A: 4-வகையான வடை செய்வது எப்படி ....... மசால் வடை..... தேவையான பொருள்கள்.... கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு (200 கி) வெங்காயம் - 2 புதினா - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய் - 3 அல்லது 4 கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரித்தெடுக்க அரைக்க: காய்ந்த மிளகாய் - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 2 அ 3 பல் சோம்பு - அரை தேக்கரண்டி செய்முறை கடலை பருப்பை கழுவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் மிக்சியில், அரைக்கத் தேவையான பொருட்களை போட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும் ஒரு பிடி பருப்பை தனியே வைத்துவிட்டு மீதமுள்ள பருப்பை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினாவுடன், தனியே எடுத்து வைத்த பருப்பையும், அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் பருப்பு கலவையை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான, மொறுமொறுப்பான மசால் வடை தயார் இதில் வெங்காயத்திற்கு பதில், நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வாழைப்பூ வடை செய்யலாம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🔥😊🍁😊😊 @@@@@@@@@@@@@@@@@@@@@@ முட்டைகோஸ் வடை தேவையான பொருள்கள் புழுங்கல் அரிசி - கால் படி உருட்டு உளுந்து - கால் படி சோம்பு - 3 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 100 கிராம் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மல்லிதழை - விருப்பம் போல் கறிவேப்பிலை - ஒரு கொத்து முட்டைகோஸ் - கால் கிலோ உப்பு - தேவைக்கு எண்ணெய் - கால் லிட்டர் செய்முறை அரிசியையும், உளுந்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியதும் அரிசியுடன் சோம்பு, உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாக அரைக்கவும் அடுத்து உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும் நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், மல்லித்தழை இரண்டையும் பொடியாக நறுக்கவும்.அரைத்த வடை மாவில் முட்டைகோஸ், வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக பிசையவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு உருண்டை எடுத்து வடையாக தட்டி போட்டு திருப்பி விட்டு சிவந்ததும் எடுக்கவும்.சுவையான முட்டைகோஸ் வடை தயார்.இந்த வடைக்கு மாவு கெட்டியாக அரைக்கனும், ஏன் என்றால் கோஸ் சேர்த்ததும் தண்ணீர் விடும், விருப்பப்பட்டால் மிளகாய் தூளுக்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🍁🍁🍁 @@@@@@@@@@@@@@@@@@@@@@ பீட்ரூட் வடை... தேவையான பொருள்கள் பீட்ரூட் – 2 (சிறியது) வெங்காயம் – ஒன்று கடலை பருப்பு – 5 மேசைக்கரண்டி சீரகம் – அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை செய்முறை..... தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும் வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ளவும்.துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.பிசைந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்டவும்.எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.சுவையான பீட்ரூட் வடை தயார்.கடலை பருப்பை தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும் வடை கலவையை உடனே செய்து விடவும், இல்லையென்றால் பீட்ரூட் நீர் விடும் காரம் அதிகம் சேர்ப்பவர்கள் இன்னும் மிளகாய் சேர்த்து கொள்ளலாம் நான் சேர்த்திருக்கும் மிளகாய் அளவு அவ்வளவாக காரம் இருக்காது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🔥🍁🍁🍁 @@@@@@@@@@@@@@@@@@@@@@ காராகருணை வடை தேவையான பொருள்கள் காராகருணை - கால் கிலோ சின்ன வெங்காயம் - 10 பொட்டுக்கடலை - அரை கப் பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லி - 2 கொத்து கறிவேப்பிலை - 2 கொத்து சோம்பு - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - ஒரு கப் செய்முறை காராகருணையை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் சோம்பை நுணுக்கி வைத்துக் கொள்ளவும் கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.மிக்ஸியில் துருவிய காராகருணையை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பொட்டுக்கடலை மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.அதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பொடி செய்த சோம்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும் நறுக்கின வெங்க ாயத்தை கைகளால் பிசைந்து விட்டு போடவும்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும் தண்ணீர் தெளித்து பிசைய தேவையில்லை.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து வட்டமாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும்.பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் அடங்கி வடை வெந்து சிவக்க வந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.சூடான மாலை நேர சிற்றுண்டி காராகருணை வடை ரெடி இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.... #சமையல் ஆன்லைன் அறை
4 likes
19 shares

More like this