ஆன்மீக கதைகள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
875 காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
AI indicator
*ஒரு வருடம் மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்* *கண்ட பலனை* *வழங்கும் மகிமை மிக்க* *வைகாசி மாத மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்*! இன்று(18-5-26) வைகாசி மாத மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதால் ஒரு வருடம் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் கண்ட பலன் கிடைக்கும். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் ,கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை சிவன் பார்வதி தரிசனம் என பலரும் குறிப்பிடுவது உண்டு. எனினும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் காண்பது என்பதை சரியானதாகும். சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள். சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். மாலை வேளைக்கும், மேற்கு திசைக்குரிய சனிஸ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார். செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் . காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும். ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை கழிந்த மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டிய முறைகள்: ஒரு தாம்பள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். உங்களது தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் மூன்றாம் பிறை நாளன்று காலையில் இருந்து மாலைக்குள் ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும். இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் பின்பற்றபட்டு வருகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம்,மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார். சூரியனிடமும், சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது எனப்படும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். எனவே இந்த கையேந்துவதை இறைவனிடத்தில் ஒரு தவறான கண்ணேட்டத்தில் காணக்கூடாது. நம்மிடம் இல்லாத ஒன்றையோ,நமது தேவையையோ நாம் இறைவனிடம் கேட்பதால் நாமும் பிச்சை எடுப்பவர்தான். பிச்சை என்பதை தவறானதாக கருதக்கூடாது. சிவபெருமான் கூட அனு தினமும் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சையாக இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது கையேந்தி வேண்டுங்கள். செல்வ சந்தோஷ வளம் கிட்டும். சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார கூற வேண்டும். மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும். இது போல் குறைந்தது மூன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை தொடர்ந்து காணபது நலம். இதை ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திர நிலையில் இருப்பவனும் தரித்திர நிலை மாறி உயர்ந்த செல்வத்தை பெறுவான் . இது உறுதி, அனுபவ வெற்றி . மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது . எனினும் கவலை வேண்டாம், மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து மேலே கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும். பிறை தரிசனம் செய்யும் போது நிதானமான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும். அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ, கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது. குறிப்பாக அழுகையுடன் பிறையை காண கூடாது. என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ, அதுவே வரமாக பெருகி நமக்கு கிடைக்கும். எனவே நல்ல மனதோடு நமது தேவைகளை கேட்க வேண்டும். அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காண்பதற்காக 30 நாட்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்து வருகிறாரகள். இந்த பிறைதரிசன நாள் திங்கள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. அதே போல் சித்திரை. மாதத்தில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் . திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும். திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும். சூழ்நிலையால் காண முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை. யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு கையேந்தி வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் . ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என வெதும்பக் கூடாது . நமக்கு கர்ம பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறைவன் அதை முதலில் சரிசெய்வார். பின்பு யோகத்தை அருளுவார். எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும். சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும். கர்ம வினை பாவம் நிறைந்தவராக இருந்தால் 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும். யாருக்கு எவ்வளவு வினைகள் இருக்கிறது என யாருக்கும் தெரியாது . எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காணுங்கள். அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் . 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் ##🙏சந்திர தரிசனம் #🌙சந்திர தரிசனம்🔯
ரவிசங்கர் ராஜா, ஆரணி
759 காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
AI indicator
*நான் என்னும்* *ஆணவம் கூடாது*! சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று;நடைபெற்ற‍தாக இணையத்தில் கட்டுரை ஒன்றை படித்தேன். அதனை நீங்களும் படித்து மகிழ இங்கு பகிர்ந்திருக்கிறேன். இதோ அந்த பதிவு! ஒரு தேங்காய் மட்டும் ஆணவத்தாேடு அருளே வடிவான‌ சிவபெருமானை நெருங்கி பேசத் தாெடங்கியது. தேங்காய் – ” நான் தேவர்களையே காய் (காேபி)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?” (எனக்கேட்டு தானும் சிவபெருமானும் ஒன்றுதான் என வாய்ப்பந்தல் பாேட்டது. அதன் நாேக்கம் அறிந்த சிவபெருமானும்) சிவபெருமான் – அப்படியா? நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார். (தேங்காய் விடவில்லை) தேங்காய் – நானும் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே கேள்விப்பட்டதில்லையா?” என்றது இறுமாப்பாேடு. சிவபெருமான் – “யானை, புலி பாேன்றவற்றை உரித்திருக்கிறேனே” என்று சாெல்ல, தேங்காய் – “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்றது இறுமாப்பாக. சிவபெருமான் – மேலும் பாெறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார். தேங்காய் – இன்னும் ஆணவத்தாேடு, ” எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத் தான் இருக்கிறேன்” என்றது. சிவபெருமான் – “நான் கங்கையைத் தாங்குகிறேன்” என்றார் தேங்காய் – “நான் இளநீரைத் தாங்குகிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு மூன்று கண்கள்” என்றார் தேங்காய் – “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் உள்ளன” என்றது. சிவபெருமான் – “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார் தேங்காய் – “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது சிவபெருமான் – “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார் தேங்காய் – “எனக்கும் தான் குடுமி இருக்கிறது” என்றது தேங்காய். (ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான்) சிவபெருமான் – “தேங்காயே… பணிவு என்பதே காெஞ்சமும் இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும் படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்” என்றார். (அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறு (தேங்)காயாக நம் வாழ்க்கை சிதறிப்பாேகும் என்று உணர்த்துகிறது இந்தக்கதை…) 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
672 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
AI indicator
அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய அறிவுரை! "ஒரு நிமிடம் நிதானியுங்கள்!" விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய என்னை மிகவும் கவர்ந்த கீழ்கண்ட அறிவுரை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன் "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும்*react* செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை *reaction* என்கிறார்). அப்படி*react*செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ,செயலோ, எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை *response*என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும். பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம். இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும். ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம். யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் *respond* செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள்*react*செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள். நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும். 🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #ஆன்மீக கதைகள் #பக்தி #ஞானிகள் பேசுகிறோம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
