மந்திரங்கள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
747 views
1 months ago
AI indicator
*தியானம் சித்திக்க* *உதவும் மந்திரம்*! முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து நீர் அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும். தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு ஒன்று வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும். தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும். அனுபவித்துப் பாருங்கள். மந்திரம்:- ஓம் நமோ பகவதே | மஹாபல பராக்ரமாய| மனோபிலஷிதாம் | மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா || 🚩🕉🪷🙏🏼 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #தியானம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.8K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:19* பூர்வம் வ்யாகரண ப்ரபஞ்சன விதௌ லப்த்வாப்யனேகம் பதம் கிம் நோ த்ருப்திமகாதகாதிபஸுதே சேஷ பணிக்ராமணீ: ஆலீன: சசிமெளலிமூர்த்தனி சிரம் ப்ரேமப்ரகோபாந்தௌ லப்தும் தே பதமேகமேவ குதுகீ நித்யம் யதோ வர்ததே ஹிமவானுடைய புத்திரியே! முன்பு ஸர்ப்பராஜனான சேஷன் (பதஞ்சலிரிஷியாக இருந்து கொண்டு) ஸம்ஸ்க்ருத வ்யாகரணத்திற்கு (அதாவது இலக்கணத்திற்கு) பாஷ்யம் எழுதி அநேக பதங்களை * (அதாவது வார்த்தைகளை) உண்டு பண்ணினார். ஆனால் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் சேஷன் சிவனுடைய சிரஸின் மீது மாலை வடிவத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டு சிவன் பிரணய கோபத்தில் நமஸ்கரிக்கும் போது உன்னுடைய ஒரு பதத்தை* (அதாவது ஸ்ரீபாதத்தை) யாவது அடைந்து விடுவோம் என்று நிரந்தரமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறார். *பதம் என்னுகிற சொல்லை சிலேடையாக கவி இரு பொருள்பட கையாண்டிருக்கிறார். அதாவது வார்த்தை என்று ஒரு பொருள். பாதம் என்று மற்றொரு பொருள். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 19ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:18* பூர்வம் ஜஹ்னுஸுதா ஸக்ருன் முரரிபோ: ஸ்ரீபாதஸம்க்ஷாலனாத் புண்யாதீத்ருசவைபவா ஸமபவத் கோவிந்தவந்த்யே சிவே ஸேயம் ஸம்ப்ரதி சம்புமெளலிநிலயா மானப்ரஸங்கானதௌ நித்யம் த்வச்சரணாவஸேசனபுவா புண்யேன கீத்ருக்பவேத் ஸ்ரீகோவிந்தன் வணங்கும் அம்பிகையே! முன்பு ஒரு தடவை ஜஹ்னு மகரிஷியின் புத்திரியான கங்கை ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஸ்ரீபாதங்களை நனைத்த புண்ணியத்தினால் அந்த கங்கைக்கு இம்மாதிரியான (அதாவது மூன்று உலகங்களையும்) பரிசுத்தமாக்கும் வைபவம் கிடைத்தது. இப்போது ஸ்ரீபரமேஸ்வரனின் சிரஸிலிருக்கும் கங்கை பிரணய கலகத்தில் அவர் உன் ஸ்ரீபாதங்களில் நமஸ்கரிக்கும் போது உன் ஸ்ரீசரணங்களில் ஸ்பரிசித்துக் கிடைக்கும் புண்ணியத்தினால் இன்னும் எந்த வைபவத்தை அடையப் போகிறது? ஸ்ரீமகாவிஷ்ணு வாமனாவதாரத்தின் போது தன்னுடைய உயரத் தூக்கிய பாதத்தினால் விண்ணுலகை