பன்னிரு திருமுறைகள்🙏🙏

chellakannan
506 views
2 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருப்பூந்துருத்தி #பதிகம்_032 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
chellakannan
730 views
2 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்ப #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருப்புறம்பயம் #பதிகம்_030 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
chellakannan
4.9K views
5 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருப்பூந்துருத்தி #பதிகம்_032 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
A Mohan Raj
2.3K views
8 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 401 முதல் 429 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார். 401 ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார். 402 சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். 403 எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார். 404 சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார். 405 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார். 406 கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் நெடியானுக்கு அறிவு அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார். 407 தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர். 408 தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார். 409 அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார். 410 தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார். 411 தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார். 412 பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார். 413 நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார். 414 ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார். 415 அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார். 416 செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார். 417 புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார். 418 வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார். 419 கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். 420 ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார். 421 இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார். 422 இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார். 423 மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார். 424 இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார் தம் மெய்ப் பொருள் தான் எய்த வரும் அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார். 425 மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார். 426 மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார். 427 வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில். 428 அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன். 429 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.2K views
11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 252 முதல் 300 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு நீடு கதலி தழைப் பூகம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார். 251 சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார். 252 கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறித் தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. 253 முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். 254 சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால். 255 வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தமுற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார். 256 கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார். 257 விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும். 258 அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர்கூர் வறுமை தொலைத்திட்டார். 259 ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர். 260 ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில். 261 காலம் தவறு தீர்ந்து எங்கும் கலிவான் பொழிந்த புனல் கலந்து ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார். 262 வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண்தமிழ்கள் புனைந்து போய்ச் சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார். 263 மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு. 264 பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார். 265 தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார். 266 ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித்தோணி புரத்து அரசர் ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் தேங்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர். 267 உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து அருள அதனாலே பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும். 268 வேத வனத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம் காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். 269 அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார். 270 புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்தமலையாள் திருமுலையில் கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என. 271 சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்தது எடுத்த திருப் பாட்டில். 272 அது கண்டு உடைய பிள்ளையார் தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்து இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார் எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். 273 அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின். 274 அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர். 275 மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார். 276 போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள. 277 சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல் நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால். 278 அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார். 279 அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என. 280 மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார். 281 பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார். 282 ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார். 283 ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண. 284 வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளவாமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். 285 சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர். 286 ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார். 287 என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார். 288 போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார். 289 வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார். 290 சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார். 291 வீழி மிழலை தனைப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத் தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார். 292 பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார். 293 செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. 294 அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார். 295 வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார். 296 அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. 297 கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான். 298 ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின் மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார். 299 தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் விலை இல் வாய்மைக்குறுந் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார். 300 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.4K views
12 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 201 முதல் 250 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண. 201 மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார். 202 காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து. 203 திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார். 204 ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான். 205 தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார். 206 தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார். 207 அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான். 208 அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள். 209 திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார். 210 புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார். 211 எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார். 212 சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார். 213 அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார். 214 நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. 215 நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார். 216 பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார். 217 ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார். 218 வேறு - கட்டளைக் கலித்துறை (ஐந்துசீர்) வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார். 219 பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார். 