ஃபாலோவ்
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
5,535
போஸ்ட்
8,892
பின்தொடர்பவர்கள்
D Muthu Prakash, Kanchipuram 💐
609 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண் முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது . விளக்கம் ========= நான் வீற்றிருந்த தெற்கு கடற்கரை ஓரத்திலும் ஏராளமான அழிமதிகளும் நடந்தன. பலம் பொருந்தியவர் நியாயம்தான் அங்கே நியாயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்னர் ஒழுக்கம் நிறைந்த பெண்டிர்கள்தாம் நான் இருந்த இடத்தில் வந்து முங்கிக் குளித்து என் நடையில் ஆட வந்தனர். . . அகிலம் ======== ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள் பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து . விளக்கம் ========= இப்பொழுதோ ஆட வருபவர்கள் அசுத்த நிலையிலேயே வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கோவிலில் பாட வரும்போதும் பெண்டிர் பலவகைகளில் அசுத்த நிலையை உண்டாக்குகின்றனர். கோவிலில் பூசை செய்கின்ற குறும்பு நிறைந்த பூசாரிகள் மிகவும் துணிச்சலுடன் அவர்களுக்கு விருப்பமான பெண்களுக்குக் கொடுப்பதற்காக என் வருமானத்தைத் திருடுகிறார்கள். கணக்கர் வரை அங்குள்ள வேசிப் பெண்களுக்குச் சாதகமாக இருந்து கொண்டு என் வருவாயைக் கொள்ளை அடித்து அவர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். அவ்வேசிப் பெண்களும் வேசித்தனமாக அவர்களுக்கு இயைந்தவாறு நடந்து என் முதலைப் பதுக்குகிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்திருப்பதால் அவ்வேசியர்க்ள அந்த ஆடவரைச் சேர்த்துக் கொள்கிறார்கள். . . அகிலம் ======= பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம் எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில் பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக் கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய் நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப் பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே . விளக்கம் ========= பம்பையர்களும், பரத்தையர்களும், பிறரைக் கவரப் பகட்டுத்தனமாகக் கையினால் காட்டுகின்ற முத்திரைகள் எல்லாம் எனக்கு ஏற்றவை அல்ல. மாமுனியே, இந்த வகைச் செயல்கள் எல்லாம் எனக்குத் தேவையில்லை என்று மானம் அழியும் முன்னரே கூறியதுண்டு. மாமுனியே, நான் தெச்சணத்தில் பள்ளி கொண்டு, களியாட்டு காவடித் தூக்குதல், கைக்கூலி கொடுத்தல் போன்றவை தேவையில்லை என்று தடை செய்ய வேண்டிய எல்லாவற்றையும் தடை செய்து, பரிசோதனை பார்த்து, சிறிது காலம் கழித்து, நான் தருமபூமியை ஒரு குடைக்குக் கீழ் ஆட்சி புரியப் போகிறேன் என்று கூறித் தெச்சாணாபூமி நோக்கி நடக்கலானார். . . அகிலம் ======== தாமுனிந் தையா தவறாத மாமுனியும் தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக் கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம் சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார் . விளக்கம் ========= திருச்செந்தூர்க் கோவிலில் தீமையின் உச்சத்தைக் கண்டு திருச்செந்தூர்ப் பதிகளுக்குள்ள சாபமுறைகளைக் கூறிவிட்டு, வைகுண்டர் மாமுனிவருடன் தெச்சாணாபூமிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணித் திருச்செந்தூர்க் கடக்க அங்கிருந்த தருவையின் கரைவழியே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த தேவர்கள் எல்லாரும் சங்கீதம் பாடிக் கொண்டு வந்தனர். அப்போது, மங்களநாதனாகிய வைகுண்டர் தம்முள் மாற்றம் அடைந்தாலும் மனித உருவத்தோடு அங்குள்ள மக்கள் எல்லாரும் நான்கு திசைகளிலுமிருந்து காணும்படியாக வந்து கொண்டிருந்தார். . . அகிலம் ======== பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல் ======================================== மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத் தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி . . விளக்கம் ========== இவ்வாறாக வைகுண்டர் தெச்சணாபூமி நோக்கி வந்து கொண்டிருந்த போது பூதங்கள் எல்லாம் கூடி அவரைச் சுற்றி வந்து கொணடிருந்தன. அவரைப் பூமியில் நடக்கவிடாவண்ணம் ஏந்தி வரப் பல பூதங்கள் முயன்றன. அதைக் கண்டு கொண்ட வைகுண்டர் அப்பூதங்கள் தம்மை ஏந்தி வராவண்ணம் விலக்கித் தள்ளினார். . . அகிலம் ======= நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில் தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார் . விளக்கம் ========= பிறகு அப்பூதங்களை நோக்கி, பூதங்களே, நீங்கள் என்னைச் சுமந்தால் இந்தப் பரந்த உலகத்தில் சோதனை செய்ய நான் வருகின்ற காலத்தில், என் சட்டத் திட்டங்களை மீறி நடந்தால் உங்களிடம் நீதி கேட்பதற்கு நான் தகுதி இல்லாமல் ஆகி விடுவேன். எனவே, வேதாளங்களே, நீங்கள் என்னைச் சுமக்கும் வேலையைச் செய்ய வேண்டாம். என்னைச் சுமக்கப் பஞ்சபாண்டவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வைகுண்டர் தெச்சணாபூமி திசை நோக்கி மீண்டும் நடக்கலானார். . . அகிலம் ======== தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப் பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும் தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும் மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும் சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத் துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப் புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே . விளக்கம் ========= இவ்வாறு சிறப்போடு வந்து கொண்டிருந்த வைகுண்டரைக் கண்டு அவருக்குப் பூக்கள் கொண்டு வந்து அவர் மீது சூடச் செய்து வணங்குவாரும், கற்பூறத் தீயினால் அவருக்குத் தீபாராதனை காட்டுவாரும், இரு மருங்கும் நின்ற பூச்செடியிலுள்ள பூக்கள் அசைந்து வெஞ்சாமரை போன்று வீசிக் கொண்டு நிற்கவும், மழை பொன் துளிகள் போன்று மெதுவாக அவர்மேல் தெளித்து வரவும், சந்திரன் தம்முடைய குளுமை பொருந்திய குடையைப் பிடிக்கவும், காற்று வெஞ்சாமரை வீசவும், துதிப்பாடல்கள் பாடுபவர்கள் வழி செய்து கொடுக்கவும், தேவர்க்ள அழகாகப் பாடிக் கொண்டு வரவும், இப்படியாக எல்லா வகையான சிறப்புகளும் நல்ல முறையில் முழங்கி வரவும், தெச்சணம் நோக்கி புறப்பட்டார். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
