🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️

ரவிசங்கர் ராஜா, ஆரணி
3K views
1 months ago
AI indicator
*திருநீறு செய்யும்* *அற்புதங்கள்* *விபூதியின்* *முக்கியத்துவம்* *உணர்த்தும்* *புராண வரலாறு* ‘கிரேதா யுகத்தின்' ஒரு காலத்தில் வாமதேவர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் பண்டிதரும் மகா யோகியும் ஆவார். தினமும் அவர் தனது உடல் முழுவதும் விபூதி எனப்படும் பஸ்மத்தை பூசிக் கொண்டு இருப்பார். ஒருநாள் அவர் வனத்தின் வழியே சென்று கொண்டு இருந்தபோது ஒரு பிரும்ம ராக்ஷசன் உண்பதற்காக அவரைப் பிடித்துக் கொண்டான். அவர் தப்பி விடாமல் இருக்க அவரை நன்றாக கட்டிக் கொண்டு நின்ற போது அவர் உடல் முழுவதும் பூசியிருந்த விபூதி அந்த பிரும்ம ராக்ஷசன் உடலிலும் ஒட்டிக் கொள்ள அவன் அப்படியே மனித உருவை எடுத்து அவர் முன் நின்றான். அவருடைய கால்களில் விழுந்து வணங்கி தான் செய்த செயலுக்கு மன்னிப்பைக் கோரினான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்த வாமதேவர் அவன் யார் என்றும் அதனுடைய பூர்வக் கதை என்ன என்றும் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த மனிதன் அவரது கருணையினால்தான் தான் சாப விமோசனம் அடைந்து மனித உருவைப் பெற்றதாக கூறி விட்டு, தனக்கு 25 வருடங்களின் பூர்வ ஜென்மக் கதை நினைவுக்கு வருகிறது என்றும், தான் முன்னர் ஒரு பிறவியில் துர்ஜயா எனும் பெயரில் கொடுமைக்கார மன்னனாக இருந்தவர் எனவும், மிகக் கேவலமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருந்தவர் நன்கு குடித்து விட்டு ஒன்றும் அறியாதப் இளம் பெண்களைக் கடத்திச் சென்று பலவந்தமாக அவர்களை தமது ஆசைநாயகிகளாக வைத்துக் கொண்டதாகவும் இப்படியாக பல கொடுமைகளைப் புரிந்து கொண்டு இருந்தபோது ஒருநாள் இறந்த பின்பு நரகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது என்றும், அதன் பின் நூறு வருட காலத்துக்கு நரியாக, பேயாக, மிருகங்களாக பிறப்பு எடுத்து கேவலமான வாழ்வை மேற்கொண்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறினான். அதன் பின்பு பல பிறவிகள் எடுத்து முடிவாக பிரும்ம இராட்சசனாக 25 வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டு வந்ததாகவும் தற்போது வாமதேவரின் அருளினால் சாப விமோசனம் கிடைத்ததாகக் கூறி அவருக்கு நன்றி செலுத்தினான். ஆனால் தனக்கு எப்படி திடீர் என சாப விமோசனம் கிடைத்தது என்பது தெரியவில்லை என்றும் அதைக் கூறுமாறும் அவருடைய கால்களில் விழுந்து கேட்டான். நான் எப்படி பாப விமோசனம் பெற்றேன் என்று வாமதேவரைக் கேட்டதும் அவர் கூறினார் ‘ராக்ஷசனே, நீ என்னைப் பிடிக்க முயன்றபோது நான் தப்பாமல் இருக்க நீ என்னை கட்டிப் பிடித்தாய். அப்படி என்னை கட்டிப் பிடித்தபோது என் உடம்பில் இருந்த விபூதி உன் உடலில் ஒட்டிக் கொண்டது. அதுதான் உனக்கு விவேகத்தைக் கொடுத்தது. விபூதிபஸ்மத்தின் மகிமையைக் கூற இயலாது. அதனால்தான் சிவபெருமான் கூட தன் உடல் முழுவதும் விபூதியை பூசிக் கொண்டு இருக்கிறார்’. என்றதும் விபூதியை பூசிக்கொண்டு உள்ள சிவபெருமானின் கதையைக் கூறுமாறு வேண்டிக் கொள்ள வாமதேவர் அவனுக்கு அந்தக் கதையைக் எடுத்துரைத்தார். ‘முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களை கடை பிடிக்காமல் இருந்து வந்தான். அதோடு கேவலமான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டு இருந்தான். ஆகவே அவன் மீது பொறாமைக் கொண்டவர்கள் அவனைக் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்கள். அவன் உடலை தெரு நாய் ஒன்று வந்து கடித்துக் குதறத் துவங்கியது. அந்த நாய் மயானங்களிலும் சென்று அங்குள்ள பிணங்களை தின்னும் பழக்கம் கொண்டது. அன்று அதற்கு மயானத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதினால் மயானத்தில் உருண்டு புரண்ட பின்பு அங்கு வந்திருந்தது என்பதினால் அதன் உடல் முழுவதும் சுடுகாட்டின் பஸ்மம் ஒட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே அந்த நாய் கொலையுண்டுக் கிடந்தவனைக் குதறியபோது அவன் உடம்பின் மீதும் அந்த பஸ்மம் விழுந்தது. அதே நேரத்தில் யம தூதர்கள் இறந்து கிடந்தவனை யமலோகத்திற்கு கொண்டு செல்ல வந்தனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் இருந்து