அளந்தார். பிரம்மாவின் ஸத்யலோகத்தில் வந்தடைந்த அந்த பாதத்திற்கு பிரம்மா தன் கமண்டலத்தின் தீர்த்தத்தினால் பிரக்ஷாலனம் செய்தார். அப்போது கீழே விழுந்த அந்த தீர்த்தம் தான் கங்கையாக உருவெடுத்தது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 18ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.6K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:17* கிம் வைரிஞ்சிகரோடி கோடிநிஹதம் கிம்வா பணிக்ராமணீ நிச்வாஸாநிலகேதிதம் த்விதமிதி ப்ரேம்ணாபிஸல்லாபினா மானஸ்யோபசமே கரேண சனகைராம்ருத்னதா சம்புனா பூயஸ்சும்பிதமம்புஜத்யுதி பதம் த்யாயாமி மாயே தவ மாயாஸ்வரூபிணியே! * உன் பிரணய கோபம் தணிந்து உன்னோடு அன்புடன் ஸல்லாபிக்க ஆசை கொண்ட ஸ்ரீபரமேஸ்வரன் உன் ஸ்ரீபாத கமலங்களை மெதுவாகத் தூக்குகிறார். அப்போது சிவந்திருக்கும் ஸ்ரீபாதங்களைப் பார்த்து சிவபெருமான் நினைக்கிறார். தன்னுடைய சிரஸின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய கபாலத்தின் நுனி உன் ஸ்ரீபாதத்தில் பட்டதினாலோ அல்லது தன் சரீரத்தின் மீதிருக்கும் ஸர்ப்பராஜனான சேஷனுடைய சுவாசக் காற்றினாலோ என்று சிவன் உன் ஸ்ரீபாதங்களை மறுபடியும் முத்தமிடுகிறார். அதனால் அந்த ஸ்ரீபாதகமலங்கள் மேலும் சிவந்து செந்தாமரை போன்று உன் பிரகாசிக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீபாதாரவிந்தங்களை நான் தியானிக்கிறேன். மாயையாகவும் மாயையைப் போக்கும் ஸ்ரீவித்யையாகவும் அம்பிகை இருப்பதனால் உன்னால் உண்டாக்கப்பட்ட இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்க உன் ஸ்ரீபாத கமலங்களை தியானிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது தாத்பரியம்: சிவபெருமான் அளவிட முடியாத ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றிய போது பிரம்மா அந்த ஜோதியின் முடியைக் காண்பதற்காக அன்ன வடிவம் எடுத்துத் தேடச்சென்றார். முடியைக் காண முடியாமல் திரும்பிய பிரம்மா தான் கண்டு விட்டதாக சிவபெருமானிடம் பொய் சொன்ன போது பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் தன் விரல் நகத்தின் நுனியால் கொய்து விட்டார். பின்னர் பிரம்மா நான்முகராக ஆனார். கொய்த தலையின் மண்டையோட்டை தன் சிரஸின் மீது சிவன் தரித்துக் கொண்டுள்ளதை கவி இங்கு குறிப்பிடுகிறார். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 17ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.5K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:16* ஸா பாதத்விதயாஹதிர் ஜயதி தே யஸ்யாம் கிரீந்த்ராத்மஜே ப்ராசீனேந்துயுதே நகேந்துதசகே மௌலிதலீஸங்கதே ச ஸ்வஸ்யைகாதச மூர்த்திதாமுசிதாஸநேகாதசை வோடுபா நாபிப்ராண இவாபபௌ ஸ பகவானேகோபி ருத்ர: ஸ்வயம் ஹிமவானுடைய புத்திரியே! பிரணய கலகத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் நமஸ்கரிக்கும் போது உன் இரு ஸ்ரீபாதங்களையும் அவருடைய சிரஸின் மீது வைக்கிறாய். அப்போது உன் ஸ்ரீபாத நகங்களாகிய பத்து பாலசந்திரர்களுடன் ஏற்கனவே நிரந்தரமாக