4.4K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற . விளக்கம் ========= அப்பொழுது வைகுண்டர் தேவர்களை நோக்கி, அன்பர்களே, இவ்வுலக மக்கள் கண்களில் காணும்படி வர வேண்டும் என்று நீங்கள் வேண்டியபடி என்னைத் தொடர்ந்து மக்கள் கண்களில் காணும் வண்ணம் என்னோடு சேர்ந்து ஒரே கூட்டமாகக் கூடி எப்போதும் ஒழுங்காக வாருங்கள் என்று கூறினார். உடனே, வானத்தில் நின்றுகொண்டு வாத்தியங்கள் முழங்கி வரவும், தானவர்கள் முதல் சங்கக் கூட்டங்களும் ஆகாயத்தில் நின்று அவரை வாழ்த்திக் கொண்டு வரவும், சிறப்பு பொருந்திய சூரிய தேவனும் அங்கே வந்து தனது குடை மூலம் நிழல் போல ஒளியைப் பரப்பி வந்தார். . . அகிலம் ======== செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல் ======================================================= நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு . விளக்கம் ========= சிறப்பான வைகுண்டர், வண்டுகள் சுற்றி வருகின்ற சோலைகள் வாய்க்கப் பெற்ற வனங்களையும் தாண்டி, ஆலைகள் நிறைந்த தெருக்களையும் தாண்டி, அந்த ஊரில் அமைந்திருந்த சிறந்த பதிகளையும் தாண்டி, மண்டப மேடைகளையும் தாண்டி, மடங்களையும் தாண்டி, குளுமை பொருந்திய தமிழ் மொழி பேசப்படும் திருச்செந்தூர் எல்லையை விட்டு செல்வதற்காக அங்கே நின்று கொண்டிருந்தார். . . அகிலம் ======= நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர் நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன் இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார் . விளக்கம் ========= அப்பொழுது, அங்கே நின்ற உறுதி படைத்த மாமுனிவன் ஒருவன் சிவனுடைய மருமகனான வைகுண்டரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி, தாங்கள் திருச்செந்தூர்ப் பதி விட்டுத் தெச்சணாபூமிக்கு, இச்சமயத்தில் செல்ல வேண்டிய காரணம் என்ன? இங்குள்ளோரைத் தாங்கள் பகைத்த காரணம் என்ன? என் நாயகமே, தேவர் முதல் எல்லாக் கூட்டங்களையும் மகிழ்விக்கின்ற அரசே, இந்த காரணம் பற்றித் தாங்கள் சொல்வீராக என்றான். . . அகிலம் ======= அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார் இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல் நாள்வழியாய்ச் சான்றோரை நியாயமில் லாதடித்தான் சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை . விளக்கம் ========= முனிவன் சொன்னதைக் கேட்ட வைகுண்டர் முனிவனை நோக்கி, முனிவனே, இப்போது நீ கேட்டதற்குரிய பதிலை நான் கூறுகின்றேன். நான் கூறுகின்றவற்றை ஏற்று நடக்காத நீசன் தான் கெடுவது அறியாமல் நித்தம்நித்தம் சான்றோர்களை எந்தவித நியாயமுமின்றி அடித்தான். அவனுக்குத் திருவன்நதபுரத்தில் இருந்து புத்திமதி கூறினேன். அப்படியும் என்னுடைய வார்த்தைகளையும் சக்தியையும் பற்றிச் சிறிதளவுகூட எண்ணாமல் சான்றோரை மீண்டும் மீண்டும் இழிவாக நடத்தி வருகிறான். . . அகிலம் ======= ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம் வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால் என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான் சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான் . விளக்கம் ======== எனவே, அந்த நீசன்மேல் அதிக அளவு கோபம் கொண்டு திருவனந்தபுரம் இடத்தை விட்டுத் திருச்செந்தூர் நோக்கி வந்தேன். அங்கே நான் சிறிது காலம் வாழ்ந்து வந்தேன். அப்போது சில வெங்கப்பயல்கள் வேசைகளோடு உறவாட ஆசைப்பட்டனர். என்னைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாமல் என் கோவிலுக்குள்ளேயே அங்கு வந்த சில பெண்களுடன் கீழ்த் தரமாகச் சரச வார்த்தைகளைப் பேசியும் தவறும் செய்து விட்டனர். . . அகிலம். ======== இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில் மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன் . விளக்கம் ========= இருவரின் மனமும் ஒத்து செயல்பட்டிருந்தால்கூட அத்தவற்றினை மன்னிக்க முடியாது. கோவிலில் எனக்குப் பணிவிடைகள் செய்துவிட்டுத் திரும்பிச் சென்ற வேறொருவனின் மனைவியை அங்கிருந்த ஒரு நம்பூரி பிடித்து இழுத்தான். அந்த வயதான சழிந்த உடம்பையுடைய நம்பூரி தன் இச்சைக்கு உடன்படாத அவள் மார்பின் மேல் அணிந்திருந்த துணியைப் பிடித்து இழுத்து விலக்கி முறைகேடு செய்ய முயற்றான். . . அகிலம் ======== மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல் மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக் கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே . விளக்கம் ========= அச்சமயம் அவன் தலையின் மேல் அணிந்திருந்த முத்திரி மாலையைக் கூட கழற்றவில்லை. மனதிலிருந்த தீய காம மயக்கத்தால் நம்பூரி அந்தப் பெண்ணின் உள்ளம் வருந்தும்படி அவளைக் கட்டிப் பிடித்து இழுத்தான். அவள் மார்பகங்களைத் தனது காம வெறியால் அவளுக்குக் கேடு வரும் வண்ணம் நகத்தால் கிழித்து வேதனை உண்டாக்கினான். அவ்வேதனை தாங்காமல் அப்பெண் கோபமுற்றுக் கோவில் சுவற்றில் தலையை மோதி ஒரு சாபம் கூறினாள். . அகிலம் ======= நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக் காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள் சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே . விளக்கம். ========== நாராயணா, கந்தா, நான் உனக்குப் பணிவிடைகள் செய்து, உன்னைக் காண