சிவ தூதர்களும் வந்து அந்த மனிதனை கைலாயத்துக்கு கொண்டு செல்ல அங்கு வந்தனர். இறந்து போனவனின் உயிரை எடுத்துச் செல்வதில் சிவ கணங்களுக்கும் யமதெதர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. யமதூதர்கள் யம லோகம் சென்று யமதர்மராஜனிடம் அது பற்றிக் கூறினர். அதனால் யமதர்மனே நேரடியாக அங்கு சென்று ஒழுக்கம் கெட்டவனை சிவகணங்கள் எப்படி சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என சிவகணங்களை கேட்க அவர்கள் எங்களுக்கு சிவபெருமான் கொடுத்துள்ள உத்தரவின்படி இறந்து போனவர்களில் எவன் உடலில் பஸ்மம் உள்ளதோ, எவன் உடலில் ருத்திராட்ச மாலை சூட்டப்பட்டு உள்ளதோ அவர்களது ஆத்மாக்களை சிவலோகத்திற்கு நாங்கள் அழைத்துப் போக வேண்டும். ஆகவே இவனை சிவலோகத்துக்கே அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அப்படி கூறிய பின் யமதேவரால் அவர்களை தடுக்க முடியவில்லை என்பதினால் இறந்து கிடந்தவனின் ஆத்மாவை அவர்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அது முதல் இறந்து போனவர்கள் உடலில் பஸ்மம் பூசுவதோ, ருத்திராட்ச மாலைகளை அணிவிப்பதோ கூடாது என்ற நியமம் ஏற்பட்டது’. வாமதேவர் கூறியக் கதையைக் கேட்ட ராக்ஷசனும் அவரிடம் கேட்டது ‘ஸ்வாமி, பஸ்மம் என்பது என்ன? அதன் மகிமை என்ன ?’.என்பதை கூறுமாறு கேட்டான். அதற்கு வாமதேவர் கூறினார் ‘பஸ்மம் என்பது நான்கு எரிக்கப்பட்ட புனித பொருள் ஆகும். அதில் பசுவின் சாணம், ஹோமங்களில் எரிக்கப்படும் பொருட்கள், யக்யங்களில் எரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இறந்து போனவர்களது உடல் கூட அடக்கமாகும். மந்தார மலை மீது ஒருமுறை தேவ கணங்கள் கூடி இருந்தார்கள். அந்த கூட்டத்தில் பார்வதியும் சிவபெருமானும் பங்கேற்றனர். அதில் சிவபெருமானின் சேவகர்கள், எட்டு கோடி தேவதைகள், அஷ்ட திக்குப் பாலகர்கள், 12 ஆதித்தியர்கள், எட்டு வசுக்கள் என அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். ஏழு பிரபைகள் என்ற பொருட்களான தங்கம், இரத்தினம், நீலமணி, புஷ்பராகம், முத்து, வைடூரியம், பச்சை கற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த ஆசனத்தில் பத்து கரங்களுடன் சிவபெருமான் அமர்ந்து இருக்க, அவருடைய உடல் முழுவதும் பஸ்மம் தீட்டப்பட்டு இருக்க, மிருகத்தின் தோலினால் ஆன ஆடை, கழுத்தைச் சுற்றி மாலையைப் போல பாம்பு, கங்கையும் பாதி நிலவும் கொண்டையில் இருக்க, வேல், உடுக்கை, கத்தி, பாசுபதாஸ்த்திர, அம்புக்கள், அங்குசம் போன்ற ஆயுதங்களும் மற்ற கைகளில் இருந்தன. அப்போது அங்கு வந்த சனத் குமரர்கள் சிவனிடம், ‘மஹாதேவப் பெருமானே, உத்தமமான மனித குல மேம்பாட்டிற்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு நிலைகளைத் தந்துள்ளீர்கள். அவற்றை எளிதில் பயில முடியாது என்பதினால் உங்கள் அருளைப் பெற்றுக் கொண்டு அவற்றை எளிதில் பயின்று எப்படி சமஸ்காரம் என்ற பந்தத்தில் இருந்து வெளி வர முடியும் என்பதை எங்களுக்கு விளக்குவீர்களா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். அதற்க்கு சிவபெருமான் கூறினார் ‘நான் மூன்று வரிகளைக் கொண்ட பஸ்மத்தை நெற்றியிலும், உடம்பெங்கும் பூசி உள்ளதைக் கவனித்தீர்களா? அப்படி நீங்கள் அனைவருமே அதை பூசிக் கொண்டு இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து போகும். பசுவைத் திருடியவன் , தங்கத்தை திருடியவன், பொய் கூறி வஞ்சித்தவன், மற்றவர்களின் மனைவியை அபகரித்தவன் என குற்றம் புரிந்தவர்களது பாவங்கள் கூட இந்த விபூதி எனும் பஸ்மத்தை பூசிக்கொள்ளும்போது அழிந்து விடும். அதை அணிபவர்களுக்கு முக்தி கிடைக்கும்’. இப்படியாக பஸ்மத்தின் மகிமையை அந்த பிரும்ம ரக்ஷசனுக்கு கூறிய வாமதேவர் அந்த பிரும்ம ராக்ஷசன் மீது சிறிதளவு வீபுதியை தூவ அந்த பிரும்ம ராக்ஷசனும் தன்னுடைய பழைய உருவைப் பெற்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான். அவனுடைய பாபங்கள் அன்றோடு அழிந்தன. வாமதேவர் சிவபெருமானின் அவதாரமாகப் பிறந்தவர். குருவை மிஞ்சிய கடவுள் இல்லை என்பதினால் பிரும்ம ராக்ஷசனும் மோட்ஷத்தை அடைந்தான். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
ரவிசங்கர் ராஜா, ஆரணி
894 views
1 months ago
AI indicator