ஸ்ரீபரமேஸ்வரனின் சிரஸின் மீது இருக்கும் ஒரு பாலசந்திரனையும் சேர்த்து மொத்தம் பதினொரு பாலசந்திரர்கள் அவருடைய சிரஸை அலங்கரிக்கின்றனர். பகவான் ஸ்ரீபரமேஸ்வரன் (இரண்டற்றவராக) ஒருவரேயானாலும், தானே பதினொரு ருத்ர மூர்த்திகளாக விளங்கும் போது மொத்தம் பதினொரு பாலசந்திரர்கள் உண்டு என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் அவர் அந்த ஏகாதச ருத்ர வடிவத்தில் ஏகாதச சந்திரர்களைத் தாங்கி சோபிக்கிறார் போலிருக்கிறது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 16ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:15* ஸம்பிராந்திஸ்தவ தேவி ஸா விஜயதே மானாவனம்ரே சிவே த்வத் பாதாம்புருகப்ரஹாரமுதிதே மந்தம் ஸமுத்தாயினி ஸாக்ஷாராக ரஸாருணம் நிபதிதம் கங்காபயச்சீகரம் த்ருஷ்ட்வா சோணிதசங்கயா தரவிதா காந்தம் யதாலம்பதா: தேவியே! உனக்கும் ஸ்ரீபரமேஸ்வரனுக்கும் பொறாமையினால் கோபம் ஏற்பட்டு ஸ்ரீபரமேஸ்வரன் உன் ஸ்ரீபாதங்களில் தலை வணங்கும் போது உன் ஸ்ரீபாத கமலத்தை அவருடைய சிரஸின் மீது நீ வீழ்த்தி அதனால் அவர் சந்தோஷமடைந்து மெதுவாக தலையைத் தூக்கி எழுந்திருக்கிறார். அப்போது ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீதுள்ள கங்கையின் சில ஜலத்துளிகள் கீழே விழுகின்றன. உன் ஸ்ரீபாதத்தின் ஸாக்ஷாரஸத்தின் செந்நிறம் அந்த ஜலத்துளிகளில் சேர்ந்து ரத்தம் போன்று தோன்றுகிறது. ரத்தாம் தானோ என்ற பயத்தில் மனங்கலங்கி நீ உன் மணாளனை ஆலிங்கனம் செய்து கொள்கிறாய். அப்போது உன் புத்தி மயக்கமானது வெற்றி பெறுகிறது.* * அதாவது புத்தி மயக்கம் வேறு எந்த கட்டத்திலும் ஏற்படாத உனக்கு இந்த ஒரு தடவை ஏற்பட்டு விட்டதே என்று புத்தி மயக்கத்திற்குக் கொண்டாட்டம் என்பது தாத்பரியம். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 15ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3.2K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:14* த்ருஷ்ட்வா ராத்ரிஷு சந்திரபாதஜனிதாம் பாதோருஹாணாம் வ்யதாம் தேவி த்வம் கருணாகுலேவ குருஷே தத்வைர நிர்யாதனம் மானாநம்ரமகேச மெளலிவலபீவாஸஸ்ய சீதத்விஷோ நித்யம் பங்கஜ பாதகாத ஜனிதா பாதா யதாதீயதே தேவியே! ராத்திரி வேளையில் சந்திரனுடைய (பாதங்களினால்) கிரணங்களினால் தாமரை மலர்களுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படுவதைப் பார்த்து நீ கருணையினால் சந்திரனைப் பழி வாங்க நினைக்கிறாய். அதனால் பிரணய கலகத்தின் போது தலை வணங்கும் ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீது வசிக்கும் சந்திரனை உன் கமலம் போன்ற ஸ்ரீபாதத்தினால் அடித்து அந்த சந்திரனுக்கு துன்பத்தைக் கொடுக்கிறாய். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 14ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.7K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:13* ஆநம்ரஸ்ய புரத்ருஹ: சிரஸி தே பாதப்ஜபாத: சிவே ஜீயாத்யேன பபூவ பங்கஜவதீ மௌலிஸ்ரவந்தீ க்ஷணம் கிஞ்சோதஞ்சிதபாலபல்லவ வதீ ஜாதா ஜடாவல்லரீ லாக்ஷாபாதவசேன ஸாந்தியஸுஷமாஸாந்திரா ச சாந்திரீகலா சிவே! திரிபுரங்களை எரித்த ஸ்ரீபரமேஸ்வரன் (பிரணய கலகத்தின் போது) தலை வணங்கும்போது உன் ஸ்ரீபாத கமலங்கள் அவருடைய தலையின் மீது வீழ்த்தப்பட்டன. அது நன்றே. ஏனெனில் அப்போது ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீது இருக்கும் கங்கையில் (செந்) தாமரை மலர் புஷ்பித்ததைப் போன்று ஆயிற்று. மேலும் சிரஸின் மீதுள்ள ஜடையில் உன் ஸ்ரீபாதங்களுடைய விரல்கள் சிறிய மொட்டுடன் கூடிய குருத்துக்களைப் போன்று சோபையைக் கொடுக்கின்றன. மற்றும் சிரஸின் மீதுள்ள சந்திர கலையோ உன் ஸ்ரீபாதங்களின் செம்பஞ்சுக் குழம்பின் செந்நிறத்துடன் சேர்ந்து மிக அழகான சந்தியாகாலத்து செந்நிறச் சந்திரன் போன்று தோற்றமளிக்கிறது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 13ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:12* ஏகம் வாமதயைவ தக்ஷிணதயைவான்யது பதம் தேஹினாம் க்யாதம் முக்திபுராதிவாஸிநி சிவே சித்ரம் த்வயி த்வீதிருசம் ஆனம்ரேஷு ஜனேஷ்வபீஷ்டகரணே பாதாவுபௌ தக்ஷிணா வானம்ரே து க்ருதாகஸி ஸ்மரஹரே வாமாக்ஷி வாமாவுபௌ முக்திஸ்தலவாஸினியும் மங்களங்களை அருளும் அம்பிகையை! ஸகல ஜனங்களுக்கும் இரண்டு பாதங்கள் உண்டு. ஒன்று வலது (தக்ஷிணம்) மற்றது இடது (வாமம்) என்று எல்லோருக்கும் பிரசித்தி. உன்னுடைய இரு பாதங்களின் விஷயத்திலோ இது ஆச்சரியமாக வேறுபட்டிருக்கிறது. வாமாக்ஷியே! (அழகிய கண்களை உடையவளே) உன் இரு பாதங்களுமே பக்த ஜனங்கள் நமஸ்கரிக்கும் போது தக்ஷிணர்களாக (கொடை வள்ளல்களாக) இருக்கின்றன. ஆனால் மன்மதனை எரித்த ஸ்ரீபரமேஸ்வரன் (பிரணய கலகத்தின் போது) குற்றம் செய்தவராக உன் ஸ்ரீபாதங்களில் தலை வணங்கும் போது உன் ஸ்ரீபாதங்கள் இரண்டுமே வாமமாக கொடுக்க இஷ்டமில்லாமல் (கோணல் மனங் கொண்டவைகளாக) இருக்கின்றன. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 12ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K views
2 months ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:11* சூர்யேந்த்வக்னிஸமீரணாதிஸகலஸ்வர்வாஸிநா முன்மத: ஸர்வாண்யேவ பதானி யோ மதிதவான் துர்வாரசௌர்யோஷ்மணா தம் கோரம் மகிஷாஸுரம் நிஜபதேனைகேன ஸம்மிருத்நதீ யத்வம் ப்ரத்யக்ருதாஸ்தத: கிமபரம் த்வத்வைபவம் ப்ரூமஹே சிவே! மகிஷாஸுரன் பிறரால் வெல்ல முடியாத தன்னுடைய மிகுந்த பராக்கிரமத்தினால் பராக்கிரமத்தினால் உன்மத்தனாக ஆகி, ஸ்வர்க்கத்திலுள்ள சூரியன், சந்திரன், அக்கினி, வாயு முதலிய எல்லா தேவதைகளுடைய பதவிகளைப் பறித்துத் துன்புறுத்தினான். நீயோ உ உன் ஒரே ஸ்ரீபாதத்தினால் அப்பேர்ப்பட்ட பயங்கரமான மகிஷாஸுரனை அழித்து அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தாய். அதன் பிறகு (வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாத) உன்னுடைய வேறு எந்த வைபவத்தை என்னால் எடுத்துரைக்க முடியும்? மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 11ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