வேண்டும் என்னும் நோக்கம் இப்படியாகிவிட்டதே. என்னுடைய வாழ் நாளும் கடைசிக் காலத்தை எட்டக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த தவறான உறவினால் உனக்கும் கேடுகள் உருவாகி விட்டன. எனக்கு இப்படி ஒரு பிறவி இப்பொழுது வாய்த்து விட்டதோ? எனக்கு இத்துன்பம் ஏற்பட்டதால் திருச்செந்தூர்க் கோவிலில் இன்னும் சில நாள்களில் இங்குள்ள மண் நீரற்றுப் போய்விடும் என்று அந்த கற்புள்ள மங்கை சபித்து தடீர் என்று கீழே விழுந்து உயிர் துறந்து சிவலோகத்தை அடைந்தாள். . . அகிலம் ======== நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும் உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால் இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல் எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன் . விளக்கம் ========= நம்பூரி பங்கம் செய்ததால் மாமுனியே, அவள் அத்தலத்தில் உயிர் விட்டாள். அந்தப் பெண் உரைத்த கடுமையான சாபத்தால் நான் அங்கு இருக்க விரும்பவில்லை. அன்றைய நாள் முதல், இனி நாம் எங்கே போவோம் என்று எண்ணித் திருச்செந்தூரை விட்டு எழுந்து தெற்குக் கடற்கரை ஓரத்தில் போய் அமர்ந்தேன். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
648 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத் தேவர்சே வித்து வரவே சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும் சேவித்திரு புறமும் வரவே அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமென ஆகாய மீதில் வரவே அனவரத கோலாக லாதிநாரா யணாவென அமரரிசை கூறி வரவே . விளக்கம் ========= தேவர்கள் எல்லாரும் செண்டை மேளத்தோடும் தண்டை மணியோடும் அவருக்குப் பணிவிடை செய்து இனிய ஓசையை எழுப்பி வந்தனர். அவருடைய இரு புறமும் சிவசிவ, நமசிவாய, ஓம் நமசிவாய என்று பல வகைகளாகப் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி வந்தனர். அண்டங்கள் எல்லாம் அதிரும்படியாகச் செண்டை மணி ஓசை எல்லாம் ஆகாயம் மீதில் எழும்பின. எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும் நாராயணா என்று தேவர்கள் சொல்லி வந்தனர். . . அகிலம் ======== மத்தள முடுக்குபல வாத்திய மடடென வானமதில் நின்ற திரவே மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே வானவர்க ளிசை கூறவே தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச் சங்கீதக் காரர் வரவே சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு சாஸ்திரக் காரர் வரவே . விளக்கம் ========= மத்தளங்களும் உடுக்குகளும் இன்னும் பல வாத்தியங்களும் வானத்திலிருந்து இனிய ஓசைகளை எழுப்பியவண்ணம் இருந்தன. வானோர்கள் வானத்தில் நின்ற வண்ணம் மலர்மழையும், பன்னீர்த்துளியும் தினமாரியும் தூவிய வண்ணம் இன்னிசை இசைந்தனர். மத்தளங்கள் ஒலி எழுப்பவும் சங்கீதக்காரர்கள் பாடிக் கொண்டு வரவும் சகல கலைவாணர்களும், வேத சாத்திரிகளும், அவரவர் தத்தமக்குரிய இசைகளைப் பாடி வந்தனர். . . அகிலம் ======== தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சில தேவர் கூறி வரவே சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென நேரியர் சீரியல் கூறவே நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு நீதென் குருவெனப் போற்றினார் . விளக்கம் ========= தேவியர், தித்திங்கின என்னும் ஓசையைத் திருப்பித்திருப்பி எழுப்பியவண்ணம் பாடி வந்தனர். தேவர்கள் சிவசிவ சிவாசிவா என்னும் மந்திரத்தை வைகுண்டருக்குப் பணிவிடை செய்தவண்ணம் கூறி வந்தனர். அழகு பொருந்திய பெண்டிர் ஒழுங்கான இசையை அழகுபட இசைத்து வந்தனர். நீலகிரி வாலங்குரு போன்ற நீ என் குரு, தாயும் என் குரு உனக்கு நீயே குரு ஆவாய் என்று பலர் போற்றி இசைந்தனர். . . அகிலம் ======== பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும் பலவாங் கிரி குண்டமே பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனே பசுவா கிய நிசமே தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த் தெச்ச ணாபதி பூபனே துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு துவாரகா பதிக் கரசே . விளக்கம் ========= முன் ஆகமங்கள் படி இன்று வைகுண்டர் வந்தார் என்று சொல்லி அவரைக் காண அங்குப் பலர் வந்தனர். பசுவாமனே, சிசுபாலனைக் கொன்றவனே, பலம் பொருந்தியவனே எல்லா இடமும் வியாபித்து இருப்பவனே, எங்கள் உயிராகி மெய்பபொருளாய் நிற்பவனே, தொண்டர்களுக்கு என்று வருகின்ற வைகுண்டரே, தெச்சணாபூமியில் சகல உரிமைகளுமுள்ள தலைவனே, துன்பமணியே, களபமணியே, அழகு ஒழுகக் கருணையோடு துவாராபதியை ஆண்டு வருகின்ற அரசனே, என வணங்கித் தொழுதனர். . . அகிலம் ======= சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு துச்சா வில்லு வீரா சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது தலையின்வழி தானே நடவாயே துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடு துச்சா வில்லு தீரா சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய் துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார் . விளக்கம் ========= கலியனின் தீய வலிமை அழிக்கப்படுவதற்காக எடுக்கப்பட்ட அம்போடு இப்பூவுலகில் பிறந்து, தீயவர்கள் எல்லாரையும் அழிக்கும் வில்லையுடைய வீரனே சுவாமியே, தங்களுடைய பாதகங்களை எங்களுடைய தலையின் மீது பதித்துத் தெச்சணாபூமிக்குச் செல்லுகின்ற வழியைக் கடந்து செல்வீராக. கலியை அழித்துவிடவும், அவன் பெயர் வெளியே வராவண்ணம் சிதறபடவும். அம்பு தொடுக்கின்ற வில்லையுடைய வீரனே, சுத்தனே, உனக்கு ஏற்றவர்களை வித்தாக்கி சான்றோர்களை வாழ்வித்தோனே. துவாராபுரிக்கு அரசே, வருவீராக என்று கூறித் தொழுதனர். . . அகிலம் ======== தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத் தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர நாதமொடு சங்கு நகரா முழங்கிவர மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத் தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச் சாத்திர வேத சாதிமுறை யோதிவர நாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும் . விளக்கம் ========= இவ்வாறாகத் தேவர்கள் எல்லாரும் எட்டுத் திசைகளிலுமிருந்து போற்றித் தொழுது வரவும். இனிய பண்பு வாய்ந்த வானோர்கள் சங்கீதம் பாடி வரவும், வேத மறையோர்கள் வேதக்கலைகளைக் கூறிக் கொண்டு வரவும், சங்குகள் இனிய நாதத்தையும் பறைகள் இனிய ஓசையையும் எழுப்பி வரவும். வானோர் மத்தள ஒலியை எழுப்பி வரவும், தேவர்கள் பாடி வரவும், சாத்திரங்கள் கற்ற தேவ மறையோர்கள் மந்திரங்களை ஓதி வரவும், நான்கு வகைச் சாதிகளும் நான்கு திசைகளிலும் போற்றி வரவும். அரம்பையர் ஆலத்தி ஏந்தி ஆடிக் கொண்டு வரவும், சிறந்த மாமுனிவர்கள் வரிசை வரிசையாகப் பாடல்களைப்பாடி வரவும், வைகுண்டரைப் பற்றிய நாதாந்த வேதங்களைச் சொல்லுபவர். அவரை நெருங்கிக் கூறி வரவும் தவசிகள் எல்லாரும் அவர்மேல் மலர் மழை பொழிந்தபடி வரவும், இவற்றைக் கண்டு வைகுண்டர் மனம் மகிழ்ச்சியுற்றார். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
623 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வைகுண்டர் முருகனுக்கு அருளல் தொடர்ச்சி : ============================================= அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார் இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால் உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில் பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார் அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம் உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக் கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் . விளக்கம் ========= உடனே, வைகுணடர் கந்தனை நோக்கி, கந்தனே, நீ இப்போது சொன்ன மொழிகள் எல்லாம் உண்மையாக இருக்குமானால், உயர்ந்த உன் கோபுரத்தின் வடமேற்கு மூலையில் பின் கோபுரம் தெரியும் வண்ணம் பிளந்து காட்ட வேண்டும். மேலும் உன்னை என்றும் வழிபட மக்கள் உருவாக்கி வைத்திருக்கும் பயனற்ற சிலையைத் தெற்கு முகமாகத் திருப்பி வைத்துவிட வேண்டும். உலக மக்கள் அறியும் வண்ணம் உன் கோயிலின் ஒரு வாயிலை அடைத்து வைக்க வேண்டும். முடிவாக நீ மன வேதனையோடு கண்ணை மூடிக் கொண்டு கவிழ்ந்தவண்ணம் இருக்க வேண்டும். இத்தனையும் செய்து முடிப்பாயா? என்றார். . . அகிலம் ======= அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால் பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார் அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார் . விளக்கம் ========= பிறகு நான் சொன்னதை மறந்து ஏதாவது தவறுதலாக நடந்தால் வைகுண்டராகிய எனக்குப் பொல்லாத கோபம் உண்டாகும். உனக்குக் கடினமான பெரிய விலங்கு மாட்டப்படும் என்று கூறி எச்சரித்தார். . இதைக் கேட்ட கந்தன் மனம் மிகக்கலக்கம் அடைந்து, தாங்கள் இப்போது சொன்னவற்றை எல்லாம் நான் இப்போதே செய்து முடித்து விடுகிறேன். மேலும் தங்கள் அறிவுரைப்படியே அடியேன் நடப்பேன் என்று கூறினார். . . அகிலம் ======= சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன் விடியும் பொழுது வேசம் பலதணிவேன் பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன் வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே . விளக்கம் ========= மீண்டும் கந்தனிடம் சில உபதேசங்களைக் கூறினார். கந்தனே, எல்லாரும் கட்டுப்பாட்டிலிருந்து மீறி நடக்காது இருங்கள். நீதி வழியில் செயல்படுங்கள். உலகம் அறியும்வண்ணம் ஒரு நெல் எடுத்து உடைக்கும் முன்னர் தருமயுகத்துக்குத் தகுதி பெற்ற ஆத்மீக விழிப்புற்று எழுந்தவர்களின் தகுதியை அறியப் பல சோதனைகள் பார்த்து நடுத்தீர்ப்பும் செய்வேன். தருமயுகம் பிறக்கும் சமயம் பல வகை வேசம் அணிந்து தருமபதிக்குத் தகுதி படைத்தவருடன் அடுத்த நெல் எடுத்து உடைக்கும் முன்னே நான் தோன்றி தருமயுகத்தை ஆள வருவேன். . . அகிலம். ======== கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும் மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர . . விளக்கம் ========= எனவே, என்னையே கருதி ஒரு நினைவோடு இருங்கள். உங்கள் நினைவு சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உபதேசங்க்ள கந்தனாகிய உனக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் இது பொருந்தும். எனவே, மறந்துவிடாதீர்கள். ஞாபகமாக இருங்கள் என்று கூறி அவ்விடம் விட்டு, வைகுணடர் மீண்டும் தெச்சணம் நோக்கி நடக்கலானார். . . அகிலம் ======== வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல் ============================================ அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும் ஆதவனைச் சூழ் கணம்போல் அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர் ஆடியே பாடி வரவே தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழ சூழவளைந் தேழியல் படர்தே சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச் சூராதி சூர ரெனவே . விளக்கம் ========= அண்டத்தில் உள்ளவர்கள் எல்லாரும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நிற்கும் கணங்களைப் போல் நின்று அங்கிருந்து வந்து கொண்டிருந்த வைகுண்டரை வணங்கினர். சிலர் அரிஅரி அரகரா சிவசிவா என்று பாடியும் ஆடியும் வந்து கொணடிருந்தனர். தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து வளைந்து அவருடைய பாதங்களை ஏழு வகை இசைகள் பாடித் தொழுதனர். அவர்கள் வீரம் பொருந்திய இறைவனான நாராயண மந்திரத்தைத் தொடர்ந்து ஓதி வந்தனர். . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