பஜனை என்றால் என்ன? – வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் நமஸ்காரம்! “பஜனை” என்று சொல்லுகிறோம். “பஜனம்” என்பதுதான் “பஜனை” என்று வந்துள்ளது. பஜனை என்பது பெருமானைக் குறித்து, அவன் திருநாமங்களைச் சொல்லி, ஸ்தோத்திரம் செய்து, பாடல்களைப் பாடுவது. இதை “நாம சங்கீர்த்தனம்” என்றும் சொல்லுவர். கீர்த்தி, கீர்த்தனம், சங்கீர்த்தனம் — இவ்வாறெல்லாம் சொல்வார்கள். ஆனால் இதில் “பஜனை” என்னும் சொல் மிகவும் பிரபலமாய், பிரசித்தமாய் உள்ளது. ரொம்பவே விஷயம் தெரியாதவர்களுக்குக் கூட “பஜனை” என்று சொன்னாலே ஒரு ஈர்ப்பு வந்துவிடும். பஜனை சம்பிரதாயம் என்பது வெகுகாலமாக இருந்து வருகிறது. ஹனுமாரே பஜனை பண்ணியவர் தான். வால்மீகியும் செய்தவர் தான். அவ்வளவு காலம் தொட்டு, “பஜனம்”, “பஜனை” என்பது நம்மிடையே இருந்து வருகிறது. பெருமானைத் தொழுவதில் ஒரு முறை — நாமங்களைப் பாடுவதில் ஒரு முறை — “பஜனை பண்ணி ஆடினோம், பாடினோம்” என்று சொல்லுவார்கள். ஆடத் தெரியாதவர்களுக்குக் கூட, தன்னிடையே கால் தாளம் போடும், குட்டிக்கரணம் போட்டு, ஆடி பஜனை பண்ணத் தோன்றும். நம்மாழ்வார் சொல்லுகிறார்: “கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகுகட்டுண்டு உழலாதார்” அப்படி பஜனை பண்ணாதவர்கள் பிறந்தே பயனில்லை என்று கூறுகிறார். இதில் “பஜனை” என்ற சொல்லில் இருக்கக்கூடிய “பஜ” என்கிற தாது — “பஜ சேவாயாம்” என்று சொல்லுவர். “சேவை”, “தொண்டு” என்கிற பொருளில் வரும். அதனால் “பஜனை” என்று சொல்லும்போது, பாடுவது, நாமங்களைச் சொல்வது, ஆடுவது என்று மட்டும் பொருள் பெறாது. “நான் பெருமானுக்குத் தொண்டன். அவருக்கு அடிமை” என்று நினைத்து, அவருக்குத் தொண்டு செய்வதில் ஈடுபாட்டோடு, “அந்தத் தொண்டுகளை அடியேனுக்குக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணத்தோடு பாடப்படுவது தான் பஜனை. இந்தப் பாடுவதே தொண்டு தான். “அடியேனுக்கு நீர் தொண்டு கொடுக்க வேண்டும்; கைங்கரியம் பண்ண வேண்டும்” என்ற எண்ணத்தோடு பாடப்படும் பாடல்கள் தான் பஜனை. “பஜ” என்றாலே “பஜிப்பாய்” — அதாவது “தொண்டு செய்வாய்” என்று அர்த்தம். “ஸ்தோத்திரம் செய்வாய்” என்று மட்டும் அர்த்தமில்லை. தொண்டு எண்ணத்தோடு, “நாம் பெருமானுக்கு அடிமை” என்கிற அந்த உள்ளுணர்வோடு பாடுவது. அதனால்தான் பஜனை பண்ணும்போது “தன்னை மறந்து பாடினார்”, “தன்னிலையிலே இல்லை”, “பரவசப்பட்டு இருந்தார்” என்றெல்லாம் சொல்லுவோம். ஏனென்றால், நாம் எல்லா விதத்திலும் பகவானுக்குத் தொண்டன் என்று தெரிந்த பிற்பாடு, “அவருக்காகவே தான் இருக்கிறோம்” என்று புரிந்த பிற்பாடு, நம் நிலையிலோ, நம் வசத்திலோ என்ன இருக்கிறது? அவனுடைய வசத்தில் தான் நாம் இருக்கிறோம். அதனால்தான் பரவசப்படுகிறார்கள். சாதாரணமாகப் பாட்டு பாடும்போது, “இப்படி தாளம்”, “இப்படி ராகம்”, “இவ்வளவு நேரம்”, “சஞ்சாரம் இப்படி நடக்கும்” — இதெல்லாம் இருக்கும். அதுவே பக்தி அதிகமாகப் போகும்போது நிலை கொள்ளாது. ஆனால் “பஜனை” என்று வரும்போது, பக்திதான் அடிப்படை. “பக்தி” என்றாலே “தொண்டு”. “பெருமானுக்கு அடிமை” என்று புரிந்தால்தான், அவனிடத்தில் பக்தியோடு இருப்போம். அவனுடைய குணங்களை நினைத்தாலே பக்தி பெருகும். அந்தக் குணங்களை விளக்குவது தான் அவனுடைய திருநாமங்கள். அதைத்தானே இதில் பாடுகிறோம்! அதனால் பக்தி, அன்பு, தொண்டு, அறிவு — இவை எல்லாம் ஒன்றாகச் செல்லுபவை. அதை வெளிப்படுத்துவதற்கும், அதை வேண்டுவதற்கும் தான் இந்தப் பாடல்கள். பக்தி முற்ற முற்ற, தன் நிலையில் அந்த பக்தன் இருக்க மாட்டான். “ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:” என்று சொல்லுவார்கள். அவனுக்கு சாஸ்திரம், கட்டுப்பாடு, “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற எல்லைகள் — பக்தி முற்றும் போது நிலைக்காது. அழுகிறான்… தொடுகிறான்… ஆடுகிறான்… பாடுகிறான்… தன் வசமற்று செய்வது — அதுதான் பஜனை ஆகிறது. கண்ணன் கீதையில் சொல்லும்போது: “மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி…” “என்னையே நீ வந்து அடைகிறாய்” என்று சொல்லுகிறார். “ஏ மனமே! பகவானை பஜிப்பாய்!” என்று பாடல்களும் உள்ளன. அதனால் “பஜனை” என்று சொல்லும்போதே அடிப்படை எண்ணம் தேவை: “நான் பெருமானுக்குத் தொண்டுபட்டவன். அவருக்கே