220 சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார். 221 கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. 222 காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார். 223 வேறு - அறுசீர் விருத்தம் செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன் தேவ ஆசிரியன் சார்ந்து கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக் கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்று எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. 224 மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். 225 நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார். 226 நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடி தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் திகழும் தன்மை ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில். 227 நீர் ஆரும் சடை முடியார் நிலவு திருவலி வலமும் நினைந்து சென்று வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே. 228 மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமான் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி நாவினுக்குத் தனி அரசர் நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே. 229 திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி பிறவும் பணிந்து போந்தார். 230 அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை. 231 ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார். 232 கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இருதிறமும் சேர்ந்த போதில் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே. 233 திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார். 234 வேறு - சந்தக் கலித்துறை (ஐந்துசீர்) சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை. 235 அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார். 236 மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில். 237 அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார். 238 தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார். 239 சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார். 240 அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில். 241 வேறு - கொச்சகக் கலிப்பா பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன்உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார். 242 ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார். 243 திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார். 244 அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார். 245 திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார். 246 செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள். 247 சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார். 248 சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து வார்ந்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை. 249 வேறு - அறுசீர் விருத்தம் வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார். 250 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
9.8K views
16 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 101 முதல் 150 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார். 101 அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள். 102 ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால்கெடு மன்னன் ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார். 103 நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார். 104 பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள் முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ. 105 அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார். 106 நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார். 107 மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார். 108 மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான். 109 கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். 110 வேறு - சந்தக் கலிவிருத்தம் பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால். 111 இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே. 112 மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே. 113 பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர். 114 வேறு - அறுசீர் விருத்தம் அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார். 115 வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார். 116 தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். 117 ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரித்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. 118 ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே. 119 யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித் தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான். 120 நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார். 121 அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச் சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார். 122 ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான். 123 அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர். 124 அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125 வேறு - கலிவிருத்தம் சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு பற்றி உணர்வினால் பதிகம் பாடினார். 126 பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே. 127 அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார். 128 இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ. 129 அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம். 130 வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில். 131 அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே. 132 தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார். 133 வேறு - கட்டளைக் கலித்துறை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினரே. 134 வேறு - கலித்துறை மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார். 135 தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார். 136 வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். 137 மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார். 138 வேறு - கட்டளைக் கலித்துறை மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே. 139 தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே. 140 கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டா யினவண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே. 141 இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. 142 வேறு - கலித்துறை உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். 143 வேறு - கொச்சகக் கலிப்பா அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள். 144 புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான். 145 வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான். 146 இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார். 147 திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148 கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார். 149 புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார். 150 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.2K views
17 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 51 முதல் 100 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார். 51 அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார். 52 புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார். 53 தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று. 54 குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. 55 ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான். 56 கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான். 57 என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 58 அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என. 59 எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார். 60 பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார். 61 சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார். 62 வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து. 63 தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார். 64 மற்ற வுரை கேட்டலுமே மருண் நீக்கியார் தாமும் உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார். 65 என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். 66 திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார். 67 நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார். 68 திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். 69 வேறு - எண்சீர் ( 8 மாச்சீர் ) நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறுசிந்தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் எனநீடிய கோதில் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால். 70 மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே. 71 அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவிமீது விழுந்து புரண்டு அயர்வார் இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார். 72 பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார். 73 மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறை வான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. 