பகவான் ரமணர்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
22 days ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 🌹தியானம் என்றால் என்ன ? அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், " நான் எப்போ ' ‌ம் சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ " ம் "' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில்‌‌ தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். மகரிஷியின் " ம் " க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சறறு பின் " ம்‌ " சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது " ம் ' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா ' ம்‌ ' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் ' ம் ‌ சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான். ‘இரண்டு ' ம் ‌ ' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?’ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி .அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய பகவான் ரமண மகரிஷி அவர்களின் எளிமையை கண்டு வியக்காதவர்கள் உளரோ.குருவே சரணம் ஒரு முறை ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது ,அதை அவரின் தொண்டர் ஒருவர் மேற்ப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாராம் ,அப்போது வெயில் காரணமாக ,காலில் செருப்பும் ,தலையில் முண்டாசும் கட்டி இருப்பாராம் ஆன்மீக முன்னேற்றத்திற்க்காகத் தான் அனைவரும் அவரை அணுகி இருக்கிறார்கள் ,இந்த தொண்டர் சேவை பொருட்டு அவருடன் ,அவருடைய ஹாலில் இருப்பது தடை படுவதை நினைத்து தானோ ,ஒரு நாள் ,ரமணரே இவரை நோக்கி வந்தாராம் , வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அந்த தொண்டர் ,திடீரென்று ==குரு--- தன் அருகில் வருவதை பார்த்து ,குரு முன்பு காலில் செருப்பு அணியக்கூடாது என்று நினைத்து ,,செருப்பை கழற்றி விட்டு --தலை முண்டாசையும் அவிழ்த்துள்ளார் ,,அதற்க்கு ரமணர் "இயல்பாக எப்படி இருக்கிறாயோ அப்படி இருந்தால் உன் அருகில் வருவேன் ,இது எல்லாம் தேவையற்றது ""என்று சொன்னாராம என்ன ஒரு எளிமையான உபதேசம் !!! அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
976 views
22 days ago
AI indicator
ஆசிரமத்தில் ஒரு நாள் பிற்பகல் உதவியாளர்கள் பக்தர்கள் வழங்கிய பெரிய அளவிலான இனிப்புகளை விநியோகத்திற்காக கொண்டு வந்தனர். அப்போதே ஒரு வயதான பெண்மணியும் ஒரு பாக்கெட் தோசை கொண்டு வந்தார் ஒரு ஆலமர இலையில் வைத்து. அவள் நேராக ரமணரிடம் சென்றார் ஆசிரம பணியாளர்களின் ஆட்சேபனைகளை மீறி மற்றும் அந்த தோசைகளை ரமணரிடம் கொடுத்து, “சுவாமி இந்த தோசைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மன்னிக்கவும், நான் கொண்டு வருவதற்கு இதைவிட சிறந்தது