அடங்கியவன். அவருடைய வசத்தில் இருப்பவன். அவருக்குத் தொண்டு செய்வதே நம் பிறவியின் பயன்.” இந்த எண்ணங்களால் உந்தப்பட்டு பாடுகிறோம். அப்போதுதான் “பஜ சேவாயாம்” — “சேவை செய்தல்” என்கிற தாதுவிலிருந்து வந்த “பஜனை” என்ற சொல் பொருத்தமாக இருக்கும். அதனால், “ஏதோ வெறும் பாடல்; பாட்டு தெரிந்தவர் பாடுகிறார்” என்று நினைக்கவே வேண்டாம். பாட்டு தெரியாவிட்டாலும், உள்ளுணர்வில் “அவனுக்கு நான் தொண்டன்” என்று புரிந்துவிட்டால், அந்த பஜனை மிகப் பொருத்தமாக இருக்கும். (வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் விளக்கம்) 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
ரவிசங்கர் ராஜா, ஆரணி
749 views
1 months ago
AI indicator
*இன்று*(15-6-26) மாதப்பிறப்பு* *ஷடசீதி புண்ய காலம்*! உபய ராசிகளான மிதுனம், கன்னி,தனுசு,மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் ஆனி ,புரட்டாசி மார்கழி ,பங்குனி ஆகிய தமிழ் மாதபிறப்பு நாட்களில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலம் எனப்படும். இன்று(15-6-26)ஆனி மாதப்பிறப்பில் சூரியன் மிதுன ராசியில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலமாகும். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசியில் வரும் நேரத்திற்கு பின்னர் 24மணிநேரம் ஷடசீதி என்ற புண்ணிய காலமாகும். மிதுன ராசி உபயராசியாகும் சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும். சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். இக்காலத்தில் சிவன் சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும். ஆற்றலையும் மனம் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. அதாவது அன்று சிவனையும் பார்வதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும் இந்த ஷடசீதி புண்ய காலம் தேவர்கள் சிவனை வழிபடும் காலமாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவன் கோவில்,ஜீவ சமாதிகள் அமைந்துள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. 'திரு’ என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை இன்று வழிபட்டு வருவது மிகுந்த சிறப்பாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவனை வழிபட்டு பிரார்த்தனை வேண்டுதல் வைத்தால், வேண்டுதல் வைப்பவர்களின் பிரார்த்தனை,வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். இன்றைய தினம் முழுவதும் முடிந்த வரை சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இன்றைய ஷடசீதி புண்ணிய நாளில் நாம் சிவபெருமானிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பித்ருக்களின் ஆசியும் அருளும் நிச்சயம் கிடைக்கும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #ஆனி #ஆனி மாதம் தொடக்கம்! #வெல்கம் ஆனி
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
1 months ago
AI indicator
*அனைத்து வளங்களை* *அருளும் ஆனி மாத* *சிறப்புகள்* தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமான ஆனி மாதம் தேவர்களின் 'மாலைக்காலம்' என்று போற்றப்படுகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஆனி மாதம் இளவேனிற் காலம் எனப்படும். இந்த மாதத்தில் கடுங்கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசி நம்மை குளிர்விக்கும். ஆனி மாதத்தில்தான் தேவர்களைக் காப்பாற்ற திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் தேய்பிறை துவாதசியன்று வருகிறது. பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி தேவர்கள் அமிர்தம் கடைந்தெடுக்க உதவிய அவதாரமே கூர்மாவதாரம். ஆன்மீக வழிபாட்டிற்கும், சிவபெருமானின் அபிஷேகத்திற்கும், இயற்கை சார்ந்த ஆன்மீக திருவிழாக்களுக்கும் இந்த ஆனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி மாதத்தின் முக்கிய சிறப்புகள் ஆனித் திருமஞ்சனம்: ஆனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த அபிஷேகம் மற்றும் ஆராதனை 'ஆனித் திருமஞ்சனம்' என்று அழைக்கப்படுகிறது. ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி மாத உத்திர நட்சத்திரன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. சிவபெருமானின் நடனக் காட்சியை தரிசிக்க இது மிக உகந்த நாளாகும். ஆனி மாதம் நடக்கும் நடராஜப் பெருமானின் ஆனித் திருமஞ்சன மகிமைகள்: ஆனித் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். எல்லா சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும். வைணவத்தலங்களில் தலை சிறந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். குருபூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த ஆனி மாதத்தில்தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். பொதுவாக நிறைய கோவில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும். திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில்தான் பிறந்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரம் தலத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டற கலந்தார். இதையொட்டி சிதம்பரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏகாதசிகள் அனைத்துமே விசேஷமானவை என்றாலும், ஆனிமாத தேய்பிறை ஏகாதசி 'யோகினி ஏகாதசி' என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. அன்று தான் அழாகாபுரி மன்னனான குபேரன் ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு தன் நோயைப் போக்கிக்கொண்டான் என்று கூறப்படுகிறது. ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த நிர்மலா ஏகாதசி விரதமிருக்கலாம். ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பெருமாள் கோவில்களில் மூலவருக்குச் சாத்தப்படும் கவசங்களைக் களைந்து, வருடாந்திர தூய்மைப் பணிகளைச் செய்து சிறப்பு திருமஞ்சனம் செய்யும் வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்) இந்த ஆனி மாதத்தில்தான் நடைபெறுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும். பொதுவாகவே நிறைய கோவில்களில் ஆனி மாத பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளியில் கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பக்தர் களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள். இதேபோல திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோவிலிலும் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழப்பழத்தார்கள் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழவேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார். காரைக்கால் மாங்கனித் திருவிழா: உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் வரலாற்றோடு தொடர்புடைய மாங்கனித் திருவிழா இந்த ஆனி மாதத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழாவும் நடைபெறும். முக்கியமாக மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத்திருவிழா ஆனி பௌர்ணமி அன்று நடைபெறும். வராகி நவராத்திரி: ஆனி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை நாட்களில் வராகி அம்மனை வழிபடுவதற்குரிய வராகி நவராத்திரி தொடங்குகிறது. சாவித்திரி விரதம்:  பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் ஆனி மாத பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்கின்றனர் ஆனி உத்திராடம் & கேட்டை: பெரியாழ்வார் மற்றும் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் அவதரித்த மாதமாகவும் இது அறியப்படுகிறது. ஆன்மீக பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் விரதங்கள் மற்றும் வழிபாடுகள் மூலம் மன அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🚩🕉🪷🙏🏼 #ஆனி மாதம் தொடக்கம்! #ஆனி #வெல்கம் ஆனி #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
747 views
1 months ago
AI indicator
*தியானம் சித்திக்க* *உதவும் மந்திரம்*! முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து நீர் அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும். தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு ஒன்று வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும். தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும். அனுபவித்துப் பாருங்கள். மந்திரம்:- ஓம் நமோ பகவதே | மஹாபல பராக்ரமாய| மனோபிலஷிதாம் | மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா || 🚩🕉🪷🙏🏼 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #தியானம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
