ஆன்மீக செய்தி

RamaswamyAnnamali
1K views
8 days ago
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் ஏன் கண்களை மூடுவதில்லை? விஷ்ணு பாதத்தில் உள்ள "மத்ஸ்ய" சின்னத்தின் ஆன்மீக ரகசியம்! மகாவிஷ்ணுவின் திருவடிகளில் பொறிக்கப்பட்டுள்ள தெய்வீகச் சின்னங்கள் ஒவ்வொன்றும் வெறும் மங்கல அடையாளங்கள் மட்டுமல்ல; அவை பிரபஞ்சத்தின் பேரொளி ரகசியங்களை நமக்கு உணர்த்தும் குறியீடுகள். அதில் மிக ஆழமான ஒரு சின்னம் மீன் சின்னம்! இதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீக மர்மம் என்ன? மீன் எப்போதும் தண்ணீருக்குள்ளேயே வாழும் ஒரு விசித்திரமான உயிர். தண்ணீரில் இருந்தாலும், அது தூங்கும் போது கூட தன் கண்களை மூடுவதில்லை! அதன் கண்கள் எப்போதும் திறந்தே இருக்கும். இந்த இயற்கையின் விதியைத்தான் மகாவிஷ்ணு தன் பாதத்தில் தாங்கி, ஒரு உன்னதமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார். அதுதான் "விழிப்பு நிலை"! பிரளய காலத்திலும் விழித்திருக்கும் அருள்: உலகமே அழியும் மகா பிரளய காலம் வந்தாலும், காலமே முடிவுக்கு வந்தாலும், அந்த பரம்பொருளின் கருணையும் அருளும் மட்டும் ஒருபோதும் தூங்குவதில்லை. தன் பக்தர்களைக் காக்க அவனது அருள் விழி அமுது எப்போதும் திறந்தே இருக்கும் என்பதை இந்த மீன் சின்னம் காட்டுகிறது. நமது சித்தர்கள் தங்கள் பாடல்களில் அடிக்கடி குறிப்பிடும் ஒரு ரகசியம் உண்டு—"மனதை அடக்கி, எப்போதும் விழிப்போடு இருத்தல்." நம் மனம் என்ற கடல் சஞ்சல அலைகளால் நிறைந்தது. அந்த அலைகளுக்கு நடுவிலும், மீனைப் போல நம் ஆன்மா விழிப்போடு இருக்க வேண்டும். உலக இன்பங்கள் என்ற மாயை நீரில் மூழ்கியிருந்தாலும், ஆன்மீக விழிப்புணர்வை ஒருபோதும் மூடிவிடக் கூடாது. அதுவே முக்திக்கு வழி! வாழ்க்கையின் இன்ப துன்ப அலைகளுக்கு நடுவிலும், சஞ்சலப்படாமல் விழிப்போடு இருக்க பழகிக் கொள்வோம். அந்த பரம்பொருளின் விழித்திருக்கும் அருள் என்றும் நம்மை வழிநடத்தட்டும்! 🙏 "மாயை எனும் கடலில் மூழ்கினாலும், ஞானக் கண் திறந்து விழிப்போடு இருப்பதே ஆன்மீகத்தின் உச்சம்!" Why Do Fish Never Close Their Eyes? The Spiritual Secret Behind the "Matsya" Symbol on Vishnu's Feet! Each of the divine symbols etched upon the sacred feet of Lord Mahavishnu is not merely an auspicious emblem; they are profound symbols that reveal to us the radiant secrets of the universe. Among them, the symbol of the fish holds a particularly deep significance! What is the spiritual mystery lying behind this symbol? The fish is a unique creature that lives its entire life within water. Yet, despite dwelling in the water, it never closes its eyes—not even when it sleeps! Its eyes remain open at all times. It is this very law of nature that Lord Mahavishnu bears upon His feet, thereby conveying to us a sublime philosophical truth: the state of "Eternal Vigilance"! Grace That Remains Awake Even During the Cosmic Deluge: Even when the era of Maha Pralaya—the Great Cosmic Dissolution—arrives and the entire world faces destruction, or even when time itself reaches its end, the compassion and grace of the Supreme Being never slumber. The symbol of the fish signifies that His benevolent gaze—the nectar of His grace—remains perpetually open to protect His devotees. There is a secret that our Siddhars(spiritual sages) frequently allude to in their verses: "Subdue the mind, and remain eternally vigilant." The ocean of our mind is filled with restless waves of agitation. Yet, amidst these turbulent waves, our soul—much like the fish—must remain vigilant. Even if we are immersed in the illusory waters of worldly pleasures, we must never allow our spiritual awareness to close its eyes. That alone is the path to Moksha (liberation)! Let us cultivate the practice of remaining vigilant and unperturbed, even amidst the waves of joy and sorrow that constitute life. May the ever-watchful grace of the Supreme Being guide us forever! 🙏 "Even if immersed in the ocean of *Maya* (illusion), to keep the eye of wisdom open and remain vigilant is the pinnacle of spirituality!" #SpiritualTamil #LordVishnu #Matsya #Awareness #SiddharScience #SpiritualAwakening
A Mohan Raj
22.3K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து திருமுகப் பாசுரம் திருஆலவாய் உடையார் (சிவபெருமானார்) பாணபத்திரருக்கு எழுதியனுப்பியதாகக் கூறப்படும் திருமுகப் பாசுரம்.* பாடல் வரிகள் : *திருமுகப் பாசுரம்* மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
RamaswamyAnnamali
3.5K views
1 months ago
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் குருவோ அவர் சிவன்.* எவர் சிவனோ அவர் ஜகத்குரு.* குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை. குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை. குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை. குருவிற்கு சமமான உயர்வுமில்லை. சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும். தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி. பூஜைக்கு மூலம் குருவின் பாதம். மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம். முக்திக்கு மூலம் குருவின் கிருபை. ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
A Mohan Raj
14.5K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 15. சிவ சொரூப தரிசனம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *ஒன்பதாம் தந்திரத்தில் வரும் 15-வது பாடல் சிவ சொரூப தரிசனம் ஆகும். இது பேதமற்ற பரமானந்த நிலையையும், ஆதி சொரூபங்களை கடந்து நிற்கும் பரம்பொருளின் மேன்மையையும் விவரிக்கிறது. சுருக்கமாக, இது ஒரு சீவன் பேத உணர்வுகள் நீங்கி, உடலின் அணு அணுவாக ஆனந்தத்தை உணர்ந்து, அருவுருவ நிலைகளைக் கடந்து சிவ தரிசனம் பெறும் உயர்நிலை ஆகும்.* பாடல் வரிகள் : *15. சிவ சொரூப தரிசனம்* 2856 ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1 2857 உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2 2858 துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும் முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3 2859 மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4 2860 சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5 2861 பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும் அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6 2862 முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால் சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 7 2863 துரிய அதீதம் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