எதுவுமில்லை” என்றார். அவள் வருத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை கவனித்த ரமணர் அவளிடம் மெதுவாக, “பாட்டி, அவர்கள் (ஆசிரம பணியாளர்கள்) சிறு குழந்தைகள். என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. தயவுசெய்து அவர்களின் கருத்துக்களை தவறாக எண்ணாதீர்கள். இந்த தோசை எந்த மாவில் நீங்கள் தயாரித்தீர்கள்? உங்கள் சகோதரனின் மகன்கள் யாரும் உங்களை சரியாக கவனிக்கவில்லையா? நீங்கள் நடந்து வந்தீர்களா, அல்லது ஒரு வண்டியில் வந்தீர்களா? ” இந்த அன்பான கருத்துக்களை அவர் கூறும்போது, தனக்கு வழங்கப்பட்டதை அவர் சாப்பிட ஆரம்பித்தார். கொஞ்சம் கூட விடாமல் எல்லா தோசைகளையும் சாப்பிட்டார். சில உதவியாளர்கள் ரமணர் சாப்பிடுவதை எதிர்த்தனர், "ஒழுங்காக வறுத்தெடுக்கப்படாத அந்த தோசை சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை எங்களிடம் கொடுத்து இனிப்புகளை ஏன் சாப்பிடக்கூடாது?" என்றனர். ரமணர் அவர்களிடம், “ஓ! இந்த தோசையை விட சுவையாக இருக்குமா நீங்கள் நினைக்கும் இனிப்புகள்? நீங்கள் விரும்பினால், நீங்கள் அனைத்து இனிப்புகளையும் சாப்பிடுங்கள். இந்த தோசை எனக்குப் போதுமானது” என்றார் பகவான். குருவின் அருட்பார்வை கிட்டாதா என்று ஏங்கி தவமிருப்பவர்கள்‌ மத்தியில் குருவிற்கு எல்லோரும் ஒன்றே என்கிற அற்புத தத்துவத்தை போதித்த நிகழ்வு. 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #ஞானிகள் பேசுகிறோம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.3K views
1 months ago
AI indicator
ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம் 18. பக்குவமாக்கி யருள வேண்டல் 129. இன்னுமென்ன சொல்லி யிரப்பே னிறைவாநான் உன்னடியி லென்னடத்தி லுள்ளகுறை — யன்னையினு மாதரவு மிக்க வருளாள பக்குவமு(ம்) நீதரநான் கொள்ள னெறி. இறைவனே! என்னிடத்தில் உள்ள குறைகளை இன்னும் எவ்வளவுதான் சொல்லி உன் திருவடியில் நான் யாசித்து நிற்பேன்? பெற்ற தாயை விடப் பெரிதும் ஆதரவு செய்யும் அருளாளனே! எனக்கு வேண்டிய பக்குவத்தையும் நீயே கொடுக்க நான் பெற்றுக் கொள்வது தான் முறை யாகும். அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.4K views
1 months ago
AI indicator
ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம் 856. குருவருளில் லாததுகை கூடாதென் றுன்றன் றிருமுகத்தி னின்றுமொரு செஞ்சொல் — வருவதுண்டே அஃதன்றோ காரணமென் னாற்றாத் துயரத்திற் கெஃதுண்டு வேறொன் றிசை. 'ஆன்ம ஞானமானது ஒருவனுக்குக் குருவருள் இல்லாமல் கைகூடாது' என்ற ஓர் உண்மை உரையை நீ அடிக்கடி திருவாய்மலர்ந்தருளியது உண்டல்லவா? என்னுடைய தீராத துயரத்திற்குக் காரணம் குருவருள் இல்லாமைதான் அல்லவா? அதைத் தவிர வேறு என்ன காரணம் உண்டு? சொல்க. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.6K views
1 months ago
AI indicator