882 views
2 months ago
AI indicator
*இன்று*(30-5-26) *அறிவை வளர்க்கும்* *வைகாசி பெளர்ணமி* (புத்த பூர்ணிமா) *பரிகாரம்* ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது வரும். பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிர்விடும் நாளாகும். விருச்சிக ராசியில் சந்திரன் நீச்சம் அடையும் போது வைகாசி பௌர்ணமி ஏற்படும். இந்நாளில் அம்பாள் வழிபாடு மிக மிக விசேஷமானது மே2026 மாதம் வரும் வைகாசி மாதப் பௌர்ணமி, மே 30, 2026 அன்று வருகிறது. வைகாசி மாதம் 2026 பௌர்ணமி திதி நேரம்: மே 30, 2026 சனிக்கிழமை நண்பகல் 12:25 pm முதல் மே, 31, 2025 ஞாயிறு பிற்பகல் 2.48 pm வரை இருக்கிறது. ஆயிரம்தான் கற்றாலும், பெற்றாலும் இறைவனால் தரப்படுகிற அறிவு தான் நிரந்தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இதனால் அறிவை பெறுவதற்கு நாம் பலவகையில் முயற்சித்தாலும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர்க்க கூடாது. அறிவு வளர்ச்சிக்கான பிரார்த்தனையை கடவுளிடம் வைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம் வைகாசி மாத பெளர்ணமி தினமாகும். காரணம் வைகாசி பெளர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருகிறது. விசாக நட்சத்திரம் இறைவனாகிய முருகனின் அவதார நட்சத்திரமாகும். அதனால் தான் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. முருகப்பெருமான் அறிவுக்கடல் ஞானமலை உயிர்கள் பெற்று இருக்கும் அறிவு அனைத்தும் முருகனிடமிருந்தே வருகிறது. இந்நாளில்தான் சரவணப்பொய்கையில் முருகப்பெருமான் அவதரித்தார் என்று புராணம் கூறுகிறது. அன்று முருகப்பெருமானை வழிபடுவதால் நம்மை அறியாமல் மூன்று தெய்வங்களின் அருளினைப் பெறும் பாக்கியத்தைப் பெறலாம். அதாவது முருகன், குரு, சூரியனை வழிபட்ட பலன்கள் கிட்டும் என்று கூறப்படுகிறது. வைகாசி மாதம் சூரியன், ரிஷப ராசியில் இருக்கிறார். அங்கிருந்து ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியைப் பார்க்கிறார் என்கின்றன ஜோதிட நூல்கள். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு. அதிதேவதை முருகப் பெருமான் ஆவார். இந்த முறையில் நாம் வைகாசி மாத பெளர்ணமியன்று முருகனை வழிபடும்போது குருவையும் சூரியனையும் சேர்த்து வணங்குகிறோம். குருவின் திருவருள் கிட்டினால் ஞானம் கிட்டும், சூரியனின் அருள்பார்வையால் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். இவைகளுக்கெல்லாம் காரணமான முருகப்பெருமானை வழிபடுவதால், நாம் வேண்டுவது கிட்டுவதுடன் வளமான வாழ்க்கை அமையும். எனவே வைகாசி பெளர்ணமி அன்று முருகனை வழிபட்டால்,வழிபட சகல சௌபாக்கியங்களும் கிட்டுவதுடன், முருகன் ஞானத்தை வாரி வழங்குவான் என்பது திண்ணம். இந்துக்களுக்கு மட்டும் வைகாசி பெளர்ணமி சிறந்தது அல்ல. புத்த மதத்தினருக்கும், அந்த நாள் மிக புனிதமான திருநாளாகும். அன்று தான் புத்தபெருமான் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். எனவே வைகாசி பெளர்ணமி புத்த பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா "புத்தர்' என்றால் "ஞானத்தெளிவு பெற்றவர்' என்று பொருள். அவர் ஞானம் பெற்ற போதிமரம் பரந்து விரிந்து ஒரு பெரிய குடைபோல் இன்றும் "கயா' என்னும் தலத்தில் காணப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் ஒரு மேடை கட்டப்பட்டிருக்கிறது. அங்கே, இரு பெரிய பாதச்சுவடுகள் உள்ளதைக் காணலாம். அங்கு வருபவர்கள் அந்தப் பாதங்களைத் தொட்டு வணங்கி, ஞானமும் வாழ்வில் புத்தொளியும் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வழக்கம். அசோக சக்ரவர்த்தி முதன்முதலில் இங்கு புத்தருக்குக் கட்டிய கோயிலே "மகாபோதி கோயில்' என்று போற்றப்படுகிறது. இந்தக் கோயிலில் அமர்ந்த நிலையில் புத்தர் அமைதியே உருவாகக் காட்சி தருகிறார். புத்தர் அவதரித்ததும் அவர் ஞானம் பெற்றதும், தனது எண்பதாவது வயதில் "குசி' என்னும் நகரில் மகாநிர்வாணம் (முக்தி) எய்திய நாளும் ஒரு "வைகாசி பௌர்ணமி' என்று வரலாறு கூறுகிறது. அதனால்தான் வைகாசி பௌர்ணமியை "புத்த பூர்ணிமா' என்று பௌத்தர்கள் கொண்டாடுகிறார்கள். வைகாசி