801 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . வைகுண்டர் முருகனுக்கு அருளல் தொடர்ச்சி : =============================================== அகிலம் ======= வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள் எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம் அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன் காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ . விளக்கம் ========= வானம் சூழ்ந்த இவ்வுலகில் வாழுகின்ற மண்டபங்கள் எத்தனை உண்டோ அத்தனையிலும் உள்ள தேவர்கள் எல்லாரும் அறியும்படியாகக் கூறுகிறேன் கேட்பீர்களாக. காணிக்கை வாங்காதீர். கைக்கூலி கேளாதீர். மாணிக்கத்தாலான வைகுண்டத்தில் இருக்கும் நாரயணரை நினைத்தபடி வாழுங்கள். பூஜை, பலி வகைகள், தீபம் போன்றவற்றை ஏற்காதீர். அவற்றுக்காக ஆசைப்படவும் செய்யாதீர். பிறருக்கு வஞ்சனை, துன்பம் போன்றவற்றைச் செய்யாதீர். . . அகிலம் ======== ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ மாய நினைவு மனதில் நினையாதுங்கோ வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ . விளக்கம் ========= இதுவரை நியாயமுறை தவறி நன்றி மறந்து வாழ்ந்தீர். இனி மாயநினைவை மனதில் அனுமதிக்காது வாழ்ந்து வாருங்கள். வைகுண்டா என்னும் மந்திர சொல்லை மனதில் நினைத்தவண்ணம் வாழ்ந்து வாருங்கள். பொய்யான தேரோட்டம் பூஜை புனக்காரம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளதீர்கள். ஆடல் அழகிகள் கைகளினால் முத்திரைகளைக் காட்டி ஆடுவது, சப்பிரங்கள் எடுத்துச் சுற்றுதல் போன்றவற்றைச் செய்யாதீர். . . அகிலம் ======== மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும் விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ . விளக்கம் ========= யாரிடமும் மோதிப் பேசாதீர். ஆசையை மனதிலிருந்து அகற்றி விடுங்கள். ஆலத்தி கைவிளக்கு ஆராட்டு இவற்றைப் பார்க்காதீர். சரவிளக்குத் தீபத்தைப் பார்க்காதீர் எந்த வகையான பூவையும் ஏற்றுக் கொள்ளாதீர். கொழுந்து மஞ்சணை, மாலைகள், திருநீறு, சந்தனம், தரையில் விழுந்து இறைவணக்கம் செய்தல் ஆகியவை இன்று முதல் தேவை இல்லை என்று கூறி விடுங்கள். . . அகிலம் ======= கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம் . விளக்கம் ======== எதையும் கூறும்போது கூக்குரலிட்டுக் கொக்கரித்துச் சத்தமிட்டுப் பேசாதீர். யாகம் போன்ற முறைகளை ஏற்றுக் கொள்ளாதீர். தீபரணை, திருவிழாக்கள் போன்ற எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குங்கள். ஆபரணம் அணியாமல் இருங்கள். அன்னீதம் செய்யாமல் அனைத்தையும் பெறுத்து ஒதுக்குங்கள். . . அகிலம் ======= அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால் வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும் என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான் மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார் காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான் . விளக்கம் ========= இவற்றை மீறினால் வைகுண்டராகிய எனக்குக் கோபம் உண்டாகும். நீங்கள் நல்லவர்களாக உயர நியாய நெறியில் நில்லுங்கள் என்று வைகுண்டர் கூறினார். உடனே, கந்தன் இப்பூவுலகை அளந்த வைகுண்ட நாரணரே, நீர் அருளிய சட்டத் திட்டங்களிலிருந்து அடியாராகிய நாங்கள் நிலை தவற மாட்டோம் எங்களை நீவிர் காப்பீராக என்று வைகுண்டரின் அடி தொழுதான். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
691 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 28.05.2026 . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வைகுண்டர் முருகனுக்கு அருளல் ==================================== அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து . விளக்கம் ========== அன்றைக்குத் தேவர்கள் முனிவர்கள் ஆகிய எல்லாரும் வைகுண்டருடன் கூடிச் சென்று அந்தக் கயிலை உலகத் தூணில் எழுதினர். . . அகிலம் ======= வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி . விளக்கம் ========= வைகுண்டர் தமது பாதங்களை எல்லாரும் வணங்கி வர, வேலவனுக்குரிய திருச்செந்தூரை, நோக்கி நடந்து சென்றார். திருச்செந்தூரை அணுகும்போது, ஆறுமுகன் வைகுண்டரைக் கண்டு நடுங்கி, மிகவும் பதறி வடக்கு முகமாய் வீழ்ந்து வணங்கி வைகுண்டரைப் போற்றித் துதித்தான். . . அகிலம் ======== அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச் செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும் நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும் கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால் இத்தனை நாளும் என்னைக் கெணியாமல் புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள் இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள் மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத் தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே . விளக்கம் ========= வேலவனை ஆதி வைகுண்டர் பார்த்து, சிவநாதக் கண்மணியே, நான் நீதி கேட்கப் போகிறேன். ஏன்? எதற்கு? என்று சிந்திக்காமலும் நான் கூறக் கூடிய உபதேசங்களைக் கேட்காமலும் இருந்தால் உனக்கு இனிமேல் கேடு வந்து முடியும். இவ்வளவு காலமும் என் சக்தியைப் பற்றிச் சிந்திக்காமல் அறிவு இல்லாதவர் போல் வாழ்ந்தீர்கள். இனித் தருமபூமி பிறந்து எல்லாரையும் ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குக் கீழாகப் பெரிய தரும சிந்தனையை மட்டுமே நினைந்து மாய நினைவுகளை அறுத்தெறிந்து கலியனை முழுவதுமாக அழித்துத் துன்பக் குழியை மூடி, இந்த மதிப்புக்குரிய பூமியை நான் ஆட்சி புரிந்து நல்லவர்களைத் தெரிந்தெடுத்து உயர்பதவி கொடுக்கப் போகிறேன். இதை அறிந்து கொள்வாயாக. . . அகிலம். ======== கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி . விளக்கம் ========= மெய்யறிவு பற்றிய கல்வி கற்காதவரர்களுக்கு இனிமேல் துன்பமான வாழ்வுதான் என்பதையும், தருமபூமியை அடையும் வைகுண்டமாக நான் பிறந்துள்ளேன் என்பதையும், இனி நன்மையே காணும் என்பதையும் நான் நாரணன் என்பதையும் அறிந்து கொள். தீய எண்ணம் தீய பேச்சு என்னும் சொல்லுக்கே இங்கு இடம் கிடையாது. இனித் தருமயுகத்துக்குரிய சிறப்புகள் தோன்றிவரும் காண்பாயாக. எனவே, இனிமேல் நீ நடக்க வேண்டிய விதிமுறை பற்றி நான் உனக்குக் கூறுகிறேன். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