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய. சாட்விக்: அகந்தையினும் ஆத்மா வேறென்பதெப்படி? பகவான்: தூக்கத்தில் நாம் எப்படியிருக்கிறோம்? சாட்விக்: எப்படியோ, தெரியவில்லை. பகவான்: தெரியவில்லை யென்பது யார்? விழிப்புற்ற அகந்தையே. தூக்கத்தில் நாம் இல்லையென்று யாராவது சொல்லக்கூடுமா? சாட்விக் : ஆம். நான் தூக்கத்தில் இருந்தேன். இப்போது விழிப்பிலும் இருக்கிறேன்; ஆயினும் தூக்கத்தில் எப்படியிருந்தேனென்று தெரியவில்லை. பகவான்: அதேதான். இப்பொழுது, விழித்துக் கொண்டவனே தூக்கத்தில் ஒன்றும் தெரியவில்லையென்று சொல்கிறான். இப்பொழுது விஷயங்களைக் காண்கிறான், காண்பவனாம் தான் இருப்பதாகக் கருதுகிறான்; தூக்கத்திலோ, இவ்விஷயங்களும் அவற்றைக் காண்பவனும் இல்லை. இப்பொழுது இருப்பவன் தூக்கத்தில் இல்லாது போய்விட்டானா? இவ்விரு நிலைமை களுக்கும் உள்ள பேதம் என்ன? விழிப்பில், விவயங்களும் இந்திரிய மனோ வியாபாரங்களும் உள; தூக்கத்தில் அவை இல்லை. தூக்கத்தின்போது இல்லாத ஒரு அகந்தை இப்போது கிளம்பியிருக்கிறது. அதுவே இந்திரியங்கள் வாயிலாய் விஷயங்களைக் காண்பதும், உடலைத் தானெனக் கருதுவதுமாயிருக்கிறது. இவ்வகத்தையையே தானென் றெண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது நாமல்ல. தூக்கத்தில் வடிவற்றிருந்த ஆத்மா இப்போதும் இருக்கிறது. அதில் ஒரு மாறுதலுமில்லை. இடையில் வந்த இவ்வகந்தையே உண்மையைத் திரித்துக் குழப்புகிறது. இவ்வாறு, தோன்றுவதும், மறைவதுமாயிருக்கும் அகந்தை நாமல்ல; தோற்றமும் மறைவுமின்றித் தூக்கத்திலும் விழிப்பிலும் மாறுதலின்றித் தொடர்ந்திருக்கும் ஆத்மஸ்வரூபமே நாம். பகவத் வசனாம்ருதம் (ஜனவரி 23, 1936) 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.6K views
1 months ago
AI indicator
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏 ☘️அக்ஷரமணமாலை 65. பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள் பாருனக் கார்சொல்வ ரருணாசலா (அ) 🌹பொருள்:🌹 அருணாசலா! என் மன மாயை கெட என்னைக் கடைக்கணியாவிடில், இவ்வுலகில் (என் பொருட்டுப் பரிந்து) உனக்கெடுத்துக் கூறுவார் யாவருளர்? அப்பனே அருணாச்சலா 🌹 ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻 ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
1 months ago
AI indicator
சாதனை சாரம் 123. நானா ரெனநாடும் ஞானநெறி யேமெய்யன் பானா மிறைக்கியற்றும் பக்தியுமாம் - ஆன வழியு(ம்) முடிவுமிவ் வாறிரண்டு மொன்றாச் செழித லறிந்துநீ செய். ஆகவே 'நான் யார்?' என்று தன்னை நாடும் ஞான மார்க்கமே இறைவனுக்கு நாம் செய்யும் மெய்யன்பாகிய பக்தி மார்க்கமு மாகும். இவ்விதம் முடிவு நிலையில் மட்டுமன்றி பயிற்சி செய்யும் முறையிலும் (வழியிலும்) ஆன்ம விசாரமும் ஆன்ம சமர்ப்பணமும் ஒன்றாகவே விளங்குவதை யறிந்து நீ தன்னாட்டப் பயிற்சியைச் செய்வாயாக. அப்பனேஅருணாசலம் 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.3K views