விசாக நட்சத்திர பௌர்ணமியன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும், திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும். கந்தனின் நாமங்கள் முக்தி அளிப்பவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை' என்கிறார் சிவன். "சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர். ச- லட்சுமி கடாட்சம். ர- சரஸ்வதி கடாட்சம். வ (ஹ)- போகம், மோட்சம். ண- சத்ரு ஜெயம். ப- மிருத்யு ஜெயம். வ- நோயற்ற வாழ்வு. எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்தும், இந்த வைகாசி பெளர்ணமி தினத்தில் சிவமைந்தனான முருகனை, வணங்கியும், புனித நீர்நிலைகளில் நீராடி தயிர் சாதம், பானகம், நீர் மோர் முதலியவற்றை தானமாக கொடுக்க வேண்டும். படிக்க விருப்பமிருந்தும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பிற்கு பணம் கட்டலாம். குறைந்தபட்சம் நோட்டு புத்தகமாவது வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால் வைகாசி பெளர்ணமி அறிவை வாரி வணங்கும் முழு நிலா பொழுதாக திகழும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம் #வைகாசி விசாகம் ஓம் முருகா போற்றி #வைகாசி மாதம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐
ரவிசங்கர் ராஜா, ஆரணி
806 views
2 months ago
AI indicator
சிவார்ப்பணம் ================= இளநீர் ---------------- இளநீர்களின் சிறப்பு வரிசை ================================== நான்கு வித இளநீர்கள் ------------------------------------------ "சகத்திரமான பச்சை தன்னிள நீரின்மிக்காய் வகுத்தசெவ்விளநீர் ஒன்று மருவும் இன்னதும் அவ்வாறே தொகுத்ததில் அதிகமாகும் சூரிய கௌளி ஒன்று மிகுத்த ஆயிரம் இதற்கு மிக்கது சந்த்ரகௌளி." பொருள் ========= பச்சை இளநீர்,செவ்வளநீர்,சூரியகௌளி இளநீர்,சந்த்ரகௌளிஇளநீர் ஆகும். ஒரு செவ்வளநீர் ஆயிரம் பச்சயிளநீருக்கு நிகரானது.(சமம்) ஒரு சூரியகௌளி இளநீர் ஆயிரம் செவ்வளநீருக்கு நிகரானது ஒரு சந்த்ரகௌளி இளநீர் ஆயிரம் சூரியகௌளி இளநீருக்கு நிகரானது பச்சிள நீர் (பச்சைகலர் இளநீர்) ----------------------------------------- "பச்சிள நீரை ஒன்று பரமனுக்கேற்றினோர்கள் உச்சிதமான வித்தையுடையவராய் இருந்து பின்னர் நச்சிய போகம் எல்லாம் நட்பொடும் அனுபவித்தே எச்சமில் சாமீபத்தில் இருந்தின்பம் எய்திவாழ்வார் உரை ========= பச்சிள நீர் ஒன்றைச் சிவபெருமானுக்கு அர்ப்பணித்தவர்கள் ,தாங்கள் விரும்பிய கல்வியைப்பெற்று , விரும்பிய போகங்களை நண்பர் உறவினரோடும் நுகர்ந்து பின்பு குறைவில்லாத சாமீப பதவியை அடைந்து இன்புற்றிருப்பார்கள் அர்ப்பணித்தல் என்பது இளநீரை அபிஷேகம் செய்தல்,நைவேத்யம் செய்தல் ஆகும். இளநீர் அபிஷேகம் ராஜ்யசுகத்தைத் தரும் தொடரும்............🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #🙏ஆன்மீகம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
4K views
2 months ago
AI indicator
*குலதெய்வ கோபம்* *தணிய 200 வருடத்திற்கு* *முன்புள்ள பரிகாரம்* குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.அதன் விபரம் கீழே கொடுக்கபட்டுள்ளது. தேவையான பொருட்கள் எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்.. வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு, அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும். பின்பு இங்க் பில்லர் மூலமாக வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் . பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.. கோவில் பூட்டியிருந்தாலும் பரவாயில்லை.. தவறில்லை.. நீங்கள் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நீங்கள் ஏற்றிய அந்த தீபம் அம்மனிடம் பேசும் .. தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும் இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.. இதை செய்துகொண்டிருக்கும்போதே பல மாற்றங்களை உணரப்பெறலாம்.. 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #இந்து மத நம்பிக்கை💐 #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #குலதெய்வம் #நம் குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
2 months ago
