பன்னிரு திருமுறை

chellakannan
452 views
16 hours ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
chellakannan
542 views
3 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஅழுந்தூர் #பதிகம்_020 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
chellakannan
576 views
3 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்குடமூக்கு #பதிகம்_022 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
chellakannan
543 views
4 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஅழுந்தூர் #பதிகம்_020 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
chellakannan
643 views
10 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஅழுந்தூர் #பதிகம்_020 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
A Mohan Raj
1.1K views
16 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 6. சூக்கும பஞ்சாக்கரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் ஆறாவது உட்பிரிவாக "சூக்கும பஞ்சாக்கரம்" (சூட்சும பஞ்சாட்சரம்) அமைந்துள்ளது. பஞ்சாக்கரம் (ஐந்தெழுத்து) ஐந்து நிலைகளில் விளக்கப்படுகிறது. அதில் "சூக்கும பஞ்சாக்கரம்" என்பது "சிவாயநம" என்ற மந்திரமாகும்.* பாடல் வரிகள் : *6. சூக்கும பஞ்சாக்கரம்* 2709 எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1 2710 சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2 2711 சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே. 3 2712 ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 4 2713 நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 5 2714 அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 6 2715 சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7 2716 சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. 8 2717 நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2.2K views
24 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள "குருமட தரிசனம்" குரு இருக்கும் இடமான ஞான சபையைத் தரிசிப்பதன் சிறப்பைக் கூறுகிறது. பலி, அவி, புகை, ஒலி ஆகியவற்றுடன் சிவனை வழிபட, குருமடத்தைக் கண்டவர்கள் இறைவனின் மலரடியை அடைகிறார்கள். இது ஞானகுருவையும், அவர் அருளும் ஒளி வடிவத்தையும் தரிசிப்பதைக் குறிக்கிறது.* பாடல் வரிகள் : *1. குருமட தரிசனம்* 2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1 2650 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2 2651 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3 2652 இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4 2653 முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5 2654 அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6 2655 மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
3K views
25 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 43. சோதனை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 43-வது பகுதியான "சோதனை" குருவருளால் சீடன் தன் மெய்ஞான நிலையை உணர்வதையும், மாயைகளை கடந்து சும்மா இருக்கும் நிலை (நிர்விகல்ப சமாதி) பெறுவதையும் விளக்குகிறது. இது சிவனடியின் பெருமை, மனதை ஒடுக்குதல் மற்றும் பஞ்சபூத உடலின் தன்மையை அறிதல் பற்றி பேசுகிறது.* பாடல் வரிகள் : *43. சோதனை* 2635 பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1. 2636 அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே. 2. 2637 அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே. 3. 2638 குறியாக் குறியினிற் கூடாத கூட்டத் தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ் செறியாச் செறிவே சிவமென லாமே. 4. 2639 காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5. 2640 விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. 6. 2641 நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. 7. 2642 தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. 8. 2643 தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. 9. 2644 அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானே. 10. 2645 எறிவது ஞானத் துறைவாள் உருவி அறிவது னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11. 2646 ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின் வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. 12. 2647 அந்தக் கருவை யருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. 13. 2648 உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத் திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14. *இத்துடன் எட்டாம் தந்திரம் முடிவடைந்தது.* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.7K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 38. வாய்மை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் உள்ள 38-வது பகுதி 'வாய்மை' (உண்மை) பற்றிக் கூறுகிறது. இது பொய்ப் பொருளை நீக்கி, மெய்ப்பொருளை (இறைவனை) அடைவதையும், உள்ளத்தால் உண்மை பேசுவதையும் வலியுறுத்துகிறது."அற்ற துரைக்கில் அருளுபதேசங்கள்" எனத் தொடங்கும் பாடல், குற்றமற்ற பொன் போல மனதைச் சீரமைத்து சிவஞானத்தைப் பெறுவதைப் பேசுகிறது. மேலும் வாய்மை என்பது உண்மை பேசுதல் மட்டுமல்ல, உள்ளத்தாலும், செயலாலும் இறைவனை உணர்ந்து, பொய்மையைத் தவிர்ப்பது ஆகும். மனம் தூய்மையாக இருந்தால், அங்கே சிவஞானம் விளங்கும். இந்தப் பகுதி, ஆன்மா பக்குவப்பட்டு, குற்றங்கள் நீங்கி, பேரொளியை (சிவன்) அடையும் வழியைப் போதிக்கிறது.* பாடல் வரிகள் : *38. வாய்மை* 2595 அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1. 2596 எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. 2. 2597 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3. 2598 தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4. 2599 அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5. 2600 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6. 2601 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7. 2602 எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8. 2603 எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9. 2604 கைகலந் தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10. 2605 மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம் கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11. 2606 உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12. 2607 வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற் செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13 2608 மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14 2609 மனமது தானே நினையவல் லாருக்குக் கினமெனக் கூறு மிருங்காய மேவற் றனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.8K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 15. ஆறு அந்தம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் 15-வது பிரிவாக 'ஆறு அந்தம்' (ஆறு வகையான முடிவுகள்/நிலைகள்) விளக்கப்படுகிறது. ஆன்மீகப் பயணத்தில் ஒரு சாதகன் கடந்து செல்லும் ஆறு எல்லையோர நிலைகளை இது குறிக்கிறது. திருமந்திரம் - எட்டாம் தந்திரம் ஆன்மாவின் உயர் நிலைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது*. அந்த ஆறு அந்தங்கள் ஆவன : கலாந்தம் : கலைகளின் முடிவு (கல்வி மற்றும் கலை ஞானத்தின் எல்லை). யோகாந்தம் : யோகப் பயிற்சியின் மூலம் அடையும் சித்தி அல்லது முடிவு. நாதாந்தம் : உள்ளத்தில் எழும் நாதத்தின் (ஒலியின்) எல்லை. போதாந்தம் : அறிவு அல்லது போதத்தின் முடிவு (அறிவு கடந்த நிலை). வேதாந்தம் : வேதங்களின் இறுதி முடிவான அத்வைத நிலை. சித்தாந்தம் : சிவஞானத்தின் இறுதி முடிவான சிவசாயுஜ்ய நிலை. *திருமூலர் இந்த ஆறு நிலைகளையும் கடந்து நிற்பதே உண்மையான முக்தி நிலை என்கிறார். குறிப்பாக, "வேதாந்தச் சித்தாந்தம் வேறற்ற நிலை" என்பதை இப்பகுதியில் வலியுறுத்துகிறார். அதாவது வேதத்தின் முடிவும் (வேதாந்தம்), அனுபவத்தின் முடிவும் (சித்தாந்தம்) ஒன்றே என்பதை உணர்வதே சிறந்தது*. பாடல் வரிகள் : *15. ஆறு அந்தம்* 2370 வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும் ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1 2371 அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2 2372 தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3 2373 நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4 2374 மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. 5 2375 உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6 2376 தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7 2377 கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8 2378 தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9 2379 ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10 2380 தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே. 11 2381 தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12 2382 ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த மாமே. 13 2383 உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14 2384 ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூளி யருளிய கோனைக் கருதுமே. 15 2385 கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16 2386 வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17 2387 வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18 2388 அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி பண்டுறு நின்ற பராசக்தி என்னவே கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. 19 2389 கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20 2390 ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே. 21 2391 அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. 22 2392 வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம் சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23 2393 சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24 2394 சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25 2395 சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால் நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26 2396 தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27 2397 வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28 2398 பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29 2399 ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30 2400 அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31 2401 அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய் அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32 2402 உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால் செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33 2403 மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34 2404 முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப் பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