ஆன்மீக கதைகள்

PEN TV TAMIL
5.3K views
8 days ago
இன்றைய ( 14.05.2026 ) வியாழக்கிழமை, ஷீரடி சாய்பாபா காலை தரிசனம்🙏ஓம் சாய்ராம் 🕉️ சாய்பாபாவின் அருளால், உங்களின் பிராத்தனைகள் நிறைவேறட்டும்🙏 #ஆன்மீகம் #பக்தி #சாய்பாபா 🙏 #devotionalcontents #சீரடி சாய்பாபா
RamaswamyAnnamali
818 views
12 days ago
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பார்வையினால் பகவானுடைய சுதந்திரமும் கோபமும் நீங்கிவிடுவதும் ஒருவகையில் நமக்கெல்லாம் நல்லதாகவே போய்விடுகிறது. நாம் செய்கின்ற பாவங்களை எல்லாம் பகவான் கண்டுகொள்ள முடியாதபடி மஹாலக்ஷ்மியின் கடாக்ஷ பார்வையானது செய்துவிடுகிறது. பிராட்டியின் பார்வையானது மிகவும் தீர்க்கமான பார்வை. மை தீட்டிய தன்னுடைய அகன்ற விழிகளால் அவள் பகவானைப் பார்த்துக்கொண்டே இருப்பாளாம். ‘கருந்தடங்கண்ணி’, ‘மைத்தடங்கண்ணினாய்’ என்றெல்லாம் ஆழ்வார்களால் பரவசத்துடன் பேசப்பட்டிருக்கும் பிராட்டியாரின் பார்வையானது பகவானின் திருமேனி நிறத்தையே மாற்றிவிடுகிறதாம். பிராட்டியாருடைய திருக்கண்கள் நீண்டு கறுப்பாக இருக்குமாம். பகவானின் திருக்கண்களோ செம்மை படர்ந்து செவ்வரியோடி இருக்குமாம். இவர்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் பார்வையை விலக்கிக்கொள்ளாமல், பார்த்த விழி பார்த்தபடி இருப்பார்களாம். இதனாலேயே பிராட்டியாரின் கண்களில் இருந்த கறுப்பு அப்படியே பகவானின் திருமேனியில் படிந்து அவனை கறுப்பு நிறத்தவனாக ஆக்கிவிட்டதாம். அதேபோல் பகவானின் செவ்வரியோடிய பார்வையினால் பிராட்டியார் செந்தாமரை நிறத்தைப் பெற்றுவிட்டாளாம். மஹாலக்ஷ்மி பிராட்டி நமக்காகவே, நாம் எல்லோரும் இறைவனுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதற்காகவே முதலில் பகவானையும் பிறகு நம்மையும் கடாக்ஷிக்கிறாளாம். பகவானை முதலில் கடாக்ஷித்துவிட்டால், நம்முடைய குறைகள் பகவானுக்குத் தெரியாமல் போய்விடும் என்பதற்காகவே பகவானை முதலில் கடாக்ஷிக்கிறாள். மையக்கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன் செய்யக்கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை மொய்ய சொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன் வெய்யநோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீழவே என்று நம்மாழ்வார் பாடி இருப்பதுபோல் பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்கு அனைத்து மங்களங்களையும் அருளக்கூடியதாக இருக்கிறது.🙏🌹
A Mohan Raj
14.5K views
15 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து திருமுகப் பாசுரம் திருஆலவாய் உடையார் (சிவபெருமானார்) பாணபத்திரருக்கு எழுதியனுப்பியதாகக் கூறப்படும் திருமுகப் பாசுரம்.* பாடல் வரிகள் : *திருமுகப் பாசுரம்* மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
RamaswamyAnnamali
994 views
17 days ago
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் மகனாக வந்து திதி கொடுக்கும் அதிசயம்! – திருவண்ணாமலையின் அறியப்படாத ஒரு வரலாறு. 🙏✨🙏✨ திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான கோபுரங்களும், அக்னி மலையும் தான். ஆனால், அண்ணாமலையார் ஒரு மன்னனுக்கு மகனாக இருந்து இன்றும் கடமையாற்றி வருகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 🔱 மன்னர் வல்லாள மகாராஜனும் அண்ணாமலையாரும்: திருவண்ணாமலை கோயிலை நிர்வகித்து வந்த ஹோய்சால மன்னர் வல்லாள மகாராஜனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைகள் இல்லை. "தனக்குப் பின் ஈமச்சடங்குகள் செய்ய வாரிசு இல்லையே" என்ற கவலை அவருக்கு இருந்தது. மன்னரின் தீவிர பக்தியைக் கண்டு மெச்சிய அண்ணாமலையார், ஒரு அசரீரியாகத் தோன்றி, "மன்னனே, கவலை கொள்ளாதே! உனக்கு நானே மகனாக இருப்பேன். உன் மறைவிற்குப் பின் நானே உனக்குச் சடங்குகளைச் செய்வேன்" என்று வாக்கு அளித்தார். 🔱 வாக்கு மாறாத ஈசன்: சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வு, இன்றும் ஐதீகமாகத் தொடர்கிறது. மன்னர் வல்லாள மகாராஜன் மறைந்த போது, அண்ணாமலையாரே மகனாக இருந்து அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாக, இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று, அண்ணாமலையார் கோயிலிலிருந்து புறப்பட்டு 'சம்பந்தனூர்' என்ற இடத்திற்குச் செல்கிறார். அங்கு தன் தந்தைக்காக (மன்னருக்காக) திதி கொடுக்கும் நிகழ்வு மிக விசேஷமாக நடைபெறுகிறது. 🔥 திருவண்ணாமலையின் பிற வியக்கவைக்கும் தகவல்கள்: 📍 அக்னி தலம்: பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான இங்கு, கருவறையில் எப்போதும் ஒரு வெப்பம் நிலவிக்கொண்டே இருக்கும். 📍 மலை தான் லிங்கம்: இங்கு மலை என்பது வெறும் மண் அல்ல, அதுவே சிவலிங்கம். அதனால்தான் கிரிவலப் பாதையில் வெறும் காலோடு நடப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. 📍 பாதாள லிங்கம்: ரமண மகரிஷி தவம் புரிந்த இந்த இடம், இன்றும் ஒரு அமைதியான ஆன்மிக சக்தியை நமக்குள் கடத்துகிறது. "நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை" தலத்தில், பக்தனுக்காக இறைவனே மகனாக இறங்கி வந்த இந்த நிகழ்வு, பக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. 🌸
PEN TV TAMIL
2.3K views
18 days ago
இன்றைய ( 04.05 .2026 ) திங்கட்கிழமை, ஷீரடி சாய்பாபா காலை தரிசனம்🙏ஓம் சாய்ராம் 🕉️ சாய்பாபாவின் அருளால், உங்களின் பிராத்தனைகள் நிறைவேறட்டும்🙏 #devotionalcontents #சீரடி சாய்பாபா #ஆன்மீகம் #சாய்பாபா 🙏 #பக்தி