AI indicator
*லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற பலனை தரும்* *பாக்ய ஸுகூர்த்த* (பாக்ய ஸூக்தம்) *மந்திரம்* (பாக்ய ஸூக்தம்) ஸுகூர்த்தம் என்றால் கொடுப்பினை என பொருள். கேரளாவில் விஷ்ணு கோவில்களில் இந்த வழிபாடு பிரசித்தி பெற்றது. குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் க்ஷேத்திரம், திருப்றையார் போன்ற. விஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்வார்கள், முடியாதவர்கள் உங்கள் இல்லங்களில் பாக்ய ஸுகூர்த்தம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்யலாம், எதற்கு? ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பாக்யஸ்தானம். அந்த பாக்யாதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்க தோஷம், பாக்யாதிபதி வக்கிரம், மறைவு போன்றவவை உண்டானால் பெரும்பாலும் பெண்களுக்கு பிள்ளைபேறு நல்ல கணவன் போன்ற பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் பாவம் சம்மந்தப்பட்ட காரியங்கள் நன்கு சீராக நடைபெற தங்களின் அதிதேவதையை மனதில் நன்கு வேண்டி இந்த மந்திரம் சொல்லி வர வேண்டும், பாக்ய ஸுகூர்த்த முதல் மந்திரத்தில் அக்னி பகவான், இந்திரன், மித்ர வருணதேவன் தேவலோக வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள் தேவகுருவாகிய ப்ரகஸ்பதியையும் மந்திரத்தால் வணங்கப்படுகிறது, மீதமுள்ள ஆறு மந்திரங்களில் ஆதித்யன், மற்றும் பிற தேவர்களை வணங்கப்படுகிறது *இந்த மந்திரத்தை* *அதிகாலை பிரம்ம* *முகூர்த்தத்தில் ஜெபம்* *செய்தால் லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற புண்யம்* *கிடைக்கும் என்பது* *ப்ரமாணம்* ஒன்பதாம் பாவத்திற்க்கான காரியங்கள் சித்தியாகும் 1.ஓம் ப்ராதரக்னீம் ப்ராதரிந்த்ரம் ஹவாமஹே, ப்ராபாதர்மித்ரா வருணா ப்ராதசின்யன, ப்ராதர்பஹம் பூஷணம் ப்ரம்ணஸ்பதிம் ப்ராதஸஸ்ஸோமமுத ருத்ரம் ஹுவேம. பொருள் : அக்னி. இந்திரன், மித்ர வருணதேவன்மார்கள், அஸ்வினி தேவன்மார்கள், பூஷன். ப்ரகஸ்பதி, ஸோமன், ருத்ரன். என்கின்ற தேவர்களை வந்தனை செய்யப்படுகிறது, 2.ப்ராதர்ஜிதம் பஹமுகம் ஹுவேம வயம் புத்ரமதிதேரேய்யா வியாதா ஆத்யஞ்சிதய்யம் மன்யமானஸ்து ரஞ்சித்ராஜா சைத்யம் பஹம் பக்ஷித்யாஹ, பொருள் ; பாவப்பட்டவர்களும், இராஜாக்கன்மார்களும் ப்ராத்திக்கின்ற ஆதிதியுடைய புத்ரனாகிய பஹனை எல்லாவித ஐஸ்வர்யமும் உண்டாகும்படி வணங்குகிறோம், 3. பஹ ப்ரணதர் பகஸத்யா ராதோ பஹே மாந்திய முதவததண பகப்ரணோ ஜனய கோபிரசைர் பஹப்ரன்ய ப்ர்ன்யவம் தஸ்யாம பொருள் : எல்லா ஐஸ்வர்யங்களின் மூர்த்தியாகிய தெய்வமே எங்களுக்கு சத்ய தர்மங்களின் மூலம் வாழ நல்ல புத்திகள் நல்கி அனுக்கிரகியுங்கள், 4.உதேதானீம் பகவல்ஸ்யா மோத ப்ரபித்ய உத மத்யே அஹனாம் உதோதினா மகவன் ஸுரஸ்ய வயம் தேவானாம் ஸுமுதௌ ஸ்யாம, பொருள் :ஈஸ்வர்ய அனுகிரகத்தால் எனக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்லவர்கள் ஸகவாசத்தை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று பெற்றவர்கள் ஆகிய. எங்களுக்கு பேரூம் பெருமைகளை தேடி தரும்படி ஈஸ்வரனை வேண்டுகிறோம். 5.பஹ ஏவ பகவாஹம் ஆஸ்தூ தேவா ஸ்தேன வயம் பகவல்ஸ்யாம தந்த்யா பக ஸர்வ இஜ்ஜோஹவீமி ஸனோ பக பூர ஏதா பவேஹ.. பொருள் ; பகவானே எங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமலும். தன கஷ்டத்தை போக்கியும் நீங்கள் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், 6. ஸமயய்ராயோ ஷஸோனமந்த ததி வேவ ஸுச்சயே பதாய அர்வாசீனம் வஸுவிதம் பகணோ ரதமி வாஸ்ய வாஜின ஆவாஹந்து பொருள் ; இரக்ஷகனாகிய வனங்களில் குதிரைகளுக்கு நீங்கள் எவ்வளவு பலம் கொடுத்திரிக்கிறீர்களோ அவ்வளவு பலத்தை எனது குடும்பம் காக்கக பலத்தை கொடுங்கள், 7.ஆஸாய்யவதீர்கோமதீர்ண உஷாஸோ வீரபதீஸ்ஸதமு ச்சந்து பத்ரோ ஹல்யதந்துஹானா விஸுத்ய ப்ரவீனா யுயம் பாத ஸ்யஸ்திபீஸ்ஸதான பொருள் ; இந்த குடும்பத்தின் கிரக நாதியாகிய பெண்ணான எனக்கு நீங்கள் கூட இருந்து பலத்தை தந்து என் கணவன், பிள்ளைகளுக்கு நோய் நொடிகள் வராமல் தந்தை ஸ்தானத்தில் ஈஸ்வரனாகிய நீங்கள் என்னை காப்பாற்றி கொண்டே இருக்க வேண்டும் ஓம் ஸாந்தி! ஓம் ஸாந்தி!! ஓம் ஸாந்தி!!! பாக்ய ஸூக்தம் மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #மந்திரங்கள்