1K காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; விளக்கம் ========= கங்கையிலே நீராடும் ஏழு கன்னிப் பெண்களைக் காணுகிறார். அவர்கள் தங்கள் கற்பினால் கொண்ட ஆணவத்தைத் திருமால் சோதித்து அவர்கள் கற்பை அழிக்க நினைத்தார். எனவே, கயிலை முதலிய ஏழு லோக வித்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தம்முள் அடக்கி எரிகின்ற பிரகாசமான கட்டையைப் போலக் கிடக்கிறார். அக்கன்னிமார் ஏழு பேருக்கும் குளிரும், நடுக்கத்தையும் உருவாக்கித் தம்மை நெருங்கச் செய்து அவர்களைக் கருவுறச் செய்து ஏழு அழகு பொருந்திய குழந்தைகளையும் ஈண்றெடுக்க வைத்து, அக்கன்னிகளைத் தவசு புரிய அனுப்பி வைக்கிறார். பத்திரகாளியிடம் தமக்குப் பிறந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்காகக் கொடுக்கிறார். பிறகு ஸ்ரீரங்கம் போய் இவ்வுலகோர் காண நாராயணர் பள்ளி கொள்ளுகிறார். . . அகிலம் ======== தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, . விளக்கம் ========== தேவர் முதலியவர்களுடைய துன்ப வார்த்தைகளினால் ஈசன் திருமாலிடம் ஆலோசனை கேட்காது, தாமே கலியனைப் பிறவி செய்கிறார். அவன் 2,30,000 வருடங்களாக மிகுந்த கஷ்டங்களையும், கொடுமைகளையும் மக்களுக்குச் செய்து இந்த பூவுலகை அரசாண்டு வர, அன்பு மக்களாகிய சான்றோர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தில் எல்லையைப் பொறுக்க முடியாமல் . . அகிலம் ======== வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும் . விளக்கம் ========== வியாகரமுனிவர் வகுத்த திருவாசகத்தின்படி நாராயணர் தாமே வைகுண்டமாய் 1008ஆம் ஆண்டு மாசி மாதம் இப்பூவுலகில் ஆதி சாதியாகிய சான்றோர் இனத்தில் ஒரு மனித உருவில் வந்து பிறந்து பதினெட்டுச் சாதிகளையும் ஓர் இடத்தில் வரச் செய்வார். எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் எல்லாருக்கும் நோய், நாள்பட்ட பிணி போன்றவற்றைத் திருத் தண்ணீரால் நீக்கவும், . . அகிலம் ======== சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் . விளக்கம் ========== சந்தி இல்லாதவர்களுக்குச் சந்ததி கொடுக்கவும், பொருள் இல்லாதவருக்குப் பொருள் கொடுக்கவும், வாதைகள், பேய்கள் போன்றவற்றை அக்கினியிலே தள்ளிச் சருகில் எரிந்து கரிந்து போகச் செய்யவும், உண்மையும், அன்புமுள்ள மனிதருக்காக இப்பூமியில் நான்கு தடவை கடுமையான துன்பங்களைச் சந்திக்கவும், சாத்திரங்கள் வேதமங்கள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குப் பலவகைகளில் உதவிகள் செய்யவும் ஏழு யுகக் கணக்கையும் கேட்டு மிகத்துன்பம் கொடுத்துக் கலியனை அவனாலேயே ஒழித்துக் கட்டவும், . . அகிலம் ======== தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் . விளக்கம் ========== இப்பூமியில் உள்ளாரை ஒரே ஆட்சியின் கீழ் ஆளவும், இரத்தினத்தால் ஆகிய திருமுடியைச் சூடிச் சகலவிதமான பெருமைக்கும் உரிய இருக்கைகள் அமைந்த மேடைகள் உருவாக்கவும், அவர்களுடைய தவரு பெருமைப்படவும், . தங்கமணியால் ஆகிய சக்கராயுதக் கொடியும், தங்க விருதுக் கொடியும், ஒற்றைக் கொடியும் கட்டவும், எல்லாரும் புகழுகின்ற தரும இராஜாவாகவும், எட்டுத் திக்குகளும், பதினான்கு உலகங்களும் அறிய அசையாத மணி ஒன்றைக் கட்டிச் சர்வேசுரனாகவும். இவ்வுலகின் ஐம்பத்தாறு தேசங்களையும் ஆதி முதல் சர்வ காலமும் அழியாத திருவுளமாய் இருந்து ஒரு குடையின் கீழ் அரசாளவும், . . அகிலம் ======== ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார். . விளக்கம் ========== ஆதியான சூரியப் பிரகாசமான நாராயணருக்கு ஆதி ஆகமத்தின்படி வைகுண்டம் பிறந்தார் என்று குறிக்க இந்த அண்டத்தில் உள்ளவர்களும் மூவரும் தேவர்களும், சகல மாமுனிவர்களும் ஆகிய எல்லாரும் கூடி இருந்து ஆராய்ந்தனர். அதன்படி அச்செய்தியை இறைத் தொண்டரகளுக்கு என்று உயர்வு பொருந்தி கொன்றை மாலை அணிந்த சிவன் இருக்கும் கயிலையில் எல்லா மண்டலங்களும் புகழச் சிவனுடைய அருளினால் திருலெழுத்தை எழுதிப் பொறித்தனர். . . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது. . . தொடரும்… அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
712 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.05.2026 . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திருவாசகம் 2 ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும் . விளக்கம் ========== ஒன்றாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது பரம் ஆகும். அவ்வாறிருக்க இம் என்னும் ஓசையோடு உருவாகிய ஓசைக் காற்றிலிருந்து ஒருவகைக் சக்தி உருவாகியது. அந்தச் சக்தியிலிருந்து சிவம் தோன்றியும், சிவத்தில் சக்தியும், அதில் நாதமும் தோன்றியது. நாதத்திலிருந்து விஷ்ணுவும், விஷ்ணுவிலிருந்து உருத்திரர், மகேசுவரர், உலகம் அண்டம் பிண்டங்கள் அத்தனையும் தோன்றன. அவ்வாறு தோன்றிய பிண்டத்திலிருந்து முதலில் குறோணி என்னும் அசுரன் தோன்றுகிறான். அக்குறோணி தெய்வலோகத்தை விழுங்குகிறான். . . அகிலம் ======== கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே . விளக்கம் ========== இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு மிகுந்த சக்தி பெற்றுக் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டிப் பூவுலகில் தள்ளுகிறார். அதோடு