4.8K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
AI indicator
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 *ஆன்மீக சிறு கதை* பக்தி உண்மை என்றால்,எதுவும் சாத்தியமே ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார். “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” “என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கறாராக கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அவர் விளையாட்டாக சொன்னதை, அந்த பெண் மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள். மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது. “என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”என்றார். “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை” என்றாள் அந்த பெண். “என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார். ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள். நடந்ததை பார்த்த சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று பலவாறாக யோசித்தபடியே,ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார். “அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள். சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார். கடவுள் மேல் நமது நம்பிக்கை வெறும் உதட்டளவில் இல்லாமல்,உள்ளத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் அந்த மாயக் கண்ணன். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பக்தி #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள்
Savittri Raju
835 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
ஜோதிடமும் பக்தியும்🙏 விதியை மாற்றும் ஆன்மிகக் கதை ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சொல்லும் வார்த்தைகளையும், கூறும் பரிகாரங்களையும் மக்கள் ஆழமாக நம்பினர். பலரும் அதனால் நன்மை பெற்றதாக கூறினர். இதைக் கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி தன் வாழ்க்கையை நினைத்து மனம் நொந்தான். விளைச்சல் இல்லை… லாபம் இல்லை… குடும்பம் துன்பத்தில் தவித்தது. “நாமும் அந்த ஜோதிடரைச் சந்தித்து பார்க்கலாம்” என்று முடிவு செய்தான். “என் தலைஎழுத்து எப்போது மாறும்?” என்ற ஏக்கத்துடன் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரைச் சந்தித்தான். ஜோதிடர் அவன் ஜாதகத்தை பார்த்தார். சில நொடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, “நாளைக்கு வா… சொல்லுகிறேன்,” என்று அனுப்பிவைத்தார். அதை கவனித்த அவரது மகள் கேட்டாள்: “அப்பா, நீங்கள் எல்லோருக்கும் உடனே ஜாதகம் கணித்து சொல்வீர்கள். இவரை மட்டும் ஏன் நாளைக்கு வரச் சொன்னீர்கள்?” ஜோதிடர் கனத்த குரலில் கூறினார்: “அவனுடைய ஜாதகப்படி, நாளை விடியற்காலையில் அவன் உயிருடன் இருக்க மாட்டான். அவனுடைய ஆயுள் முடிவடைகிறது.” “பரிகாரம் இல்லையா, அப்பா?” என்று கேட்டாள் மகள். “ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் ஆயுள் பலப்படும். அதோடு அவன் மிகப் பெரிய பணக்காரனாகவும் உயர வாய்ப்பு உண்டு. ஆனால் அவன் பரம ஏழை… அது அவனால் சாத்தியமில்லை…” என்றார். இதற்கிடையில் அந்த ஏழை மனம் உடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கடும் காற்று, மழை, இடி முழங்கியது. “மழையில் நனைந்தால் உடம்பு கெடும். மருத்துவரிடம் செல்ல பணமில்லை…” என்று எண்ணி அருகில் இருந்த ஒரு பாழடைந்த பழைய சிவன் கோவிலில் ஒதுங்கினான். அந்த கோவிலைப் பார்த்து அவன் மனம் உருகியது. “அட கடவுளே… உன்னை வசதி உள்ளவர்கள் கூட கவனிக்கவில்லை. என்னிடம் பணம் இருந்தால் இந்த கோவிலை சீர்செய்து உனக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பேன்…” என்று மனதார நினைத்தான். அவன் மனக்கண்களில் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெறுவது போல கண்டு ஆனந்தமடைந்தான். மழை நின்றது. அவன் கோவிலின் படிகளை இறங்கி வெளியே வந்ததும் — அந்த நொடியிலே பயங்கரமான இடி கோவிலின் மீது விழுந்தது! கோவில் சிதறி சரிந்தது! அவன் சில நொடிகள் நடுங்கினான்… பிறகு உணர்ந்தான் — “கடவுளே, நீயே காப்பாற்றினாய்!” என்று கண்ணீர் மல்க நன்றி கூறி வீடு சென்றான். மறுநாள் காலையில் அவன் உயிருடன் எழுந்தான். நேராக ஜோதிடர் வீட்டிற்கு சென்றான். ஜோதிடர் அவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். “நேற்று என்ன நடந்தது?” என்று கேட்டார். அவன் நடந்ததையெல்லாம் கூறினான். அப்போது ஜோதிடர் உணர்ந்தார்: “இவன் மனதார ஆண்டவருக்காக நினைத்தான். அந்த சுத்தமான எண்ணமே அவனுடைய விதியை மாற்றியது.” அந்த ஏழை விவசாயி பின்னர் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெற்று செழிப்புடன் வாழ்ந்தான். அவன் உண்மையிலேயே அந்த கோவிலைச் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்து, கடவுளுக்கு நன்றி செலுத்தினான். கதையின் உண்மை தலைஎழுத்தைக் கூட மாற்றும் சக்தி நாம் செய்யும் புண்ணிய காரியங்களுக்குண்டு. பயந்து தர்மம் செய்யாதீர்கள். பலன் எதிர்பார்த்து செய்யாதீர்கள். அன்பால் செய்யுங்கள். ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் உணவு அளியுங்கள். கோவில் சீரமைக்கும் பணிக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உழவாரப்பணி செய்பவர்களை மதித்து உதவுங்கள். இறப்பை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் செய்யும் புண்ணியங்கள் சில துன்பங்களைத் தள்ளிப் போடக் கூடும். திருவாசகம், திருப்புகழ், தேவாரம் பாராயணம் செய்வது மனத் துன்பத்தை நீக்கும். ஏழையின் சிரிப்பில் மகேசனை காணலாம். தாய் தந்தைக்கு செய்யும் சேவையில் நாராயணனை காணலாம். கிரகங்கள் ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். நாம் செய்யும் பாவ–புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கிறது. திருச்சிற்றம்பலம் — Savittri Raju ✨ #ஆன்மீக கதைகள் #ஆன்மீக கதைகள்
Thangamani.S❄️ Rio🔥🏹🎗️⏳
650 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
இறைவன் தரும் பரிசு – எது சிறந்தது? பணமா? புகழா? அல்லது உயிரா? மாலையின் மங்கல வெளிச்சத்தில், ஒரு இளைஞன் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்தான். அவன் கண்களில் கனவுகள் இருந்தன… ஆனால் மனதில் ஏமாற்றம். “ஏன் எனக்கு இன்னும் பணம் வரவில்லை? ஏன் உலகம் என்னை அறியவில்லை?” என்று வானத்தை பார்த்து கேட்டான். அப்போது ஒரு முதிய ஞானி அமைதியாக அருகில் வந்து நின்றார். “மகனே… உனக்கு உண்மையில் என்ன வேண்டும்?” இளைஞன் உடனே சொன்னான்: “பணம் வேண்டும். புகழ் வேண்டும். எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்.” ஞானி மெதுவாக சிரித்தார். “சரி… இறைவன் இன்று உனக்கு ஒரு நாள் தருகிறான். அந்த ஒரே நாளில் — அளவில்லா பணம், உலகப் புகழ், அதிகாரம்… ஆனால் நாளை காலை உன் உயிர் முடியும். அல்லது… சாதாரண வாழ்க்கை. சிறிய சிரிப்புகள். சில கஷ்டங்கள். ஆனால் நீண்ட ஆயுள்.” அந்த வார்த்தைகள் இளைஞனின் இதயத்தை குத்தியது. அவன் தாயின் முகம் நினைவுக்கு வந்தது. அவள் சிரிப்பு… அவள் “நீ இருக்கிறதாலே போதும்” என்று சொன்ன வார்த்தை… பணம் இருந்தால் தாயை வாங்க முடியுமா? புகழ் இருந்தால் ஒரு நிமிடம் கூட உயிரை நீட்டிக்க முடியுமா? அவன் கண்களில் நீர் வழிந்தது. “அய்யா… ஒரு நாள் ராஜாவாக வாழ்ந்து மறைவதை விட, நான் ஆயிரம் நாள் சாதாரண மனிதனாக வாழ விரும்புகிறேன். ஏனெனில் உயிர் இல்லாமல் பணம் காகிதம்… புகழ் ஒரு காற்று.” ஞானி தலையசைத்தார். “மகனே… பணம் ஒரு வசதி. புகழ் ஒரு நிழல். ஆனால் உயிர் — அதுதான் இறைவன் தரும் மூச்சான பரிசு. உயிர் இருந்தால் பணம் மீண்டும் சம்பாதிக்கலாம். புகழ் மீண்டும் பெறலாம். ஆனால் உயிர் சென்றால் அனைத்தும் அமைதி.” அந்த நாள் முதல் அவன் ஒவ்வொரு காலையும் விழிக்கும் போது “நன்றி இறைவா… இன்று மீண்டும் உயிரை பரிசாக தந்ததற்கு” என்று சொன்னான். கதையின் சிந்தனை 🌿 பணம் முக்கியம். புகழ் இனிமை. ஆனால் இவை இரண்டும் உயிர் இருக்கும் வரை மட்டுமே. 👉 இறைவன் தரும் மிகச் சிறந்த பரிசு — உயிரே. அதை மதிக்காதவன் எதையும் மதிக்க முடியாது. வாழும் நாளை நேசிப்போம். அதுவே உண்மையான செல்வம். ✨ #ஆன்மீக கதைகள் #ஆன்மீக கதைகள் 👌👌👌 #ஆன்மீக கதைகள். #ஆன்மீகம் #ஆன்மீகம்