74 இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இதுஎன்று தெருண்டு அறியா அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே. 75 பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி புன்தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடுமா கடல் என்ன நிறைந்துளதே. 76 மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் கையில் திகழும் உழவாரமுடன் கைக்கொண்டு கலந்து கசிந்தனரே. 77 மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத்தன்மைப் பதி மேவியதா பதியார் பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன்போதும் பிணி விட்டருளிப் பொருளா எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. 78 வேறு - கலித்துறை இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய். 79 தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார். 80 மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார். 81 இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். 82 தவ்வை சைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய லங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார். 83 சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார். 84 உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார். 85 வேறு - கொச்சகக் கலிப்பா அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான். 86 கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார். 87 விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான். 88 தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர். 89 அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான். 90 அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார். 91 சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார். 92 நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார். 93 ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார். 94 பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார். 95 அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார். 96 ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார். 97 வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே. 98 மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார். 99 ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள். 100 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
chellakannan
739 views
28 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருஆனைக்கா #பதிகம்_031 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
A Mohan Raj
1.4K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* *ஏனாதிநாத நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில், சேக்கிழாரால் பாடப்பட்ட உன்னதமான சிவனடியார் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான எயினனூர் என்ற தலத்தில் அவதரித்தவர் ஆவார். திருநீற்றின் மீது கொண்ட பக்தி மற்றும் அடியார்களுக்குச் செய்யும் தொண்டிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. அரசர்களுக்கு வாள்வித்தைப் பயிற்சி அளிக்கும் தலைமை வாளாசிரியர். வாள் வித்தையின் மூலம் ஈட்டும் பொருள் முழுவதையும் சிவனடியார்களுக்கு அமுது படைக்கவும், திருப்பணிகள் செய்யவும் செலவிட்டார். திருநீறு அணிந்தவர்களைச் சிவனாகவே மதிக்கின்ற மாபெரும் சிவதொண்டராக விளங்கினார்.* *ஏனாதிநாதரிடம் வாள் பயிற்சி பெறப் பலரும் வந்ததால், அவரிடம் கல்வி பயின்ற சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனால், அதே ஊரில் வாள் வித்தை கற்பித்து வந்த இவருடைய தாயாதி உறவினரான அதிசூரன் என்பவனுக்கு வருவாய் குறைந்தது. வஞ்சகமும் பொறாமையும் கொண்ட அதிசூரன் தன் சுற்றத்தாரைத் திரட்டிக்கொண்டு ஏனாதிநாதருடன் போரிட முற்பட்டான். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. வில், வாள், வேல் ஏந்தி நடந்த இந்தப் போரில் ஏனாதிநாதரின் வீரத்திற்கு முன்னால் அதிசூரனின் படை தோற்று ஓடியது.தோல்வியால் அவமானம் அடைந்த அதிசூரன், நேர் வழியில் ஏனாதிநாதரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.* *ஏனாதிநாதர் திருநீறு (வெண்ணீறு) அணிந்த சிவனடியார்களைத் தன் உயிர் இருக்கும் வரை எதிர்க்க மாட்டார் என்ற ரகசியத்தை அதிசூரன் அறிந்திருந்தான்.ஒரு நாள் விடியற்காலையில், ஏனாதிநாதருக்கு ஒரு தூது அனுப்பினான். "நம் சுற்றத்தார் அழியாமல் நாம் இருவர் மட்டும் தனியிடத்தில் போரிட்டு வெல்பவர் இத்தொழிலை வைத்துக் கொள்வோம்" என்று அழைத்தான்.அதனை ஏற்ற ஏனாதிநாதர் தனியாகப் போர்க்களத்திற்குச் சென்றார்.அதிசூரன் தன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு, அதன் மேல் எவருக்கும் தெரியாதவாறு கேடயத்தால் மறைத்துக் கொண்டு வந்தான்.போர் தொடங்கியவுடன், ஏனாதிநாதர் அவனை வெட்ட முற்படும் வேளையில் அதிசூரன் தன் கேடயத்தை விலக்கித் தன் நெற்றியில் இருந்த திருநீற்றைக் காட்டினான்.* *அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைக் கண்ட ஏனாதிநாதர் திடுக்கிட்டார். "இவர் சிவபெருமானின் அடியவராகிவிட்டார்; இவரை நான் கொல்லக் கூடாது" என்று நினைத்தார்.அதே நேரத்தில், ஆயுதத்தை கீழே போட்டால் ஆயுதமில்லாதவரைக் கொன்ற பழி அதிசூரனுக்கு வந்து சேரும் என்று அஞ்சினார். எனவே, தன் கையில் வாளையும் கேடயத்தையும் ஏந்தியவாறே, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அசையாது நின்றார். வஞ்சகனான அதிசூரன், ஏனாதிநாதரின் நிலையைப் பயன்படுத்தித் தன் வாளால் அவரை வெட்டிக் கொன்றான். திருநீற்றுக்காகத் தன் உயிரையே ஈந்த ஏனாதிநாதரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி அவருக்கு சிவலோக முக்தி அளித்தருளினார். இப்புராணம் நமக்குத் திருநீற்றின் பெருமையையும், சிவனடியார் வேடத்தின் மீது ஒரு பக்தன் வைக்க வேண்டிய உன்னத மதிப்பையும் உணர்த்துகிறது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* கொச்சகக் கலிப்பா புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில் வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர். 1 வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில் ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 2 தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார். 3 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார். 4 நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான். 5 மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான். 6 தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம் மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான். 7 கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான். 8 தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான். 9 வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா. 10 ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். 11 புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள். 12 வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால் இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென. 13 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார். 14 வேறு - மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்த அறுசீர் சந்த விருத்தம் மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர். 15 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாளொளி வட்ட முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன. 16 வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன. 17 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில். 18 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை. 19 நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும். 20 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர். 21 பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள். 22 அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன. 23 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர். 24 வேறு - கொச்சகக் கலிப்பா இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார். 25 வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண் எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத் துணித்தார். 26 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார். 27 இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று . அதி சூரன் நேர் அடர்ந்தான். 28 மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப் பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான். 29 போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமருவான் ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான். 30 சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான். 31 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார். 32 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்றவன் முன் சொல்லி வரக்குறித்த அக் களத்தே பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார். 33 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான். 34 வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான். 35 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான். 36 அடல் விடையேறு என்ன அடர்த்தவனைக் கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார். 37 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று. 38 கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார். 39 அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார். 40 மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார். 41 தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம். 42 *"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