நீடியயுகம் முடிகிறது. . அடுத்துச் சதுர்யுகம் தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வுலகத்தில் ஆறு துண்டுகளில் ஒரு துண்டிலிருந்து குண்டோமசாலி என்னும் அசுரன் தோன்றுகிறான். இவ்வுலகில் பிறந்த அவன் தெய்வலோகம் முழுதும் கேட்கும்படி முழங்கினான். அதைத் திருமால் செவியுற்று அவனைக் கொல்ல தேவர்களை நாங்கூழ் புழுக்கள் ஆக்கி, மலைகளைத் தூண்டில் ஆக்கி, ரிக், யஜூர், சாம அதர்வண வேதங்களை தூண்டில் கயிறு ஆக்கி, வாயு பகவானைத் தோணி ஆக்கி, வருண பகவானை மிதப்பு ஆக்கி கடலை ஓடை ஆக்கி காயாம்பூ வண்ணனாகிய திருமால் தோணியினுள் ஏறுகின்றார். கறைக்கண்டர் ஆகிய சிவன் ஓடத்தைத் தள்ளுகிறார். . குண்டோமசாலி கிடந்த கன்னி ஆற்றிலே தூண்டல் இட்டு அவனைக் கொன்று, நெடியயுகம் தோற்றுவிக்கப்படுகிறது. . . அகிலம் ======== தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, . விளக்கம் ========== இங்குத் தில்லைமல்லாலனும் மல்லோசி வாகனனும் பிறந்து அநியாயம் செய்யவே, அவர்களையும் கொன்று, அடுத்த யுகத்தைத் தோற்றறுவிக்கிறார். இந்த யுகம் கிரேதாயுகம் எனப்படுகிறது. இந்த யுகத்தில் சூரபற்பன் என்னும் சூரனும் சிங்கமுகா சூரனும் தோன்றுகின்றனர். இவர்களும் இதற்கு முன் வந்த அசுரர்கள் செய்த கொடுமைகளையே செய்து வந்தனர். இவர்கள் அநியாயம் பொறுக்க முடியாமல் ஆறுமுகக் கடவுள் என்னும் பெயரோடு அவதாரம் எடுத்து அந்த அசுரனையும் நாராயணர் அழிக்கிறார். அதே யுகத்தில் பிறந்த இரணியன் என்னும் அசுரனையும் நரசிம்ம அவதாரத்தோடு தோன்றி வதைத்து ஒழிக்கிறார். அவன் கொடுமையும் ஓய்ந்திடவே அந்த யுகத்தையும் அழிக்கிறார். . . அகிலம் ======== அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, . விளக்கம் ========== அடுத்த திரேதாயுகத்தில் இராவணை அழித்துச் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்டு, அவ்வசுரக் கிளைகளையும் ஒழித்து அவ்வுகத்தை முடிக்கிறார். . துவாபரயுகம் பிறக்கிறது. இந்த யுகத்தில் நாரணர் பஞ்ச பாண்டவர்களுக்கு உதவி புரியும் நாயகன் கண்ணணாகத் தோன்றுகிறார். பஞ்சவரும் எதியான துரியோதனனை வதைத்து அழிக்கிறார். பஞ்ச பாண்டவருக்குப் பட்டம் சூட்டி அரசாள வைக்கிறார். அச்சமயத்தில் கலியின் தோற்றத்தைச் செய்தி மூலமாக அறிந்து காட்டின் வழியாகத் தம்முடைய அடுத்த செயலுக்காக நடந்து கொண்டிருக்கிறார். கலியின் பிறப்பால் பாண்டவர்களுடைய பலங்கள் எல்லாம் கண்ணனால் வாங்கப்படுகிறது. பிறகு அவர் இதுவரை சுமந்து வந்த பொனகூட்டுச் சடலத்தைப் பர்வதாமலை உச்சியிலே கிடத்துகிறார். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
1.6K காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார் இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம் என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார் . விளக்கம் ========== வைகுண்டர் வானோரை நோக்கி, வானோரே, என்னை எப்படி வைகுணடர் என்று அறிந்து கொண்டீர்? என்று வினவினார். இதைக்கேட்ட வானோர் எல்லோரும் சொல்லலுற்றனர். . . அகிலம் ======== கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம் ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும் தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும் பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும் மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும் வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும் நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும் தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப் பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும் எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம் வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார் . விளக்கம் ========== சுவாமி, கயிலையில் உள்ள பிறப்பு இறப்பு வகைக்கணக்கும், உயிர்க்கணக்கும், ஒவ்வொருவருக்கும் உருவாகும் கண்டம் பற்றிய கணக்கும், பிரம்மனின் முதற்கணக்கும் இப்படிப் பத்து வகையான கணக்குகளும் இறைநிலை பெற்றவர்கள் கணக்கும் மோட்சம் பெற்றவர்க்கணக்கும், முன் யுகக்கணக்கும், செய்த குற்றக்கணக்கும், வைகுண்டத்தில் உள்ள நல்ல கணக்கும் நரகக்கணக்கும், நடுத்தீர்வைக்கணக்கும், தருமகணக்கும், பொறுமை உள்ளவர்கள் கணக்கும், பிரம்மாவின் பூலோக இறப்பு பிறப்புக்கணக்கும், ஆகிய சகலவிதமான கணக்குகளையும் தேவர்கள் மிகவும் வலிமையான கயிலையிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைக் கண்டோம். . . அகிலம் ======== தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம் மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார் நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள் ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு நீள அரன்சிவனும் நெடிய மருகோனும் இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம் பொன்னுலோ கம்புகுந்து பெட்டகத்தோ டேயெடுத்து வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும் சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார் . விளக்கம் ========= உடனே, மனங்கலங்கித் தேவர்களிடம் அது பற்றிக் கேட்டோம். தேவர்கள் எங்களை நோக்கி, நாராயணர்க்கு நல்ல வைகுண்டர் குழந்தையாய்ப் பிறந்து, ஒழுங்காக உலகை எல்லாம் சிறப்பாக ஒரு குடைக்குள் ஆள வருகிறார். எனவே, இன்று வரையுள்ள இந்தக் கணக்குகளை எல்லாம் வைகுண்டரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகவே, வானோர்களே, இச்சுருதிக் கணக்குகள் முதலிய எல்லாவற்றையும், கயிலாயம் புகுந்து பெட்டகத்தோடு எடுத்து வர வேண்டும் என்று கூறி அரனாகிய சிவனும், நெடியோனாகிய விஷ்ணுவும் எங்களை அனுப்பினார்கள். வைகுண்டர் சீக்கிரமாகப் பிறந்துவிட்டதால் இப்பொழுதே நாங்கள் இக்கணக்குகளை அவரிடம் கொண்டு