1 months ago
AI indicator
சிவமணியம் கேள்வி: தூக்கத்துலே நான் சூட்சும வடிவத்துல இருக்கேன். பகவான்: காரணம் எப்படியோ காரியம் அப்படி... விதை எப்படியோ மரம் அப்படி.... முழுமரமும் விதையிலே இருக்கு. விரிஞ்சு படர்ந்த மரத்துக்கு ஒரு ஆதாரம் இருக்கணுமே... அந்த மாதிரி மாயை இருக்கும். உண்மையிலே மரமும் இல்லை: விதையும் இல்லை; இருக்கறது மட்டுந்தான் இருக்கு. கேள்வி: வாசனாட்சயம், மனோநாசம், ஆத்ம சாட்சாத்காரம் மூணும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்த மாதிரிதானா? பகவான்: மூணுக்கும் ஒரே அர்த்தம்தான். ஒருத்தனோட பக்குவத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். வைராக்கியமும், ஞானமும் ஒண்ணுதான். அப்பியாசமும், வைராக்கியமும் ஒண்ணுதான். ஏன் அப்யாசம்ன்னு சொல்றா? ஏன்னா மனம் ஒடுங்கி மறுபடியும் எழுந்துடறது. கேள்வி: எப்போ எனக்கு வாசனைகள் ஏற்பட ஆரம்பிச்சுச்சுன்னே தெரியலை... ஆனா இந்த வாசனைகள் தவறு பண்ண வைக்குது. ஞானமில்லாம வாசனை அழியாது. ஆனா ஞானம் ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அனுபவிச்சுத்தான் கர்மம் எல்லாம் தீர்க்கணும்ன்னா... எவ்வளவு அனுபவிக்கறது... ! என்ன ஆவேனோ... ! எல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருக்கு... என்னாலே முடியலை... சாதுக்கள் சகவாசம்தான் இந்த நோய்க்கு ஒரே மருந்தாயிருக்கும்...! பகவான்: என்ன செய்ய முடியும்....? உண்மை ஒண்ணுதான். அதை எப்படி உணர்றது ? ஆத்மஞானம்கறது கட்டுக்கதை. பொய். அப்பியாசம் வேணுங்கற மாதிரித் தெரியறது. அப்போ...ஆத்ம ஞானமடைய யாரு அப்பியாசம் பண்றது? யார் பண்றதுன்னு பாத்தா... தியானமும் தியான சாதனங்களும் (Tools) மறைஞ்சுடும். ஆத்மஞானம் இங்கேயே இப்போவே இல்லேன்னா... அது புதுசா வந்ததுன்னா.... ஒரு பிரயோஜனமும் இல்லே. எது சத்யமோ அது எப்பவும் இருக்கணும். புதுசா இனிமேல் அடைய போறது எப்படி சத்தியமாவும் நிலையாவும் இருக்கும்? இங்கேயே.... இப்போவே... இருக்கு பாரு! ரிஷிகள் முன்னாடியும் இப்படித்தான் உள்ள பொருளை தேடி அப்பியாசம் பண்ணா. இப்பவும் அதையேதான் பண்றா. அஞ்ஞானத்தாலே மறைபட்டு வெளிப்படறதனால... புதுசா கிடைச்ச மாதிரி தெரியறது. ஆத்மஞானமடையறோம்ன்னு சொல்றோம். ஆனா அது புதுசு இல்லே. கேள்வி: எந்த யுக்தியும் இல்லாம, சாஸ்திர வார்த்தைகள் இல்லாம, எனக்கு ஆத்ம சுகத்துக்கு வழி சொல்லுங்க. அதுவே எனக்கு குருவருள். பகவான்: உனக்கு என்ன வேணும்ன்னு முதல்லே தெளிவாகு! யார் எதை அடையறது? யார் என்னத்தைத் தேடறது? அப்புறம் வழி கேளு! கேள்வி: இறைபக்தி, குரு அனுக்கிரகம், தியானம் இந்த மூணுல எது எல்லா வழியையும் விட பலிதத்துல சிறந்தது? பகவான்: ஒண்ணு மத்ததோட விளைவு. ஒண்ணு அடுத்ததுக்கு கூட்டிக்கொண்டு போகும். இது மூணும் ஒரே பொருள்தான். கடவுள், குரு, ஆத்மா வேற வேற