம்மம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது... இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அந்த பஞ்சாயத்தில் தனது சகோதரரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ராஜேஸ்வர ராவ் தனது சகோதரர்களை அழைக்க சென்றபோது, சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த ராஜேஸ்வர் ராவ், மனைவியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பவானி மற்றும் சைதுலு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை பார்த்து ராஜேஸ்வர ராவ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதில், ராஜேஸ்வர் ராவை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்வது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் காதலன் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பவானி அவரிடம் "நீ என் புருஷனை கொன்னு தான் ஆகணும்.. இல்ல நான் உன்ன கொன்னுடுவேன்" என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேமித்து வைத்த ராஜேஸ்வர் ராவ், தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி கடந்த (ஆகஸ்ட் 1) ஆம் தேதி தோர்ணக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்... மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தோர்ணக்கல் போலீசார் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தொடர் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். தற்போது ராஜேஸ்வர் ராவ் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும், பவானி மற்றும் சைதுலுவிடம் விசாரணை நடத்தி, கணவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை சாலை விபத்து போல கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.2K views
3 days ago
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி..... பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது சட்டவிரோத உறவைக் கண்டித்த ரகு, தங்களது தொடர்புக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதி, இருவரும் இணைந்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ரகுவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் உடலை அருகில் இருந்த தோட்டத்தில் புதைத்துவிட்டு, கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பங்காரி நாடகமாடியுள்ளார்.... கணவர் நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரகுவின் அண்ணன் லகமன்னா, சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பங்காரியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பாணியை மாற்றி விசாரித்ததில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ராம ராணாவுடன் சேர்ந்து கொலை செய்து உடலைத் தோட்டத்தில் புதைத்ததை பங்காரி ஒப்புக் கொண்டார்.... இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அடையாளம் காட்டிய தோட்டத்திலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு ரகுவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிக்கோடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளத்தொடர்புக்காகக் கணவனைக் கொன்று 6 மாதங்கள் உடலைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
748 views
11 days ago
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே, தவறான தொலைபேசி அழைப்பு மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... ககுடி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் ஷோபா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷோபாவின் செல்போனுக்கு வந்த தவறான அழைப்பு மூலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த கள்ளக்காதலால் மயங்கிய ஷோபா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளைத் தவிக்கவிட்டு பாலாஜி நாயக்குடன் ஓட்டம் பிடித்தார்.... மனைவியைக் காணவில்லை என்று சிரஞ்சீவி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அண்மையில் கள்ளக்காதலால் கணவர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகளைக் கண்டு எச்சரிக்கையான சிரஞ்சீவி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேடிக்கொண்டே மனைவியையும் தீவிரமாகத் தேடி வந்தார். இறுதியில் ஷோபாவும் பாலாஜி நாயக்கும் பெங்கிலபள்ளியில் தங்கியிருந்து, குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனடியாக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் பிடித்து பஞ்சாயத்தார் முன் ஆஜர்படுத்தினார்.... கோயிலில் நடந்த கிராமப் பஞ்சாயத்து விசாரணையின் போது, சிரஞ்சீவியை வழியிலிருந்து அகற்றுவதற்காக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் காதலன் பாலாஜி நாயக் ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியின் சுதாரிப்பால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பினார். முதலில் புகாரைக் தீவிரமாக விசாரிக்காத காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் :
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
707 views
12 days ago
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் அருகே அரசு பேருந்தில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து தண்டராம்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வழியாக திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள புத்து கோவிலில் கற்பூரம் ஏற்றுவதற்காக சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி உள்ளார் ஓட்டுநர். அப்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே வேளையில் இருசக்கர வாகனத்தின் பின் தொடர்ந்துவந்த மேலும் சிலர் பேருந்தில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சரமாரி அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சிவசங்கர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா, செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையின் போது சிவசங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவும் சிவசங்கரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து திருப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரேகாவின் கணவர் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்குதலை நடத்தியது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்..... இதையடுத்து அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரகு, கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மற்றும் மாதவன், ஆடையூர் பகுதியை சேர்ந்த சுகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ரகுவின் மனைவி ரேகாவை நான்காண்டுகளுக்கு முன்பு சிவசங்கர் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக திருவண்ணாமலையில் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். இதனை அறிந்த ரகு தனது நண்பர்களிடம் கூறி சிவசங்கரை பின் தொடர்ந்து சென்றனர். அவர் ஏறிய பேருந்தில் இரண்டு நபர்கள் ஏறி நோட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆளில்லாத இடத்தில் சிவசங்கரை வெட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பேருந்து கோவில் அருகே நின்றதால் அங்கேயே வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டோம் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகையின் காரணமாக வெட்டப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.... மேலும் வெட்டு காயங்கள் அடைந்த இளைஞர் சிவசங்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரசு பேருந்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்