போகிறோம் என்றனர். . . அகிலம் ======== நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார் அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார் இப்போது வானவரே எல்லோரு மென்கூட வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார் . விளக்கம் ========== தேவர்கள் கூறிய இந்த விபரத்தைக் கேட்டு நாங்க்ள தங்களுடைய பிறப்பு பற்றி அறிந்தோம் என்று வைகுண்டரிடம் கூறினர். உடனே, வைகுண்டநாதர் வானவரை நோக்கி, வானவர்களே, நீங்கள் எல்லாரும் என்னோடு வாருங்கள் என்று கூறி விட்டு வைகுண்டர் கயிலை நோக்கி நடந்து சென்றார். . . அகிலம் ======== சீருங் கோபால சிவனே செயலெனவே வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள் தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச் சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச் சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே வேத மறையோரும் விசய முனிவர்களும் நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக் கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில் தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி எங்கு மகிழ எழுதினா ரம்மானை . விளக்கம் ========== அவர் பின்னால் வானவர்கள், தேவர்கள், மறை முனிவர்கள், சாத்திரிகள், தானவர்கள் எல்லாரும் சீரும் கோபாலா சிவனே சிவனே என்று கூறிச் சங்கீதம் பாடி வந்தனர். சந்திரன், சூரியன் ஆகியோர் தத்தமக்குரிய குடைகளைப் பிடித்தனர். அழகு பொருந்திய வைகுண்டர் தோன்றி வந்தார் என்பதை வேத மறையோர்களும், விசைய முனிவர்களும் கூடி நாதாந்த வேதத்தை நன்றாக ஆராய்ந்து எதையும்விடாமல் ஈசர் வாழும் கயிலையில் சரசுவதி வாழும் அழகிய மண்டபத்தில், தங்கத்தாலான தூணில் மகிழ்ச்சியுடன் எழுதி முடித்தனர். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
932 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால் பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச் சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக . விளக்கம் ========== தெச்சணம் நோக்கிப் போகும்போது கங்கைக் குலத்தின் தாயாகிய கடல் நீரை அழைத்து பெண்ணே, என் பெயரைக் கூறியவண்ணம் உன்னில் தீர்த்தமாட யாராவது வந்தால் என் பெயரை கேட்டவுடனே, பால் பதம் போன்று இருந்து அவர்கள் பாவத்தைத் தீர்த்துவிடு. அதே சமயம், வஞ்சனை எண்ணமுள்ள வம்பர்கள் யாராவது வந்தால் அவர்களை நரகம் அடைய வேண்டிய வம்புகளைச் செய்வாயாக என்று வைகுண்டர் உபதேசித்தார். இன்னும் பலருக்கு இப்படியே உபதேசித்துத் தெச்சணாபூமி நோக்கி நடந்தார். . . அகிலம் ======== சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப் புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள் மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து . விளக்கம் ========== வைகுண்டர் தெச்சணம் நோக்கி வந்தபோது சகல உலகத்தினரும் சந்தோசம் கொண்டு ஆடினர். சொல்லமுடியாத பெருமைக்குரிய நாராயணர்க்கு வைகுண்டர் பிறந்துள்ளார். ஒரு வார்த்தைக்குக் கீழ் ஒரு குடைக்குள் ஆள உண்மையான முப்பொருளும் ஒரு பொருளாகி வைகுண்டர் உடம்பாகத் திரண்ட இவருக்கு நாரணர் எல்லா வரங்களும் கொடுத்துள்ளார். . . அகிலம் ======== நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி வானலோ கம்வாழும் வானவருந் தானவரும் தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர் வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி . விளக்கம் ========== நல்லவர்களுக்கு வாழ்நாள் நல்லபடியாய் இருக்கும். இப்படியாகச் சொல்லி, வானலோகத்தில் வாழும் வானவரும், தானவரும், முன் ஆகமங்களின் உண்மைகள் தப்பாத வகையிலும், வியாகர முனிவர் உருவாக்கிய ஆகமங்களின் சொல் தப்பாத வகையிலும் வைகுண்டர் பிறப்பு நிறைவேறியது என்று மாமுனிவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தனர். . . அகிலம் ======== நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம் கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும் கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து . விளக்கம் ========== நாமும் நல்ல வைகுண்டர் எதிரே போய், அவர் பாதங்களைக் கண்டு தரிசித்து வருவோம் என்று தீர்மானித்தனர். அதன்படி பல வகை மலர்களைத் திருமாலின் மகன் வைகுண்டர் பாதங்கள் மீது சொரிந்தனர். . . அகிலம் ======== கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின் வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே . விளக்கம் ========== நன்றாக ஆட்சி செய்து வந்த அரசர்கள் இறப்பு எய்தி நாட்டில் குற்றம், கொலைகள் அதிகமாகித் துலுக்கன் ஒருவன் தெச்சனத்துக்கு வந்தவுடனே தோல்வியுற்று ஓடி மற்றொரு பத்து ஆண்டில் நாம் வருவோம் என்று ஆகமங்களின் உண்மையான வாசகம்போல் அதை நிறைவேற்ற வந்தவர் இந்த வைகுண்டர் என்று கூறி எல்லாரும் போற்றி எதிர்கொண்டு அழைத்து வாழ்த்தினர். . . அகிலம் ======== நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும் முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால் எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண் வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும் மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார் . விளக்கம் ========== நாராயணருடைய மகனே, நல்லோராகிய எங்களையும் உன் கருணையைக் காட்டி உதவி செய்தருள்வாய். இதற்கு முன்னர்த் தோன்றிய எல்லாருடைய அருள் சக்தியும் இப்போது உன்னுள்ளே அடக்கமாகி விட்டது அல்லாவா? முப்பொருளும் நீயாகவே உருவெடுத்துள்ளாய். எனவே, எல்லா பொருளையும் உன்னில் கண்டு நல்ல பேறு பெறப் போகின்றோம். வைகுண்ட மாமுனியே, நீர் மனமிரங்கி எங்களைக் காத்திட வேண்டும் என்று எல்லாரும் வைகுண்டரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். . . தொடரும்... அய்யா உண்டு.