இல்லே. மூணும் ஒண்ணுதான். எது சிறந்ததுங்கற கேள்விக்கே இடமில்லே. கேள்வி: பெரிய மகான் ஒருத்தர் எங்களுக்குக் குருவாயிருந்தார். அவர் ஹரி நாம ஜபத்தையே எங்களுக்கு உபதேசம் பண்ணினார். அதிலேயே எல்லாம் வந்துடும்... தியானத்துக்கோ, வேற எதுக்கோ, முயற்சி தேவையில்லை.... ஏகாக்கிரம், எப்பவும் ஹரிநாமம் இருந்தா வந்துடும்ன்னார். நாங்களும் அதையே சிரத்தையா செஞ்சுகொண்டு வந்தோம். அவர் விதேகமானார். மாலுமி இல்லாத கப்பல் மாதிரி ஆகிட்டோம். எங்க கலக்கம் கரையேறுவோமா... மாட்டோமாங்கற வேதனை. இப்படி இருக்கும்போதுதான்... உங்களைப்பத்தி கேள்விப்பட்டோம். இரண்டு வருஷ ஏக்கத்துக்கு பிறகு இப்போதான் பலிச்சது. இங்கே வந்த பிறகு நீங்க போதிக்கறது ஆத்ம விசாரம், ஞானமார்க்கம்ன்னு தெரியுது. ஆனா எங்க குரு எங்களுக்கு பக்தி மார்க்கத்தையே போதிச்சார். நாங்க என்ன பண்றது? அதை விட்டுடறதா? விட்டுட்டு புதுவழியிலே போறதா? இப்போ வழியை மாத்தினா.... நாளைக்கு இன்னொரு குருவைப் பாக்கறப்ப வேற வேற வழிகளுக்கு மாறிக் கொண்டே இருக்கறதா? இப்படி மாறிக்கொண்டே இருந்தா முன்னேற்றம் இருக்குமா? எங்க சந்தேகத்தைத் தீர்த்து ஆசீர்வாதம் பண்ணணும். பகவான் 'விஷன்' பத்திரிக்கையிலே வந்திருந்த ஒரு கட்டுரையை அவருக்குக் கொடுக்கச் சொன்னார். அந்தக் கட்டுரை அவருக்குப் பரிபூரண திருப்தியை அளித்தது. அந்தக் கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது. ஸ்ரீ நாமதேவர் அருளிய நாம மகிமை. நாமமே இந்தப் பிரபஞ்சம் முழுதும் வியாபித்து உள்ளது. அனைத்தினும் சாரமான நாமத்தை உணராத அறிவிலிகள் பிறப்புச்சுழலில் இருந்து விடுபடுவதில்லை. நாமமே அழியாதது. ரூபங்கள் வேறு வேறாயினும் அனைத்தின் நாமமும் ஒன்றே. நாமமே ரூபம். ரூபமே நாமம். இவை இரண்டிற்கும் பேதம் இல்லை. இறைவனே நாமரூபத்தோடு வெளிப்படறான். அதனாலேயே வேதங்கள் நாமத்தையே சிறப்புச் செய்யறது. நாமத்தை விட சிறந்த மந்திரம் இல்லை. இதை அறியாதவர்கள் அறிவிலிகள். நாமமே இறைவன். இது அவனுடைய அந்தரங்க பக்தர்களுக்கே தெரியும். நான் என்பது எது என்று தன்னை உணர்ந்தவர்க்கே எங்கும் நிறைந்த நாமத்தை உணர முடியும். நான் என்பது எது என்று தெரியாதவர்களுக்கு, எங்கும் நிறைந்த நாமம் தெரியாது. தன்னை உணர்ந்தால், எங்கும் நிறைந்த நாமத்தை உணரலாம். தியானத்தாலோ, சாஸ்திர ஞானத்தாலோ, பிற இயம நியமங்களாலோ எங்கும் நிறைந்த நாமத்தை உணர முடியாது. உன்னை முதலில் ஒரு குருவிடம் முழுமையாக சரணம் செய்து, ஒப்படைத்து, அவரிடம் இருந்து, உன்னிடம் இருக்கும் 'நான்' என்பது எது என்று தெரிந்து கொள். நான் என்பது எங்கிருந்து வருகிறதோ, அந்த மூலத்திலே உன் தனித்தன்மையை கரைத்து விடு. அதுவே துவிதமற்ற, என்றும் உள்ள பொருள். அதுவே மூவுலகும் நிறைந்த நாமம். துவிதமற்ற அந்த வஸ்துவே பரமாத்மா. அதுவே நாமம். பக்கம் 436 - 439. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்